pm logo

மாயூரம் முத்துசாமிப்பிள்ளை இயற்றிய
சொக்கநாத மாலை


cokkanAta mAlai of
mAyUram muttucAmip piLLai
In tamil script, unicode/utf-8 format



Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing us with scanned images version of the work online.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
S. Karthikeyan, Nalini Karthikeyan, R. Navaneethakrishnan and Thamizhagazhvan.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was first put online on 18 Sept. 2010.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

மாயூரம் முத்துசாமிப்பிள்ளை இயற்றிய
சொக்கநாத மாலை

Source:
திருச்சிற்றம்பலம்.
திருக்கைலாயபரம்பரைத்தருமபுரவாதீனமடாலயத்தில்
எழுந்தருளியிருக்கும் "சொக்கநாதமாலை"
இஃது திரிசிரபுரமகாவித்துவான் மகா--ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள்
மாணாக்கருளொருவராகிய மாயூரம் முத்துசாமிப்பிள்ளை இயற்றியது.
திருப்பனந்தாள்காசி மடாதீனபதி காசிவாசி ஸ்ரீ சாமிநாத சாமிகள்
ஆக்ஞைப்படி தருமை ஆறுமுகவோதுவாமூர்த்திகளால்
கும்பகோணம் ஸ்ரீவிந்தியாஅச்சியந்திர சாலையில் அச்சிற்பதிக்கப்பட்டன.
விஜய-ஸ்ரீ ஐப்பசி மாதம் , 1893
-----------

தருமைச் சொக்கநாத மாலை

திருச்சிற்றம்பலம்
காப்பு

சீர்மலியாகாமியமுரற்காலாற்சிதறிடச்செய்துமுன்னுள் ள
பேர்மலிசஞ்சிதந்தனைவாயிற்பெய்துநல்லருளினிற்கூட்டு ம்
வார்மலிசித்தியானையின்பாதமனத்தினிலிருத்தியேபணிவா ஞ்
சூர்மலிதருமைச்சொக்கநாதன்சீர்சொற்றெரிநதுரைத்திடத்தா னே

நூல்

பொன்னமாலரவின்பள்ளியான்வனசப்போதில்வாழ்நான்முகனென் று
மன்னமர்கற்பதருநிழலிருப்பான்வணங்கிநின்றனுதினமேத்த ந்
தென்னமாமரர்நின்றுவாழ்த்தெடுப்பத்தெய்வஞானப்பரஞ்சுடராய் த்
துன்னமர்ந்தனையாலருள்புரிதருமைச்சொக்கநாதப்பரசிவமே       1

இந்நிலம்பரவவாழ்மணவூரிலிணையிலாப்புகழ்த்தனஞ்சயனா ர்
தன்னகமகிழக்கடம்படித்தோற்றித்தழைத்தநீஞானசம்பந் த
மன்னியதேசிகன்காத்துவந்துமருவினையாதுகாரண மோ
சொன்னியமாதிமுநிவர்சூழ்தருமைசொக்கநாதப்பரசிவமே.       2

சென்றிடுதிருமுகத்தொடுபாண்பத்திரனையுமஞ்சைமாக்களத் தி
ளின்றிடச்செய்ததன்மைமாறிடற்காநீடருண்ஞானசம்பந் த
மென்றிடுநந்தேசிகனோடுநீயுமெழிலமாகமலையம்பதியி ற்
றுன்றிநின்றுவந்துவந்தனைதருமைச்சொக்கநாதப்பரமசிவமே       3

சிவைபிரிந்தரசன்மகளெனச்சென்றதிறந்தனைமனத்தினினினைத் தோ
நவைபிரியாதவுலகவர்காணஞானத்தைவெளிப்படுத்திட வோ
விவைபிரியாதநீயிவண்விரும்பியெழுந்தருளினைமிகுமதுர ச்
சுவைபிரியாதகனிபொழிற்றருமைச்சொக்கநாதப்பரமசிவமே       4

இளையவன்மயில்வாகனனமர்கடம்பென்றெண்ணியீசானமாந்திசையி ல்
வளையமாலுரவனந்தனினாப்பண்வரமுநிவரர்புடைசூழ க்
கனையவான்மாக்கட்கருளுருக்காட்டக்கருதியேவந்தனைபோலு ஞ்
சுளையமர்கனியார்பொழிலுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       5

சங்கமமடையாநதிக்கரையதனிற்றங்குதறகாதெனக்குறிதிது த்
திங்களார்சோலைநாற்றிசைபரவுந்திருமயிலைப்பதியின்கீழ் ப்
பங்கனுக்கருளும்பொன்னிநன்னதியினபக்கல்வீற்றிருந்தனைபோலு
துங்கமாராதிசைவர்சூழதருமைச்சொக்கநாதபரசிவமே       6

தெருவினிற்கூடைமண்ணெடுத்துழன்றசெயலுடைநின்னுருவத்தை ப்
பெருமனமுடையராகண்டிடாதிருக்கப்பேணியோதிசையறிந்திடிலு க்
கருமைஞ்சோலைநாபபணிலேவநதமாநதனையென்றுசூழபோகா த்
துருமமவிண்ணுலகின்மருவிடுந்தருமைச்சொக்கநாதபரசிவமே       7

ஆக்குபாண்டியனுங்கைதவனெனும்பேரடைந்தவனாடெனத்தெரிந் தோ
வாக்குரைமுன்னங்கொடுத்ததுமுண்டோவளவாநாடியற்றுபுண்ணிய மோ
நீக்குமதில்லாதிநாகாவதியநினைந்தனையெனதுபுண்ணியமே
தூக்குரைவாணாபோற்றிடுந்தருமைச்சொக்கநாத பரசிவமே       8

அருமையிற்சுயம்புகாணநதைவீசமாரிடமானுடமென்னு ம்
பெருமையினைநதாமிலிங்கமென்றுலகிற்பேசுவரவையொடுகலக த
கருமையிறபொலியுங்கண்டாதநததனாறகவருனைமுதலென் றே
துருமையிறபொங்கசூழநதிநெடுதருமைச்சொக்கநாதப்பரசிவமே       9

உலகுளோர்தவத்தின்றகையமிவவாடுறனறுவந்தறிந்திட நினைத்தோ நீ
யலகிலாசசோலைநடுவினில்விரும்பியமாந்தறிஞானசம்பந்த ம
விலகுறாத்தேசிகனைத்தவம்புரியவிடுத்தனைசொல்லுநின்னரு ளே
சுலவிடவிளங்கும்ப்புகழுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       10

அரிய மேனியினிற் சாத்திடுந் திருவோற் றாடையை யேந்தி நின்றவன்கண்
பிரியு நீரொற்றி யெடுத்தபி னயனம் பிறங்கிடா திருக்க வுஞ்செய்தாய்
புரியு மன்புடையா ரேத்திடு நின்றன் புகழினுக் கிணையெ வன்புகல்வேன்
சுரிய மர்குழலார் மருவிடுந் தருமைச் சொக்க நாதப் பரசிவமே       61

போற்றபி டேககங் காளங்கள் சுத்தி புரிந்திடா ததனிடைக் கங்கை
யூற்றிய கருவி யோடுதங் கரமு மொன்று பட்டெடுத் திடப்படாம
லாற்றிய வதனாற் கண்டவர் யாருமச் சமிக்கடைந் திடச்செய்தாய்
தூற்றலில் கவிஞர் போற்றிடுந் தருமைச் சொக்க நாதப் பரசிவமே       62

அயலிடம் வைத்த நிவேதனக் கனியை யருந்தியே லந்த வன்வயிறு
புயலென வாக மகோதரங் கொண்ட போததை நோக்கிய பின்னச்
செயலினை நாடி யுலகவ ரறியத் தெரிந்தனை நின்னடி பணியாத்
துயரிலார் பொலியு மாடமார் தருமைச் சொக்க நாதப் பரசிவமே       63

சிங்களத் தரச னனுப்பிப் பினகனி யைச்சீ ரோடு நிவேத னஞ்செய்த
மங்கள முத்துக் குமாரனுக் கிரவி மையமர் காரைக் காலம்மை
யிங்கினத் தோடுந் தந்தா மென்றே யியம்பினை மேனி லைகற்பந்
தொங்கிடு கனியு முதிர்ந்திடுந் தருமைச் சொக்க நாதப் பரசிவமே       64

வஞ்சிமன் னவனு நின்னிடங் கொண்ட மகிழ்வி னாலனுப் பினதான
மஞ்செனு மாரந் தன்னையும் வாங்கி மகிழ்ந்து லக்காட் டியபின்னர்
பஞ்சரக் கிளையோ டுனைத்துதித் தணியப் பகர்நி லம்பொலி முனமேற்ற
துஞ்சொலிக் காட்டி நிறுவினை தருமைச் சொக்க நாதப் பரசிவமே       65

பத்திர னைக்கண் டுபசரித் திட்ட பான்மை யோனின் பணிசெய்த
மித்திர னென்று சொன்னவோர் முநிவர் வியந்திடத் திரும டங்கட்டிப்
பத்திமை கொண்டா னென்று செயளித்துப் பாதுகாத் திடவு நீசெய்தாய்
துத்தனும் பணிந்து வாழ்ந்திடுந் தருமைச் சொக்க நாதப் பரசிவமே       66


இந்துள வனத்திற் கொய்யடி தனக்கு மெழிலுறு மருளை யீந்ததுபோ
லந்திலேழ் நாளுன் சந்நிதி நின்று மகன்றி டாப்போத் தின்நன்மைச்
சிந்தைகொண் ஞான சம்பந்தர் காணச் சீர ருள்செய் தனையென்றுஞ்
சுந்தரன் பணியு முநிவர்சூழ் தருமைச் சொக்க நாதப் பரசிவமே       67

ஆலைநேர் மெழியார் தெரிந்திட வணிமா வாதியா யுள்ள வையனைத்துங்
காலையே வேண்ட மதுரையி லுரைத்த கடவு ணீயென் பதுதெரிய
மாலையில் வாழ்கந் தப்ப தேசிகனு மகிழ்ந்தி டவளர் மகிமாவைச்
சோலையி னடுவிற் சொற்றனை தருமைச் சொக்க நாதப் பரசிவமே       68

வாலியினனைத்தகோட்டையிலொன்றைமறைத்தலிற்கொண்டுபோய்ச்சேர்த்துக்
கூவிநன்மனையையருகினினிறுத்திக்கொட்டுபோத்தனிடையிருந்து
பாவிகண்மனம்போற்கருமணல்விழப்பண்ணினையென்றுசூழபொங்கா
தூவியலன்னந்தங்கிடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       69

சந்நிதிநின்றுஞ்சாரங்கிவாங்கித்தன்கரங்கொண்டுவாசிக் கு
முன்னிடமரவம்வந்துநின்றாடமுன்மணிமாசிலாமணி யு
நின்னதின்னருளுமிறதெனக்காணநிறுவினைநல்லருளினை யே
துன்னலாபணியும்புகழ்ப்பெருந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       70

கரந்தனைவீசிமுழுகிடானொருவன்காணுநின்சந்நிதிவாச ல்
வருந்தருணத்திறபடீரொலியோடுவண்புதவடைத்திடப்பட் ட
தரந்தெரித்தனையால்தனையுங்கண்டுசார்ந்திடாவணமுரைத்தன ரே
சுருமபருஞ்சோலைவிரும்பிடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       71

உக்கிரகுமரன்கரததில்வேலவலனைசெண்டுற்றிடச்செய்ததுபோல ப்
பக்கலவாழ்சச்சிதானந்தற்கொண்டுடணபமாசாமிநாதப் போ
தக்கவனமகிழமூன்றையுங்கொடுக்கத்தாதுவீற்றிருந்தனைசீட் டு
துக்கிருத்த சொக்கநாதப்பரசிவமே       72

சாத்திடவாரந்தனை யரைத்தவனுத்தாங் கொணாவருத்தமிக்கென் று
கேத்திரமணலைச் சேர்த்தரைத்தளிக்கக் கெழுமியமேனிசாத்திட லு
நேத்திரம்பார்க்குந் தொழிலினை நீக்கி நிறுவினை முதிவரர்கூடி த்
தோத்திரஞ்செய்யும் புகழுடைத்தருமைச் சொக்கநாதப் பரசிவமே.       73

சுந்தரமன்னன்றன் மகற்கரியசுமதியென் மந்திரிதனை யு
கந்தளித்ததுபோன் மாணிக்கவாசகனாலொளிர் சாமிநாதப்பே ர்
தந்திரன்காறுவாறென வழைக்கச் சாற்றினைச் சீட்டை முன்னளித் து
சொந்தந்ன்முன்வருவந்திடுந்தருமைச் சொக்கநாதப் பரசிவமே.       74

கதவரகுணன்றனன்பினாற்சிவ லோகந்தனைக் காட்டியதுபோ ன்
மதிவளர்சாமிநாதமாமுநிவன் மகிழ்தரப்புவியமர்ந்துரைக்கு ம்
விதிசிவஞானதேசிகன்றன்னை விருப்பொடுகாட்டினையதனா ற்
றுதமலியருளை வியந்தனர் தருமைச் சொக்கநாதப் பரசிவமே.       75

ஆவணி மூலநாளிற்சாதனத்தாலாட்டுபோதிடைவிடாதொளி
மாவணியசியார்பலர்களுங்காணமதுரையினடைந்தனமா
தாவணிநரியுன்சந்நிதிநின்றுந்தரிசிக்கச்செய்தனையென்று
தூவணிந*கையார்மேவிடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       76

கச்சிவாழபயனுனைத்தரிசித்துச்சடைசெலப்புதவினின்விடை யி
லச்சினைவைத்தபோற்சிவஞானவாரியனாற்பனைசைக் கு
மெச்சிடுசாமிநாதமாமுநிவன்வியந்திடவாறுகட்டியையு ந்
துச்சியென்றளிக்கச்செய்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே       77

நற்றவர்புகழும்பனைசைவாழ்சாமிநாதமாமுநிவரர்பிரான்பா ல்
விற்றவழநாகத்தகட்டினாற்கூரைவேய்ந்திடுபந்தரைநம து
முற்றமேற்செய்யவேண்டுமென்றன்பின்முதியனாச்சென்றெழுகனவி ற்
சொற்றனையவ்வாறியற்றினன்றருமைச்சொக்கநாதப்பரசிவமே       78

நேயமோடுன்னைத்துதித்தான்மறவானிள்பழிதீர்த்தநின்மல னே
யாயநல்வெள்ளையானையின்சாபமகற்றுபுராதனநிலை யே
காயமர்கடம்பவனமுதுநகராக்கண்டிடச்செய்தசிற்பர மே
தோயமார்பண்ணைசூழ்ந்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       79

பருங்கயற்கண்ணிதடாதகையாகப்பார்த்தபேரொளியின்சின்மய மே
தருந்திருமணத்தையவ்வயிற்செய்துதழைத்திடுஞானதற்பர மே
யருங்குலவெள்ளியம்பலத்திருக்கூத்தாடிநின்றொளிர்தருபத மே
சுருங்கைநீர்பாயும்வயலுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       80

வழுத்துகுண்டோதரனுக்கனமிட்டவகையினில்வளர்ந்திடுமருந் தே
யழுத்திடுமன்னக்குழியும்வையையுமுனழைத்தருள்செய்தநலமு தே
கழித்தகாஞ்சனமாலைபடிந்திடவேகடலழைத்திட்டசங்கர னே
சுழித்தநீர்ப்பொன்னிக்கரையமர்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       81

ஆன்றநன் மலையத்துவசனை யழைத்து மாடிடச்செய்தகாரண மே
யேன்றவுக்கிரனும்பாண்டியனாவந்திருந்திடச்செய்தபூரண மே
சான்றவணவற்குவேல்வலைசெண்டுதந்துவாழ்ந்தொளிருமாரண மே
தோன்றநல்லறிவுதரும்பெருந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       82

மிடைந்திடுகடலைச்சுவறிடச்செய்யவேலினைவிடச்செய்யும்பொரு ளே
யிடையிலிந்திரன்றன்முடியின்மேல்வளையையெறிந்திடச்செய்பரநிதியே
யடையுநன்மேருவினையுஞ்செண்டாலேயடித்திடச்செய்தநல்வரமே
தொடைமதுவொழுகும்பொங்கர்சூழ்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       83

நிறையரபத்தன்வேண்டவேதத்தினிலைப்பொருளுரைத்தநன்மன மே
கறைதபவொளிருமணியுண்மாணிக்கங்காட்டிவிற்றிட்டநற்றெளி வே
சிறையமர்வருணன்விடுகடல்வற்றச்செய்திடுங்கருணையங்குன் றே
துறையினிலன்னஞ்செறிந்திடுந்தருமைசொக்கநாதப்பரசிவமே       84

கேடமர்வருணன்விடுமழைநடுக்கக்கிளருநாலாகியமாட க்
கூடலாயாக்கியடியவர்மனத்திற்கூடிவாழ்ந்திடுந்னிட்கள மே
தேடிடுமெல்லாம்வலசித்தரென்றுசெப்பிடநின்றுவாழறி வே
தோடலர்கொண்டுசரத்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       85

பொழுதிற்கல்லானைவாயிலிக்கினையும்புகுத்தியுண்ணச்செயுஞ்சித் தே
யிழுதையென்சமணர்விடுத்தயானையினையெய்துநின்றிலகுமாமணி யே
பழுதிலாவிருத்தகுமாரபாலகனாப்பாலிக்கநின்றதற்பத மே
தொழுதினிற்பவரும்வழுத்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       86

உள்ளகைதவனுக்காவிடக்காலையூன்றியம்பலப்பதமெடுத்து ந்
தெள்ளுறவாடுநிபுணமெபழியைச்செட்டியிற்சென்றறியிறை யே
நள்ளுமாதாவைப்புணர்ந்தபாதகத்தைநலிந்திடச்செய்தசிற்குண மே
சுள்ளகம்மில்லார்நள்ளிடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       87

ஆசிரியன்றன்மனையையிச்சித்தானங்கம்வெட்டினவருளுரு வே
யேசியசமணர்விடுத்தநாகத்தையெய்துநின்றருளியவழ கே
தேசமர்மாயப்பசுவினையிடபஞ்சென்றுமாய்த்திடச்செயுமரு ளே
சூசனமுடையார்வாசஞ்செய்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       88

திட்டவட்டாலைமண்டபத்தேறிச்சேவகஞ்செய்தொளிர்மெய்க்கா ட்
டிட்டநற்பரமேவறுமையிலுலவரக்கிழியருளியவெழிலித மே
செட்டிவீதிகளினின்றுநல்வளையல்செப்பிளிற்றிடுதரிசன மே
தொட்டநற்கடல்சூழபுவிபுகழ்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       89

அடிமையின்முதலாம்பெண்கணால்வருக்குமட்டமாசித்திசொலுயி ரே
மிடியிலாச்சோழன்றனைவெளிப்படுத்திவிடையிலச்சினைசெயுங்கர மே
படியில்கைதவனுமகிழ்ந்திடத்தண்ணீர்ப்பந்தரைவைத்த நுண்ணியாலே
துடியிடைமகளிரூசலார்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       90

பூவணத்திரதவாதஞ்செய்தமைத்துப்பொன்னனையாட்கருள்குருவே
மேவலர்சூழச்சோழனைமடுவில்வீட்டியவாதநிற்குண னே
கோவலன்பஞ்சம்விலகிடவுலவாக்கோட்டையைக்கொடுத்தநனிலை யே
சோவணந்தேவருலகமார்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       91

மதுரையம்பதியிற்றனபதியாகிவழக்கினையழித்தருளுரு வே
சித்றுடைப்பழியைநீக்கிக்கைதவற்குச்சிவனகர்காட்டியசீ ரே
வீதியிற்பத்திரனைக்காத்திடவிறகைவீற்றிரவருளியவிகற் பே
சுதியளிநிறையுஞ்சோலைசூழ்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       92

பத்திரன்மகிழச்சேரமான்றனக்குப்பண்பொடுதிருமுகங்கொடுத் த
சித்தமேமழையினனைந்திடாவண்ணஞ்சீரியபலகையையளித் த
முத்தனேயவன்றன்மனைவிபால்வெற்றிமொழிந்திடநின்றவிச்சையனே
சுத்தநற்றவத்தார்துதித்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       93

கிருட்டிடின்குருளைப்பசிதணிந்திடவேகிளர்முலகொடுத்தகற்பக மே
தெருட்டியுமவைகளமைச்சரேயாகச்செய்துநின்றருளியதிற மே
கருக்குரீஇயொடுதாரைக்குபதேசங்கழலடிதந்துவாழொளி யே
துருக்கையும்பரவும்புகழுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       94

மதுரையினெல்லைகாண்பிக்கப்பாம்புவளைந்திடவிட்டகங்கண னே
ததியினிற்சோழன்படைமடிந்திடவேதம்பெயரம்புவிட்டவ னே
பதியினிற்றானும்புலவனாய்ச்சங்கப்பலகைதந்தளித்தபுண்ணிய னே
துதிமலிபுலவர்வணங்கிடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       95

கொங்குதேர்வாழ்க்கைப்பாசுரர்தருமிகொண்டிடவெழுதியகர னே
மங்கியகீரன்றனைக்கரையேற்றிவைத்தருளியவிசித்திர மே
நங்கணாரசத்தியன்றனாலிலக்கணந்தெரிந்திடச்செயுமரு வே
சுங்கனும்பணியும்புகழ்மலிதருமைச்சொக்கநாதப்பரசிவமே       96

ஊமனாமுருத்ரசன்மனாற்சங்கமுறுகலகந்தெறுமுற வே
மாமைசேரிடைக்காடன்னோடுஞ்சென்றுவளர்பிணக்கழித்தருட்பே றே
தீமைச்செம்படவரொடும்வலைவீசித்தேவியைக்கொண்டசெம்மலை யே
சோமையுந்தவழும்புகழ்ப்பெருந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       97

வாதவூரகடிகமக்குபதேசமனனிடச்செய்தும்பின்னரியை க்
காதலிற்பரியாயவைகளைநரியாய்க்காட்டியும்வையைநீரடைக்க ப்
பூதலமறியமண்ணெடுத்துழன்றும்பொலிந்திடநின்றமுக்கணனே
சூதமார்பொங்காசூழ்ந்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       98

கூனலார்வழுதிசுரத்தொடுதணித்துங்கூடியவமணரைக்கழுவி ல்
வானவரறியவேற்றியுங்கிணறும்வன்னியுமிலிங்கமுமழைத்து த்
தானமர்சாட்சிகாட்டியுநின்றதற்பராபரத்துறுபொரு ளே
சூனமிக்குலவும்பொழிலுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே       99

செப்பிடுகல்வியோடரும்புகழுஞ்செல்வமுமில்லறத்தோ டு
கப்பிடுமனமுமணிந்திடுகலமுங்கண்டவர்களித்திடுசுத னு
மொப்பிடுமனத்தில்வந்திடுதுறவுமொன்றொழியாதுளவாக த்
துப்பினோடனைத்துந்தந்தருடருமைச்சொக்கநாதப்பரசிவமே       100
சொக்கநாதமாலை முற்றுப்பெற்றது
------------
சாற்றுக்கவிகள்.
-----------
திருக்கைலாய பரம்பரை தருமபுரவாதீனம் அடியார்
குழாத்துளொருவராகிய ஆறுமுகச் சாமிகள் இயற்றியது.

நளிகொளும்பனைசைமாநகர்ச்சாமிநாதமாமுநிவரன்மகிழ த்
துளிகொளுமேகஞ்சூழ்பொழிற்றருமைச்சொக்கநாதப்பெருமான் சீ
ரளிகொளுமுபயதாமரைத்தாளிலருந்தமிழ்மாலையொன்றணிந்தா ன்
றளிகொளுமயிலைத்தனிநகர்முத்துசாமிநாவலனுளமகிழ்ந் தே

மேற்படி ஆதீனத்து அடியார் குழாத்துளொருவராகிய
சண்முகச்சாமிகள் இயற்றியது

பேசணிசாமிநாதமாமுனிவர்பிரானகமகிழ்ந்துருள்செய்ய த்
தூசகல்புகழ்சேரடியர்சூழ்தருமைச்சொக்கநாதக்கடவுளரி ன்
காசணியுபயசேவடியதனிற்கனிதமிழ்மாலைசெய்தணிந்தா ன்
றாசர்கள்பரவுமயிலைவாழ்முத்துச்சாமிமாலன்புதித்திட வே

திருப்பனந்தாள் காசிமடாதீனம் வித்துவான் சாமிமலை
கனகசபைக் கவிராயரவர்கள் இயற்றியது

நன்மைசேர்பனையைசையம்பதிச்சாமிநாதமாமுநிவரன்மகிழ ச்
சின்மயத்தருமைவாழ்சிவஞானதேசிகமூர்த்திகேட்டுவக்க க்
சொன்மலர்மாலையொன்றுசெய்தணிந்தான்சொக்கநாதப்பெருமான்றா ண்
முன்மிகுதவத்தான்மயிலையில்வாழுமுத்துச்சாமிக்கவிவர னே

திருக்கொள்ளம்பூதூர் உபாத்தி்யாயர் சொக்கலிங்க தேசிகரவர்கள் இயற்றியது.

ஞானியர்மலியுந்தருமையிற்சொக்கநாதருக்கொருதமிழ்மா லை
தானியமஞ்சேர்மயிலைவாழ்முத்துச்சாமிமான்மகிழ்வினிற்செய் து
நானிலம்பரவும்பனைசையிற்சாமிநாதமாமுநிவரர்பிரானா ர்
தானிருஞ்செவிகட்கேறிடச்செய்துதண்ணருள்பெற்றுவாழ்ந்தன னே

கும்பகோணத்திலிருக்கும் ஓகை. சண்முகம்பிள்ளையவர்கள் இயற்றியது

நற்றவர்புகழும்பனைசையிற்சாமிநாதமாமுநிவரர்பிரா னா
ருற்றிடுமவையிற்சொக்கநாதப்பேரோங்கிடுநம்பெருமாற்கு த்
துற்றபல்லணிசேர்ந்திடத்தமிழ்மாலைசொல்லிநற்பொருனினைவிரித் து
முற்றருளவன்கண்பெற்றனன்மயிலைமுத்துச்சாமிக்கவிவல னே
-------------
-
பரம்பரைத்திருநாமம் பரிபூரணமானஸ்தலம் மாதம் - பட்சம் - திதி
மெய்கண்டதேவர் திருவெண்ணெய் நல்லூர் ஐப்பசி -- சுக்கி --பிரதமை
அருணந்தி சிவாசாரியார் துறையூர் புரட்டாசி -- திரு --திரயோதசி
மறைஞானசம்பந்தர் திருக்களாச்சேரி ஆவணி -- சுக்கி --துதியை
உமாபதி சிவாசாரியார் கொற்றவன்குடி சித்திரை-- சுக்கி -- துவாதசி
அருணமச்சிவாயர் கொற்றவன்குடி மார்கழி -- சுக்கி --பௌரணிமி
கங்கைமெய்கண்டார் சீர்காழி கார்த்தி -- கிரு --பஞ்சமி
பழுதைகட்டிச்சிற்றம்பசுவர் மதுரை பங்குனி -- கிரு --நவமி
பழுதைகட்டிஞானப்ரகாசர் காளத்தி ஐப்பசி -- கிரு -- சதுர்த்தி
ஞானப்ரகாசர் திருவாரூர் ஐப்பசி -- கிரு -- சஷ்டி
ஞானசம்பந்த தேசிகர் தருமை வைகாசி -- கிரு --சத்தமி
ஆனந்த பரவச தேசிகர் தருமை மார்கழி -- கிரு --திருதிகை
சச்சிதானந்த தேசிகர் தருமை ஆனி -- சுக்கி -- சத்தமி
மாசிலாமணி தேசிகர் தருமை புரட்டாசி-- சுக்கி --ஏகாதசி
ஞானசம்பந்த தேசிகர் தருமை ஆவணி -- சுக்கி --துதியை
திருஞானசம்பந்த தேசிகர் திருக்குற்றாலம் சித்திரை -- கிரு --பிரதமை
திருவம்பலதேசிகர் தருமை ஐப்பசி -- சுக்கி --பௌர்ணிமி
அழகிய திருச்சிற்றம்பல தேசிகர் கோட்டூர் கார்த்தி -- சுக்கி ஏகாதசி
திருநாவுக்கரசுதேசிகர் தருமை ஐப்பசி -- சுக்கி பௌர்ணமி
சச்சிதானந்த தேசிகர் தருமை மார்கழி -- சுக்கி -- தசமி
ஞானசம்பந்த தேசிகர் தருமை ஆவணி -- கிரு -- ஏகாதசி
கந்தப்பதேசிகர் தருமை ஆவணி -- கிரு -- நவமி
மாசிலாமணி தேசிகர் தருமை தை -- கிரு -- சஷ்டி
சச்சிதானந்த தேசிகர் சிவசைலம் கார்த்தி -- சுக்கி --துவாதசி
மாணிக்கவாசகதேசிகர் திருபுவனம் மாசி -- கிரு --சதுர்த்தி

This file was last revised on 13 Nov. 2021
Feel free to send corrections to the Webmaster.