 
 aruNakirinAtar aruLiya tiruppukaz
 part 4, verses  1001 - 1326 
(in tamil script, unicode format) 
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
 நான்காம்  பகுதி,   பாடல்கள்  ( 1001- 1326 ) 
 
Acknowledgements: 
Etext preparation (Mylai format) : Mr. A.S. Maniam (www.kaumaram.com)
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a 
Text Convertor that allowed conversion of Mylai version to Tamil script version as per TSCII encoding. 
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland 
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
 To view the Tamil text correctly you need to set up the following: 
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer 
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP). 
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. 
.
In case of difficulties send an email request to 
kalyan@geocities.com or 
kumar@vt.edu
© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of 
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. 
Details of Project Madurai are available at the website 
 http://www.projectmadurai.org/ 
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
 
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
 நான்காம்  பகுதி,   பாடல்கள்  ( 1001- 1326 )
பாடல் 1001 ( பொதுப்பாடல்கள் ) 
 ராகம் - .....;      தாளம் - ..........  
  தனன தனதன தனதன தனதன 
               தனன தனதன தனதன தனதன 
     தனன தனதன தனதன தனதன ...... தனதான 
 இலகி யிருகுழை கிழிகயல் விழியினு 
            மிசையி னசைதரு மொழியினு மருவமர் 
              இருள்செய் குழலினு மிடையினு நடையினு ...... மநுராக 
 இனிமை தருமொரு இதழினு நகையினு 
  மிளைய ம்ருகமத தனகுவ டழகினு 
    மியலு மயல்கொடு துணிவது பணிவது ...... தணியாதே 
  குலவி விரகெனு மளறிடை முழுகிய 
   கொடிய நடலைய னடமிட வருபிணி 
              குறுகி யிடஎம னிறுதியி லுயிரது ...... கொடுபோநாள் 
             குனகி யழுபவர் அயர்பவர் முயல்பவர் 
               குதறு முதுபிண மெடுமென வொருபறை 
 குணலை யிடஅடு சுடலையில் நடவுத ...... லினிதோதான் 
           மலையில் நிகரில தொருமலை தனையுடல் 
     மறுகி யலமர அறவுர முடுகிய 
    வலிய பெலமிக வுடையவ னடையவு ...... மதிகாய 
               மவுலி யொருபது மிருபது கரமுடன் 
              மடிய வொருசரம் விடுபவபன் மதகரி
        மடுவில் முறையிட வுதவிய க்ருபைமுகில் ...... மதியாதே 
             அலகை யுயிர்முலை யமுதுசெய் தருளிய 
      அதுல னிருபத மதுதனி லெழுபுவி 
    யடைய அளவிட நெடுகிய அரிதிரு ...... மருகோனே 
        அவுண ருடலம தலமர அலைகட 
     லறவு மறுகிட வடகுவ டனகிரி
  யடைய இடிபொடி படஅயில் விடவல ...... பெருமாளே. 
     பாடல் 1002 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
               தனன தனதன தனதன தனதன 
               தனன தனதன தனதன தனதன 
     தனன தனதன தனதன தனதன ...... தனதான 
             கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி
               சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு 
   கனியு முதுபல கனிவகை நலமிவை ...... யினிதாகக் 
       கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற 
                அமுது துதிகையில் மனமது களிபெற 
 கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற ...... நெடிதான 
   குடகு வயிறினி லடைவிடு மதகரி
                பிறகு வருமொரு முருகசண் முகவென 
  குவிய இருகர மலர்விழி புனலொடு ...... பணியாமற் 
              கொடிய நெடியன அதிவினை துயர்கொடு 
           வறுமை சிறுமையி னலைவுட னரிவையர் 
        குழியில் முழுகியு மழுகியு முழல்வகை ...... யொழியாதோ 
 நெடிய கடலினில் முடுகியெ வரமுறு 
   மறலி வெருவுற ரவிமதி பயமுற 
  நிலமு நெறுநெறு நெறுவென வருமொரு ...... கொடிதான 
  நிசிசர் கொடுமுடி சடசட சடவென 
  பகர கிரிமுடி கிடுகிடு கிடுவென 
   நிகரிலயில்வெயி லெழுபசு மையநிற ...... முளதான 
      நடன மிடுபரிதுரகத மயிலது 
               முடுகி கடுமையி லுலகதை வலம்வரு 
   நளின பதவர நதிகுமு குமுவென ...... முநிவோரும் 
   நறிய மலர்கொடு ஹரஹர ஹரவென 
         அமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசை 
     நணியெ சரவண மதில்வள ரழகிய ...... பெருமாளே. 
    பாடல் 1003 ( பொதுப்பாடல்கள் ) 
 
      ராகம் - ..... ;    தாளம் - 
               தனன தனதன தனதன தனதன 
               தனன தனதன தனதன தனதன 
    தனன தனதன தனதன தனதன ...... தனதான) 
                கமல குமிளித முலைமிசை துகிலிடு 
 விகட கெருவிக ளசடிகள் கபடிகள் 
           கலக மிடுவிழி வலைகொடு தழுவிக ...... ளிளைஞோர்கள் 
                கனலி லிடுமெழு கெனநகை யருளிகள் 
 அநெக விதமொடு தனியென நடவிகள் 
            கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள் ...... தமைநாடி 
                அமுத மொழிகொடு தவநிலை யருளிய 
              பெரிய குணதர ருரைசெய்த மொழிவகை 
    அடைவு நடைபடி பயிலவு முயலவு ...... மறியாத 
      அசட னறிவிலி யிழிகுல னிவனென 
   இனமு மனிதரு ளனைவரு முரைசெய 
  அடிய னிதுபட அரிதினி யொருபொரு ...... ளருள்வாயே 
 திமித திமிதிமி டமடம டமவென 
        சிகர கரதல டமருக மடிபட 
  தெனன தெனதென தெனவென நடைபட ...... முநிவோர்கள் 
   சிவமி லுருகியு மரகர வெனவதி 
      பரத பரிபுர மலரடி தொழஅநு 
   தினமு நடமிடு பவரிட முறைபவள் ...... தருசேயே 
        குமர சரவண பவதிற லுதவிய 
               தரும நிகரொடு புலமையு மழகிய 
              குழக குருபர னெனவொரு மயில்மிசை ...... வருவோனே 
                குறவ ரிடுதினை வனமிசை யிதணிடை 
       மலையு மரையொடு பசலைகொள் வளர்முலை 
   குலவு குறமக ளழகொடு தழுவிய ...... பெருமாளே. 
   பாடல் 1004 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - பாகேஸ்ரீ 
   தாளம் - அங்கதாளம் (7 1/2) 
     தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 
               தனன தனதன தனதன தனதன 
               தனன தனதன தனதன தனதன 
     தனன தனதன தனதன தனதன ...... தனதான 
              தசையு முதிரமு நிணமொடு செருமிய 
  கரும கிருமிக ளொழுகிய பழகிய 
             சடல வுடல்கடை சுடலையி லிடுசிறு ...... குடில்பேணுஞ் 
 சகல கருமிகள் சருவிய சமயிகள் 
           சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர் 
 சவலை யறிவினர் நெறியினை விடஇனி ...... யடியேனுக் 
               கிசைய இதுபொரு ளெனஅறி வுறவொரு 
      வசன முறஇரு வினையற மலமற 
              இரவு பகலற எனதற நினதற ...... அநுபூதி 
          இனிமை தருமொரு தனிமையை மறைகளின் 
   இறுதி யறுதியி டவரிய பெறுதியை 
    இருமை யொருமையில் பெருமையை வெளிபட ...... மொழிவாயே 
   அசல குலபதி தருமொரு திருமகள் 
               அமலை விமலைக ளெழுவரும் வழிபட 
   அருளி அருணையி லுறைதரு மிறையவ ...... ளபிராமி 
  அநகை அநுபவை அநுதயை அபிநவை 
  அதல முதலெழு தலமிவை முறைமுறை 
    அடைய அருளிய பழையவ ளருளிய ...... சிறியோனே 
               வசுவ பசுபதி மகிழ்தர வொருமொழி 
          மவுன மருளிய மகிமையு மிமையவர் 
     மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் ...... வடிவேலும் 
               மயிலு மியலறி புலமையு முபநிட 
            மதுர கவிதையும் விதரண கருணையும் 
        வடிவு மிளமையும் வளமையு மழகிய ...... பெருமாளே. 
  பாடல் 1005 ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் - காம்போதி 
   தாளம் - அங்கதாளம் (7 1/2) 
  (எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி) 
     தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 
               தனன தனதன தனதன தனதன 
               தனன தனதன தனதன தனதன 
     தனன தனதன தனதன தனதன ...... தனதான 
  நெடிய வடகுவ டிடியவு மெழுகிரி
 நெறுநெ றெனநெரியவுமுது பணிபதி 
          நிபிட முடிகிழி யவுநில மதிரவும் ...... விளையாடும் 
        நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும் 
          நினது கருணையு முறைதரு பெருமையும் 
         நிறமு மிளமையும் வளமையு மிருசர ...... ணமும்நீப 
               முடியு மபிநவ வனசரர் கொடியிடை 
   தளர வளர்வன ம்ருகமத பரிமள 
    முகுள புளகித தனகிரிதழுவிய ...... திரடோ ளும் 
              மொகுமொ கெனமது கரமுரல் குரவணி 
   முருக னறுமுக னெனவரு வனபெயர் 
            முழுது மியல்கொடு பழுதற மொழிவது ...... மொருநாளே 
              கொடிய படுகொலை நிசிசர ருரமொடு 
             குமுகு மெனவிசை யுடனிசை பெறமிகு 
              குருதி நதிவித சதியொடு குதிகொள ...... விதியோடக் 
 குமுறு கடல்குடல் கிழிபட வடுமர 
           மொளுமொ ளெனஅடி யொடலறி விழவுயர் 
              குருகு பெயரிய வரைதொளை படவிடு ...... சுடர்வேலா 
 இடியு முனைமலி குலிசமு மிலகிடு 
          கவள தவளவி கடதட கனகட 
              இபமு மிரணிய தரணியு முடையதொர் ...... தனியானைக் 
    கிறைவ குருபர சரவண வெகுமுக 
             ககன புனிதையும் வனிதைய ரறுவரும் 
             எனது மகவென வுமைதரு மிமையவர் ...... பெருமாளே. 
    பாடல் 1006 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ஸஹானா 
   தாளம் - அங்கதாளம் (7 1/2) 
          (எடுப்பு - 1/2 தள்ளி) 
     தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 
               தனன தனதன தனதன தனதன 
               தனன தனதன தனதன தனதன 
     தனன தனதன தனதன தனதன ...... தனதான 
               பகிர நினைவொரு தினையள விலுமிலி 
               கருணை யிலியுன தருணையொ டுதணியல் 
 பழநி மலைகுரு மலைபணி மலைபல ...... மலைபாடிப் 
              பரவு மிடறிலி படிறுகொ டிடறுசொல் 
    பழகி யழகிலி குலமிலி நலமிலி 
             பதிமை யிலிபவு ஷதுமிலி மகிமையி ...... லிகுலாலன் 
 திகிரிவருமொரு செலவிநி லெழுபது 
  செலவு வருமன பவுரிகொ டலமரு 
     திருக னுருகுத லழுகுதல் தொழுகுதல் ...... நினையாத 
               திமிர னியல்பிலி யருளிலி பொருளிலி 
 திருடன் மதியிலி கதியிலி விதியிலி 
 செயலி லுணர்விலி சிவபத மடைவது ...... மொருநாளே 
  மகர சலநிதி முறையிட நிசிசரன் 
               மகுட மொருபது மிருபது திரள்புய 
          வரையு மறவொரு கணைதெரிபுயல்குரு ...... ந்ருபதூதன் 
  மடுவில் மதகரிமுதலென வுதவிய 
                வரத னிருதிறல் மருதொடு பொருதவன் 
           மதலை குதலையின் மறைமொழி யிகழிர ...... ணியனாகம் 
                உ கிரினுதிகொடு வகிருமொ ரடலரி
                திகிரிதரமர கதகிரியெரியுமிழ் 
   உ ரக சுடிகையில் நடநவி லரிதிரு ...... மருகோனே 
             உ ருகு மடியவ ரிருவினை யிருள்பொரு 
  முதய தினகர இமகரன் வலம்வரும் 
           உ லக முழுதொரு நொடியினில் வலம்வரு ...... பெருமாளே. 
 பாடல் 1007 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
               தனன தனதன தனதன தனதன 
               தனன தனதன தனதன தனதன 
     தனன தனதன தனதன தனதன ...... தனதான 
  முருகு செறிகுழ லவிழ்தர முகமதி 
  முடிய வெயர்வர முதுதிரை யமுதன 
   மொழிகள் பதறிட வளைகல கலவென ...... அணைபோக 
             முலையின் மிசையிடு வடமுடி யறஇடை 
  முறியு மெனஇரு பரிபுர மலறிட 
      முகுள அலரிள நிலவெழ இலவிதழ் ...... பருகாநின் 
 றுருகி யுளமுட லுடலொடு செருகிட 
            வுயிரு மெனதுயி ரெனமிக வுறவுசெய் 
  துதவு மடமக ளிர்களொடு மமளியி ...... லநுராக 
               உ ததி யதனிடை விழுகினு மெழுகினும் 
     உ ழலு கினுமுன தடியிணை எனதுயி 
              ருதவி யெனவுனை நினைவது மொழிவது ...... மறவேனே 
           எருவை யொடுகொடி கெருடனும் வெளிசிறி 
               திடமு மிலையென வுலவிட அலகையின் 
   இனமும் நிணமுண எழுகுறள் களுமிய ...... லிசைபாட 
 இகலி முதுகள மினமிசை யொடுதனி 
     யிரண பயிரவி பதயுக மிகுநட 
             மிடவு மிகவெதி ரெதிரெதி ரொருதனு ...... விருகாலும் 
  வரிசை யதனுடன் வளைதர வொருபது 
 மகுட மிருபது புயமுடன் மடிபட 
   வலியி னொருகணை விடுகர முதலரி...... நெடுமாயன் 
     மருக குருபர சரவண மதில்வரு 
 மகிப சுரபதி பதிபெற அவுணர்கள் 
            மடிய இயல்கொளு மயில்மிசை வரவல ...... பெருமாளே. 
 பாடல் 1008 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
               தனன தானன தனதன தனதன 
               தனன தானன தனதன தனதன 
     தனன தானன தனதன தனதன ...... தனதான 
                இலகு வேலெனு மிருவினை விழிகளும் 
  எழுதொ ணாதெனு மிருதன கிரிகளும் 
      இசையி னால்வசை பொசிதரு மொழிகளு ...... மெதிர்வேகொண் 
 டெதிரிலாவதி பலமுடை யிளைஞரெ 
            னினிய மாவினை யிருளெனும் வலைகொடு 
 இடைவி டாதெறு நடுவனு மெனவளை ...... மடவார்தம் 
              கலவி மால்கொடு கலைகளு மறிவொடு 
              கருதொ ணாதென முனிவுற மருள்கொடு 
  கரையி லாவிதி யெனுமொரு கடலிடை ...... கவிழாதே 
               கருணை வானவர் தொழுதெழு மயிலுறை 
                குமர கானவர் சிறுமியொ டுருகிய 
  கமல தாளிணை கனவிலு நினைவுற ...... அருள்தாராய் 
   பலகை யோடொரு பதுசிர மறஎறி 
  பகழி யானர வணைமிசை துயில்தரு 
  பரமன் மால்படி யளவிடு மரிதிரு ...... மருகோனே 
               பழுதி லாமன முடையவர் மலர்கொடு 
            பரவ மால்விடை மிசையுறை பவரொடு 
             பரம ஞானமு மிதுவென வுரைசெய்த ...... பெரியோனே 
   அலகை காளிகள் நடமிட அலைகட 
               லதனில் நீள்குடல் நிணமலை பிணமலை 
  அசுரர் மார்பக மளறது படவிடு ...... மயில்வேலா 
  அரிய பாவல ருரைசெய அருள்புரி
  முருக ஆறிரு புயஇய லிசையுடன் 
  அழகு மாண்மையு மிலகிய சரவண ...... பெருமாளே. 
பாடல் 1009 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
               தனன தானன தனதன தனதன 
               தனன தானன தனதன தனதன 
     தனன தானன தனதன தனதன ...... தனதான 
   முருகு லாவிய குழலினு நிழலினும் 
   அருவ மாகிய இடையினு நடையினு 
             முளரிபோலுநல் விழியினு மொழியினு ...... மடமாதர் 
              முனிவி லாநகை வலையினு நிலையினும் 
  இறுக வாரிடு மலையெனு முலையினு 
   முடிவி லாததொர் கொடுவிட மடுவித ...... மயலாகி 
     நரகி லேவிழு மவலனை யசடனை 
                வழிப டாதவொர் திருடனை மருடனை 
     நலமி லாவக கபடனை விகடனை ...... வினையேனை 
   நடுவி லாதன படிறுகொ ளிடறுசொ 
               லதனில் மூழ்கிய மறவனை யிறவனை 
    நளின மார்பத மதுபெற ஒருவழி ...... யருள்வாயே 
                வரிய ராவினின் முடிமிசை நடமிடு 
     பரத மாயவ னெழுபுவி யளவிடு 
          வரதன் மாதவ னிரணிய னுடலிரு ...... பிளவாக 
   வகிரு மாலரிதிகிரிய னலையெறி 
  தமர வாரிதி முறையிட நிசிசரன் 
         மகுட மானவை யொருபதும் விழவொரு ...... கணையேவுங் 
              கரிய மேனியன் மருதொடு பொருதவன் 
    இனிய பாவல னுரையினி லொழுகிய 
           கடவுள் வேயிசை கொடுநிரை பரவிடு ...... மபிராமன் 
        கருணை நாரண னரபதி சுரபதி 
   மருக கானக மதனிடை யுறைதரு 
             கரிய வேடுவர் சிறுமியொ டுருகிய ...... பெருமாளே. 
 பாடல் 1010 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
              தனதன தனதன தந்த தானன 
              தனதன தனதன தந்த தானன 
    தனதன தனதன தந்த தானன ...... தனதான 
    அரிசன பரிசஅ லங்க்ரு தாம்ருத 
  கலசமு மதனுய ரம்பொன் மாமுடி 
         யதுமென இளைஞர்கள் நெஞ்சு மாவியு ...... மொருகோடி 
   அடைபடு குடயுக ளங்க ளாமென 
     ம்ருகமத களபம ணிந்த சீதள 
     அபிநவ கனதன மங்கை மாருடன் ...... விளையாடி 
                இரவொடு பகலொழி வின்றி மால்தரு 
     மலைகட லளறுப டிந்து வாயமு 
     தினிதென அருளஅ ருந்தி யார்வமொ ...... டிதமாகி 
  இருவரு மருவிய ணைந்து பாழ்படு 
 மருவினை யறவும றந்து னீள்தரு 
            மிணைமல ரடிகள்நி னைந்து வாழ்வது ...... மொருநாளே 
  சுரர்குல பதிவிதி விண்டு தோலுரி
                யுடைபுனை யிருடிக ளண்ட ரானவர் 
        துதிசெய எதிர்பொர வந்த தானவ ...... ரடிமாள 
 தொலைவறு மலகையி னங்க ளானவை 
  நடமிட நிணமலை துன்ற வேயதில் 
   துவரிது புளியிது தொய்ந்த தீதிது ...... இதுவீணால் 
        பருகுத லரியது கந்த தீதிது 
   உ ளதென குறளிகள் தின்று மெதகு 
   பசிகெட வொருதனி வென்ற சேவக ...... மயில்வீரா 
      பகிரதி சிறுவலி லங்க லுடுறு 
              குறமகள் கொழுநப டர்ந்து மேலெழு 
   பருவரை யுருவஎ றிந்த வேல்வல ...... பெருமாளே. 
   பாடல் 1011 ( பொதுப்பாடல்கள் ) 
 
     ராகம் - ..... ;   தாளம் - 
              தனதன தனதன தந்த தானன 
              தனதன தனதன தந்த தானன 
  தனதன தனதன தந்த தானன ...... தந்ததான 
     உ ரைதரு பரசம யங்க ளோதுவ 
   துருவென அருவென வொன்றி லாததொ 
            ரொளியென வெளியென வும்ப ராமென ...... இம்பராநின் 
                றுலகுகள் நிலைபெறு தம்ப மாமென 
           வுரைசெய அதுபொருள் கண்டு மோனமொ 
           டுணர்வுற வுணர்வொடி ருந்ந நாளும ...... ழிந்திடாதே 
  பரகதி பெறுவதொ ழிந்தி டார்வன 
  பரிசன தெரிசன கந்த வோசைகள் 
      பலநல விதமுள துன்ப மாகிம ...... யங்கிடாதே 
 பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள் 
         பலபல விதமுள துன்ப சாகர 
             படுகுழி யிடைவிழு பஞ்ச பாதக ...... னென்றுதீர்வேன் 
         அரகர சிவசுத கந்த னேநின 
    தபயம பயமென நின்று வானவர் 
   அலறிட வொழிகினி யஞ்சி டாதென ...... அஞ்சல்கூறி 
      அடல்தரு நிருதர நந்த வாகினி 
            யமபுர மடையஅ டர்ந்து போர்புரி
   அசுரன தகலமி டந்து போகவ ...... கிர்ந்தவேகம் 
   விரிகடல் துகளெழ வென்ற வேலவ 
         மரகத கலபசி கண்டி வாகன 
             விரகுள சரவண முந்தை நான்மறை ...... யந்தமோதும் 
  விரைதரு மலரிலி ருந்த வேதனும் 
  விடவர வமளிது யின்ற மாயனும் 
            விமலைகொள் சடையர னும்ப ராவிய ...... தம்பிரானே. 
   பாடல் 1012 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
          தனதன தத்தத் தனந்த தந்தன 
          தனதன தத்தத் தனந்த தந்தன 
              தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான 
              இமகிரிமத்திற் புயங்க வெம்பணி 
               கயிறது சுற்றித் தரங்க வொண்கடல் 
         இமையவர் பற்றிக் கடைந்த அன்றெழு ...... நஞ்சுபோலே 
               இருகுழை தத்திப் புரண்டு வந்தொரு 
       குமிழையு மெற்றிக் கரும்பெ னுஞ்சிலை 
         ரதிபதி வெற்றிச் சரங்க ளஞ்சையும் ...... விஞ்சிநீடு 
                சமரமி குத்துப் பரந்த செங்கயல் 
            விழியினில் மெத்தத் ததும்பி விஞ்சிய 
        தமனிய வெற்புக் கிசைந்த வம்பணி ...... கொங்கைமீதே 
           தனிமனம் வைத்துத் தளர்ந்து வண்டமர் 
          குழலியர் பொய்க்குட் கலங்க லின்றியெ 
            சததளம் வைத்துச் சிவந்த நின்கழல் ...... தந்திடாயோ 
                அமரர்து திக்கப் புரந்த ரன்தொழ 
              எழுபது வர்க்கக் குரங்கு கொண்டெறி 
      யலையைய டைத்துக் கடந்து சென்றெதிர் ...... முந்துபோரில் 
            அசுரர்மு தற்கொற் றவன்பெ ருந்திறல் 
             இருபது கொற்றப் புயங்கள் சிந்திட 
         அழகிய கொத்துச் சிரங்க ளொன்பது ...... மொன்றுமாளக் 
               கமலம லர்க்கைச் சரந்து ரந்தவர் 
           மருமக மட்டுக் கொன்றை யந்தொடை 
      கறையற வொப்பற்ற தும்பை யம்புலி ...... கங்கைசூடுங் 
               கடவுளர் பக்கத் தணங்கு தந்தருள் 
               குமரகு றத்தத் தைபின்தி ரிந்தவள் 
    கடினத னத்திற் கலந்தி லங்கிய ...... தம்பிரானே. 
  பாடல் 1013 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
          தனதன தத்தத் தனந்த தந்தன 
          தனதன தத்தத் தனந்த தந்தன 
              தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான 
            முகமுமி னுக்கிப் பெருங்க ருங்குழல் 
             முகிலைய விழ்த்துச் செருந்தி சண்பக 
 முடியநி றைத்துத் ததும்பி வந்தடி ...... முன்பினாக 
              முலையைய சைத்துத் திருந்த முன்தரி
         கலையைநெ கிழ்த்துப் புனைந்து வஞ்சக 
           முறுவல்வி ளைத்துத் துணிந்து தந்தெரு ...... முன்றிலுடே 
            மகளிர்வ ரப்பிற் சிறந்த பந்தியின் 
             மதனனு நிற்கக் கொளுந்து வெண்பிறை 
 வடவையெ றிக்கத் திரண்டு பண்டனை ...... வண்டுபாட 
   மலயநி லத்துப் பிறந்த தென்றலு 
          நிலைகுலை யத்தொட் டுடம்பு புண்செய 
          மயலைய ளிக்கக் குழைந்து சிந்தைம ...... லங்கலாமோ 
                பகலவன் மட்கப் புகுந்து கந்தர 
 ககனமு கட்டைப் பிளந்து மந்தர 
          பருவரை யொக்கச் சுழன்று பின்புப ...... றந்துபோகப் 
   பணமணி பட்சத் துரங்க முந்தனி 
               முடுகின டத்திக் கிழிந்து விந்தெழு 
             பரவைய ரற்றப் ப்ரபஞ்ச நின்றுப ...... யந்துவாடக் 
           குகனென முக்கட் சயம்பு வும்ப்ரிய 
             மிகவசு ரர்க்குக் குரம்பை வந்தரு 
     குறவமர் குத்திப் பொருங்கொ டும்படை ...... வென்றவேளே 
             குழைசயை யொப்பற் றிருந்த சங்கரி
         கவுரியெ டுத்துப் பரிந்து கொங்கையில் 
        குணவமு துய்க்கத் தெளிந்து கொண்டருள் ...... தம்பிரானே. 
   பாடல் 1014 ( பொதுப்பாடல்கள் ) 
 
      ராகம் - ..... ;   தாளம் - 
               தனதன தனதன தனதன தனதன 
             தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான 
            படிதனி லுறவெனு மனைவர்கள் பரிவொடு 
           பக்கத் திற்பல கத்திட் டுத்துயர் ...... கொண்டுபாவப் 
                பணைமர விறகுடை யழலிடை யுடலது 
      பற்றக் கொட்டுகள் தட்டிச் சுட்டலை ...... யொன்றியேகக் 
 கடிசம னுயிர்தனை யிருவிழி யனலது 
         கக்கச் சிக்கென முட்டிக் கட்டியு ...... டன்றுபோமுன் 
              கதிதரு முருகனு மெனநினை நினைபவர் 
          கற்பிற் புக்கறி வொக்கக் கற்பது ...... தந்திடாயோ 
               வடகிரிதொளைபட அலைகடல் சுவறிட 
         மற்றுத் திக்கெனு மெட்டுத் திக்கிலும் ......வென்றிவாய 
        வலியுட னெதிர்பொரு மசுரர்கள் பொடிபட 
        மட்டித் திட்டுயர் கொக்கைக் குத்திம ...... லைந்தவீரா 
            அடர்சடை மிசைமதி யலைஜல மதுபுனை 
  அத்தர்க் குப்பொருள் கற்பித் துப்புகழ் ...... கொண்டவாழ்வே 
             அடியுக முடியினும் வடிவுட னெழுமவு 
            னத்திற் பற்றுறு நித்தச் சுத்தர்கள் ...... தம்பிரானே. 
   பாடல் 1015 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
      தனதன தனதன தனதன தனதன தனதன தனதன 
             தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான 
 விடமென அயிலென அடுவன நடுவன மிளிர்வன சுழல்விழி 
      வித்தைத் குப்பக ரொப்புச் சற்றிலை ...... யென்றுபேசும் 
         விரகுடை வனிதைய ரணைமிசை யுருகிய வெகுமுக கலவியில் 
        இச்சைப் பட்டுயிர் தட்டுப் பட்டுவு ...... ழன்றுவாடும் 
            நடலையில் வழிமிக அழிபடு தமியனை நமன்விடு திரளது 
    கட்டிச் சிக்கென வொத்திக் கைக்கொடு ...... கொண்டுபோயே 
             நரகதில் விடுமெனு மளவினி லிலகிய நறைகமழ் திருவடி 
            முத்திக் குட்படு நித்யத் தத்துவம் ...... வந்திடாதோ 
             இடியென அதிர்குரல் நிசிசரர் குலபதி யிருபது திரள்புய 
         மற்றுப் பொற்றலை தத்தக் கொத்தொடு ...... நஞ்சுவாளி 
         எரியெழ முடுகிய சிலையின ரழகொழு கியல்சிறு வினைமகள் 
      பச்சைப் பட்சித னைக்கைப் பற்றிடு ...... மிந்த்ரலோகா 
 வடவரை யிடிபட அலைகடல் சுவறிட மகவரை பொடிபட 
         மைக்கட் பெற்றிடு முக்ரக் கட்செவி ...... யஞ்சசூரன் 
            மணிமுடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட 
         முட்டிப் பொட்டெழ வெட்டிக் குத்திய ...... தம்பிரானே. 
   பாடல் 1016 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - பெஹாக் 
            தாளம் - அங்கதாளம் 
   (எடுப்பு 1 /2 அக்ஷரம் தள்ளி) 
            தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 
              தனதனன தான தந்த தந்த 
              தனதனன தான தந்த தந்த 
   தனதனன தான தந்த தந்த ...... தனதான 
   குகையில்நவ நாத ருஞ்சி றந்த 
       முகைவனச சாத னுந்த யங்கு 
       குணமுமசு ரேச ருந்த ரங்க ...... முரல்வேதக் 
    குரகதபு ராரியும்ப்ர சண்ட 
                மரகதமு ராரியுஞ்செ யங்கொள் 
   குலிசகைவ லாரியுங்கொ டுங்க ...... ணறநூலும் 
    அகலியபு ராண மும்ப்ர பஞ்ச 
      சகலகலை நூல்க ளும்ப ரந்த 
     அருமறைய நேக முங்கு விந்தும் ...... அறியாத 
  அறிவுமறி யாமை யுங்க டந்த 
               அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன் 
        அருணசர ணார விந்த மென்று ...... அடைவேனோ 
                பகைகொள்துரியோத னன்பி றந்து 
    படைபொருத பார தந்தெ ரிந்து 
   பரியதொரு கோடு கொண்டு சண்ட ...... வரைமீதே 
        பழுதறவி யாச னன்றி யம்ப 
        எழுதியவி நாய கன்சி வந்த 
      பவளமத யானை பின்பு வந்த ...... முருகோனே 
        மிகுதமர சாக ரங்க லங்க 
         எழுசிகர பூத ரங்கு லுங்க 
            விபரிதநி சாச ரன்தி யங்க ...... அமராடி 
  விபுதர்குல வேழ மங்கை துங்க 
      பரிமளப டீர கும்ப விம்ப 
 ம்ருகமதப யோத ரம்பு ணர்ந்த ...... பெருமாளே. 
   பாடல் 1017  ( பொதுப்பாடல்கள் ) 
 
     ராகம் - ..... ;   தாளம் - 
              தனதனன தான தந்த தந்த 
              தனதனன தான தந்த தந்த 
   தனதனன தான தந்த தந்த ...... தனதான 
    மழையளக பார முங்கு லைந்து 
     வரிபரவு நீல முஞ்சி வந்து 
              மதிமுகமும் வேர்வு வந்த ரும்ப ...... அணைமீதே 
       மகுடதன பார முங்கு லுங்க 
  மணிகலைக ளேற வுந்தி ரைந்து 
              வசமழிய வேபு ணர்ந்த ணைந்து ...... மகிழ்வாகிக் 
      குழையஇத ழூற லுண்ட ழுந்தி 
            குருகுமொழி வாய்ம லர்ந்து கொஞ்ச 
  குமுதபதி போக பொங்கு கங்கை ...... குதிபாயக் 
   குழியிலிழி யாவி தங்க ளொங்கு 
   மதனகலை யாக மங்கள் விஞ்சி 
 குமரியர்க ளோடு ழன்று நைந்து ...... விடலாமோ 
      எழுபடைகள் சூர வஞ்ச ரஞ்ச 
         இரணகள மாக அன்று சென்று 
       எழுசிகர மாநி லங்கு லுங்க ...... விசையூடே 
       எழுகடலு மேரு வுங்க லங்க 
               விழிபடர்வு தோகை கொண்ட துங்க 
 இயல்மயிலின் மாறு கொண்ட மர்ந்த ...... வடிவேலா 
   பொழுதளவு நீடு குன்று சென்று 
 குறவர்மகள் காலி னும்ப ணிந்து 
     புளிஞரறி யாம லுந்தி ரிந்து ...... புனமீதே 
     புதியமட லேற வுந்து ணிந்த 
       அரியபரிதாப முந்த ணிந்து 
   புளகிதப யோத ரம்பு ணர்ந்த ...... பெருமாளே. 
   பாடல் 1018  ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
            தத்தானத் தாத்தத் தனதன 
            தத்தானத் தாத்தத் தனதன 
  தத்தானத் தாத்தத் தனதன ...... தனதான 
              கற்பார்மெய்ப் பாட்டைத் தவறிய 
              சொற்பாகைக் காட்டிப் புழுகொடு 
     கஸ்தூரிச் சேற்றைத் தடவிய ...... இளநீரைக் 
     கட்சேலைக் காட்டிக் குழலழ 
                கைத்தோளைக் காட்டித் தரகொடு 
           கைக்காசைக் கேட்டுத் தெருவினில் ...... மயில்போலே 
    நிற்பாருக் காட்பட் டுயரிய 
 வித்தாரப் பூக்கட் டிலின்மிசை 
     நெட்டூரக் கூட்டத் தநவர ...... தமுமாயும் 
 நெட்டாசைப் பாட்டைத் துரிசற 
              விட்டேறிப் போய்ப்பத் தியருடன் 
              நெக்கோதிப் போற்றிக் கழலிணை ...... பணிவேனோ 
               வெற்பால்மத் தாக்கிக் கடல்கடை 
              மைச்சாவிக் காக்கைக் கடவுளை 
         விட்டார்முக் கோட்டைக் கொருகிரி...... யிருகாலும் 
               விற்போலக் கோட்டிப் பிறகொரு 
      சற்றேபற் காட்டித் தழலெழு 
   வித்தார்தத் வார்த்தக் குருபர ...... னெனவோதும் 
              பொற்பாபற் றாக்கைப் புதுமலர் 
    பெட்டேயப் பாற்பட் டுயரிய 
        பொற்றோளிற் சேர்த்துக் கருணைசெ ...... யெனமாலாய்ப் 
               புட்கானத் தோச்சிக் கிரிமிசை 
       பச்சேனற் காத்துத் திரிதரு 
             பொற்பூவைப் பேச்சுக் குருகிய ...... பெருமாளே. 
   பாடல் 1019 ( பொதுப்பாடல்கள் ) 
 
     ராகம் - ..... ;   தாளம் - 
            தத்தானத் தாத்தத் தனதன 
            தத்தானத் தாத்தத் தனதன 
  தத்தானத் தாத்தத் தனதன ...... தனதான 
  சிற்றாயக் கூட்டத் தெரிவையர் 
  வித்தாரச் சூழ்ச்சிக் கயல்விழி 
  சற்றேறப் பார்த்துச் சிலபணி ...... விடையேவிச் 
             சிற்றாபத் தாக்கைப் பொருள்கொடு 
   பித்தேறிக் கூப்பிட் டவர்பரி
    செட்டாமற் றுர்த்தத் தலைபடு ...... சிறுகாலை 
            உ ற்றார்பெற் றார்க்குப் பெரிதொரு 
  பற்றாயப் பூட்டுக் கயிறுகொ 
    டுச்சாயத் தாக்கைத் தொழிலொடு ...... தடுமாறி 
  உ க்காரித் தேக்கற் றுயிர்நழு 
   விக்காயத் தீப்பட் டெரியுட 
         லுக்கேன்மெய்க் காட்டைத் தவிர்வது ...... மொருநாளே 
   வற்றாமுற் றாப்பச் சிளமுலை 
             யிற்பால்கைப் பார்த்துத் தருமொரு 
  மைக்காமக் கோட்டக் குலமயில் ...... தருபாலா 
               மத்தோசைப் போக்கிற் றயிருறி 
               நெய்பாலுக் காயச்சிக் கிருபதம் 
     வைத்தாடிக் காட்டிப் பருகரி...... மருகோனே 
  கற்றாவிற் காட்டிக் கரைதுறை 
                நற்றாயிற் காட்டிப் புகழ்கலை 
  கற்றார் சொற் கேட்கத் தனிவழி ...... வருவோனே 
   கைச்சூலக் கூற்றைக் கணைமத 
            னைத்தூள்பட் டார்ப்பக் கனல்பொழி 
            கர்த்தாவுக் கேற்கப் பொருளருள் ...... பெருமாளே. 
   பாடல் 1020 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
              தனத்ததனத் தனத்ததனத் 
              தனத்ததனத் தனத்ததனத் 
    தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான 
    இருட்குழலைக் குலைத்துமுடித் 
  தெழிற்கலையைத் திருத்தியுடுத் 
       திணைக்கயலைப் புரட்டிவிழித் ...... ததிபார 
    இழைக்களபப் பொருப்பணிகச் 
   செடுத்துமறைத் தழைத்துவளைத் 
          திருத்தியகப் படுத்திநகைத் ...... துறவாடி 
   பொருட்குமிகத் துதித்திளகிப் 
       புலப்படுசித் திரக்கரணப் 
            புணர்ச்சிவிளைத் துருக்குபரத் ...... தையர்மோகப் 
                புழுத்தொளையிற் றிளைத்ததனைப் 
     பொறுத்தருளிச் சடக்கெனஅப் 
       புறத்திலழைத் திருத்தியளித் ...... திடுவாயே 
      உ ருத்திரரைப் பழித்துலகுக் 
      குகக்கடையப் பெனக்ககனத் 
        துடுத்தகரப் படுத்துகிரித் ...... தலமேழும் 
 உ டுத்தபொலப் பொருப்புவெடித் 
  தொலிப்பமருத் திளைப்பநெருப் 
    பொளிக்கஇருப் பிடத்தைவிடச் ...... சுரரோடித் 
       திரைக்கடலுட் படச்சுழலச் 
   செகத்ரையமிப் படிக்கலையச் 
  சிரித்தெதிர்கொக் கரித்துமலைத் ...... திடுபாவி 
      செருக்கழியத் தெழித்துதிரத் 
    திரைக்கடலிற் சுழித்தலையிற் 
     றிளைத்தஅயிற் கரக்குமரப் ...... பெருமாளே. 
   பாடல் 1021 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
              தனத்ததனத் தனத்ததனத் 
              தனத்ததனத் தனத்ததனத் 
    தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான 
   வினைத்திரளுக் கிருப்பெனவித் 
      தகப்படவிற் சலப்பிலமிட் 
 டிசைக்குமிடற் குடிற்கிடைபுக் ...... கிடுமாய 
   விளைப்பகுதிப் பயப்பளவுற் 
   றமைத்ததெனக் கருத்தமைவிற் 
 சகப்பொருள்மெய்க் குறப்பருகக் ...... கருதாதே 
   எனக்கெதிரொப் பிசைப்பவரெத் 
      தளத்துளரெச் சமர்த்தரெனப் 
              புறத்துரையிட் டிகழ்ச்சியினுற் ...... றிளையாதுன் 
      எழிற்கமலத் திணைக்கழலைத் 
 தமிழ்ச்சுவையிட் டிறப்பறஎய்த் 
   திடக்கருணைத் திறத்தெனைவைத் ...... தருள்வாயே 
      சினத்தைமிகுத் தனைத்துலகத் 
     திசைக்கருதிக் கடற்பரவித் 
   திடத்தொடதிர்த் தெதிர்த்திடலுற் ...... றிடுசூரன் 
      சிரத்துடன்மற் புயத்தகலத் 
     தினிற்குருதிக் கடற்பெருகச் 
 சிறப்புமிகத் திறத்தொடுகைத் ...... திடும்வேலா 
       கனத்தமருப் பினக்கரிநற் 
              கலைத்திரள்கற் புடைக்கிளியுட் 
      கருத்துருகத் தினைக்குளிசைத் ...... திசைபாடி 
   கனிக்குதலைச் சிறுக்குயிலைக் 
       கதித்தமறக் குலப்பதியிற் 
  களிப்பொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே. 
   பாடல் 1022 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
             தத்த தனதனன தானத் தான 
             தத்த தனதனன தானத் தான 
 தத்த தனதனன தானத் தானத் ...... தனதான 
       முத்து மணிபணிக ளாரத் தாலு 
             மொய்த்த மலைமுலைகொ டேவித் தார 
        முற்று மிளைஞருயிர் மோகித் தேகப் ...... பொருமாதர் 
                முற்று மதிமுகமும் வானிற் காரு 
         மொத்த குழல்விழியும் வேய்நற் றோளு 
       முத்தி தகுமெனும்வி னாவிற் பாயற் ...... கிநட்முழ்கிப் 
      புத்தி கரவடமு லாவிச் சால 
   மெத்த மிகஅறிவி லாரைத் தேறி 
          பொற்கை புகழ்பெரிய ராகப் பாடிப் ...... புவியூடே 
             பொய்க்கு ளொழுகியய ராமற் போது 
  மொய்த்த கமலஇரு தாளைப் பூண 
       பொற்பு மியல்புதுமை யாகப் பாடப் ...... புகல்வாயே 
 பத்து முடியுமத னோடத் தோளிர் 
             பத்து மிறையவொரு வாளிக் கேசெய் 
 பச்சை முகில்சதுர வேதத் தோடுற் ...... றயனாரும் 
     பற்ற வரியநட மாடத் தாளில் 
   பத்தி மிகவினிய ஞானப் பாடல் 
  பற்று மரபுநிலை யாகப் பாடித் ...... திரிவோனே 
              மெத்த அலைகடலும் வாய்விட் டோ ட 
           வெற்றி மயில்மிசைகொ டேகிச் சூரர் 
         மெய்க்கு ளுறஇலகு வேலைப் போகைக் ...... கெறிவோனே 
        வெற்றி மிகுசிலையி னால்மிக் கோர்தம் 
          வித்து விளைபுனமும் வேய்முத் தீனும் 
       வெற்பு முறையுமயில் வேளைக் காரப் ...... பெருமாளே. 
   பாடல் 1023 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
             தத்த தனதனன தானத் தான 
             தத்த தனதனன தானத் தான 
 தத்த தனதனன தானத் தானத் ...... தனதான 
  விட்ட புழுகுபனி நீர்கத் தூரி
   மொய்த்த பரிமளப டீரச் சேறு 
             மிக்க முலையைவிலை கூறிக் காசுக் ...... களவேதான் 
               மெத்த விரியுமலர் சேர்கற் பூர 
               மெத்தை மிசைகலவி யாசைப் பாடு 
         விற்கு மகளிர்சுரு ளோலைக் கோலக் ...... குழையோடே 
               முட்டி யிலகுகுமிழ் தாவிக் காமன் 
    விட்ட பகழிதனை யோடிச் சாடி 
        மொய்க்கு மளியதனை வேலைச் சேலைக் ...... கயல்மீனை 
   முக்கி யமனையட மீறிச் சீறு 
              மைக்கண் விழிவலையி லேபட் டோ டி 
            முட்ட வினையன்மரு ளாகிப் போகக் ...... கடவேனோ 
               செட்டி யெனுமொர்திரு நாமக் கார 
               வெற்றி யயில்தொடுப்ர தாபக் கார 
            திக்கை யுலகைவல மாகப் போகிக் ...... கணமீளுஞ் 
        சித்ர குலகலப வாசிக் கார 
        தத்து மகரசல கோபக் கார 
           செச்சை புனையுமண வாளக் கோலத் ...... திருமார்பா 
   துட்ட நிருதர்பதி சூறைக் கார 
  செப்பு மமரர்பதி காவற் கார 
   துப்பு முகபடக போலத் தானக் ...... களிறுரும் 
   சொர்க்க கனதளவி நோதக் கார 
       முத்தி விதரணவு தாரக் கார 
            சுத்த மறவர்மகள் வேளைக் காரப் ...... பெருமாளே. 
   பாடல் 1024 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
             தானதன தத்த தானதன தத்த 
            தானதன தத்த ...... தனதான 
   ஏடுமல ருற்ற ஆடல்மத னுய்க்கு 
               மேவதுப ழிக்கும் ...... விழியாலே 
                ஏதையும ழிக்கு மாதர்தம யக்கி 
   லேமருவி மெத்த ...... மருளாகி 
                நாடுநகர் மிக்க வீடுதன மக்கள் 
             நாரியர்கள் சுற்ற ...... மிவைபேணா 
            ஞானவுணர் வற்று நானெழுபி றப்பும் 
  நாடிநர கத்தில் ...... விழலாமோ 
               ஆடுமர வத்தை யோடியுடல் கொத்தி 
              யாடுமொரு பச்சை ...... மயில்வீரா 
 ஆரணமு ரைக்கு மோனகவி டத்தில் 
  ஆருமுய நிற்கு ...... முருகோனே 
              வேடுவர்பு னத்தில் நீடுமித ணத்தில் 
    மேவியகு றத்தி ...... மணவாளா 
               மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி 
 மீளவிடு வித்த ...... பெருமாளே. 
   பாடல் 1025 ( பொதுப்பாடல்கள் ) 
 
ராகம் - பீம்பளாஸ் 
    தாளம் - ஆதி 
             தானதன தத்த தானதன தத்த 
            தானதன தத்த ...... தனதான 
                சீதமலம் வெப்பு வாதமிகு பித்த 
  மானபிணி சுற்றி ...... யுடலுடே 
             சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க 
                தீதுவிளை விக்க ...... வருபோதில் 
            தாதையொடு மக்கள் நீதியொடு துக்க 
    சாகரம தற்கு ...... ளழியாமுன் 
      தாரணி தனக்கு ளாரண முரைத்த 
 தாள்தர நினைத்து ...... வரவேணும் 
 மாதர்மய லுற்று வாடவடி வுற்று 
             மாமயிலில் நித்தம் ...... வருவோனே 
  மாலுமய னொப்பி லாதபடி பற்றி 
             மாலுழலு மற்ற ...... மறையோர்முன் 
               வேதமொழி வித்தை யோதியறி வித்த 
 நாதவிறல் மிக்க ...... இகல்வேலா 
               மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி 
 மீளவிடு வித்த ...... பெருமாளே. 
   பாடல் 1026( பொதுப்பாடல்கள் ) 
 
     ராகம் - ..... ;   தாளம் - 
             தானதன தத்த தானதன தத்த 
            தானதன தத்த ...... தனதான 
              தோடுபொரு மைக்க ணாடவடி வுற்ற 
           தோர்தனம சைத்து ...... இளைஞோர்தம் 
              தோள்வலி மனத்து வாள்வலி யுழக்கு 
                தோகையர் மயக்கி ...... லுழலாதே 
               பாடலிசை மிக்க ஆடல்கொடு பத்தி 
             யோடுநினை பத்தர் ...... பெருவாழ்வே 
                பாவவினை யற்று னாமநினை புத்தி 
               பாரிலருள் கைக்கு ...... வரவேணும் 
   ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி 
              ஆண்மையுட னிற்கு ...... முருகோனே 
  ஆதியர னுக்கு வேதமொழி முற்றி 
            யார்வம்விளை வித்த ...... அறிவோனே 
               வேடைமய லுற்று வேடர்மக ளுக்கு 
             வேளையென நிற்கும் ...... விறல்வீரா 
               மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி 
 மீளவிடு வித்த ...... பெருமாளே. 
   பாடல் 1027 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
             தானதன தத்த தானதன தத்த 
            தானதன தத்த ...... தனதான 
  தோதகமி குத்த பூதமருள் பக்க 
             சூலைவலி வெப்பு ...... மதநீர்தோய் 
            சூழ்பெருவ யிற்று நோயிருமல் குற்று 
 சோகைபல குட்ட ...... மவைதீரா 
               வாதமொடு பித்த மூலமுடன் மற்று 
    மாயபணி சற்று ...... மணுகாதே 
 வாடுமெனை முத்தி நீடியப தத்தில் 
 வாழமிக வைத்து ...... அருள்வாயே 
             காதல்மிக வுற்று மாதினைவி ளைத்த 
      கானககு றத்தி ...... மணவாளா 
 காசினிய னைத்து மோடியள விட்ட 
               கால்நெடிய பச்சை ...... மயில்வீரா 
               வேதமொழி மெத்த வோதிவரு பத்தர் 
               வேதனைத விர்க்கு ...... முருகோனே 
               மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி 
 மீளவிடு வித்த ...... பெருமாளே. 
   பாடல் 1028 ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் - சங்கராபரணம் 
  தாளம் - அங்கதாளம் (10 1/2) 
 தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3 
   தான தான தானான தானத் ...... தனதான 
   காதி மோதி வாதாடு நூல்கற் ...... றிடுவோருங் 
    காசு தேடி யீயாமல் வாழப் ...... பெறுவோரும் 
  மாதுபாகர் வாழ்வே யெனாநெக் ...... குருகாரும் 
       மாறி லாத மாகால னூர்புக் ...... கலைவாரே 
         நாத ரூப மாநாத ராகத் ...... துறைவோனே 
       நாக லோக மீரேழு பாருக் ...... குரியோனே 
        தீதி லாத வேல்வீர சேவற் ...... கொடியோனே 
         தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே. 
   பாடல் 1029 ( பொதுப்பாடல்கள் ) 
 
      ராகம் - ..... ;   தாளம் - 
   தான தான தானான தானத் ...... தனதான 
             கூறு மார வேளார வாரக் ...... கடலாலே 
         கோப மீது மாறாத கானக் ...... குயிலாலே 
              மாறு போலு மாதாவின் வார்மைப் ...... பகையாலே 
      மாது போத மாலாகி வாடத் ...... தகுமோதான் 
      ஏறு தோகை மீதேறி யாலித் ...... திடும்வீரா 
   ஏழு லோகம் வாழ்வான சேவற் ...... கொடியோனே 
   சீறு சூரர் நீறாக மோதிப் ...... பொரும்வேலா 
         தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே. 
   பாடல் 1030( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ஹிந்தோளம் 
  தாளம் - அங்கதாளம் (10 1/2) 
 தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3 
   தான தான தானான தானத் ...... தனதான 
     பேர வாவ றாவாய்மை பேசற் ...... கறியாமே 
       பேதை மாத ராரோடு கூடிப் ...... பிணிமேவா 
         ஆர வார மாறாத நூல்கற் ...... றடிநாயேன் 
       ஆவி சாவி யாகாமல் நீசற் ...... றருள்வாயே 
            சூர சூர சூராதி சூரர்க் ...... கெளிவாயா 
   தோகை யாகு மாரா கிராதக் ...... கொடிகேள்வா 
            தீர தீர தீராதி தீரப் ...... பெரியோனே 
         தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே. 
   பாடல் 1031 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
 தான தான தனத்தம் தான தான தனத்தம் 
      தான தான தனத்தம் ...... தனதான 
    காதி லோலை கிழிக்குங் காம பாண விழிக்குங் 
      கான யாழின் மொழிக்கும் ...... பொதுமாதர் 
    காணொ ணாத இடைக்கும் பூணு லாவு முலைக்குங் 
           காதில் நீடு குழைக்கும் ...... புதிதாய 
       கோதி லாத கருப்பஞ் சாறு போல ருசிக்குங் 
          கோவை வாயமு துக்குந் ...... தணியாமல் 
   கூருவே னொரு வர்க்குந் தேடொ ணாததொ ரர்த்தங் 
            கூடு மாறொரு சற்றுங் ...... கருதாயோ 
  பூதி பூஷணர் கற்பின் பேதை பாகர் துதிக்கும் 
                போத தேசிக சக்ரந் ...... தவறாதே 
 போக பூமி புரக்குந் த்யாக மோக குறப்பெண் 
              போத ஆதர வைக்கும் ...... புயவீரா 
              சோதி வேலை யெடுத்தன் றோத வேலையில் நிற்குஞ் 
      சூத தாருவும் வெற்பும் ...... பொருகோவே 
      சூரர் சேனை யனைத்துந் தூளி யாக நடிக்குந் 
          தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே. 
   பாடல் 1032 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
 தான தான தனத்தம் தான தான தனத்தம் 
      தான தான தனத்தம் ...... தனதான 
        காரு லாவு குழற்குங் கூரிதான விழிக்குங் 
         காதல் பேணு நுதற்குங் ...... கதிர்போலுங் 
    காவி சேர்பவ ளத்தின் கோவை வாயித ழுக்குங் 
             காசு பூணு முலைக்குங் ...... கதிசேரா 
       நேரிதான இடைக்குஞ் சீத வார நகைக்கும் 
         நேரிலாத தொடைக்குஞ் ...... சதிபாடும் 
          நீத மான அடிக்கும் மாலு றாத படிக்குன் 
          னேய மோடு துதிக்கும் ...... படிபாராய் 
              பார மேரு வளைக்கும் பாணி யார்சடை யிற்செம் 
     பாதி சோம னெருக்கும் ...... புனைவார்தம் 
         பால காஎன நித்தம் பாடு நாவலர் துக்கம் 
              பாவ நாச மறுத்தின் ...... பதமீவாய் 
     சோரிவாரியிடச்சென் றேறி யோடி யழற்கண் 
             சூல காளி நடிக்கும் ...... படிவேலாற் 
    சூரர் சேனை தனைக்கொன் றார வார மிகுத்தெண் 
          தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே. 
   பாடல் 1033 ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் - ..... ;   தாளம் - 
       தானத்த தானத்த தானத்த தானத்த 
         தானத்த தானத்த ...... தனதான 
          தோடுற்ற காதொக்க நீடுற்ற போருற்ற 
          தோய்மைக்க ணால்மிக்க ...... நுதலாலே 
            தோள்வெற்பி னால்விற்கை வேளுக்கு மேன்மக்கள் 
     சோர்கைக்கு மால்விற்கு ...... மடவார்தம் 
            ஊடற்கு ளேபுக்கு வாடிக்க லாமிக்க 
 ஓசைக்கு நேசித்து ...... உ ழலாதே 
      ஊர்பெற்ற தாய்சுற்ற மாயுற்ற தாள்பற்றி 
              யோதற்கு நீசற்று ...... முணர்வாயே 
      வேடர்க்கு நீள்சொர்க்கம் வாழ்விக்க வோர்வெற்பின் 
           மீதுற்ற பேதைக்கொர் ...... மணவாளா 
          வேழத்தி னாபத்தை மீள்வித்த மாலொக்க 
                வேதத்தி லேநிற்கு ...... மயனாருந் 
    தேடற்கொ ணாநிற்கும் வேடத்தர் தாம்வைத்த 
            சேமத்தி னாமத்தை ...... மொழிவோனே 
           தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர் 
            சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே. 
   பாடல் 1034 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - சுருட்டி 
      தாளம் - சதுஸ்ர த்ருபுடை - கண்டநடை (20) 
                   நடை- தகதகிட 
       தானத்த தானத்த தானத்த தானத்த 
         தானத்த தானத்த ...... தனதான 
             தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற 
              தோளுக்கை காலுற்ற ...... குடிலுடே 
   சொர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு 
    வேதித்த சூலத்த ...... னணுகாமுன் 
     கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ 
            டேபட்டு வீழ்வித்த ...... கொலைவேலா 
             கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி 
         கூர்கைக்கு நீகொற்ற ...... அருள்தாராய் 
             ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த 
            ராவிக்கள் மாள்வித்து ...... மடியாதே 
         ஆலித்து மூலத்தொ டேயுட்கொ ளாதிக்கு 
        மாம்வித்தை யாமத்தை ...... யருள்வோனே 
             சேலொத்த வேலொத்த நீலத்து மேலிட்ட 
               தோதக்கண் மானுக்கு ...... மணவாளா 
           தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர் 
            சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே. 
   பாடல் 1035 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ஸிந்துபைரவி 
                    தாளம் - ஆதி 
           தானந் தனதன தானந் தனதன 
           தானந் தனதன ...... தனதான 
                ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி 
 யூருங் கருவழி ...... யொருகோடி 
     ஓதும் பலகலை கீதஞ் சகலமு 
                மோரும் படியுன ...... தருள்பாடி 
   நானுன் திருவடி பேணும் படியிரு 
              போதுங் கருணையில் ...... மறவாதுன் 
              நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி 
                நாடும் படியருள் ...... புரிவாயே 
              கானுந் திகழ்கதி ரோனுஞ் சசியொடு 
              காலங் களுநடை ...... யுடையோனுங் 
  காருங் கடல்வரை நீருந் தருகயி 
            லாயன் கழல்தொழு ...... மிமையோரும் 
               வானிந் திரனெடு மாலும் பிரமனும் 
 வாழும் படிவிடும் ...... வடிவேலா 
  மாயம் பலபுரிசூரன் பொடிபட 
         வாள்கொண் டமர்செய்த ...... பெருமாளே. 
   பாடல் 1036 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
           தானந் தனதன தானந் தனதன 
           தானந் தனதன ...... தனதான 
                தீயும் பவனமு நீருந் தரணியும் 
   வானுஞ் செறிதரு ...... பசுபாசத் 
             தேகந் தனைநிலை யேயொன் றிருவினை 
 தீருந் திறல்வினை ...... யறியாதே 
 ஓயும் படியறு நூறும் பதினுறழ் 
 நூறும் பதினிரு ...... பதுநூறும் 
               ஓடுஞ் சிறுவுயிர் மீளும் படிநல 
              யோகம் புரிவது ...... கிடையாதோ 
           வேயுங் கணியும்வி ளாவும் படுபுன 
               மேவுஞ் சிறுமிதன் ...... மணவாளா 
    மீனம் படுகட லேழுந் தழல்பட 
    வேதங் கதறிய ...... வொருநாலு 
  வாயுங் குலகிரிபாலுந் தளைபட 
 மாகந் தரமதில் ...... மறைசூரன் 
            மார்புந் துணையுறு தோளுந் துணிபட 
         வாள்கொண் டமர்செய்த ...... பெருமாளே. 
   பாடல் 1037( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - பெஹாக் 
                    தாளம் - ஆதி 
           தானந் தனதன தானந் தனதன 
           தானந் தனதன ...... தனதான 
    வாதந் தலைவலி சூலம் பெருவயி 
 றாகும் பிணியிவை ...... யணுகாதே 
             மாயம் பொதிதரு காயந் தனின்மிசை 
    வாழுங் கருவழி ...... மருவாதே 
               ஓதம் பெறுகடல் மோதுந் திரையது 
  போலும் பிறவியி ...... லுழலாதே 
     ஓதும் பலஅடி யாருங் கதிபெற 
  யானுன் கழலிணை ...... பெறுவேனோ 
                கீதம் புகழிசை நாதங் கனிவொடு 
             வேதங் கிளர்தர ...... மொழிவார்தம் 
  கேடின் பெருவலி மாளும் படியவ 
               ரோடுங் கெழுமுத ...... லுடையோனே 
 வேதந் தொழுதிரு மாலும் பிரமனு 
               மேவும் பதமுடை ...... விறல்வீரா 
            மேல்வந் தெதிர்பொரு சூரன் பொடிபட 
         வேல்கொண் டமர்செய்த ...... பெருமாளே. 
   பாடல் 1038 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
             தானா தானா தானா தானா 
           தானா தானத் ...... தனதான 
        ஊனே தானா யோயா நோயா 
   லுசா டூசற் ...... குடில்பேணா 
         ஓதா மோதா வாதா காதே 
 லோகா சாரத் ...... துளம்வேறாய் 
     நானே நீயாய் நீயே நானாய் 
  நானா வேதப் ...... பொருளாலும் 
         நாடா வீடா யீடே றாதே 
  நாயேன் மாயக் ...... கடவேனோ 
          வானே காலே தீயே நீரே 
   பாரே பாருக் ...... குரியோனே 
    மாயா மானே கோனே மானார் 
              வாழ்வே கோழிக் ...... கொடியோனே 
    தேனே தேனீள் கானா றாய்வீழ் 
  தேசார் சாரற் ...... கிரியோனே 
      சேயே வேளே பூவே கோவே 
   தேவே தேவப் ...... பெருமாளே. 
   பாடல் 1039 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
             தானா தானா தானா தானா 
           தானா தானத் ...... தனதான 
  சாவா மூவா வேளே போல்வாய் 
   தாளா வேனுக் ...... கருள்கூருந் 
        தாதா வேஞா தாவே கோவே 
         சார்பா னார்கட் ...... குயிர்போல்வாய் 
   ஏவால் மாலே போல்வாய் காரே 
            போல்வா யீதற் ...... கெனையாள்கொண் 
   டேயா பாடா வாழ்வோர் பாலே 
   யான்வீ ணேகத் ...... திடலாமோ 
   பாவா நாவாய் வாணீ சார்வார் 
      பாரா வாரத் ...... துரகேசப் 
   பாய்மீ தேசாய் வார்கா ணாதே 
       பாதா ளாழத் ...... துறுபாதச் 
               சேவா மாவூர் கோமான் வாழ்வே 
 சீமா னேசெச் ...... சையமார்பா 
      சேயே வேளே பூவே கோவே 
   தேவே தேவப் ...... பெருமாளே. 
   பாடல் 1040( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - மலஹரி
           தாளம் - ஆதி - 2 களை 
             தானா தானா தானா தானா 
           தானா தானத் ...... தனதான 
     நாரா லேதோல் நீரா லேயாம் 
      நானா வாசற் ...... குடிலுடே 
     ஞாதா வாயே வாழ்கா லேகாய் 
           நாய்பேய் சூழ்கைக் ...... கிடமாமுன் 
        தாரா ரார்தோ ளீரா றானே 
             சார்வா னோர்நற் ...... பெருவாழ்வே 
          தாழா தேநா யேனா வாலே 
             தாள்பா டாண்மைத் ...... திறல்தாராய் 
                பாரே ழோர்தா ளாலே யாள்வோர் 
    பாவார்வேதத் ...... தயனாரும் 
       பர்ழு டேவா னூடே பர்ரு 
 டேயூர் பாதத் ...... தினைநாடாச் 
               சீரார் மாதோ டேவாழ் வார்நீள் 
             சேவூர் வார்பொற் ...... சடையீசர் 
      சேயே வேளே பூவே கோவே 
   தேவே தேவப் ...... பெருமாளே. 
   பாடல் 1041 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
             தானா தானா தானா தானா 
           தானா தானத் ...... தனதான 
   மாதா வோடே மாமா னானோர் 
                மாதோ டேமைத் ...... துனமாரும் 
   மாறா னார்போ னீள்தீ யூடே 
             மாயா மோகக் ...... குடில்போடாப் 
 போதா நீரு டேபோய் மூழ்கா 
            வீழ்கா வேதைக் ...... குயிர்போமுன் 
     போதா காரா பாராய் சீரார் 
 போதார் பாதத் ...... தருள்தாராய் 
   வேதா வோடே மாலா னார்மேல் 
  வானோர் மேனிப் ...... பயமீள 
  வேதா னோர்மே லாகா தேயோர் 
 வேலால் வேதித் ...... திடும்வீரா 
   தீதார் தீயார் தீயு ட்முள் 
 சேரா சேதித் ...... திடுவோர்தஞ் 
      சேயே வேளே பூவே கோவே 
   தேவே தேவப் ...... பெருமாளே. 
   பாடல் 1042 ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் - ..... ;   தாளம் - 
             தானா தானா தானா தானா 
           தானா தானத் ...... தனதான 
 வாராய் பேதாய் கேளாய் நீதாய் 
  மானார் மோகத் ...... துடனாசை 
       மாசூ டாடா தூடே பாராய் 
  மாறா ஞானச் ...... சுடர்தானின் 
    றாரா யாதே யாராய் பேறாம் 
 ஆனா வேதப் ...... பொருள்காணென் 
   றாள்வாய் நீதா னாதா பார்மீ 
          தார்வே றாள்கைக் ...... குரியார்தாம் 
      தோரா வானோர் சேனா தாரா 
       சூரா சாரற் ...... புனமாது 
                தோள்தோய் தோளீ ராறா மாசூர் 
  தூளாய் வீழச் ...... சிறுதாரைச் 
          சீரா வாலே வாளா லேவே 
    லாலே சேதித் ...... திடும்வீரா 
      சேயே வேளே பூவே கோவே 
   தேவே தேவப் ...... பெருமாளே. 
   பாடல் 1043 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
      தனன தான தானான தனன தான தானான 
         தனன தான தானான ...... தனதான 
          அகல நீளம் யாதாலு மொருவ ராலு மாராய 
            அரிய மோன மேகோயி ...... லெனமேவி 
      அசைய வேக்ரியாபீட மிசைபு காம காஞான 
             அறிவி னாத ராமோத ...... மலர்தூவிச் 
    சகல வேத னாதீத சகல வாச காதீத 
                சகல மாக்ரியாதீத ...... சிவ்ருப 
    சகல சாத காதீத சகல வாச னாதீத 
            தனுவை நாடி மாபூசை ...... புரிவேனே 
               விகட தார சூதான நிகள பாத போதூள 
 விரக ராக போதார ...... சுரர்கால 
            விபுத மாலி காநீல முகப டாக மாயூர 
                விமல வ்யாப காசீல ...... கவிநோத 
 ககன கூட பாடீர தவள சோபி தாளான 
   கவன பூத ரர்ருட ...... சதகோடி 
           களப காம வீர்வீசு கரமு கார வேல்வீர 
          கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. 
   பாடல் 1044 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
      தனன தான தானான தனன தான தானான 
         தனன தான தானான ...... தனதான 
 அடைப டாது நாடோ றும் இடைவிடாது போம்வாயு 
             அடைய மீளில் வீடாகு ...... மெனநாடி 
       அருள்பெ றாவ னாசார கரும யோகி யாகாமல் 
              அவனி மீதி லோயாது ...... தடுமாறும் 
      உ டலம் வேறு யான்வேறு கரணம் வேறு வேறாக 
   உ தறி வாச காதீத ...... அடியூடே 
         உ ருகி ஆரியாசார பரம யோகி யாமாறுன் 
                உ பய பாத ராசீக ...... மருள்வாயே 
       வடப ராரை மாமேரு கிரியெ டாந டாமோது 
                மகர வாரியோரேழு ...... மமுதாக 
           மகுட வாள ராநோவ மதிய நோவ வாணச 
         வனிதை மேவு தோளாயி ...... ரமுநோவக் 
       கடையு மாதி கோபாலன் மருக சூலி காபாலி 
       புதல்வ கான வேல்வேடர் ...... கொடிகோவே 
 கனக லோக பூபால சகல லோக ஆதார 
          கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. 
   பாடல் 1045 ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் - யமுனா கல்யாணி 
   தாளம் - அங்கதாளம் (5 1/2) 
          தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2 
      தனன தான தானான தனன தான தானான 
         தனன தான தானான ...... தனதான 
        அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல 
                அமுத பான ம்முல ...... அனல்மூள 
        அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது 
   அரிச தான சோபான ...... மதனாலே 
         எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ 
           மெளிது சால மேலாக ...... வுரையாடும் 
   எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் 
  இதய பாவ னாதீத ...... மருள்வாயே 
     விமலை தோடி மீதொடு யமுனை போல வோரேழு 
           விபுத மேக மேபோல ...... வுலகேழும் 
      விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல 
             வெகுவி தாமு காகாய ...... பதமோடிக் 
           கமல யோனி வீடான ககன கோள மீதோடு 
                கலப நீல மாயூர ...... இளையோனே 
       கருணை மேக மேதூய கருணை வாரியேயீறில் 
          கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. 
   பாடல் 1046 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
      தனன தான தானான தனன தான தானான 
         தனன தான தானான ...... தனதான 
         அயிலின் வாளி வேல்வாளி அளவு கூரிதாயீச 
                ரமுத ளாவு மாவேச ...... மதுபோல 
         அறவு நீளி தாய்மீள அகலி தாய வார்காதி 
            னளவு மோடி நீடோ தி ...... நிழலாறித் 
      துயில்கொ ளாத வானோரு மயல்கொ ளாத ஆவேத 
               துறவ ரான பேர்யாரு ...... மடலேறத் 
            துணியு மாறு லாநீல நயன மாத ராரோடு 
            துவளு வேனை யீடேறு ...... நெறிபாராய் 
           பயிலு மேக நீகார சயில ராசன் வாழ்வான 
               பவதி யாம ளாவாமை ...... அபிராமி 
               பரிபு ரார பாதார சரணி சாம ளாகார 
             பரம யோகி னீமோகி ...... மகமாயி 
      கயிலை யாள ரோர்பாதி கடவு ளாளி லோகாயி 
    கனத னாச லாபார ...... அமுதூறல் 
            கமழு மார ணாகீத கவிதை வாண வேல்வீர 
          கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. 
   பாடல் 1047 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
      தனன தான தானான தனன தான தானான 
         தனன தான தானான ...... தனதான 
         இரத மான வாயூறல் பருகி டாவி டாய்போக 
           இனிய போக வாராழி ...... யதில்மூழ்கி 
      இதயம் வேறு போகாம லுருகி யேக மாய்நாளு 
       மினிய மாதர் தோள்கூடி ...... விளையாடுஞ் 
       சரச மோக மாவேத சரியை யோக்ரியாஞான 
   சமுக மோத ராபூத ...... முதலான 
           சகள மோச டாதார முகுள மோநி ராதார 
               தரணி யோநி ராகார ...... வடிவேயோ 
 பரத நீல மாயூர வரத நாக கேயூர 
              பரம யோகி மாதேசி ...... மிகுஞான 
          பரமர் தேசி காவேட பதிவ்ரு தாசு சீபாத 
 பதும சேக ராவேலை ...... மறவாத 
 கரத லாவி சாகாச கலக லாத ராபோத 
            கமுக மூஷி கர்ருட ...... மததாரைக் 
 கடவுள் தாதை சூழ்போதில் உ லக மேழு சூழ்போது 
          கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. 
   பாடல் 1048 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
      தனன தான தானான தனன தான தானான 
         தனன தான தானான ...... தனதான 
       குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி 
                குலைய ஏம னாலேவி ...... விடுகாலன் 
       கொடிய பாச மோர்சூல படையி னோடு கூசாத 
  கொடுமை நோய்கொ டேகோலி ...... யெதிராமுன் 
 பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் பாலாழி 
         பயமு றாமல் வேலேவு ...... மிளையோனே 
            பழுது றா பாவாண ரெழுதொ ணாத தோள்வீர 
          பரிவி னோடு தாள்பாட ...... அருள்தாராய் 
      மருது நீற தாய்வீழ வலிசெய் மாயன் வேயூதி 
           மடுவி லானை தான்மூல ...... மெனவோடி 
              வருமு ராரிகோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின் 
            வசன மோம றாகேசன் ...... மருகோனே 
             கருதொ ணாத ஞானாதி எருதி லேறு காபாலி 
            கடிய பேயி னோடாடி ...... கருதார்வெங் 
         கனலில் மூழ்க வேநாடி புதல்வ கார ணாதீத 
          கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. 
   பாடல் 1049 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
      தனன தான தானான தனன தான தானான 
         தனன தான தானான ...... தனதான 
         சுருதி யூடு கேளாது சரியை யாளர் காணாது 
 துரிய மீது சாராது ...... எவராலுந் 
      தொடரொ ணாது மாமாயை யிடைபு காது ஆனாத 
               சுகம கோத தீயாகி ...... யொழியாது 
      பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது 
               பவனம் வீசில் வீழாது ...... சலியாது 
     பரவை சூழி லாழாது படைகள் மோதில் மாயாது 
              பரம ஞான வீடேது ...... புகல்வாயே 
        நிருதர் பூமி பாழாக மகர பூமி தநமுள 
                நிபிட தாரு காபூமி ...... குடியேற 
             நிகர பார நீகார சிகர மீது வேலேவு 
                நிருப வேத ஆசாரி...... யனுமாலும் 
          கருது மாக மாசாரிகனக கார்மு காசாரி
 ககன சாரிபூசாரி...... வெகுசாரி
           கயிலை நாட காசாரிசகல சாரிவாழ்வான 
          கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. 
   பாடல் 1050( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
      தனன தான தானான தனன தான தானான 
         தனன தான தானான ...... தனதான 
             தொடஅ டாது நேராக வடிவு காண வாராது 
            சுருதி கூறு வாராலு ...... மெதிர்கூறத்** 
       துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேக 
               துரிய மாகி வேறாகி ...... யறிவாகி 
    நெடிய கால்கை யோடாடு முடலின் மேவி நீநானு 
    மெனவு நேர்மை நூல்கூறி ...... நிறைமாயம் 
            நிகரில் கால னாரேவ முகரியான தூதாளி 
    நினைவொ டேகு மோர்நீதி ...... மொழியாதோ 
       அடல்கெ டாத சூர்கோடி மடிய வாகை வேலேவி 
             யமர்செய் வீர ஈராறு ...... புயவேளே 
         அழகி னோடு மானீனு மரிவை காவ லாவேதன் 
             அரியும் வாழ வானாளு ...... மதிரேகா 
          கடுவி டாக ளர்ருப நடவி நோத தாடாளர் 
         கருதி டார்கள் தநமுள ...... முதல்நாடுங் 
          கடவு ளேறு மீதேறி புதல்வ கார ணாவேத 
          கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. 
   பாடல் 1051 ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் - ..... ;   தாளம் - 
      தனன தான தானான தனன தான தானான 
         தனன தான தானான ...... தனதான 
        நிலவில் மார னேறுதை யசைய வீசு மாராம 
     நிழலில் மாட மாமாளி ...... கையின்மேலாம் 
     நிலையில் வாச மாறாத அணையில் மாத ராரோடு 
   நியதி யாக வாயார ...... வயிறார 
            இலவி லுறு தேனூறல் பருகி யார வாமீறி 
 யிளகி யேறு பாடீர ...... தனபாரம் 
      எனது மார்பி ல்முழ்க இறுக மேவி மால்கூரு 
               கினுமு னீப சீர்பாத ...... மறவேனே 
      குலவி யோம பாகீர திமிலை நாதர் மாதேவர் 
           குழைய மாலி காநாக ...... மொடுதாவிக் 
           குடில கோம ளாகார சடில மோலி மீதேறு 
               குமர வேட மாதோடு ...... பிரியாது 
              கலவி கூரு மீராறு கனக வாகு வேசூரர் 
 கடக வாரிதூளாக ...... அமராடுங் 
       கடக போல மால்யானை வனிதை பாக வேல்வீர 
          கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. 
   பாடல் 1052 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - திலங் 
   தாளம் - அங்கதாளம் (5 1/2) 
          தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2 
      தனன தான தானான தனன தான தானான 
         தனன தான தானான ...... தனதான 
  மனக பாட பாடீர தனத ராத ரர்ருப 
    மதன ராச ராசீப ...... சரகோப 
              வருண பாத காலோக தருண சோபி தாகார 
              மகளி ரோடு சீராடி ...... யிதமாடிக் 
             குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான 
        குறைய னேனை நாயேனை ...... வினையேனைக் 
         கொடிய னேனை யொதாத குதலை யேனை நாடாத 
            குருட னேனை நீயாள்வ ...... தொருநாளே 
              அநக வாம னாகார முநி ராக மால்தேட 
 அரிய தாதை தானேவ ...... மதுரேசன் 
               அரிய சார தாபீட மதனி லேறி யீடேற 
            அகில நாலு மாராயு ...... மிளையோனே 
               கனக பாவ னாகார பவள கோம ளாகார 
                கலப சாம ளாகார ...... மயிலேறுங் 
            கடவு ளேக்ரு பாகார கமல வேத னாகார 
          கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. 
   பாடல் 1053 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - பிருந்தாவன சாரங்கா 
   தாளம் - அங்கதாளம் (5 1/2) 
          தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2 
      தனன தான தானான தனன தான தானான 
         தனன தான தானான ...... தனதான 
                அதல சேட னாராட அகில மேரு மீதாட 
 அபின காளி தானாட ...... அவளோடன் 
         றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட 
 அருகு பூத வேதாள ...... மவையாட 
              மதுர வாணி தானாட மலரில் வேத னாராட 
               மருவு வானு ளோராட ...... மதியாட 
            வனச மாமி யாராட நெடிய மாம னாராட 
              மயிலு மாடி நீயாடி ...... வரவேணும் 
             கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு 
         கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக் 
        கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது 
           கனக வேத கேர்டுதி ...... அலைமோதும் 
         உ ததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத 
         உ வண மூர்தி மாமாயன் ...... மருகோனே 
          உ தய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ 
          னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே. 
   பாடல் 1054 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
      தனன தான தானான தனன தான தானான 
         தனன தான தானான ...... தனதான 
      குருதி மூளை யூனாறு மலம றாத தோல்மூடு 
      குடிசை கோழை மாசூறு ...... குழிநீர்மேற் 
        குமிழி போல நேராகி அழியு மாயை யாதார 
              குறடு பாறு நாய்கூளி ...... பலகாகம் 
         பருகு காய மேபேணி அறிவி லாம லேவீணில் 
     படியின் மூழ்கி யேபோது ...... தளிர்வீசிப் 
          பரவு நாட காசார கிரியை யாளர் காணாத 
              பரம ஞான வீடேது ...... புகல்வாயே 
     எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான 
  இமய மாது மாசூலி ...... தருபாலா 
       எழுமை யீறு காணாதர் முநிவ ரோடு வானாடர் 
           இசைக ளோடு பாராட ...... மகிழ்வோனே 
         அரவி னோடு மாமேரு மகர வாரிபூலோக 
              மதிர நாக மோரேழு ...... பொடியாக 
           அலகை பூத மாகாளி சமர பூமி மீதாட 
           அசுரர் மாள வேலேவு ...... பெருமாளே. 
   பாடல் 1055 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
     தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன 
        தனன தனன தாத்தன ...... தனதான 
   சரியு மவல யாக்கையு ளெரியு முரிய தீப்பசி 
         தணிகை பொருடி ராப்பகல் ...... தடுமாறுஞ் 
  சகல சமய தார்க்கிகர் கலக மொழிய நாக்கொடு 
               சரண கமல மேத்திய ...... வழிபாடுற் 
         றரிய துரிய மேற்படு கருவி கரண நீத்ததொ 
         ரறிவின் வடிவ மாய்ப்புள ...... கிதமாகி 
        அவச கவச மூச்சற அமரு மமலர் மேற்சில 
          ரதிப திவிடு பூக்கணை ...... படுமோதான் 
    விரியு முதய பாஸ்கர கிரண மறைய வார்ப்பெழ 
  மிடையு மலகில் தேர்ப்படை ...... யொடுசூழும் 
     விகட மகுட பார்த்திப ரனைவ ருடனு நூற்றுவர் 
           விசைய னொருவ னாற்பட ...... வொருதூது 
              திரியு மொருப ராக்ரம அரியின் மருக பார்ப்பதி 
       சிறுவ தறுகண் வேட்டுவர் ...... கொடிகோவே 
   திமிர யுததி கூப்பிட அவுணர் மடிய வேற்கொடு 
             சிகரிதகர வீக்கிய ...... பெருமாளே. 
   பாடல் 1056 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
     தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன 
        தனன தனன தாத்தன ...... தனதான 
          மகளு மனைவி தாய்க்குல மணையு மனைவர் வாக்கினில் 
         மறுகி புறமு மார்த்திட ...... வுடலுடே 
           மருவு முயிரை நோக்கமு மெரியை யுமிழ ஆர்ப்பவ 
           ருடனு மியமன் மாட்டிட ...... அணுகாமுன் 
   உ கமு முடிவு மாச்செலு முதய மதியி னோட்டமு 
       முளது மிலது மாச்சென ...... வுறைவோரும் 
 உ ருகு முரிமை காட்டிய முருக னெனவு நாக்கொடு 
       உ னது கழல்கள் போற்றிட ...... அருள்தாராய் 
  புகல வரிய போர்ச்சிலை விரக விசைய னாற்புக 
        ழுடைய திருத ராட்டிர ...... புதல்வோர்தம் 
           புரவி கரிகள் தேர்ப்படை மடிய அரசை மாய்த்துயர் 
      புவியின் விதன மாற்றினர் ...... மருகோனே 
 மிகவு மலையு மாக்கடல் முழுது மடிய வேற்றுரு 
        வெனவு மருவி வேற்கொடு ...... பொருசூரன் 
   விரைசெய் நெடிய தோட்கன அடலுமுருவ வேற்படை 
      விசைய முறவும் வீக்கிய ...... பெருமாளே. 
   பாடல் 1057 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;  தாளம் - 
            தனன தாத்தன தனன தாத்தன 
          தனன தாத்தன ...... தந்ததான 
              குடரு நீர்க்கொழு மலமு மீத்தொரு 
 குறைவி லாப்பல ...... என்பினாலுங் 
            கொடிய நோய்க்கிட மெனவு நாட்டிய 
                குடிலி லேற்றுயி ...... ரென்றுகூறும் 
  வடிவி லாப்புல மதனை நாட்டிடு 
               மறலி யாட்பொர ...... வந்திடாமுன் 
   மதியு மூத்துன தடிக ளேத்திட 
             மறுவிலாப் பொருள் ...... தந்திடாதோ 
            கடிய காட்டக முறையும் வேட்டுவர் 
            கருதொ ணாக்கணி ...... வெங்கையாகிக் 
          கழைசெய் தோட்குற மயிலை வேட்டுயர் 
                களவி னாற்புணர் ...... கந்தவேளே 
             முடுகி மேற்பொரு மசுர ரார்ப்பெழ 
               முடிய வேற்கொடு ...... வென்றவீரா 
 முடிய லாத்திரு வடிவை நோக்கிய 
           முதிய மூர்த்திகள் ...... தம்பிரானே. 
   பாடல் 1058 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ஹம்ஸத்வனி 
   தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
              தகிடதகதிமி-3 1/2 
            தனன தாத்தன தனன தாத்தன 
          தனன தாத்தன ...... தந்ததான 
               பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பகல் 
          இரவு போய்ப்புகல் ...... கின்றவேதப் 
        பொருள தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெரு 
          வெளிய தாய்ப்புதை ...... வின்றியீறில் 
 கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு 
            கமுத மாய்ப்புல ...... னைந்துமாயக் 
 கரண மாய்த்தெனை மரண மாற்றிய 
            கருணை வார்த்தையி ...... ருந்தவாறென் 
  உ ததி கூப்பிட நிருத ரார்ப்பெழ 
 உ லகு போற்றிட ...... வெங்கலாப 
    ஒருப ராக்ரம துரக மோட்டிய 
             வுரவ கோக்கிரி...... நண்பவானோர் 
           முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை 
           முலைகள் தேக்கிட ...... வுண்டவாழ்வே 
               முளரிபாற்கடல் சயில மேற்பயில் 
           முதிய மூர்த்திகள் ...... தம்பிரானே. 
   பாடல் 1059 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - பாகேஸ்ரீ 
               தாளம் - மிஸ்ரஅட (18) (/7/7 00) 
           தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2 
                     (முதல் லகு) 
            தனன தாத்தன தனன தாத்தன 
  தானா தானா தானா தானா ...... தனதான 
                கவடு கோத்தெழு முவரிமாத்திறல் 
        காய்வேல் பாடே னாடேன் வீடா ...... னதுகூட 
                கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பன 
        கால்மேல் வீழேன் வீழ்வார் கால்மீ ...... தினும்வீழேன் 
               தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர் 
            தாழா தீயேன் வாழா தேசா ...... வதுசாலத் 
 தரமு மோக்ஷமு மினியெ னாக்கைச 
           தாவா மாறே நீதா னாதா ...... புரிவாயே 
    சுவடு பார்த்தட வருக ராத்தலை 
            தூளா மாறே தானா நாரா ...... யணனேநற் 
              றுணைவ பாற்கடல் வனிதை சேர்ப்பது 
  ழாய்மார் பாகோ பாலா காவா ...... யெனவேகைக் 
    குவடு கூப்பிட வுவண மேற்கன 
  கேர்டு தாவா னேபோ தாள்வான் ...... மருகோனே 
  குலிச பார்த்திப னுலகு காத்தருள் 
   கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே. 
   பாடல் 1060 ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் - ஸஹானா 
             தாளம் - மிஸ்ரஅட (18) (17 17 00) 
                     (முதல் லகு) 
           தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2 
            தனன தாத்தன தனன தாத்தன 
  தானா தானா தானா தானா ...... தனதான 
             பருதி யாய்ப்பனி மதிய மாய்ப்படர் 
    பாராய் வானாய் நீர்தீ காலா ...... யுடுசாலம் 
            பலவு மாய்ப்பல கிழமை யாய்ப் பதி 
          னாலா றேழா மேனா ளாயே ...... ழுலகாகிச் 
              சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட 
     ராய்வே தாவாய் மாலாய் மேலே ...... சிவமான 
         தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல் 
           சூடா நாடா ஈடே றாதே ...... சுழல்வேனோ 
   திருத ராட்டிர னுதவு நூற்றுவர் 
  சேணா டாள்வா னாளோர் மூவா ...... றினில்வீழத் 
   திலக பார்த்தனு முலகு காத்தருள் 
  சீரா மாறே த்ருர் கோமான் ...... மருகோனே 
        குருதி வேற்கர நிருத ராஷத 
         கோபா நீபா குதா ளாமா ...... மயில்வீரா 
  குலிச பார்த்திப னுலகு காத்தருள் 
   கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே. 
   பாடல் 1061 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
            தனன தாத்தன தனன தாத்தன 
  தானா தானா தானா தானா ...... தனதான 
               முதலி யாக்கையு மிளமை நீத்தற 
            மூவா தாரா காவா தாரா ...... எனஞாலம் 
              முறையி டாப்படு பறைக ளார்த்தெழ 
      மூடா வீடு டேகேள் கோகோ ...... எனநோவ 
  மதலை கூப்பிட மனைவி கூப்பிட 
        மாதா மோதா வீழா வாழ்வே ...... யெனமாய 
               மறலி யூர்ப்புகு மரண யாத்திரை 
   வாரா வானாள் போநாம் நீமீ ...... ளெனவேணும் 
  புதல றாப்புன எயினர் கூக்குரல் 
       போகா நாடார் பாரா வாரா ...... ரசுரோடப் 
   பொருது தாக்கிய வயப ராக்ரம 
       பூபா லாநீ பாபா லாதா ...... தையுமோதுங் 
    குதலை வாய்க்குரு பரச டாக்ஷர 
     கோடா ரூபா ரூபா பாண ...... சதவேள்விக் 
  குலிச பார்த்திப னுலகு காத்தருள் 
   கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே. 
   பாடல் 1062 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
            தனன தாத்தன தனன தாத்தன 
  தானா தானா தானா தானா ...... தனதான 
            வருக வீட்டெனும் விரகர் நேத்திரம் 
      வாளோ வேலோ சேலோ மானோ ...... எனுமாதர் 
 மனது போற்கரு கினகு வாற்குழல் 
   வானோ கானோ மாயா மாயோன் ...... வடிவேயோ 
 பருகு பாற்கடல் முருகு தேக்கிய 
      பாலோ தேனோ பாகோ வானோ ...... ரமுதேயோ 
              பவள வாய்ப்பனி மொழியெ னாக்கவி 
        பாடா நாயே னீடே றாதே ...... யொழிவேனோ 
             அருகு பார்ப்பதி யுருகி நோக்கவொ 
              ரால்கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ ...... வெனஏகி 
   அவுணர் கூப்பிட வுததி தீப்பட 
         ஆகா சூரா போகா தேமீ ...... ளெனவோடிக் 
             குருகு பேர்க்கிரியுருவ வோச்சிய 
       கூர்வே லாலே யோர்வா ளாலே ...... அமராடிக் 
  குலிச பார்த்திப னுலகு காத்தருள் 
   கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே. 
   பாடல் 1063 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
            தனன தாத்தன தனன தாத்தன 
  தானா தானா தானா தானா ...... தனதான 
 மறலி போற்சில நயன வேற்கொடு 
             மாயா தோயா வேயார் தோளார் ...... மறையோதும் 
           வகையு மார்க்கமு மறமு மாய்த்திட 
            வாறா ராயா தேபோ மாறா ...... திடதீர 
           விறலு மேற்பொலி அறிவு மாக்கமும் 
              வேறாய் நீரே றாதோர் மேடாய் ...... வினையூடே 
                விழுவி னாற்களை யெழும தாற்பெரு 
     வீரா பாராய் வீணே மேவா ...... தெனையாளாய் 
  மறலி சாய்த்தவ ரிறைப ராக்ரம 
   மால்கா ணாதே மாதோ டேவாழ் ...... பவர்சேயே 
               மறுவி லாத்திரு வடிக ணாட்டொறும் 
  வாயார் நாவால் மாறா தேயோ ...... தினர்வாழ்வே 
                குறவர் காற்புன அரிவை தோட்கன 
    கோடார் மார்பா கூர்வே லாலே ...... அசுரேசர் 
   குலைய மாக்கட லதனி லோட்டிய 
   கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே. 
   பாடல் 1064 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
                  தனன தனன தனன தனன 
               தனன தனன ...... தனதான 
        குருதி யொழுகி யழுகு மவல 
     குடிலை யினிது ...... புகலாலே 
      குலவு மினிய கலவி மகளிர் 
      கொடிய கடிய ...... விழியாலே 
         கருது மெனது விரக முழுது 
       கலக மறலி ...... அழியாமுன் 
         கனக மயிலி னழகு பொழிய 
    கருணை மருவி ...... வரவேணும் 
       பரிதி சுழல மருவு கிரியை 
     பகிர எறிசெய் ...... பணிவேலா 
          பணில வுததி யதனி லசுரர் 
   பதியை முடுக ...... வரும்வீரா 
      இரதி பதியை யெரிசெய் தருளு 
 மிறைவர் குமர ...... முருகோனே 
           இலகு கமல முகமு மழகு 
    மெழுத வரிய ...... பெருமாளே. 
   பாடல் 1065 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
                  தனன தனன தனன தனன 
               தனன தனன ...... தனதான 
  துயர மறுநின் வறுமை தொலையு 
               மொழியு மமிர்த ...... சுரபானம் 
      சுரபி குளிகை யெளிது பெறுக 
      துவளு மெமது ...... பசிதீரத் 
    தயிரு மமுது மமையு மிடுக 
       சவடி கடக ...... நெளிகாறை 
          தருக தகடொ டுருக எனுமி 
    விரகு தவிர்வ ...... தொருநாளே 
      உ யரு நிகரில் சிகரிமிடறு 
             முடலு மவுணர் ...... நெடுமார்பும் 
          உ ருவ மகர முகர திமிர 
        வுததி யுதர ...... மதுபீற 
          அயரு மமரர் சரண நிகள 
    முறிய எறியு ...... மயில்வீரா 
       அறிவு முரமு மறமு நிறமு 
   மழகு முடைய ...... பெருமாளே. 
   பாடல் 1066  ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
                  தனன தனன தனன தனன 
               தனன தனன ...... தனதான 
               பணிகள் பணமு மணிகொள் துகில்கள் 
                பழைய அடிமை ...... யொடுமாதும் 
        பகரிலொருவர் வருக அரிய 
   பயண மதனி ...... லுயிர்போகக் 
   குணமு மனமு முடைய கிளைஞர் 
                குறுகி விறகி ...... லுடல்போடாக் 
 கொடுமை யிடுமு னடிமை யடிகள் 
  குளிர மொழிவ ...... தருள்வாயே 
         இணையி லருணை பழநி கிழவ 
    இளைய இறைவ ...... முருகோனே 
    எயினர் வயினின் முயலு மயிலை 
              யிருகை தொழுது ...... புணர்மார்பா 
      அணியொ டமரர் பணிய அசுரர் 
   அடைய மடிய ...... விடும்வேலா 
       அறிவு முரமு மறமு நிறமு 
   மழகு முடைய ...... பெருமாளே. 
   பாடல் 1067 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
                தந்த தனன தந்த தனன 
              தந்த தனன ...... தனதான 
    மைந்த ரினிய தந்தை மனைவி 
       மண்டி யலறி ...... மதிமாய 
    வஞ்ச விழிகள் விஞ்சு மறலி 
      வன்கை யதனி ...... லுறுபாசந் 
      தந்து வளைய புந்தி யறிவு 
               தங்கை குலைய ...... உ யிர்போமுன் 
    தம்ப முனது செம்பொ னடிகள் 
     தந்து கருணை ...... புரிவாயே 
 மந்தி குதிகொ ளந்தண் வரையில் 
   மங்கை மருவு ...... மணவாளா 
      மண்டு மசுரர் தண்ட முடைய 
    அண்டர் பரவ ...... மலைவோனே 
          இந்து நுதலு மந்த முகமு 
 மென்று மினிய ...... மடவார்தம் 
    இன்பம் விளைய அன்பி னணையு 
                மென்று மிளைய ...... பெருமாளே. 
   பாடல் 1068 ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் - மணிரங்கு 
                    தாளம் - ஆதி 
            தனனா தனத்த தனனா தனத்த 
            தனனா தனத்த ...... தனதான 
   ஒழுகூ னிரத்த மொடுதோ லுடுத்தி 
  உ யர்கால் கரத்தி ...... னுருவாகி 
              ஒருதாய் வயிற்றி னிடையே யுதித்து 
               உ ழல்மாய மிக்கு ...... வருகாயம் 
                பழசா யிரைப்பொ டிளையா விருத்த 
  பரிதாப முற்று ...... மடியாமுன் 
                பரிவா லுளத்தில் முருகா எனச்சொல் 
             பகர்வாழ் வெனக்கு ...... மருள்வாயே 
    எழுவா னகத்தி லிருநாலு திக்கில் 
                இமையோர் தமக்கு ...... மரசாகி 
      எதிரேறு மத்த மதவார ணத்தில் 
               இனிதேறு கொற்ற ...... முடன்வாழுஞ் 
             செழுமா மணிப்பொ னகர்பாழ் படுத்து 
             செழுதீ விளைத்து ...... மதிள்கோலித் 
             திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த 
               சிறைமீள விட்ட ...... பெருமாளே. 
   பாடல் 1069 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
            தனனா தனத்த தனனா தனத்த 
            தனனா தனத்த ...... தனதான 
                கருவாய் வயிற்றி லுருவா யுதித்து 
              முருகாய் மனக்க ...... வலையோஆட 
  கலைநூல் பிதற்றி நடுவே கறுத்த 
               தலைபோய் வெளுத்து ...... மரியாதே 
            இருபோது மற்றை யொருபோது மிட்ட 
        கனல்மூழ்கி மிக்க ...... புனல்மூழ்கி 
 இறவாத சுத்த மறையோர் துதிக்கு 
             மியல்போத கத்தை ...... மொழிவாயே 
       அருமாத பத்தஅமரா பதிக்கு 
   வழமுடி விட்ட ...... தனைமீள 
      அயிரா வதத்து விழியா யிரத்த 
     னுடனே பிடித்து ...... முடியாதே 
      திருவான கற்ப தருநா டழித்து 
             விபுதேசர் சுற்ற ...... மவைகோலித் 
             திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த 
               சிறைமீள விட்ட ...... பெருமாளே. 
   பாடல் 1070 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
    தனத்த தந்தனம் தனத்த தந்தனம் 
        தனத்த தந்தனம் ...... தனதான 
          புரக்க வந்தநங் குறக்க ரும்பைமென் 
                புனத்தி லன்றுசென் ...... றுறவாடிப் 
         புடைத்த லங்க்ருதம் படைத்தெ ழுந்ததிண் 
          புதுக்கு ரும்பைமென் ...... புயமீதே 
           செருக்க நெஞ்சகங் களிக்க அன்புடன் 
            திளைக்கு நின்திறம் ...... புகலாதிந் 
         த்ரியக்க டஞ்சுமந் தலக்கண் மண்டிடுந் 
           தியக்க மென்றொழிந் ...... திடுவேனோ 
         குரக்கி னங்கொணர்ந் தரக்கர் தண்டமுங் 
              குவட்டி லங்கையுந் ...... துகளாகக் 
          கொதித்த கொண்டலுந் த்ரியக்ஷ ருங்கடங் 
          கொதித்து மண்டுவெம் ...... பகையோடத் 
       துரக்கும் விம்பகிம் புரிப்ர சண்டசிந் 
    துரத்த னும்பிறந் ...... திறவாத 
              சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந் 
           துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே. 
   பாடல் 1071  ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
    தனத்த தந்தனம் தனத்த தந்தனம் 
        தனத்த தந்தனம் ...... தனதான 
          பெருக்க நெஞ்சுவந் துருக்கு மன்பிலன் 
           ப்ரபுத்த னங்கள்பண் ...... பெணுநாணும் 
   பிழைக்க வொன்றிலன் சிலைக்கை மிண்டர்குன் 
                றமைத்த பெண்தனந் ...... தனையாரத் 
     திருக்கை கொண்டணைந் திடச்செல் கின்றநின் 
               திறத்தை யன்புடன் ...... தெளியாதே 
     சினத்தில் மண்டிமிண் டுரைக்கும் வம்பனென் 
           திருக்கு மென்றொழிந் ...... திடுவேனோ 
             தருக்கி யன்றுசென் றருட்க ணொன்றரன் 
               தரித்த குன்றநின் ...... றடியோடுந் 
           தடக்கை கொண்டுவந் தெடுத்த வன்சிரந் 
              தறித்த கண்டனெண் ...... டிசையோருஞ் 
            சுருக்க மின்றிநின் றருக்க னிந்திரன் 
         துணைச்செய் கின்றநின் ...... பதமேவும் 
              சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந் 
           துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே. 
   பாடல் 1072 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - வஸந்தா 
         தாளம் - சதுஸ்ர அட (12) 
                தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான 
              இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு ...... முறுகேளும் 
      இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் ...... வளமேவும் 
 விரிந்த நாடுங் குன்றமு நிலையென ...... மகிழாதே 
              விளங்கு தீபங் கொண்டுனை வழிபட ...... அருள்வாயே 
           குருந்தி லேருங் கொண்டலின் வடிவினன் ...... மருகோனே 
              குரங்கு லாவுங் குன்றுறை குறமகள் ...... மணவாளா 
  திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு ...... புலவோனெ 
 சிவந்த காலுந் தண்டையு மழகிய ...... பெருமாளே. 
   பாடல் 1073  ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;  தாளம் - 
                தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான 
              கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங் 
  கலங்கி டாரென் றின்பமு றுலகிடை ...... கலிமேவி 
 உ லந்த காயங் கொண்டுள முறுதுய ...... ருடன்மேவா 
 உ கந்த பாதந் தந்துனை யுரைசெய ...... அருள்வாயே 
           மலர்ந்த பூவின் மங்கையை மருவரி...... மருகோனே 
          மறஞ்செய் வார்தம் வஞ்சியை மருவிய ...... மணவாளா 
         சிலம்பி னோடுங் கிண்கிணி திசைதொறும் ...... ஒலிவீசச் 
 சிவந்த காலுந் தண்டையு மழகிய ...... பெருமாளே. 
   பாடல் 1074   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ணதிகெளளை 
         தாளம் - சதுஸ்ர அட (12) 
 தனந்த தானந் தனதன தானன ...... தனதான 
       இசைந்த ஏறுங் கரியுரிபோர்வையும் ...... எழில்நீறும் 
 இலங்கு நூலும் புலியத ளாடையு ...... மழுமானும் 
              அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு ...... முடிமீதே 
     அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய ...... குருநாதா 
  உ சந்த சூரன் கிளையுடன் வேரற ...... முனிவோனே 
   உ கந்த பாசங் கயிறொடு தூதுவர் ...... நலியாதே 
             அசந்த போதென் துயர்கெட மாமயில் ...... வரவேணும் 
           அமைந்த வேலும் புயமிசை மேவிய ...... பெருமாளே. 
   பாடல் 1075   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - தர்பாரிகானடா 
   தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
          தகதிமி-2, தகிட-1 1/2 
                தனதன தனன தனதன தனன 
              தனதன தனன ...... தனதான 
  திரிபுர மதனை யொருநொடி யதனி 
              லெரிசெய்த ருளிய ...... சிவன்வாழ்வே 
   சினமுடை யசுரர் மனமது வெருவ 
  மயிலது முடுகி ...... விடுவோனே 
    பருவரை யதனை யுருவிட எறியு 
    மறுமுக முடைய ...... வடிவேலா 
              பசலையொ டணையு மிளமுலை மகளை 
 மதன்விடு பகழி ...... தொடலாமோ 
  கரிதிரு முகமு மிடமுடை வயிறு 
 முடையவர் பிறகு ...... வருவொனே 
    கனதன முடைய குறவர்த மகளை 
             கருணையொ டணையு ...... மணிமார்பா 
      அரவணை துயிலு மரிதிரு மருக 
 அவனியு முழுது ...... முடையோனே 
               அடியவர் வினையு மமரர்கள் துயரு 
   மறஅரு ளுதவு ...... பெருமாளே. 
   பாடல் 1076 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
                தனதன தனன தனதன தனன 
              தனதன தனன ...... தனதான 
  புழுககில் களப மொளிவிடு தரள 
   மணிபல செறிய ...... வடமேருப் 
                பொருமிரு கலச முலையினை யரிவை 
             புனையிடு பொதுவின் ...... மடமாதர் 
     அழகிய குவளை விழியினு மமுத 
    மொழியினு மவச ...... வநுராக 
               அமளியின் மிசையி லவர்வச முருகி 
              அழியுநி னடிமை ...... தனையாள்வாய் 
 குழலிசை யதுகொ டறவெருள் சுரபி 
                குறுநிரை தருளி ...... யலைமோதுங் 
 குரைசெறி யுததி வரைதனில் விறுசு 
  குமுகுமு குமென ...... வுலகோடு 
    முழுமதி சுழல வரைநெறு நெறென 
                முடுகிய முகிலின் ...... மருகோனே 
         மொகுமொகு மொகென ஞிமிறிசை பரவு 
            முளரியின் முதல்வர் ...... பெருமாளே. 
   பாடல் 1077   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
                தனதன தனன தனதன தனன 
            தனதன தனன ...... தந்ததான 
                முழுமதி யனைய முகமிரு குழையில் 
           முனிவழி முனைகள் ...... கொண்முவா 
     முதலறி வதனை வளைபவர் கலவி 
          முழுகிய வினையை ...... மொண்டுநாயேன் 
    வழிவழி யடிமை யெனுமறி வகல 
                மனமுறு துயர்கள் ...... வெந்துவாட 
    மதிதரு மதிக கதிபெறு மடிகள் 
          மகிழ்வொடு புகழு ...... மன்புதாராய் 
     எழுதிட அரிய எழில்மற மகளின் 
                இருதன கிரிகள் ...... தங்குமார்பா 
               எதிர்பொரு மசுரர் பொடிபட முடுகி 
        இமையவர் சிறையை ...... யன்றுமீள்வாய் 
          அழகிய குமர எழுதல மகிழ 
          அறுவர்கள் முலையை ...... யுண்டவாழ்வே 
  அமருல கிறைவ உ மைதரு புதல்வ 
 அரியர பிரமர் ...... தம்பிரானே. 
   பாடல் 1078 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
           தனதன தனதன தத்தத் தத்தத் 
            தாந்தாந் ...... தனதான 
           கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக் 
       கூன்போந் ...... தசடாகுங் 
              குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக் 
     கோண்பூண் ...... டமையாதே 
  பொடிவன பரசம யத்துத் தப்பிப் 
      போந்தேன் ...... தலைமேலே 
               பொருளது பெறஅடி நட்புச் சற்றுப் 
      பூண்டாண் ...... டருள்வாயே 
            துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச் 
       சூழ்ந்தாங் ...... குடனாடத் 
           தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத் 
       தோந்தாந் ...... தரிதாளம் 
                படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப் 
     பாழ்ங்கான் ...... தனிலாடும் 
                பழயவர் குமரகு றத்தத் தைக்குப் 
     பாங்காம் ...... பெருமாளே. 
   பாடல் 1079  ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
           தனதன தனதன தத்தத் தத்தத் 
            தாந்தாந் ...... தனதான 
                சுடரொளி கதிரவ னுற்றுப் பற்றிச் 
   சூழ்ந்தோங் ...... கிடுபாரிற் 
                றுயரிரு வினைபல சுற்றப் பட்டுச் 
                சோர்ந்தோய்ந் ...... திடநாறுங் 
 கடுகென எடுமெனு டற்பற் றற்றுக் 
    கான்போந் ...... துறவோருங் 
                கனலிடை விதியிடு தத்துக் கத்தைக் 
     காய்ந்தாண் ...... டருளாயோ 
              தடமுடை வயிரவர் தற்கித் தொக்கத் 
   தாந்தோய்ந் ...... திருபாலும் 
  தமருக வொலிசவு தத்திற் றத்தத் 
   தாழ்ந்தூர்ந் ...... திடநாகம் 
              படிநெடி யவர்கர மொத்தக் கெத்துப் 
 பாய்ந்தாய்ந் ...... துயர்கானம் 
           பயில்பவர் புதல்வகு றத்தத் தைக்குப் 
     பாங்காம் ...... பெருமாளே. 
   பாடல் 1080 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
      தனதன தத்த தந்த தனதன தத்த தந்த 
         தனதன தத்த தந்த ...... தனதான 
        குடமென வொத்த கொங்கை குயில்மொழி யொத்த இன்சொல் 
        குறமகள் வைத்த நண்பை ...... நினைவோனே 
    வடவரை யுற்று றைந்த மகதெவர் பெற்ற கந்த 
             மதசல முற்ற தந்தி ...... யிளையோனே 
     இடமுடன் வைத்த சிந்தை யினைவற முத்தி தந்து 
          இசையறி வித்து வந்து ...... எனையாள்வாய் 
        தடவரை வெற்பி னின்று சரவண முற்றெ ழுந்து 
        சமர்கள வெற்றி கொண்ட ...... பெருமாளே. 
   பாடல் 1081 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
      தனதன தத்த தந்த தனதன தத்த தந்த 
         தனதன தத்த தந்த ...... தனதான 
  மடவிய ரெச்சி லுண்டு கையில்முத லைக்க ளைந்து 
               மறுமைத னிற்சு ழன்று ...... வடிவான 
       சடமிக வற்றி நொந்து கலவிசெ யத்து ணிந்து 
      தளர்வுறு தற்கு முந்தி ...... யெனையாள்வாய் 
           படவர விற்சி றந்த இடமிதெ னத்து யின்ற 
             பசுமுகி லுக்கு கந்த ...... மருகோனே 
    குடமுனி கற்க வன்று தமிழ்செவி யிற்ப கர்ந்த 
           குமரகு றத்தி நம்பு ...... பெருமாளே. 
   பாடல் 1082 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
            தனதன தானத் தனதன தானத் 
            தனதன தானத் ...... தனதான 
  கருமய லேறிப் பெருகிய காமக் 
                கடலினில் மூழ்கித் ...... துயராலே 
              கயல்விழி யாரைப் பொருளென நாடிக் 
                கழியும நாளிற் ...... கடைநாளே 
              எருமையி லேறித் தருமனும் வாவுற் 
    றிறுகிய பாசக் ...... கயிறாலே 
               எனைவளை யாமற் றுணைநினை வேனுக் 
  கியலிசை பாடத் ...... தரவேணும் 
            திருமயில் சேர்பொற் புயனென வாழத் 
               தெரியல னோடப் ...... பொரும்வீரா 
                செகதல மீதிற் பகர்தமிழ் பாடற் 
             செழுமறை சேர்பொற் ...... புயநாதா 
             பொருமயி லேறிக் கிரிபொடி யாகப் 
  புவியது சூழத் ...... திரிவோனே 
                புனமக ளாரைக் கனதன மார்பிற் 
             புணரும்வி நோதப் ...... பெருமாளே. 
   பாடல் 1083 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
            தனதன தானத் தனதன தானத் 
            தனதன தானத் ...... தனதான 
              குடலிடை தீதுற் றிடையிடை பீறிக் 
    குலவிய தோலத் ...... தியினூடே 
    குருதியி லேசுக் கிலமது கூடிக் 
               குவலயம் வானப் ...... பொருகாலாய் 
  உ டலெழு மாயப் பிறவியி லாவித் 
  துறுபிணி நோயுற் ...... றுழலாதே 
               உ ரையடி யேனுக் கொளிமிகு நீபத் 
   துனதிரு தாளைத் ...... தரவேணும் 
 கடலிடை சூரப் படைபொடி யாகக் 
                கருதல ரோடப் ...... பொரும்வேலா 
            கதிர்விடு வேலைக் கதிரினில் மேவிக் 
                கலைபல தேர்முத் ...... தமிழ்நாடா 
             சடையினர் நாடப் படர்மலை யோடித் 
 தனிவிளை யாடித் ...... திரிவோனே 
   தனமட மானைப் பரிவுட னாரத் 
                தழும்வி நோதப் ...... பெருமாளே. 
   பாடல் 1084   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
             தனதனா தத்த தனதனா தத்த 
            தனதனா தத்த ...... தனதான 
              கருதியே மெத்த விடமெலாம் வைத்த 
 கலகவா ளொத்த ...... விழிமானார் 
    கடினபோ கத்த புளகவா ருற்ற 
              களபமார் செப்பு ...... முலைமீதே 
                உ ருகியான் மெத்த அவசமே வுற்ற 
               வுரைகளே செப்பி ...... யழியாதுன் 
  உ பயபா தத்தி னருளையே செப்பு 
  முதயஞா னத்தை ...... அருள்வாயே 
 பருவரா லுற்று மடுவின்மீ துற்ற 
               பகடுவாய் விட்ட ...... மொழியாலே 
                பரிவினோ டுற்ற திகிரியே விட்ட 
   பழயமா யற்கு ...... மருகோனே 
  முருகுலா வுற்ற குழலிவே டிச்சி 
         முலையின்மே வுற்ற ...... க்ருபைவேளே 
   முருகனே பத்த ரருகனே வெற்பு 
             முரியவேல் தொட்ட ...... பெருமாளே. 
   பாடல் 1085   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
             தனதனா தத்த தனதனா தத்த 
            தனதனா தத்த ...... தனதான 
                கொலையிலே மெத்த விரகிலே கற்ற 
         குவளையேர் மைக்கண் ...... விழிமானார் 
            குழையிலே யெய்த்த நடையிலே நெய்த்த 
   குழலிலே பற்கள் ...... தனிலேமா 
 முலையிலே யற்ப இடையிலே பத்ம 
  முகநிலா வட்ட ...... மதின்மீதே 
 முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை 
             மொழியிலே சித்தம் ...... விடலாமோ 
 கலையனே உ க்ர முருகனே துட்டர் 
   கலகனே மெத்த ...... இளையோனே 
                கனகனே பித்தர் புதல்வனே மெச்சு 
                கடவுளே பச்சை ...... மயிலோனே 
   உ லகனே முத்தி முதல்வனே சித்தி 
                உ டையனே விஷ்ணு ...... மருகோனே 
               ஒருவனே செச்சை மருவுநேர் சித்ர 
                வுருவனே மிக்க ...... பெருமாளே. 
   பாடல் 1086   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
         தனதனனந் தான தனதனனந் தான 
          தனதனனந் தான ...... தனதான 
           அகிலநறுஞ் சேறு ம்ருகமதமுந் தோயு 
            மசலமிரண் டாலு ...... மிடைபோமென் 
             றடியில்விழுந் தாடு பரிபுரசெஞ் சீர 
 தபயமிடுங் கீத ...... மமையாதே 
               நகமிசைசென் றாடி வனசரர்சந் தான 
           நவையறநின் றேனல் ...... விளைவாள்தன் 
                லளிதவிர்சிங் கார தனமுறுசிந் தூர 
                நமசரணென் றோத ...... அருள்வாயே 
               பகலிரவுண் டான இருவரும்வண் டாடு 
                பரிமளபங் கேரு ...... கனுமாலும் 
  படிகநெடும் பா கடதடகெம் பீர 
               பணைமுகசெம் பால ...... மணிமாலை 
              முகபடசிந் தூர கரியில்வருந் தேவு 
    முடியஅரன் தேவி ...... யுடனாட 
               முழுதுலகுந் தாவி எழுகடல்மண் டூழி 
               முடிவினுமஞ் சாத ...... பெருமாளே. 
   பாடல் 1087  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
   தனதனனந் தானம் தனதனனந் தானம் 
       தனதனனந் தானம் ...... தனதான 
               கலகமதன் காதுங் கனமலரம் பாலுங் 
             களிமதுவண் டூதும் ...... பயிலாலும் 
          கடலலையங் காலுங் கனஇரையொன் றாலும் 
          கலைமதியங் காயும் ...... வெயிலாலும் 
              இலகியசங் காளும் இனியவளன் பீனும் 
                எனதருமின் தானின் ...... றிளையாதே 
        இருள்கெடமுன் தானின் றினமணிசெந் தார்தங் 
          கிருதனமுந் தோள்கொண் ...... டணைவாயே 
     உ லகைவளைந் தோடுந் கதிரவன்விண் பால்நின் 
 றுனதபயங் காவென் ...... றுனைநாட 
        உ ரவியவெஞ் சூரன் சிரமுடன்வன் தோளும் 
            உ ருவியுடன் போதும் ...... ஒளிவேலா 
           அலகையுடன் பூதம் பலகவிதம் பாடும் 
       அடைவுடனின் றாடும் ...... பெரியோர்முன் 
      அறமுமறந் தோயும் அறிவுநிரம் போதென் 
             றழகுடனன் றோதும் ...... பெருமாளே. 
   பாடல் 1088 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
     தனதனனந் தானந் தனதனனந் தானந் 
        தனதனனந் தானந் ...... தனதான 
            குருதிசலந் தோலுங் குடலுடனென் பாலுங் 
            குலவியெழுங் கோலந் ...... தனில்மாயக் 
     கொடுமையுடன் கோபங் கடுவிரகஞ் சேருங் 
          குணவுயிர்கொண் டேகும் ...... படிகாலன் 
        கருதிநெடும் பாசங் கொடுவரநின் றாயுங் 
 கதறமறந் தேனென் ...... றகலாமுன் 
        கமலமலர்ந் தேறுங் குகனெனவும் போதுன் 
         கருணைமகிழ்ந் தோதுங் ...... கலைதாராய் 
         நிருதர்தளஞ் சூழும் பெரியநெடுஞ் சூரன் 
         நினைவுமழிந் தோடும் ...... படிவேலால் 
   நிகரிலதம் பாரொன் றிமையவர்நெஞ் சால்நின் 
           நிலைதொழநின் றேமுன் ...... பொருவீரா 
        பருதியுடன் சோமன் படியையிடந் தானும் 
               பரவவிடந் தானுண் ...... டெழுபாரும் 
            பயமறநின் றாடும் பரமருளங் கூரும் 
           பழமறையன் றோதும் ...... பெருமாளே. 
   பாடல் 1089   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
           தனதனன தாத்த தனதனன தாத்த 
           தனதனன தாத்த ...... தனதான 
             இருவினைக ளீட்டு மிழவுபடு கூட்டை 
            யெடுமெடென வீட்டி ...... லனைவோரும் 
               இறுதியிடு காட்டி லழுதுதலை மாட்டில் 
  எரியஎரிமூட்டி ...... யிடுமாறு 
         கரியஇரு கோட்டு முரணெருமை மோட்டர் 
               கயிறிறுக மாட்டி ...... யழையாமுன் 
             கனகமணி வாட்டு மருவுகழல் பூட்டு 
              கழலிணைகள் காட்டி ...... யருள்வாயே 
           பருவமலை நாட்டு மருவுகிளி யோட்டு 
  பழையகுற வாட்டி ...... மணவாளா 
          பகைஞர்படை வீட்டில் முதியகன லுட்டு 
  பகருநுதல் நாட்ட ...... குமரேசா 
    அருமறைகள் கூட்டி யுரைசெய்தமிழ் பாட்டை 
             அடைவடைவு கேட்ட ...... முருகோனே 
            அலைகடலி லீட்ட அவுணர்தமை யோட்டி 
            அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே. 
   பாடல் 1090   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
           தனதனன தாத்த தனதனன தாத்த 
           தனதனன தாத்த ...... தனதான 
   உ றவின்முறை யோர்க்கு முறுதுயரம் வாய்த்து 
               உ ளமுருகு தீர்த்தி ...... வுடலுடே 
           உ டலை முடிவாக்கு நெடியதொரு காட்டில் 
                உ யர்கனலை மூட்டி ...... விடஆவி 
             மறலிமற மார்த்த கயிறுதனை வீக்கி 
             வலிவினொடு தாக்கி ...... வளையாமுன் 
        மனமுமுனி வேட்கை மிகவு முன தாட்கள் 
          மகிழ்வியல்கொ டேத்த ...... மதிதாராய் 
          பிறைநுதலி சேற்க ணமையரிவை வேட்பு 
           வரையில்மற வோக்கு ...... மகவாகப் 
       பிறிதுருவில் வாய்த்து நிறைதினைகள் காத்த 
 பிடியினடி போற்று ...... மணவாளா 
              அறுகுபிறை யாத்தி அலைசலமு மார்த்த 
          அடர்சடையி னார்க்கு ...... மறிவீவாய் 
       அடரவரு போர்க்கை அசுரர்கிளை மாய்த்து 
            அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே. 
   பாடல் 1091   ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
           தனனதன தனனதன தனனதன தனனதன 
           தனனதன தனனதன ...... தனதான 
          அளகநிரை குலையவிழி குவியவளை கலகலென 
              அமுதமொழி பதறியெழ ...... அணியாரம் 
       அழகொழுகு புளகமுலை குழையஇடை துவளமிக 
              அமுதநிலை யதுபரவ ...... அதிமோகம் 
      உ ளமுருக வருகலவி தருமகளிர் கொடுமையெனு 
               முறுகபட மதனில்மதி ...... யழியாதே 
 உ லகடைய மயிலின்மிசை நொடியளவில் வலம்வருமு 
               னுபயநறு மலரடியை ...... அருள்வாயே 
           வளையமலை கடல்சுவற விடுபகழி வரதனிரு 
           மருதினொடு பொருதருளு ...... மபிராமன் 
  வரியரவின் மிசைதுயிலும் வரதஜய மகள்கொழுநன் 
            மருகஅமர் முடுகிவரு ...... நிருதேசர் 
              தளமுறிய வரைதகர அசுரர்பதி தலைசிதற 
 தகனமெழ முடுகவிடு ...... வடிவேலா 
           தரளமணி வடமிலகு குறவர்திரு மகள்கணவ 
             சகலகலை முழுதும்வல ...... பெருமாளே. 
   பாடல் 1092 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
           தனனதன தனனதன தனனதன தனனதன 
           தனனதன தனனதன ...... தனதான 
  அனகனென அதிகனென அமலனென அசலனென 
    அபயனென அதுலனென ...... அநபாயன் 
          அடல்மதன னெனவிசைய னெனமுருக னெனநெருடி 
          யவர்பெயரு மிடைசெருகி ...... யிசைபாடி 
        வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கை 
               மகிபஎன தினையளவு ...... ளவுமீயா 
              மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழிய 
      மனமொழிய வொருபொருளை ...... அருள்வாயே 
           இனனிலவு தலைமலைய அடியினுகி ரிலைகளென 
                இருசதுர திசையிலுர ...... கமும்வீழ 
                இரணியச யிலம்ரசித சயிலமர கதசயில 
        மெனவிமலை யமுனை யென ...... நிழல்வீசிக் 
        ககனமழை யுகைகடவு ளுடலமென முதியவிழி 
     கதுவியெழில் பொதியமிசை ...... படர்கோலக் 
             கலபகக மயில்கடவு நிருதர்கஜ ரததுரக 
            கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. 
   பாடல் 1093  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
           தனனதன தனனதன தனனதன தனனதன 
           தனனதன தனனதன ...... தனதான 
      குடருமல சலமுமிடை யிடைதடியு முடையளவு 
       கொழுவுமுதி ரமும்வெளிற ...... ளறுமாகக் 
  கொளகொளென அளவில்புழு நெளுநெளென விளைகுருதி 
          குமுகுமென இடைவழியில் ...... வரநாறும் 
           உ டலில்மண மலிபுழுகு தடவியணி கலமிலக 
              வுலகமரு ளுறவரும ...... ரிவையாரன் 
     பொழியவினை யொழியமன மொழியஇரு ளொழியஎன 
          தொழிவிலக லறிவையருள் ...... புரிவாயே 
               வடகனக சயிலமுத லியசயில மெனநெடிய 
          வடிவுகொளு நெடியவிறல் ...... மருவாரை 
        வகிருமொரு திகிரியென மதிமுதிய பணிலமென 
              மகரசல நிதிமுழுகி ...... விளையாடிக் 
            கடலுலகை யளவுசெய வளருமுகி லெனஅகில 
               ககனமுக டுறநிமிரு ...... முழுநீலக் 
              கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக 
            கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. 
   பாடல் 1094 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
           தனதனன தனதனன தனதனன தனதனன 
           தனதனன தனதனன ...... தனதான 
    குதறுமுனை யறிவுகொடு பதறியெதிர் கதறிமிகு 
             குமுதமிடு பரசமய ...... மொருகோடி 
  குருடர்தெரிவரியதொரு பொருள்தெரிய நிகழ்மனது 
             கொடியஇரு வினையெனும ...... ளறுபோக 
                உ தறிவித றியகரண மரணமற விரணமற 
              வுருகியுரை பருகியநு ...... தினஞான 
         உ ணர்வுவிழி பெறவுனது மிருகமத நளினபத 
           யுகளமினி யுணரஅருள் ...... புரிவாயே 
        சிதறவெளி முழுதுமொளி திகழுமுடு படலமவை 
           சிறுபொறிக ளெனவுரக ...... பிலமேழுஞ் 
          செகதலமு நிகர்சிகரிபலவுநல கெசபுயக 
           திசையுமுட னுருகவரு ...... கடைநாளிற் 
       கதறுமெழு கடல்பருகி வடவைவிடு கரியபுகை 
            யெனமுடிவில் ககனமுக ...... டதிலோடுங் 
              கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக 
            கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. 
   பாடல் 1095 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
           தனதனன தனதனன தனதனன தனதனன 
           தனதனன தனதனன ...... தனதான 
         வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமென 
    வயிரமர கதமகர ...... மளவாக 
           வரிசிதறி விடமளவி வளருமிரு கலகவிழி 
            வளையிளைஞ ருயிர்கவர ...... வருமாய 
    இதையமள விடஅரிய அரிவையர்கள் நெறியொழுகி 
              எழுபிறவி நெறியொழிய ...... வழிகாணா 
              இடர்கள்படு குருடனெனை அடிமைகொள மகிழ்வொடுன 
              திருநயன கருணைசிறி ...... தருள்வாயே 
     பதயுகள மலர்தொழுது பழுதில்பொரிஅவல்துவரை 
            பயறுபெரு வயிறுநிறை ...... யவிடாமுப் 
          பழமுமினி துதவிமுனி பகரவட சிகரிமிசை 
           பரியதனி யெயிறுகொடு ...... குருநாடார் 
      கதைமுழுது மெழுதுமொரு களிறுபிளி றிடநெடிய 
            கடலுலகு நொடியில்வரு ...... மதிவேகக் 
              கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக 
            கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. 
   பாடல் 1096 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
           தனதனன தனதனன தனதனன தனதனன 
           தனதனன தனதனன ...... தனதான 
        விடமளவி யரிபரவு விழிகுவிய மொழிபதற 
                விதறிவளை கலகலென ...... அநுராகம் 
    விளையம்ருக மதமகுள முலைபுளக மெழநுதலில் 
              வியர்வுவர அணிசிதற ...... மதுமாலை 
              அடரளக மவிழஅணி துகிலகல அமுதுபொதி 
          யிதழ்பருகி யுருகியரி...... வையரோடே 
        அமளிமிசை யமளிபட விரகசல தியில்முழுகி 
              யவசமுறு கினுமடிகள் ...... மறவேனே 
          உ டலுமுய லகன்முதுகு நெறுநெறென எழுதிமிர 
            வுரகர்பில முடியவொரு ...... பதமோடி 
             உ ருவமுது ககனமுக டிடியமதி முடிபெயர 
               வுயரவகி லபுவனம ...... திரவீசிக் 
        கடககர தலமிலக நடனமிடு மிறைவர்மகிழ் 
               கருதரிய விதமொடழ ...... குடனாடுங் 
              கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக 
            கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. 
   பாடல் 1097 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - கரஹரப்ரியா 
   தாளம் - அங்கதாளம் (5 1/2) 
          தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 
       தனதனன தானதத்த தனதனன தானதத்த 
         தனதனன தானதத்த ...... தனதான 
   எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து 
        இடர்முளைக ளேமுளைத்து ...... வளர்மாயை 
       எனுமுலவை யேயணைத்து விரககுழை யேகுழைத்து 
           இருளிலைக ளேதழைத்து ...... மிகநீளும் 
          இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து 
             இடியுமுடல் மாமரத்தி ...... னருநீழல் 
       இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு 
           இனியதொரு போதகத்தை ...... யருள்வாயே 
   வழுவுநெறி பேசுதக்க னிசையுமக சாலையுற்ற 
             மதியிரவி தேவர்வஜ்ர ...... படையாளி 
     மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ர 
       மறையஎதிர் வீரவுக்ரர் ...... புதல்வோனே 
        அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு 
          அசலமிசை வாகையிட்டு ...... வரும்வேலா 
   அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி 
         அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே. 
   பாடல் 1098 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
       தனதனன தானதத்த தனதனன தானதத்த 
         தனதனன தானதத்த ...... தனதான 
 நடையுடையி லேயருக்கி நெடியதெரு வீதியிற்குள் 
               நயனமத னால்மருட்டி ...... வருவாரை 
   நணுகிமய லேவிளைத்து முலையைவிலை கூறிவிற்று 
                லளிதமுட னேபசப்பி ...... யுறவாடி 
      வடிவதிக வீடுபுக்கு மலரணையின் மீதிருத்தி 
                மதனனுடை யாகமத்தி ...... னடைவாக 
 மருவியுள மேயுருக்கி நிதியமுள தேபறிக்கும் 
       வனிதையர்க ளாசைபற்றி ...... யுழல்வேனோ 
           இடையர்மனை தோறுநித்த முறிதயிர்நெய் பால்குடிக்க 
            இருகையுற வேபிடித்து ...... உ ரலோடே 
      இறுகிடஅ சோதைகட்ட அழுதிடுகொ பாலக்ருஷ்ண 
              னியல்மருக னேகுறத்தி ...... மணவாளா 
        அடலெழுது மேடுமெத்த வருபுனலி லேறவிட்டு 
       அரியதமிழ் வாதுவெற்றி ...... கொளும்வேலா 
     அவுணர்குலம் வேரறுத்து அபயமென வோலமிட்ட 
         அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே. 
   பாடல் 1099 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
       தனதனன தானதத்த தனதனன தானதத்த 
         தனதனன தானதத்த ...... தனதான 
  மடலவிழ்ச ரோருகத்து முகிழ்நகையி லேவளைத்து 
              மதசுகப்ர தாபசித்ர ...... முலையாலே 
       மலரமளி மீதணைத்து விளையுமமு தாதரத்தை 
              மனமகிழ் வேயளித்து ...... மறவாதே 
        உ டலுயிர தாயிருக்க உ னதெனதெ னாமறிக்கை 
          ஒருபொழுதொ ணாதுசற்று ...... மெனவேதான் 
       உ ரைசெய்மட வாரளித்த கலவிதரு தோதகத்தை 
        யொழியவொரு போதகத்தை ...... யருள்வாயே 
             தடமகுட நாகரத்ந படநெளிய ஆடுபத்ம 
              சரணயுக மாயனுக்கு ...... மருகோனே 
            சரவணமி லேயுதித்த குமரமுரு கேசக்ர 
          சயிலம்வல மாய்நடத்து ...... மயில்வீரா 
   அடல்மருவு வேல்கரத்தி லழகுபெற வேயிருத்தும் 
              அறுமுகவ ஞானதத்வ ...... நெறிவாழ்வே 
      அசுரர்குல வேரைவெட்டி அபயமென வோலமிட்ட 
         அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே. 
   பாடல் 1100 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
                தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் 
      தந்தனந் தந்தனந் ...... தனதான 
        அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்குநெஞ் 
              சன்பிலன் துன்பவன் ...... புகழ்வாரா 
           அஞ்சொடுங் கும்பொதும் பொன்றையென் றுஞ்சுமந் 
         தங்குமிங் குந்திரிந் ...... திரைதேடுஞ் 
      சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண் டன்பெருஞ் 
             சஞ்சலன் கிஞ்சுகந் ...... தருவாயார் 
       தந்தொழும் பன்தழும் பன்பணிந் தென்றுநின் 
         தண்டையம் பங்கயம் ...... புகழ்வேனோ 
            கங்கையும் பொங்குநஞ் சம்பொருந் தும்புயங் 
             கங்களுங் திங்களுங் ...... கழுநீருங் 
 கஞ்சமுந் தும்பையுங் கொன்றையுஞ் சந்ததங் 
            கந்தமுந் துன்றுசெஞ் ...... சடையாளர் 
   பங்குதங் கும்பசுங் கொம்புதந் தின்புறும் 
              பந்தவெங் குண்டர்தங் ...... குலகாலா 
          பண்டிதன் கந்தனென் றண்டரண் டந்தொழும் 
        பண்புநண் பும்பெறும் ...... பெருமாளே. 
   பாடல் 1101  ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் - ..... ;   தாளம் - 
                தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் 
      தந்தனந் தந்தனந் ...... தனதான 
      தந்தமுந் துன்பவெஞ் சிந்தைகொண் டந்தகன் 
           தண்டவொன் றன்றொடுங் ...... கிடுமாவி 
  தஞ்சமென் றும்பரிந் தின்சொல்வஞ் சந்தெரிந் 
                தன்றுமென் றுந்தனந் ...... தனைநாடி 
     நின்தனன் பென்பதொன் றின்றிநன் றென்றுநெஞ் 
     சின்கணன் பொன்றில்மங் ...... கையர்நேசம் 
     நின்றளந் துஞ்சளங் கொண்டிடும் புன்கணந் 
        தின்பமொன் றின்றியிங் ...... குழல்வேனோ 
          சுந்தரன் பந்தமுஞ் சிந்தவந் தன்புடன் 
            தொண்டனென் றன்றுகொண் ...... டிடுமாதி 
            தும்பைசெம் பொன்சொரிந் துந்தருங் கொன்றைதுன் 
        பங்கடிந் தென்பொடுந் ...... தொலையாநீர் 
   அந்தமுந் திந்துவுங் கெந்தமிஞ் சுங்கொழுந் 
        தன்றுமின் றும்புனைந் ...... திடும்வேணி 
  அன்பர்நெஞ் சின்புறுஞ் செஞ்சொலன் கந்தனென் 
           றண்டரண் டந்தொழும் ...... பெருமாளே. 
   பாடல் 1102 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
     தந்தனா தனதனந் தந்தனா தனதனந் 
        தந்தனா தனதனந் ...... தனதான 
         உ ம்பரா ரமுதெனுந் தொண்டைவா யமுதமுண் 
  டுண்டுமே கலைகழன் ...... றயலாக 
       உ ந்திவா வியில்விழுந் தின்பமா முழுகியன் 
            பொன்றிலா ரொடுதுவண் ...... டணைமீதே 
  செம்பொனார் குடமெனுங் கொங்கையா பரணமுஞ் 
             சிந்தவாள் விழிசிவந் ...... தமராடத் 
  திங்கள்வேர் வுறவணைந் தின்பவா ரியில்விழுஞ் 
         சிந்தையே னெனவிதங் ...... கரைசேர்வேன் 
   கொம்புநா லுடையவெண் கம்பமால் கிரிவருங் 
   கொண்டல்ப்லோ மசையள்சங்க் ...... ரமபாரக் 
     கும்பமால் வரைபொருந் திந்த்ரபூ பதிதருங் 
        கொண்டலா னையைமணஞ் ...... செயும்வீரா 
       அம்புரா சியுநெடுங் குன்றுமா மரமுமன் 
               றஞ்சவா னவருறுஞ் ...... சிறைமீள 
      அங்கநான் மறைசொலும் பங்கயா சனமிருந் 
           தங்கைவே லுறவிடும் ...... பெருமாளே. 
   பாடல் 1103  ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
     தந்தனா தனதனந் தந்தனா தனதனந் 
        தந்தனா தனதனந் ...... தனதான 
        வண்டுதான் மிகவிடங் கொண்டகா ரளகமென் 
          பந்திமா மலர்சொரிந் ...... துடைசோர 
       வம்புசேர் கனிபொருந் தின்பவா யமுதருந் 
   தந்தமா மதனலம் ...... விதமாக 
     விண்டுமே னிகள்துவண் டன்றில்போ லுளமிரண் 
          டொன்றுமா யுறவழிந் ...... தநுபோகம் 
   விஞ்சவே தருமிளங் கொங்கையார் வினைகடந் 
             துன்றன்மே லுருகஎன் ...... றருள்வாயே 
        பண்டுபா ரினையளந் துண்டமால் மருகசெம் 
     பைம்பொன்மா நகரிலிந் ...... திரன்வாழ்வு 
      பண்பெலா மிகுதிபொங் கின்பயா னையைமணந் 
            தன்பினோ ரகமமர்ந் ...... திடுவோனே 
         அண்டர்தா மதிபயங் கொண்டுவா டிடநெடுந் 
             தண்டுவாள் கொடுநடந் ...... திடுசூரன் 
        அங்கமா னதுபிளந் தெங்கும்வீ ரிடவெகுண் 
           டங்கைவே லுறவிடும் ...... பெருமாளே. 
   பாடல் 1104 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
    தானனா தந்தனந் தானனா தந்தனந் 
        தானனா தந்தனந் ...... தனதான 
 காதல்மோ கந்தருங் கோதைமார் கொங்கைசிங் 
              காரநா கஞ்செழுங் ...... கனிவாய்கண் 
          காளகூ டங்கொடுங் கால்ரு பம்பொருங் 
           காமபா ணஞ்சுரும் ...... பினம்வாழும் 
   ஓதிகார் செஞ்சொல்மென் பாகுதே னென்றயர்ந் 
               தோநமோ கந்தஎன் ...... றுரையாதே 
             ஊசலா டும்புலன் தாரியே சென்றுநின் 
         றோயுமா றொன்றையுங் ...... கருதாதோ 
             தாதகீ சண்பகம் பூகமார் கந்தமந் 
  தாரம்வா சந்திசந் ...... தனநீடு 
            சாமவே தண்டவெங் கோபகோ தண்டசந் 
        தானமா தெங்கள்பைம் ...... புனமேவும் 
              தீதிலா வஞ்சியஞ் சீதபா தம்படுஞ் 
               சேகரா தண்டையங் ...... கழல்பேணித் 
          தேவிபா கம்பொருந் தாதிநா தன்தொழுந் 
          தேசிகா வும்பர்தம் ...... பெருமாளே. 
   பாடல் 1105 ( பொதுப்பாடல்கள் ) 
    ராகம் - ..... ;   தாளம் - 
      தானனா தத்தனத் தானனா தத்தனத் 
         தானனா தத்தனத் ...... தனதான 
          கோலகா லத்தைவிட் டாசுபா டக்கொடிக் 
         கோவைபா டக்கொடிக் ...... கொடிவாதிற் 
           கோடிகூ ளக்கவிச் சேனைசா டக்கெடிக் 
            கூறுகா ளக்கவிப் ...... புலவோன்யான் 
                சீலகா லப்புயற் பாரிசா தத்தருத் 
         த்யாகமே ருப்பொருப் ...... பெனவோதுஞ் 
              சீதரா சித்ரவித் தாரமே செப்பிடக் 
            கேளெனா நிற்பதைத் ...... தவிர்வேனோ 
               ஆலகா லப்பணிப் பாயல்நீ ளப்படுத் 
              தாரவா ரக்கடற் ...... கிடைசாயும் 
            ஆழிமா லுக்குநற் சாமவே தற்குமெட் 
   டாத்ரு பத்தினிற் ...... சுடராய 
            காலகா லப்ரபுச் சாலுமா லுற்றுமைக் 
             காகவே ளைப்புகக் ...... கழுநீராற் 
        காதும்வே ழச்சிலைப் பாரமீ னக்கொடிக் 
          காமவேள் மைத்துனப் ...... பெருமாளே. 
   பாடல் 1106 ( பொதுப்பாடல்கள் ) 
 
     ராகம் - ..... ;   தாளம் - 
      தானனா தத்தனத் தானனா தத்தனத் 
         தானனா தத்தனத் ...... தனதான 
      ஞாலமோ டொப்பமக் காளெனா நற்சொலைத் 
             தீதெனா நற்றவத் ...... தணைவோர்தம் 
         நாதமோ டுட்கருத் தோடவே தர்க்கமிட் 
         டோ யுநா யொப்பவர்க் ...... கிளையாதே 
          நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட் 
         டூரசூர் கெட்டுகப் ...... பொரும்வேலா 
         நேசமாய் நித்தநிற் றாளைநீ ளச்சமற் 
             றோதநீ திப்பொருட் ...... டரவேணும் 
         கோலவா ரிக்கிடைக் கோபரா விற்படுத் 
                தானும்வே தக்குலத் ...... தயனாருங் 
           கூறும்வா னப்புவிக் கூறுதீ ரக்குறிப் 
                போதுறா நிற்பஅக் ...... கொடிதான 
 காலன்மார் புற்றுதைத் தானுமோர் கற்புடைக் 
        கோதைகா மக்கடற் ...... கிடைமுழ்கக் 
      காவிசேர் கொத்தலர்ப் பாணமேய் வித்தகக் 
          காமவேள் மைத்துனப் ...... பெருமாளே. 
   பாடல் 1107 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
        தனதனா தனதனந் தனதனா தனதனந் 
          தனதனா தனதனந் ...... தனதான 
        கரவுசேர் மகளிர்குங் குமபயோ தரதனங் 
             களினறா துயில்வதுஞ் ...... சரிபேசுங் 
            கரசரோ ருகநகம் படவிடாய் தணிவதுங் 
        கமலநா பியின்முயங் ...... கியவாழ்வும் 
         அரவுபோ லிடைபடிந் திரவெலா முழுகுமின் 
           பநல்மகோ ததிநலம் ...... பெறுமாறும் 
               அதரபா னமுதமுந் தவிரவே மவுனபஞ் 
  சரமனோ லயசுகந் ...... தருவாயே 
          பரவுமா யிரமுகங் கொடுதிசா முகதலம் 
                படர்பகீ ரதிவிதம் ...... பெறஆடல் 
             பயில்பணா வனமுகந் தகுணமா சுணகணம் 
             பனிநிலா வுமிழுமம் ...... புலிதாளி 
           குரவுகூ விளமரும் பிதழிதா தகிநெடுங் 
 குடிலவே ணியிலணிந் ...... தவராகங் 
              குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங் 
             குமரனே யமரர்தம் ...... பெருமாளே. 
   பாடல் 1108 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
        தனதனா தனதனந் தனதனா தனதனந் 
          தனதனா தனதனந் ...... தனதான 
      வடிவவேல் தனைவெகுண் டிளைஞரா வியைவளைந் 
 தமர்செய்வாள் விழியர்நெஞ் ...... சினில்மாயம் 
      வளரமால் தனைமிகுந் தவர்கள்போ லளவிவந் 
             தணுகுமா நிதிகவர்ந் ...... திடுமாதர் 
       துடியைநே ரிடைதனந் துவளவே துயில்பொருந் 
             தமளிதோய் பவர்வசஞ் ...... சுழலாதே 
           தொலைவிலா இயல்தெரிந் தவலமா னதுகடந் 
               துனதுதாள் தொழமனந் ...... தருவாயே 
            படியெலா முடியநின் றருளுமா லுதவுபங் 
        கயனுநான் மறையுமும் ...... பரும்வாழப் 
     பரவையூ டெழுவிடம் பருகிநீள் பவுரிகொண் 
           டலகையோ டெரிபயின் ...... றெருதேறிக் 
        கொடியவா ளரவிளம் பிறையினோ டலைசலங் 
          குவளைசேர் சடையர்தந் ...... திருமேனி 
              குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங் 
             குமரனே யமரர்தம் ...... பெருமாளே. 
   பாடல் 1109 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
        தத்ததன தானான தத்ததன தானான 
          தத்ததன தானான ...... தனதான 
      கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய 
             கட்டுவிடு மோர்கால ...... மளவாவே 
   கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு 
          கற்புநெறி தான்மாய ...... வுயர்காலன் 
         இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடி 
             யிட்டவிதி யோயாவி ...... யிழவாமுன் 
           எத்தியுனை நாடோ று முத்தமிழி னாலோத 
               இட்டமினி தோடார ...... நினைவாயே 
         துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர் 
    தொக்கில்நெடு மாமார்பு ...... தொளையாகத் 
          தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால 
              சுத்ததமி ழார்ஞான ...... முருகோனே 
     மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ 
              மத்தமயில் மீதேறி ...... வருநாளை 
         வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ 
               வைத்தபடி மாறாத ...... பெருமாளே. 
   பாடல் 1110 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
        தத்ததன தானான தத்ததன தானான 
          தத்ததன தானான ...... தனதான 
             பக்கமுற நேரான மக்களுட னேமாதர் 
            பத்தியுடன் மேல்மூடி ...... யினிதான 
       பட்டினுட னேமாலை யிட்டுநெடி தோர்பாடை 
           பற்றியணை வோர்கூவி ...... யலைநீரிற் 
        புக்குமுழு காநீடு துக்கமது போய்வேறு 
           பொற்றியிட வேயாவி ...... பிரியாமுன் 
         பொற்கழலை நாடோ று முட்பரிவி னாலோது 
        புத்திநெடி தாம்வாழ்வு ...... புரிவாயே 
            இக்கனுக வேநாடு முக்கணர்ம காதேவர் 
          எப்பொருளு மாமீசர் ...... பெருவாழ்வே 
         எட்டவரிதோர்வேலை வற்றமுது சூர்மாள 
               எட்டியெதி ரேயேறு ...... மிகல்வேலா 
     மக்களொடு வானாடர் திக்கில்முனி வோர்சூழ 
              மத்தமயில் மீதேறி ...... வருவோனே 
         வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ 
               வைத்தபடி மாறாத ...... பெருமாளே. 
   பாடல் 1111 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
         தானதன தந்தான தானதன தந்தான 
              தானதன தந்தான ...... தனதான 
      நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி 
             நீளமக லஞ்சோதி ...... வடிவான 
     நேசமல ரும்பூவை மாதின்மண மும்போல 
       நேர்மருவி யுண்காத ...... லுடன்மேவிச் 
      சூரியனு டன்சோம னீழலிவை யண்டாத 
            சோதிமரு வும்பூமி ...... யவையூடே 
   தோகைமயி லின்பாக னாமெனம கிழ்ந்தாட 
        சோதிஅயி லுந்தாரு ...... மருள்வாயே 
        வாரியகி லங்கூச ஆயிரப ணஞ்சேடன் 
     வாய்விடவொ டெண்பாலு ...... முடுபோல 
 வார்மணியு திர்ந்தோட வேகவினி றைந்தாட 
    மாமயில்வி டுஞ்சேவல் ...... கொடியோனே 
       ஆரியன வன்தாதை தேடியின மும்பாடு 
        மாடலரு ணஞ்சோதி ...... யருள்பாலா 
    ஆனைமுக வன்தேடி யோடியெய ணங்காத 
       லாசைமரு வுஞ்சோதி ...... பெருமாளே. 
   பாடல் 1112 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ஹிந்தோளம் 
              தாளம் - ஸங்கீர்ணசாபு (4 1/2) 
     தகதிமிதக-3, தகிட-1 1/2 
         (எடுப்பு - 3/4 இடம்) 
              தத்ததனா தான தத்ததனா தான 
                தத்ததனா தான ...... தனதான 
           சுட்டதுபோ லாசை விட்டுலகா சார 
              துக்கமிலா ஞான ...... சுகமேவிச் 
           சொற்கரணா தீத நிற்குண்மு டாடு 
               சுத்தநிரா தார ...... வெளிகாண 
              மொட்டலர்வா ணச சக்ரசடா தார 
               முட்டவுமீ தேறி ...... மதிமீதாய் 
           முப்பதுமா றாறு முப்பதும்வே றான 
        முத்திரையா மோன ...... மடைவேனோ 
    எட்டவொணா வேத னத்தொடுகோ கோவெ 
              னப்பிரமா வோட ...... வரைசாய 
               எற்றியஏ ழாழி வற்றிடமா றாய 
            எத்தனையோ கோடி ...... யசுரேசர் 
          பட்டொருசூர் மாள விக்ரமவே லேவு 
         பத்திருதோள் வீர ...... தினைகாவல் 
          பத்தினிதோள் தோயு முத்தமம றாது 
        பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே. 
   பாடல் 1113 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
              தத்ததனா தான தத்ததனா தான 
                தத்ததனா தான ...... தனதான 
         மைச்சுனமார் மாம னைச்சியுமா தாவு 
 மக்களுமா றாத ...... துயர்கூர 
       மட்டிலதோர் தீயி லிக்குடில்தான் வேவ 
              வைத்தவர்தா மேக ...... மதிமாய 
         நிச்சயமாய் நாளு மிட்டொருதூ தேவு 
       நெட்டளவாம் வாதை ...... யணுகாமுன் 
         நெக்குருகா ஞான முற்றுனதா ளோதி 
           நித்தலும்வாழ் மாறு ...... தருவாயே 
       நச்சணைமேல் வாழு மச்சுதனால் வேத 
            னற்றவர்தா நாட ...... விடையேறி 
            நற்புதல்வா சூரர் பட்டிடவே லேவு 
           நற்றுணைவா ஞால ...... மிகவாழப் 
      பச்செனுநீள் தோகை மெய்ப்பரியூர் பாக 
              பத்தியதா மாறு ...... முகநாளும் 
             பக்ஷமுமே லாய்ஷ டக்ஷரசூழ் பாத 
        பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே. 
   பாடல் 1114  ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
        தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன 
             தத்தனத் தத்ததன ...... தனதான 
             தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு 
        சத்துவிட் டப்படிபொ ...... லடியேனுஞ் 
   சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி 
      சத்துவத் தைப்பிரிய ...... விடும்வேளை 
      சுத்தமத் தப்பதவி பெற்றநற் பத்தரொடு 
      தொக்குசற் றுக்கடையன் ...... மிடிதீரத் 
    துப்புமுத் துச்சரண பச்சைவெற் றிப்புரவி 
           சுற்றவிட் டுக்கடுகி ...... வரவேணும் 
 வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய 
         வெற்றிசத் திக்கரக ...... முருகோனே 
 வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல 
         விட்டபச் சைச்சரண ...... மயில்வீரா 
              கத்தர்நெட் டுச்சடையர் முக்கணக் கக்கடவுள் 
      கச்சியப் பர்க்கருள்செய் ...... குருநாதா 
     கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர் 
       கற்பினுக் குற்றுபுணர் ...... பெருமாளே. 
   பாடல் 1115 ( பொதுப்பாடல்கள் ) 
 
     ராகம் - ..... ;   தாளம் - 
        தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன 
             தத்தனத் தத்ததன ...... தனதான 
            மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர் 
        மற்றுமுற் றக்குரவ ...... ரனைவோரும் 
              வைத்தசெப் பிற்பணமும் ரத்நமுத் திற்பணியு 
          மட்டுமற் றுப்பெருகு ...... மடியாரும் 
   புக்குதுக் தித்தெரிகள் தத்தவைக் கப்புகுது 
   பொய்க்குமெய்க் குச்செயலு ...... முருகாதே 
   புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு 
        புத்திமெத் தத்தருவ ...... தொருநாளே 
            செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகு 
             செக்கமுற் றச்சலமு ...... மதிசூடி 
  சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு 
      சித்தமுத் திச்சிவமு ...... மருள்வோனே 
            கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரை 
             கொத்தினொக் கக்கொலைசெய் ...... வடிவேலா 
            கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிது 
     குத்திவெட் டிப்பொருத ...... பெருமாளே. 
   பாடல் 1116 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
   தத்தா தத்தா தத்தா தத்தா 
  தத்தா தத்தத் ...... தனதான 
    உ ற்பா தப்பூ தக்கா யத்தே 
          யொத்தோ டித்தத் ...... தியல்காலை 
   உ ட்பூ ரித்தே சற்றே சற்றே 
                யுக்கா ரித்தற் ...... புதனேரும் 
             அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போ 
               லப்பா வித்துத் ...... திரிவேனுக் 
  கப்பா சத்தா லெட்டா அப்பா 
            லைப்போ தத்தைப் ...... புரிவாயே 
          பொற்பார் பொற்பார் புத்தே ளிர்க்கா 
              கப்போய் முட்டிக் ...... கிரிசாடிப் 
 புக்கா ழிச்சூழ் கிட்டா கிச்சூர் 
              பொட்டா கக்குத் ...... தியவேலா 
                முற்பா டப்பா டற்றா ருக்கோர் 
             முட்கா டற்கப் ...... பொருளீவாய் 
   முத்தா முத்தீ யத்தா சுத்தா 
             முத்தா முத்திப் ...... பெருமாளே. 
   பாடல் 1117 ( பொதுப்பாடல்கள் ) 
 
      ராகம் - ..... ;   தாளம் - 
   தத்தா தத்தா தத்தா தத்தா 
  தத்தா தத்தத் ...... தனதான 
    எற்றா வற்றா மட்டா கத்தீ 
           யிற்காய் செக்கட் ...... பிறைவாளே 
                யிற்றார் கைப்பா சத்தே கட்டா 
          டிக்கோ பித்துக் ...... கொடுபோமுன் 
              உ ற்றார் பெற்றார் சுற்றா நிற்பா 
          ரொட்டோ ம் விட்டுக் ...... கழியீரென் 
 றுற்றோ துற்றே பற்றா நிற்பா 
              ரக்கா லத்துக் ...... குறவார்தான் 
                பற்றார் மற்றா டைக்கே குத்தா 
            பற்றா னப்பிற் ...... களைவோனே 
                பச்சே னற்கா னத்தே நிற்பாள் 
           பொற்பா தத்திற் ...... பணிவோனே 
              முற்றா வற்றா மெய்ப்போ தத்தே 
           யுற்றார் சித்தத் ...... துறைவோனே 
   முத்தா முத்தீ யத்தா சுத்தா 
             முத்தா முத்திப் ...... பெருமாளே. 
   பாடல் 1118   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;    தாளம் - 
   தத்தா தத்தா தத்தா தத்தா 
  தத்தா தத்தத் ...... தனதான 
               செட்டா கத்தே னைப்போ லச்சீ 
               ரைத்தே டித்திட் ...... பமதாகத் 
    திக்கா மற்பா டுற்றா ரிற்சீ 
               ருற்றா ருக்குச் ...... சிலபாடல் 
 பெட்டா கக்கூ றிப்போ தத்தா 
            ரைப்போல் வப்புற் ...... றுழலாதே 
            பெற்றா ரிற்சார் வுற்றாய் நற்றாள் 
             சற்றோ தப்பெற் ...... றிடுவேனோ 
               எட்டா நெட்டா கத்தோ கைக்கே 
           புக்கோ லத்திட் ...... டிமையொர்வா 
 னிற்பா ரிற்சூ ழச்சூ ரைத்தா 
         னெட்டா வெட்டிப் ...... பொரும்வேலா 
              முட்டா மற்றா ளைச்சே விப்பார் 
          முற்பா வத்தைக் ...... களைவோனே 
   முத்தா முத்தீ யத்தா சுத்தா 
             முத்தா முத்திப் ...... பெருமாளே. 
   பாடல் 1119 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
   தத்தா தத்தா தத்தா தத்தா 
  தத்தா தத்தத் ...... தனதான 
              பட்டா டைக்கே பச்சோ லைக்கா 
                துக்கே பத்தித் ...... தனமாகும் 
 பக்கே நிட்டூ ரப்பார் வைக்கே 
 பட்டா சைப்பட் ...... டுறவாடி 
                ஒட்டார் நட்டார் வட்டா ரத்தே 
                சுற்றே முற்றத் ...... தடுமாறும் 
   ஒட்டா ரப்பா விக்கே மிக்கா 
           முற்றாள் கிட்டத் ...... தகுமோதான் 
  கட்டா விப்போ துட்டா விப்பூ 
                கக்கா விற்புக் ...... களிபாடுங் 
                கற்பூர் நற்சா ரக்கா ழித்தோய் 
                கத்தா சத்தித் ...... தகவோடே 
                முட்டா கக்கூ ரிட்டே னற்றாள் 
               முற்றா மற்கொட் ...... குமரேசா 
   முத்தா முத்தீ யத்தா சுத்தா 
             முத்தா முத்திப் ...... பெருமாளே. 
   பாடல் 1120   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
   தத்தா தத்தா தத்தா தத்தா 
  தத்தா தத்தத் ...... தனதான 
              பத்தே ழெட்டீ ரெட்டேழ் ரட்டால் 
              வைத்தே பத்திப் ...... படவேயும் 
 பைப்பீ றற்கூ ரைப்பா சத்தா 
 சற்கா ரத்துக் ...... கிரைதேடி 
                எத்தே சத்தோ டித்தே சத்தோ 
            டொத்தேய் சப்தத் ...... திலுமோடி 
 எய்த்தே நத்தா பற்றா மற்றா 
               திற்றே முக்கக் ...... கடவேனோ 
               சத்தே முற்றா யத்தா னைச்சூர் 
 கற்சா டிக்கற் ...... பணிதேசா 
   சட்சோ திப்பூ திப்பா லத்தா 
            அக்கோ டற்செச் ...... சையமார்பா 
               முத்தா பத்தா ரெட்டா வைப்பா 
           வித்தா முத்தர்க் ...... கிறையோனே 
   முத்தா முத்தீ யத்தா சுத்தா 
             முத்தா முத்திப் ...... பெருமாளே. 
   பாடல் 1121 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
   தத்தா தத்தா தத்தா தத்தா 
  தத்தா தத்தத் ...... தனதான 
          பொற்கோ வைக்கே பற்கோ வைக்கே 
        பொய்ப்போ கத்தைப் ...... பகர்வார்தம் 
          பொய்க்கே மெய்க்கே பித்தா கிப்போ 
         கித்தே கைக்குப் ...... பொருள்தேடித் 
              தெற்கோ டிக்கா சிக்கோ டிக்கீழ் 
  திக்கோ டிப்பச் ...... சிமமான 
                திக்கோ டிப்பா ணிக்கோ டித்தீ 
              வுக்கோ டிக்கெட் ...... டிடலாமோ 
 தற்கோ லிப்பா விப்பார் நற்சீ 
               ரைச்சா ரத்தற் ...... பரமானாய் 
                தப்பா முப்பா லைத்தே டித்தே 
            சத்தோர் நிற்கத் ...... தகையோடே 
             முற்கா னப்பே தைக்கா கப்போய் 
         முற்பால் வெற்பிற் ...... கணியானாய் 
   முத்தா முத்தீ யத்தா சுத்தா 
             முத்தா முத்திப் ...... பெருமாளே. 
   பாடல் 1122 ( பொதுப்பாடல்கள் ) 
 
      ராகம் - ..... ;   தாளம் - 
   தத்தா தத்தா தத்தா தத்தா 
  தத்தா தத்தத் ...... தனதான 
            பொற்பூ வைச்சீ ரைப்போ லப்போ 
            தப்பே சிப்பொற் ...... கனிவாயின் 
              பொய்க்கா மத்தே மெய்க்கா மப்பூ 
       ணைப்பூண் வெற்பிற் ...... றுகில்சாயக் 
                கற்பா லெக்கா வுட்கோ லிக்கா 
               சுக்கே கைக்குத் ...... திடுமாதர் 
                கட்கே பட்டே நெட்டா சைப்பா 
               டுற்றே கட்டப் ...... படுவேனோ 
             சொற்கோ லத்தே நற்கா லைச்சே 
           விப்பார் சித்தத் ...... துறைவோனே 
              தொக்கே கொக்கா கிச்சூ ழச்சூர் 
            விக்கா முக்கத் ...... தொடும்வேலா 
             முற்கா லத்தே வெற்பேய் வுற்றார் 
            முத்தாள் முத்தச் ...... சிறியோனே 
   முத்தா முத்தீ யத்தா சுத்தா 
             முத்தா முத்திப் ...... பெருமாளே. 
   பாடல் 1123 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
   தத்தா தத்தா தத்தா தத்தா 
  தத்தா தத்தத் ...... தனதான 
              மெய்க்கூ ணைத்தே டிப்பூ மிக்கே 
                வித்தா ரத்திற் ...... பலகாலும் 
                வேட்கா மற்சே ரிச்சோ ரர்க்கே 
        வித்தா சைச்சொற் ...... களையோதிக் 
            கைக்கா ணிக்கோ ணற்போ தத்தா 
             ரைப்போ லக்கற் ...... பழியாதுன் 
  கற்பூ டுற்றே நற்றா ளைப்பா 
              டற்கே நற்சொற் ...... றருவாயே 
 பொய்க்கோ ணத்தாழ் மெய்க்கோ ணிப்போய் 
         முற்பால் வெற்பிற் ...... புனமானைப் 
            பொற்றோ ளிற்சேர் கைக்கா கப்பா 
           தத்தாள் பற்றிப் ...... புகல்வோனே 
           முக்கோ ணத்தா னத்தா ளைப்பால் 
           வைத்தார் முத்தச் ...... சிறியோனே 
   முத்தா முத்தீ யத்தா சுத்தா 
             முத்தா முத்திப் ...... பெருமாளே. 
   பாடல் 1124 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - கரஹரப்ரியா 
  தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை (35) 
         (எடுப்பு - /4/4/4 0) 
              நடை - தகதகிட 
      தனதனன தனதனன தந்தந்த தத்ததன 
      தனதனன தனதனன தந்தந்த தத்ததன 
               தனதனன தனதனன தந்தந்த தத்ததன ...... தத்ததன தான 
            அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும் 
        அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும் 
        அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு ...... மாய 
              அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய 
            முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய 
 அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு ...... காலம் 
      நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை 
       நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை 
           நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு ...... மானும் 
   நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு 
 பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய 
   நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் ...... வாயே 
        தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு 
    டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு 
           தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு ...... தீதோ 
     தனதனன தனதனன தந்தந்த னத்ததன 
  டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு 
         தரரரர ரிரிரிரிரியென்றென்றி டக்கையுமு டுக்கையுமி ...... யாவும் 
            மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர் 
   அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட 
       முடுகுபயி ரவர்பவுரிகொண்டின்பு றப்படுக ளத்திலொரு ...... கோடி 
  முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி 
 நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட 
           முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த ...... பெருமாளே. 
   பாடல் 1125   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... :   தாளம் - 
               தனன தந்தன தனனா தனதன 
      தந்தன தனனா தனதன 
              தனன தந்தன தனனா தனதன ...... தனதான 
              அரிய வஞ்சக ரறவே கொடியவர் 
           அவலர் வன்கண ரினியா ரவகுணர் 
 அசட ரன்பில ரவமே திரிபவர் ...... அதிமோக 
      அலையில் மண்டிய வழியே யொழுகியர் 
            வினைநி ரம்பிடு பவமே செறிபவர் 
        அருள்து றந்தவ ரிடம்வாழ் சவலைகள் ...... நரகேற 
               உ ரிய சஞ்சல மதியா னதுபெறு 
             மனஇ டும்பர்க ளிடமே தெனஅவர் 
         உ பய அங்கமு நிலையா கிடவொரு ...... கவியாலே 
           உ லக முண்டவர் மதனா ரிமையவர் 
            தருவெ னும்படி மொழியா வவர்தர 
         உ ளது கொண்டுயி ரவமே விடுவது ...... தவிராதோ 
            கரிய கொந்தள மலையா ளிருதன 
             அமுது ணுங்குரு பரனே திரைபடு 
           கடல டும்படி கணையே வியஅரி...... மருகோனே 
     கருணை கொண்டொரு குறமா மகளிடை 
             கலவி தங்கிய குமரா மயில்மிசை 
 கடுகி யெண்டிசை நொடியே வலம்வரு ...... மிளையோனே 
         திரிபு ரங்கனல் நகையா லெரிசெய்து 
              பொதுந டம்புரியரனா ரிடமுறை 
      சிவைச வுந்தரியுமையா ளருளிய ...... புதல்வோனே 
              சிகர வெண்கரிஅயிரா வதமிசை 
 வருபு ரந்தர னமரா பதியவர் 
        சிறைவி டும்படி வடிவேல் விடவல ...... பெருமாளே. 
   பாடல் 1126 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - திலங் 
 தாளம் - அங்கதாளம் (7 1/2) 
       தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2 
  தானான தான தான தானன 
  தானான தான தான தானன 
  தானான தான தான தானன ...... தந்ததான 
     ஆராத காத லாகி மாதர்த 
     மாபாத சூட மீதி லேவிழி 
            யாலோல னாய்வி கார மாகியி ...... லஞ்சியாலே 
      ஆசாப சாசு மூடி மேலிட 
     ஆசார வீன னாகி யேமிக 
 ஆபாச னாகி யோடி நாளும ...... ழிந்திடாதே 
    ஈராறு தோளு மாறு மாமுக 
  மோடாரு நீப வாச மாலையு 
             மேறான தோகை நீல வாசியு ...... மன்பினாலே 
   ஏனோரு மோது மாறு தீதற 
  நானாசு பாடி யாடி நாடொறு 
 மீடேறு மாறு ஞான போதக ...... மன்புறாதோ 
  வாராகி நீள்க பாலி மாலினி 
 மாமாயி யாயி தேவி யாமளை 
  வாசாம கோச ராப ராபரை ...... யிங்குளாயி 
 வாதாடி மோடி காடு காளுமை 
  மாஞால லீலி யால போசனி 
            மாகாளி சூலி வாலை யோகினி ...... யம்பவானி 
   சூராரி மாபு ராரிகோமளை 
      தூளாய பூதி பூசு நாரணி 
            சோணாச லாதி லோக நாயகி ...... தந்தவாழ்வே 
               தோளாலும் வாளி னாலு மாறிடு 
            தோலாத வான நாடு சூறைகொள் 
   சூராரியேவி சாக னேசுரர் ...... தம்பிரானே. 
   பாடல் 1127  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - கீரவாணி 
 தாளம் - திஸ்ர த்ருபுடை (7) 
       தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்த 
      தானாதன தானந் தனத்த ...... தனதான 
           ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து 
      மாவாகன மாமந் திரத்து ...... மடலாலும் 
     ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து 
     மாமாறெரிதாமிந் தனத்து ...... மருளாதே 
           நீராளக நீர்மஞ் சனத்த நீடாரக வேதண்ட மத்த 
       நீநானற வேறின்றி நிற்க ...... நியமாக 
       நீவாவென நீயிங் கழைத்து பாராவர வாநந்த சித்தி 
      நேரேபர மாநந்த முத்தி ...... தரவேணும் 
            வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க 
       வேதாளச மூகம் பிழைக்க ...... அமராடி 
      வேதாமுறை யோவென் றரற்ற ஆகாசக பாலம் பிளக்க 
     வேர்மாமர மூலந் தறித்து ...... வடவாலும் 
        வாராகர மேழுங் குடித்து மாசூரொடு போரம் பறுத்து 
 வாணாசன மேலுந் துணித்த ...... கதிர்வேலா 
  வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து 
              வானோர்பரிதாபந் தவிர்த்த ...... பெருமாளே. 
   பாடல் 1128   ( பொதுப்பாடல்கள் ) 
 
     ராகம் - ..... ;   தாளம் - 
              தானா தத்தன தத்தன தானா தத்தன தத்தன 
         தானா தத்தன தத்தன ...... தனதான 
                ஆலா லத்தைய ழுத்திய வேல்போல் நற்குழை யைப்பொரு 
           தாகா ரைத்தொடர் கைக்கெணும் ...... விழியாலே 
             ஆளா மற்றவர் சுற்றிட மீளா மற்றலை யிட்டறி 
          வார்போ கச்செயல் விச்சைகள் ...... விலைகூறிக் 
      கோலா லக்கண மிட்டுவ ராதார் நெக்குரு கப்பொருள் 
     கூறா கப்பெறில் நிற்கவு ...... மிலதானார் 
        கூடா நட்புமு ரைத்திடு கேடா விட்டகல் மட்டைகள் 
      கோமா ளத்துய ருட்பய ...... முறலாமோ 
         பாலா மக்கட லிற்றுயில் மாலோ ரெட்டுத லைக்கிரி
             பால்பார் வைக்கள விட்டுமை ...... யுறுபோதிற் 
       பார்மே லிக்கனு டற்பொறி யாய்வீ ழச்சுடும் வித்தகர் 
   பாலா பத்தரிடத்தியல் ...... பயில்வோனே 
     மேலா யத்தொடு திக்கடை மேவார் வெற்பொட ரக்கரை 
            வேர்மா ளப்பொரு திட்டொளி ...... விடும்வேலா 
       மேனா டர்ச்சிறை விட்டருள் மீளா விக்கிர மத்தொடு 
             வேதா வைச்சிறை யிட்டருள் ...... பெருமாளே. 
   பாடல் 1129   ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் - சுருட்டி 
      தாளம் - அங்கதாளம் (9) 
         தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2 
            தானான தான தத்த தத்த தத்தன 
            தானான தான தத்த தத்த தத்தன 
           தானான தான தத்த தத்த தத்தன ...... தனதான 
     ஆனாத ஞான புத்தி யைக்கொ டுத்ததும் 
        ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும் 
    ஆதேச வாழ்வி னிற்ப்ர மித்தி ளைத்துயி ...... ரழியாதே 
         ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும் 
         வாசாம கோச ரத்தி ருத்து வித்ததும் 
      ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினி ...... துலகேழும் 
           யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ் 
     தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும் 
        ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும் ...... இடராழி 
               ஏறாத மாம லத்ர யக்கு ணத்ரய 
              நானாவி கார புற்பு தப்பி றப்பற 
          ஏதேம மாயெ னக்க நுக்ர கித்ததும் ...... மறவேனே 
      மாநாக நாண்வ லுப்பு றத்து வக்கியொர் 
           மாமேரு பூத ரத்த னுப்பி டித்தொரு 
    மாலாய வாளி யைத்தொ டுத்த ரக்கரி...... லொ       முவர் 
             மாளாது பாத கப்பு ரத்ர யத்தவர் 
           தூளாக வேமு தற்சி ரித்த வித்தகர் 
      வாழ்வேவ லாரிபெற்றெ டுத்த கற்பக ...... வனமேவும் 
             தேநாய காஎ னத்து தித்த வுத்தம 
         வானாடர் வாழ விக்ர மத்தி ருக்கழல் 
     சேராத சூர னைத்து ணித்த டக்கிய ...... வரைமோதிச் 
          சேறாய சோரிபுக்க ளக்கர் திட்டெழ 
            மாறாநி சாச ரக்கு லத்தை யிப்படி 
      சீராவி னால றுத்த றுத்தொ துக்கிய ...... பெருமாளே. 
    பாடல் 1130 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
                தனதனனந் தாத்த தான தத்த 
                தனதனனந் தாத்த தான தத்த 
 தனதனனந் தாத்த தான தத்த ...... தனதான 
              இடமருவுஞ் சீற்ற வேலெ டுத்து 
            விடமுழுதுந் தேக்கி யேநி றைத்து 
     இருகுழையுந் தாக்கி மீள்க யற்கண் ...... வலையாலே 
        இனிமையுடன் பார்த்து ளேய ழைத்து 
            முகபடமுஞ் சேர்த்து வார ழுத்தும் 
         இருவரையுங் காட்டி மாலெ ழுப்பி ...... விலைபேசி 
             மடலவிழும் பூக்க ளால்நி றைத்த 
               சுருளளகந் தூற்றி யேமு டித்து 
       மறுகிடைநின் றார்க்க வேந கைத்து ...... நிலையாக 
        வருபொருள்கண் டேற்க வேப றிக்கும் 
            அரிவையர்தம் பேச்சி லேமு ழுக்க 
       மனமுருகுந் தூர்த்த னாயி ளைத்து ...... விடலாமோ 
               படிமுழுதுங் கூர்த்த மாகு லத்தி 
          முதுமறையின் பேச்சி நூலி டைச்சி 
            பகிர்மதியம் பூத்த தாழ்ச டைச்சி ...... யிருநாழி 
              படிகொடறங் காத்த மாப ரைச்சி 
        மணிவயிரங் கோத்த தோள்வ ளைச்சி 
         பலதிசையும் போய்க்கு லாவி ருப்பி ...... நெடுநீலி 
           அடுபுலியின் தோற்ப டாமு டைச்சி 
             சமரமுகங் காட்டு மால்வி டைச்சி 
     அகிலமுமுண் டார்க்கு நேரிளைச்சி ...... பெருவாழ்வே 
               அரியயனின் றேத்த வேமி குத்த 
            விபுதர்குலம் பேர்க்க வாளெ டுத்த 
         அசுரர்குலம் பாழ்க்க வேலெ டுத்த ...... பெருமாளே. 
    பாடல் 1131 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
 தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதத்தத் 
         தனதத்தத் தனதத்தத் ...... தனதான 
               இடர்மொய்த்துத் தொடரிற்பொய்க் குடிலக்கிக் கிடையிட்டிட் 
              டினிமைச்சுற் றமுமற்றைப் ...... புதல்வோரும் 
       இனமொப்பித் திசையச்சொற் பலகத்திட் டிழியப்பிற் 
      கிடையத்துக் கமும்விட்டிட் ...... டவரேக 
      விடமெத்தச் சொரிசெக்கட் சமன்வெட்டத் தனமுற்றிட் 
          டுயிர்வித்துத் தனையெற்றிக் ...... கொடுபோமுன் 
   வினைபற்றற் றறநித்தப் புதுமைச்சொற் கொடுவெட்சிப் 
  புயவெற்றிப் புகழ்செப்பப் ...... பெறுவேனோ 
  அடர்செக்கர்ச் சடையிற்பொற் பிறையப்புப் புனையப்பர்க் 
             கறிவொக்கப் பொருள்கற்பித் ...... திடுவோனே 
         அலகைக்குட் பசிதித்தப் பலகைக்கொத் ததுபட்டிட் 
    டலறக்குத் துறமுட்டிப் ...... பொரும்வேலா 
      கடலுக்குட் படுசர்ப்பத் தினில்மெச்சத் துயில்பச்சைக் 
 கிரிகைக்குட் டிகிரிக்கொற் ...... றவன்மாயன் 
    கமலத்திற் பயில்நெட்டைக் குயவற்கெட் டிசையர்க்குக் 
      கடவுட்சக் கிரவர்த்திப் ...... பெருமாளே. 
    பாடல் 1132 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ....;    தாளம் - 
   தனதனன தான தத்த தந்த 
   தனதனன தான தத்த தந்த 
    தனதனன தான தத்த தந்த ...... தனதான 
         இரவினிடை வேள்தொ டுத்து டன்று 
             முறுகுமலர் வாளி யைப்பி ணங்கி 
             யிருகுழையு மோதி யப்ப டங்கு ...... கடலோடே 
           எதிர்பொருது மானி னைத்து ரந்து 
           சலதிகிழி வேல்த னைப்பொ ருந்தி 
          யினியமுத ஆல முற்ற கண்கள் ...... வலையாலே 
        முரணிளைஞ ராவி யைத்தொ டர்ந்து 
              விசிறிவளை மாத ரைக்க லந்து 
             மொழியதர கோவை யிக்க ருந்தி ...... யமுதாகு 
           முகிழ்முகுளி தார வெற்ப ணைந்து 
 சுழிமிதுன வாவி யிற்பு குந்து 
             முழுகியழி யாம னற்ப தங்கள் ...... தரவேணும் 
               திரையுலகு சாக ரத்தி லங்கை 
              நகரிலுறை ராவ ணற்கி யைந்த 
         தெசமுடியு மீரு பத்தொ ழுங்கு ...... திணிதோளுஞ் 
           சிதையவொரு வாளி யைத்து ரந்த 
     அரிமருக தீத றக்க டந்து 
            தெளிமருவு கார ணத்த மர்ந்த ...... முருகோனே 
               அரணமதிள் சூழ்பு ரத்தி ருந்து 
                கருதுமொரு மூவ ருக்கி ரங்கி 
             யருளுமொரு நாய கற்ப ணிந்த ...... குருநாதா 
         அகல்முடிவை யாதி யைத்தெ ளிந்து 
  இரவுபகலாக நெக்க விழ்ந்த 
          அடியவர்கள் பாட லுக்கி சைந்த ...... பெருமாளே. 
    பாடல் 1133 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - தர்பரிகானடா 
 தாளம் - அங்கதாளம் (7 1/2) 
 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 
  தனன தந்தன தானா தானா 
  தனன தந்தன தானா தானா 
   தனன தந்தன தானா தானா ...... தனதான 
  இரவொ டும்பக லேமா றாதே 
 அநுதி னந்துய ரோயா தேயே 
 யெரியு முந்தியி னாலே மாலே ...... பெரிதாகி 
                இரைகொ ளும்படி யூடே பாடே 
            மிகுதி கொண்டொழி யாதே வாதே 
              யிடைக ளின்சில நாளே போயே ...... வயதாகி 
               நரைக ளும்பெரிதாயே போயே 
             கிழவ னென்றொரு பேரே சார்வே 
   நடைக ளும்பல தாறே மாறே ...... விழலாகி 
              நயன முந்தெரியாதே போனால் 
                விடிவ தென்றடி யேனே தானே 
  நடன் குஞ்சித வீடே கூடா ...... தழிவேனோ 
    திருந லம்புரிதாளீ தூளீ 
       மகர குண்டலி மாண சூரி
      திரிபு ரந்தழ லேவீ சார்வீ ...... யபிராமி 
     சிவனி டந்தரிநீலீ சூலீ 
     கவுரிபஞ்சவி யாயீ மாயீ 
         சிவைபெ ணம்பிகை வாலா சீலா ...... அருள்பாலா 
    அரவ கிங்கிணி வீரா தீரா 
 கிரிபு ரந்தொளிர் நாதா பாதா 
             அழகி ளங்குற மானார் தேனார் ...... மணவாளா 
   அரிய ரன்பிர மாவோ ட்மு 
               வகைய ரிந்திர கோமா னீள்வா 
          னமரர் கந்தரு வானோ ரேனோர் ...... பெருமாளே. 
    பாடல் 1134 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
     தனதன தானான தானன 
     தனதன தானான தானன 
      தனதன தானான தானன ...... தனதான 
   இருகுழை மீதோடி மீளவும் 
   கயல்களு மாலால காலமும் 
     ரதிபதி கோலாடு பூசலு ...... மெனவேநின் 
 றிலகிய கூர்வேல் விலோசன 
         ம்ருகமத பாடிர பூஷித 
    இளமுலை மாமாத ரார்வச ...... முருகாதே 
   முருகவிழ் கூதாள மாலிகை 
   தழுவிய சீர்பாத தூளியின் 
              முழுகிவி டாய்போ மனோலயம் ...... வரவோது 
       முழுமதி மாயாவி காரமு 
     மொழிவது வாசாம கோசர 
              முகுளித ஞானோப தேசமு ...... மருள்வேணும் 
               அருமறை நூலோதும் வேதியன் 
    இரணிய ரூபாந மோவென 
    அரிகரிநாராய ணாவென ...... ஒருபாலன் 
    அவனெவ னாதார மேதென 
  இதனுள னோவோது நீயென 
  அகிலமும் வாழ்வான நாயக ...... னெனவேகி 
                ஒருகணை தூணோடு மோதிட 
             விசைகொடு தோள்போறு வாளரி
   யுகிர்கொடு வாரா நிசாசர ...... னுடல்பீறும் 
 உ லகொரு தாளான மாமனும் 
              உ மையொரு கூறான தாதையும் 
  உ ரைதரு தேவாசு ராதிபர் ...... பெருமாளே. 
    பாடல் 1135 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
              தனதன தனதன தத்தத் தானன 
              தனதன தனதன தத்தத் தானன 
             தனதன தனதன தத்தத் தானன ...... தனதான 
      இருமுலை மலையென ஒப்பிட் டேயவர் 
              இருவிழி யதனில் கப்பட் டேமன 
        மிசைபட வசனமு ரைத்திட் டேபல ...... மினிதொடே 
          இடையது துவளகு லுக்கிக் காலணி 
           பரிபுர வொலிகள் தொனிக்கப் பூதர 
   இளமுலை குழைய அணைத்துக் கேயுர ...... மணியோடே 
                மதகத பவள மழுத்திப் பூஷண 
            மணிபல சிதறி நெறித்துத் தானுக 
          மருமலர் புனுகு தரித்துப் பூவணை ...... மதராஜன் 
           மருவிய கலவி தனக்கொப் பாமென 
     மகிழ்வொடு ரசிது மிகுத்துக் கோதையை 
      மருவியு முருகி களைத்துப் பூமியி ...... லுழல்வேனோ 
           திரிபுர மெரிய நகைத்துக் காலனை 
            யுதைபட மதனை யழித்துச் சாகர 
    திரைவரு கடுவை மிடற்றிற் றானணி ...... சிவனார்தந் 
       திருவருள் முருக பெருத்துப் பாரினில் 
           சியொதனன் மடிய மிகுத்துப் பாரத 
         செயமுறு மரிதன் மனத்துக் காகிய ...... மருகோனே 
           நரிகழு வதுகள் களிக்கச் சோரிகள் 
           ரணகள முழுதுமி குத்துக் கூளிகள் 
             நடமிட அசுரர் குலத்துக் காலனை ...... நிகராகி 
          நனிகடல் கதற பொருப்புத் தூளெழ 
            நணுகிய இமையவ ருக்குச் சீருற 
  நணுகலர் மடியதொ லைத்துப் பேர்பேறு ...... பெருமாளே. 
    பாடல் 1136 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
  தனதன தானா தானா தனதன தானா தானா 
          தனதன தானா தானா ...... தனதான 
         இலகிய வேலோ சேலோ ஒளிவிடு வாளோ போதோ 
     எமன்விடு தூதோ மானோ ...... விடமீதோ 
             எனவிழி கூறா வாரா அரிவையர் தேர்ளு டாடா 
  இறுதியில் வேறாய் மாறா ...... நினைவாலே 
            பலபல கோளாய் மாலா யுழலும தானால் வீணே 
      படிறுசொ லாகா லோகா ...... யதனாகிப் 
  பரிவுட னாடாய் வீடா யடிமையு மீடே றாதே 
   பணிதியில் மூழ்கா மாயா ...... விடுவேனோ 
       அலைகடல் கோகோ கோகோ எனவுரை கூறா வோடா 
       அவுணரை வாடா போடா ...... எனலாகி 
             அழகிய வேலால் வாளால் நிலவிய சீரா வாலே 
         யவருடல் வாணா ளீரா ...... எதிராகி 
             மலைமிகு தோளா போதா அழகிய வாலா பாலா 
        மகபதி வாழ்வே சேயே ...... மயில்வீரா 
          மறைதொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே 
    வளவிய வேளே மேலோர் ...... பெருமாளே. 
    பாடல் 1137 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ...... ;    தாளம் - 
            தனதன தனதத்த தனனா தனனா 
            தனதன தனதத்த தனனா தனனா 
            தனதன தனதத்த தனனா தனனா ...... தனதான 
   உ மையெனு மயில்பெற்ற மயில்வா கனனே 
       வனிதைய ரறுவர்க்கு மொருபா லகனே 
        உ ளமுரு கியபத்த ருறவே மறவே ...... னெனவோதி 
    உ ருகுத லொருசற்று மறியேன் வறியேன் 
 இ ருவினை யிடையிட்ட கொடியே னடியேன் 
 உ ணர்விலி பெறமுத்தி தருவாய் துகிர்வாய் ...... மடமாதர் 
    அமையென வளர்சித்ர இருதோள் தழுவா 
           அமுதென மதுரித்த கனிவா யணுகா 
        அமளியி லணைவுற்ற அநுரா கமகோ ...... ததமுழ்கி 
       அநவர தமுமுற்ற மணிமா முலைதோய் 
              கலவியி னலமற்ப சுகமா கினுமா 
        அநுபவ மிதுசற்றும் விடவோ இயலா ...... தியலாதே 
             தமனிய குலசக்ர கிரியோ கடலோ 
       விடமென முடிவைத்த முதுபே ரிருளோ 
        தனுவென முனையிட்ட கொநல்மு விலைவேல் ...... கொடுபார்வை 
             தழலெழ வருமுக்ர எமபா தகனோ 
          யுகஇறு தியில்மிக்க வடவா னலமோ 
            தனியிவ னெனமிக்க பிசிதா சனபூ ...... பதியாகி 
             இமையவ ரனைவர்க்கும் அறையோ அறையோ 
  அரியயன் முழுதுக்கும் அறையோ அறையோ 
                எழுபுவி யுலகுக்கும் அறையோ அறையோ ...... பொரவாரும் 
              எனவரு மொருதுட்டன் முறையோ முறையோ 
           வடகுல கிரியெட்டும் அபிதா அபிதா 
             எனவொரு அயில்தொட்ட அரசே யிமையோர் ...... பெருமாளே. 
    பாடல் 1138 ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் - ...... ;    தாளம் - 
               தனத்த தத்தன தனதன தந்தத் 
               தனத்த தத்தன தனதன தந்தத் 
              தனத்த தத்தன தனதன தந்தத் ...... தனதான 
         உ ரைத்த பற்றுட னடிகள்ப ணிந்திட் 
         டிருத்தி மெத்தென இளநகை யுஞ்சற் 
              றுமிழ்த்த டைக்கல மெனஎதிர் கும்பிட் ...... டணைமேல்வீழ்ந் 
       துடுத்த பொற்றுகி லகலல்கு லுந்தொட் 
    டெடுத்த ணைத்திதழ் பெருகமு தந்துய்த் 
   துனக்கெ னக்கென வுருகிமு யங்கிட் ...... டுளும்வேறாய் 
           அருக்கி யத்தனை யெனுமவ சம்பட் 
          டறுத்தொ துக்கிய நகநுதி யுந்தைத் 
 தறப்பி தற்றிட அமளிக லங்கித் ...... தடுமாறி 
     அளைத்து ழைத்திரு விழிகள்சி வந்திட் 
        டயர்த்தி தத்தொடு மொழிபவ ருந்திக் 
     கடுத்த கப்படு கலவியில் நொந்தெய்த் ...... திடலாமோ 
             தரைக்க டற்புகு நிருதர்த யங்கச் 
             சளப்ப டத்தட முடிகள்பி டுங்தித் 
 தகர்த்தொ லித்தெழு மலையொடு துண்டப் ...... பிறைசூடி 
            தனுக்கி ரித்திரிதரஎதி ருங்கொக் 
          கினைப்ப தைத்துட லலறிட வஞ்சத் 
         தருக்க டக்கிய சமர்பொரு துங்கத் ...... தனிவேலா 
              பருப்ப தப்ரிய குறுமுனி வந்தித் 
             திருக்கு முத்தம நிருதர்க லங்கப் 
       படைப்பெ லத்தொடு பழயக்ர வுஞ்சக் ...... கிரிசாடிப் 
            படர்ப்ப றைக்குரு குடலுதி ரங்குக் 
           குடக்கொ டிக்கிடு குமரகொ டுங்கற் 
          பதத்தி றுத்துகு பசியசி கண்டிப் ...... பெருமாளே. 
    பாடல் 1139 ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் - ஆந்தோளிகா 
 தாளம் - திஸ்ர த்ருபுடை (7) 
   தனதத்தன தானன தந்தன 
   தனதத்தன தானன தந்தன 
    தனதத்தன தானன தந்தன ...... தனதான 
            உ லகத்தினில் மாதரு மைந்தரும் 
         உ றுசுற்றமும் வாழ்வொடு றுங்கிளை 
           உ யர்துக்கமு மோடுற வென்றுற ...... வருகாலன் 
               உ திரத்துட னேசல மென்பொடு 
                உ றுதிப்பட வேவள ருங்குடில் 
         உ திரக்கனல் மீதுற என்றனை ...... யொழியாமுன் 
          கலகக்கலை நூல்பல கொண்டெதிர் 
               கதறிப்பத றாவுரை வென்றுயர் 
      கயவர்க்குள னாய்வினை நெஞ்சொடு ...... களிகூருங் 
               கவலைப்புல மோடுற என்துயர் 
            கழிவித்துன தாளினை யன்பொடு 
        கருதித்தொழும் வாழ்வது தந்திட ...... நினைவாயே 
 இலகப்பதி னாலுல கங்களும் 
               இருளைக்கடி வானெழு மம்புலி 
           யெழில்மிக்கிட வேணியில் வந்துற ...... எருதேறி 
            இருகைத்தல மான்மழு வும்புனை 
            யிறையப்பதி யாகிய இன்சொலன் 
         இசையப்பரிவோடினி தன்றரு ...... ளிளையோனே 
               மலைபட்டிரு கூறெழ வன்கடல் 
             நிலைகெட்டபி தாவென அஞ்சகர் 
  வலியற்றசு ரேசரு மங்கிட ...... வடிவேலால் 
                மலைவித்தக வானவ ரிந்திரர் 
            மலர்கைக்கொடு மாதவ ருந்தொழ 
    வடிவுற்றொரு தோகையில் வந்தருள் ...... பெருமாளே. 
    பாடல் 1140 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - வலஜி 
  தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை (35) 
         (எடுப்பு - /4/4/4 0) 
              நடை - தகதகிட 
      தனதனன தனதனன தானான தானதன 
      தனதனன தனதனன தானான தானதன 
    தனதனன தனதனன தானான தானதன ...... தந்ததான 
   உ றவின்முறை கதறியழ ஊராரு மாசையற 
  பறைதிமிலை முழவினிசை யாகாச மீதுமுற 
                உ லகிலுள பலரரிசி வாய்மீதி லேசொரியு ...... மந்தநாளில் 
 உ னதுமுக கருணைமல ரோராறு மாறிருகை 
      திரள்புயமு மெழில்பணிகொள் வார்காது நீள்விழியும் 
  உ பயபத மிசைகுலவு சீரேறு நூபுரமும் ...... அந்தமார்பும் 
    மறையறைய அமரர்தரு பூமாரியேசொரிய 
              மதுவொழுகு தரவில்மணி மீதேமு நூலொளிர 
            மயிலின்மிசை யழகுபொலி யாளாய்மு னாரடியர் ...... வந்துகூட 
     மறலிபடை யமபுரமு மீதோட வேபொருது 
             விருதுபல முறைமுறையி லேயூதி வாதுசெய்து 
       மதலையொரு குதலையடி நாயேனை யாளஇஙன் ...... வந்திடாயோ 
  பிறையெயிறு முரணசுரர் பேராது பாரில்விழ 
         அதிரஎழு புவியுலக மீரேழு மோலமிட 
          பிடிகளிறி னடல்நிரைகள் பாழாக வேதிசையில் ...... நின்றநாகம் 
    பிரியநெடு மலையிடிய மாவாரிதூளியெழ 
              பெரியதொரு வயிறுடைய மாகாளி கூளியொடு 
         பிணநிணமு முணவுசெய்து பேயோடு மாடல்செய ...... வென்றதீரா 
  குறமறவர் கொடியடிகள் கூசாது போய்வருட 
       கரடிபுலி திரிகடிய வாரான கானில்மிகு 
 குளிர்கணியி னிளமரம தேயாகி நீடியுயர் ...... குன்றுலாவி 
             கொடியதொரு முயலகனின் மீதாடு வாருடைய 
             வொருபுறம துறவளரு மாதாபெ றாவருள்செய் 
                குமரகுரு பரஅமரர் வானாடர் பேணஅருள் ...... தம்பிரானே. 
    பாடல் 114த ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ...... ;    தாளம் - 
 தனன தந்தன தானா தானன 
 தனன தந்தன தானா தானன 
  தனன தந்தன தானா தானன ...... தனதான 
               உ றவு சிங்கிகள் காமா காரிகள் 
               முறைம சங்கிக ளாசா வேசிகள் 
          உ தடு கன்றிகள் நாணா வீணிகள் ...... நகரேகை 
        உ டைய கொங்கையின் மீதே தூசிகள் 
                பிணமே னும்படி பேய்நீ ராகிய 
 உ ணவை யுண்டுடை சோர்கோ மாளிகள் ...... கடல்ஞாலத் 
             தறவு நெஞ்சுபொ லாமா பாவிகள் 
             வறுமை தந்திடு பாழ்மூ தேவிகள் 
             அணிநெ ருங்கிக ளாசா பாஷண ...... மடமாதர் 
            அழகு யர்ந்தபொய் மாயா ரூபிகள் 
            கலவி யின்பமெ னாவே சோருதல் 
            அலம லந்தடு மாறா தோர்கதி ...... யருள்வாயே 
            பறவை யென்கிற கூடார் மூவரண் 
            முறையி டுந்தமர் வானோர் தேரரி
             பகழி குன்றவி லாலே நீறெழ ...... வொ   முவர் 
            பதநி னைந்துவி டாதே தாள் பெற 
               அருள்பு ரிந்தபி ரானார் மாபதி 
   பரவு கந்தசு வாமீ கானக ...... மதின்மேவுங் 
               குறவர் தங்கள்பி ரானே மாமரம் 
          நெறுநெ றென்றடி வேரோ டேநிலை 
       குலைய வென்றிகொள் வேலே யேவிய ...... புயவீரா 
           குயில்க ளன்றில்கள் கூகூ கூவென 
        மலர்கள் பொங்கிய தேன்வீழ் காமிசை 
              குறவர் சுந்தரியோடே கூடிய ...... பெருமாளே. 
    பாடல் 1142  ( பொதுப்பாடல்கள் ) 
 
     ராகம் - ...... ;    தாளம் - 
             தானான தானன தனத்த தத்தன 
             தானான தானன தனத்த தத்தன 
           தானான தானன தனத்த தத்தன ...... தந்ததான 
            ஊனோடு வாதுயிர் தரித்து மட்டற 
             வூசாடு பாழ்குடி லெடுத்த திற்படி 
           ஓயாத மாமய லுழற்றி னிற்படு ...... வம்பனேனை 
           ஊதாரியாய்விடு சமத்தில் நிற்பது 
         மாராத காதலை மனத்தில் வைப்பது 
     மூரோடு போயெதிர் பிணக்கி னிற்பது ...... முந்திடாதே 
     தேனூறு வாய்மொழி பரத்தை யர்க்கொரு 
        நாய்போல வேயவர் வசத்தில் நிற்பது 
     சீர்கேட தாய்விடு சிறுப்பி ளைத்தன ...... மென்றுநீபச் 
          சீதாள மாமலர் தொடுத்த பத்தர்கள் 
             சீராடி நாண்மல ரெனப்ரியப்படு 
          சீர்பாத போதக மநுக்ர கிப்பது ...... மெந்தநாளோ 
          மானாக பாயலில் படுக்கை யிட்டவர் 
          மாமேரு வாரியில் திரித்து விட்டவர் 
      மாடோ டு போய்வரு மிடைக்குலத்தவ ...... ரன்றுவாவி 
             வாய்நாக மோலிட பிடித்த சக்கிர 
          வாளேவி யேகர வினைத்த றித்தவர் 
      மாமாய னாயுல களித்த வித்தகர் ...... தங்கைவாழ்வே 
      கானாரு மாமலை தினைப்பு னத்தினில் 
     கால்மேல்வி ழாவொரு குறச்சி றுக்கியை 
  காணாது போயியல் புணர்ச்சி யிட்டருள் ...... கந்தவேளே 
            காரேழு மாமலை யிடித்து ருக்கெட 
           காராழி யேழவை கலக்கி விட்டுயர் 
       காவான நாடர்கள் பகைச்ச வட்டிய ...... தம்பிரானே. 
    பாடல் 1143 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - த்விஜாவந்தி 
      தாளம் - ஆதி - 2 களை 
               தத்தன தனதன தானா தனதன 
               தத்தன தனதன தானா தனதன 
              தத்தன தனதன தானா தனதன ...... தனதான 
        எட்டுட னொருதொளை வாயா யதுபசு 
          மட்கல மிருவினை தோயா மிகுபிணி 
   யிட்டிடை செயவொரு போதா கிலுமுயிர் ...... நிலையாக 
              எப்படி யுயர்கதி நாமே றுவதென 
               எட்பகி ரினுமிது வோரார் தமதம 
   திச்சையி னிடருறு பேரா சைகொள்கட ...... லதிலேவீழ் 
       முட்டர்க ணெறியினில் வீழா தடலொடு 
            முப்பதி னறுபதின் மேலா மறுவரு 
       முற்றுத லறிவரு ஞானோ தயவொளி ...... வெளியாக 
           முக்குண மதுகெட நானா வெனவரு 
              முத்திரை யழிதர ஆரா வமுதன 
      முத்தமிழ் தெரிகனி வாயா லருளுவ ...... தொருநாளே 
        திட்டென எதிர்வரு மாகா ளியினொடு 
           திக்கிட தரிகிட தீதோ மெனவொரு 
            சித்திர வெகுவித வாதா டியபத ...... மலராளன் 
         செப்புக வெனமுன மோதா துணர்வது 
            சிற்சுக பரவெளி யீதே யெனஅவர் 
    தெக்ஷண செவிதனி லேபோ தனையருள் ...... குருநாதா 
            மட்டற அமர்பொரு சூரா திபனுடல் 
       பொட்டெழ முடுகிவை வேலா லெறிதரு 
         மற்புய மரகத மாதோ கையில்நட ...... மிடுவோனே 
                வச்சிர கரதல வானோ ரதிபதி 
               பொற்புறு கரிபரிதேரோ டழகுற 
       வைத்திடு மருமக னேவா ழமரர்கள் ...... பெருமாளே. 
    பாடல் 1144 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ...... ;    தாளம் - 
               தத்த தனதனன தான தானதன 
               தத்த தனதனன தான தானதன 
              தத்த தனதனன தான தானதன ...... தனதான 
       எத்தி யிருகுழையை மோதி மீனமதின் 
            முட்டி யிடறியம தூதர் போல முகி 
                லெட்டி வயவர்கர வாளை வேல்முனையை ...... யெதிர்சீறி 
         எத்தி சையினுமொரு காம ராஜன்மிக 
             வெற்றி யரசுதனை யாள வீசியட 
      லெற்றி யிளைஞருயிர் கோலு நீலவிழி ...... மடமாதர் 
        வித்தை தனிலுருகி யாசை யாகியவர் 
     கைக்குள் மருவுபொரு ளான ஆகும்வரை 
      மெத்தை தனிலுருகி மோக மாகிவிட ...... அதன்மேலே 
           வெட்க மிலைநடவு மேகு மேகுமினி 
         மற்ற வரையழையு மாத ரேயெனமுன் 
      விட்ட படிறிகள்தம் நேச ஆசைகெட ...... அருள்வாயே 
           ஒத்த வரிகமுகு வாளை தாவுபுனல் 
            அத்தி நகரமர சான வாள்நிருபன் 
      ஒக்கு நினைவுமுனி லாமல் வாகுபெல ...... நிலைகூற 
    உ ற்ற தருமனடல் வீமன் வேல்விசையன் 
         வெற்றி நகுலசக தேவர் தேர்தனிலும் 
           ஒத்து முடுகிவிடு பாகன் வாளமரி...... லசுரேசன் 
             பத்து முடிகள்துக ளாக வாகுஇரு 
      பத்து மொருகணையில் வீழ நேரவுணர் 
         பட்டு மடியஅமர் மோது காளமுகில் ...... மருகோனே 
         பச்சை மயிலில்வரு வீர வேல்முருக 
          துட்ட நிருதர்குல கால வானவர்கள் 
        பத்தி யுடனடியில் வீழ வாழ்வுதவு ...... பெருமாளே. 
    பாடல் 1145 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
 தத்த தந்தன தந்தன தந்தன 
 தத்த தந்தன தந்தன தந்தன 
 தத்த தந்தன தந்தன தந்தன ...... தந்ததான 
      ஒக்க வண்டெழு கொண்டைகு லைந்திட 
      வெற்பெ னுங்கன கொங்கைகு ழைந்திட 
       உ ற்ப லங்கள்சி வந்துக விந்திட ....... ; ந்த்ரகோபம் 
          ஒத்த தொண்டைது வண்டமு தந்தர 
           மெச்சு தும்பிக ருங்குயில் மென்புற 
       வொக்க மென்தொனி வந்துபி றந்திட ...... அன்புகூர 
          மிக்க சந்திர னொன்றுநி லங்களில் 
              விக்ர மஞ்செய்தி லங்குந கம்பட 
      மெத்த மென்பொரு ளன்பள வுந்துவ ...... ளின்பமாதர் 
               வித்த கந்தரு விந்துத புங்குழி 
             பட்ட ழிந்துந லங்குகு ரம்பையை 
     விட்ட கன்றுநி னம்புய மென்பத ...... மென்றுசேர்வேன் 
             மைக்க ருங்கட லன்றெரிமண்டிட 
           மெய்க்ர வுஞ்சசி லம்புடல் வெம்பிட 
          மற்று நன்பதி குன்றிய ழிந்திட ...... வும்பர்நாடன் 
             வச்சி ரங்கைய ணிந்துப தம்பெற 
           மெச்சு குஞ்சரிகொங்கைபு யம்பெற 
     மத்த வெஞ்சின வஞ்சகர் தங்களை ...... நுங்கும்வேலா 
             குக்கு டங்கொடி கொண்டப ரம்பர 
           சக்ர மண்டல மெண்டிசை யம்புகழ் 
     கொட்க கொன்றைய ணிந்தசி ரஞ்சர ...... ணங்கிகாரா 
            கொத்த விழ்ந்தக டம்பலர் தங்கிய 
              மிக்க வங்கண கங்கண திண்புய 
        கொற்ற வங்குற மங்கைவி ரும்பிய ...... தம்பிரானே. 
    பாடல் 1146 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;   தாளம் - 
 தான தத்தன தானன தானன 
 தான தத்தன தானன தானன 
  தான தத்தன தானன தானன ...... தனதான 
              ஓது வித்தவர் கூலிகொ டாதவர் 
 மாத வர்க்கதி பாதக மானவர் 
       ஊச லிற்கன லாயெரிகாளையர் ...... மறையோர்கள் 
             ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள் 
               ஆர்த னக்குமு தாசின தாரிகள் 
   ஓடி யுத்தம ரூதிய நாடின ...... ரிரவோருக் 
              கேது மித்தனை தானமி டாதவர் 
 பூத லத்தினி லோரம தானவர் 
             ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை ...... யிகழ்வோர்கள் 
  ஏக சித்ததி யானமி லாதவர் 
               மோக முற்றிடு போகித மூறினர் 
            ஈன ரித்தனை பேர்களு மேழ்நர ...... குழல்வாரே 
     தாத தத்தத தாதத தாதத 
 தூது துத்துது தூதுது தூதுது 
          சாச சச்சச சாசச சாசச ...... சசசாச 
     தாட டட்டட டாடட டாடட 
    டூடு டுட்டுடு டூடுடு டூடுடு 
         தாடி டிட்டிடி டீடிடி டீடிடி ...... டிடிடீடீ 
   தீதி தித்திதி தீதிதி தீதிதி 
              தோதி குத்திகு தோதிகு தோதிகு 
  சேகு செக்குகு சேகுகு சேகுகு ...... செகுசேகு 
                சேயெ னப்பல ராடிட மாகலை 
 ஆயு முத்தமர் கூறிடும் வாசக 
              சேகு சித்திர மாக நிணாடிய ...... பெருமாளே. 
    பாடல் 1147   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - .....;   தாளம் - 
 தானன தத்தன தத்த தத்தன 
 தானன தத்தன தத்த தத்தன 
 தானன தத்தன தத்த தத்தன ...... தந்ததான 
               ஓலைத ரித்தகு ழைக்கு மப்புற 
            மோடிநி றத்தும தர்த்து நெய்த்தற 
     லோதிநி ழற்குள ளிக்கு லத்துட ...... னொன்றிஞானம் 
 ஓதிமி குத்தத வத்த வர்க்கிட 
             ரோகைசெ லுத்திவ டுப்ப டுத்தகி 
       யூடுவி டத்தையி ருத்தி வைத்தக ...... ணம்பினாலே 
     மாலைம யக்கைவி ளைத்து நற்பொருள் 
            வாசமு லைக்குள கப்ப டுத்தியில் 
            வாவென முற்றிந டத்தி யுட்புகு ...... மந்தமாதர் 
          மாயம யக்கையொ ழித்து மெத்தென 
 வானவ ருக்கரு ளுற்ற அக்ஷர 
   வாய்மையெ னக்குமி னித்த ளித்தருள் ...... தந்திடாதோ 
          வேலைய டைக்க அரிக்கு லத்தொடு 
        வேணுமெ னச்சொலு மக்க ணத்தினில் 
     வேகமொ டப்பும லைக்கு லத்தைந ...... ளன்கைமேலே 
         வீசஅ வற்றினை யொப்ப மிட்டணை 
               மேவிய ரக்கர்ப திக்குள் முற்பட 
    வீடண னுக்கருள் வைத்த வற்றமை ...... யன்கள்மாளக் 
           காலயி லக்கணை தொட்ட ருட்கன 
              மாலமை திக்கரை யிற்ற ரித்துல 
          காளஅ ளித்தப்ர புத்வ ருட்கடல் ...... தந்தகாமன் 
           காயமொ ழித்தவர் பெற்ற கொற்றவ 
          நானில வித்ததி னைப்பு னத்தொரு 
          காதல்மி குத்துமி கப்ர மித்தருள் ...... தம்பிரானே. 
    பாடல் 1148  ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
               தனன தந்தனந் தனன தந்தன 
               தனன தந்தனந் தனன தந்தன 
              தனன தந்தனந் தனன தந்தன ...... தனதான 
            கடைசி வந்தகன் றுரைபு கன்றிரு 
         குழையை யுந்துரந் தரிப ரந்தொளிர் 
       கரிய கண்துறந் தவர்நி றந்தொளை ...... படவோடக் 
         கலைநெ கிழ்ந்திருங் குழல்ச ரிந்திட 
     முலைசு மந்தசைந் திடையொ சிந்துயிர் 
         கவர இங்கிதங் கெறுவி தம்பெற ...... விளையாடும் 
         படைம தன்பெருங் கிளைதி ருந்திய 
           அதர கிஞ்சுகந் தனையு ணர்ந்தணி 
 பணிநி தம்பஇன் பசுக முந்தர ...... முதிர்காம 
        பரவ சந்தணிந் துனையு ணர்ந்தொரு 
               மவுன பஞ்சரம் பயில்த ருஞ்சுக 
     பதம டைந்திருந் தருள்பொ ருந்தும ...... தொருநாளே 
             வடநெ டுஞ்சிலம் புகள்பு லம்பிட 
           மகித லம்ப்ரியங் கொடும கிழ்ந்திட 
 வருபு ரந்தரன் தனபு ரம்பெற ...... முதுகோப 
             மகர வெங்கருங் கடலொ டுங்கிட 
            நிசிச ரன்பெருங் குலமொ ருங்கிற 
         வனச னின்றழும் படிநெ ருங்கிய ...... வொருசூதம் 
               அடியொ டும்பிடுங் கியத டங்கர 
               வடிவ அஞ்சுரும் புறவி ரும்பிய 
         அடவி யுந்தொழும் பொடுதொ ழும்படி ...... யநுராக 
         அவச மும்புனைந் தறமு னைந்தெழு 
             பருவ தஞ்சிறந் தகன தந்தியின் 
       அமுத மென்குயங் களின்மு யங்கிய ...... பெருமாளே. 
    பாடல் 1149  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;   தாளம் - 
             தனதன தனதன தத்தாத் தானன 
             தனதன தனதன தத்தாத் தானன 
           தனதன தனதன தத்தாத் தானன ...... தந்ததான 
     கதறிய கலைகொடு சுட்டாத் தீர்பொருள் 
           பதறிய சமயிக ளெட்டாப் பேரொளி 
  கருவற இருவினை கெட்டாற் காண்வரு ...... மென்றஏகங் 
           கருகிய வினைமன துட்டாக் காதது 
   சுருதிக ளுருகியொர் வட்டாய்த் தோய்வது 
   கசடற முழுதையும் விட்டாற் சேர்வது ...... ணர்ந்திடாதே 
           விதமது கரமுரல் மொட்டாற் சாடிய 
          ரதிபதி யெனவரு துட்டாத் மாவுடன் 
         வினைபுரிபவரிடு முற்றாச் சாலிரு ...... புண்டாணக 
         ம்ருகமத முகுளித மொட்டாற் கார்முக 
          நுதலெழு தியசிறு பொட்டாற் சாயக 
     விரகுடை விழிவலை பட்டாற் றாதுந ...... லங்கலாமோ 
           பதமலர் மிசைகழல் கட்டாப் பாலக 
            சுருதிக ளடிதொழ எட்டாத் தேசிக 
   பருகென வனமுலை கிட்டாத் தாரகை ...... தந்துநாளும் 
         பரிவுற வெகுமுக நெட்டாற் றுடொரு 
      படுகையி னிடைபுழு வெட்டாப் பாசடை 
       படர்வன பரிமள முட்டாட் டாமரை ...... தங்கிவாழுஞ் 
           சததள அமளியை விட்டாற் றேறிய 
          சலநிதி குறுகிட வொட்டாச் சூரொடு 
  தமனிய குலகிரிபொட்டாய்த் தூளெழ ...... வென்றகோவே 
          தழைதரு குழைதரு பட்டாட் சாலவு 
             மழகிய கலவிதெ விட்டாக் காதலி 
      தலைமக நிலமடி தட்டாத் தேவர்கள் ...... தம்பிரானே. 
    பாடல் 1150 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - .....;   தாளம் - 
              தனதன தனதன தானன தானந் 
         தனத் தனந்தன தனன தான தனதன 
                தானான தான தனனந் தானந் 
             தனன தாத்தன தானத் தானத் தானத் ...... தாத்தன தனதான 
            கலவியி னலமுரை யாமட வார்சந் 
       தனத் தனங்களில் வசம தாகி யவரவர் 
  பாதாதி கேச மளவும் பாடுங் 
      கவிஞ னாய்த்திரிவேனைக் காமக் ரோதத் ...... தூர்த்தனை யபராதக் 
          கபடனை வெகுபரிதாபனை நாளும் 
            ப்ரமிக்கு நெஞ்சனை உ ருவ மாறி முறை முறை 
  ஆசார வீன சமயந் தோறுங் 
      களவு சாத்திர மோதிச் சாதித் தேனைச் ...... சாத்திர நெறிபோயைம் 
        புலன்வழி யொழுகிய மோகனை மூகந் 
 தனிற் பிறந் தொரு நொடியின் மீள அழிதரு 
         மாதேச வாழ்வை நிலையென் றேயம் 
         புவியின் மேற்பசு பாசத் தேபட் டேனைப் ...... பூக்கழ லிணைசேரப் 
        பொறியிலி தனையதி பாவியை நீடுங் 
    குணத் ரயங்களும் வரும நேக வினைகளு 
 மாயா விகார முழுதுஞ் சாடும் 
  பொருளின் மேற்சிறி தாசைப் பாடற் றேனைக் ...... காப்பது மொருநாளே 
   குலகிரிதருமபி ராம மயூரம் 
    ப்ரியப் படும்படி குவளை வாச மலர்கொடு 
              வாரா வுலாவி யுணரும் யோகங் 
   குலைய வீக்கிய வேளைக் கோபித் தேறப் ...... பார்த்தரு ளியபார்வைக் 
           குரிசிலு மொருசுரர் பூசுர னோமென் 
          றதற் கநந்தர மிரணி யாய நமவென 
              நாராய ணாய நமவென் றோதுங் 
    குதலை வாய்ச்சிறி யோனுக் காகத் தூணிற் ...... றோற்றிய வசபாணிப் 
                பலநக நுதியி னிசாசர னாகங் 
  கிழித் தளைந்தணி துளசி யோடு சிறுகுடல் 
        தோண்மாலை யாக அணியுங் கோவும் 
       பரவி வாழ்த்திட வேகற்றாரச் சோதிப் ...... பாற்பணி யிறைவாகைப் 
 படமுக வடலயி ராபத மேறும் 
      ப்ரபுப் பயங்கெட வடப ராரை வரைகெட 
 வேலேவி வாவி மகரஞ் சீறும் 
        பரவை கூப்பிட மோதிச் சூர்கெட் டோ டத் ...... தாக்கிய பெருமாளே. 
    பாடல் 1151  ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;   தாளம் - 
             தனத்த தானன தானான தந்தன 
             தனத்த தானன தானான தந்தன 
           தனத்த தானன தானான தந்தன ...... தந்ததான 
           கறுத்து நீவிடு கூர்வேலி னுங்கடை 
       சிவத்து நீடிய வாய்மீன வொண்குழை 
             கடக்க வோடிய ஆலால நஞ்சன ...... வஞ்சநீடு 
           கயற்க ணார்கனி வாயூற லுண்டணி 
              கழுத்து மாகமு மேகீப வங்கொடு 
           கலக்க மார்பக பாடீர குங்கும ...... கொங்கைமீதே 
             உ றுத்து மாரமு மோகாவ டங்களு 
             மருத்து நேரிய கூர்வாள்ந கம்பட 
        உ டுத்த ஆடையும் வேறாயு ழன்றுக ...... ழன்றுவீழ 
       உ ருக்கு நாபியின் மூழ்காம ருங்கிடை 
           செருக்கு மோகன வாராத ரங்களை 
        யொழிக்க வோர்வகை காணேனு றுந்துணை ...... யொன்றுகாணேன் 
                நிறத்த நூபுர பாதார விந்தமு 
          முடுத்த பீலியும் வாரார்த னங்களும் 
       நிறத்தி லேபடு வேலான கண்களும் ...... வண்டுபாட 
           நெறித்த வோதியு மாயான்ம னம்பர 
             தவிக்க மால்தர லாமோ கலந்திட 
             நினைக்க லாமென வேல்வேடர் கொம்புட ...... னண்புகூர்வாய் 
           மறித்த வாரிதி கோகோவெ னும்படி 
   வெறுத்த ராவணன் வாணாளை யம்பினில் 
       வதைத்த மாமனு மேவார்பு ரங்கனல் ...... மண்டமேரு 
         வளைத்த தாதையு மாறான குன்றமு 
       மனைத்து லோகமும் வேதாக மங்களும் 
       மதித்த சேவக வானாளு மும்பர்கள் ...... தம்பிரானே. 
    பாடல் 1152   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - .....;   தாளம் - 
             தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன 
        தனத்ததன தனத்ததன ...... தனதான 
            குறிப்பரிய குழற்குமதி நுதற்புருவ விலுக்குமிரு 
              குழைக்கும்வடு விழிக்குமெழு ...... குமிழாலுங் 
       கொடிப்பவள இதழ்க்குமிகு சுடர்த்தரள நகைக்குமமு 
      தினுக்குமிக வுறத்தழுவு ...... குறியாலும் 
       அறப்பெரிய தனக்குமன நடைக்குமினி னிடைக்குமல 
       ரடிக்குமிள நகைக்குமுள ...... மயராதே 
    அகத்தியனொ டுரைத்தபொரு ளளித்தருளி அரிப்பிரமர் 
       அளப்பரிய பதக்கமல ...... மருள்வாயே 
       கறுத்தடரு மரக்கரணி கருக்குலைய நெருக்கியொரு 
             கணத்திலவர் நிணத்தகுடல் ...... கதிர்வேலாற் 
       கறுத்தருளி யலக்கணுறு சுரர்க்கவர்கள் பதிக்குரிமை 
   யளித்திடரை யறுத்தருளு ...... மயில்வீரா 
    செறுத்துவரு கரித்திரள்கள் திடுக்கிடவல் மருப்பையரி
            சினத்தினொடு பறித்தமர்செய் ...... பெருகானிற் 
    செலக்கருதி யறக்கொடிய சிலைக்குறவர் கொடித்தனது 
  சிமிழ்த்தனமு னுறத்தழுவு ...... பெருமாளே. 
    பாடல் 1153   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;    தாளம் - 
        தனதனன தனதான தானான தானான 
        தனதனன தனதான தானான தானான 
       தனதனன தனதான தானான தானான ...... தனதான 
 குனகியொரு மயில்போல வாராம னோலீலை 
  விளையவினை நினையாம லேயேகி மீளாத 
   கொடியமன தநியாய மாபாத காபோதி ...... யெனஆசைக் 
 கொளுவ அதில் மயலாகி வீறொடு போய்நீள 
         மலரமளி தனிலேறி யாமாறு போமாறு 
    குலவிநல மொழிகூறி வாரேறு பூணார ...... முநல்முழ்கி 
          மனமுருக மதராஜ கோலாடு மாபூசல் 
   விளையவிழி சுழலாடி மேலோதி போய்மீள 
        மதிவதன மொளிவீச நீராள மாய்மேவி ...... யநுராக 
      வகைவகையி லதிமோக வாராழி யூடான 
      பொருளளவ தளவாக யாரோடு மாலான 
 வனிதையர்கள் வசமாய நாயேனு மீடேற ...... அருள்வாயே 
    எனதுமொழி வழுவாமல் நீயேகு கான்மீதி 
      லெனவிரகு குலையாத மாதாவு நேரோத 
                இசையுமொழி தவறாம லேயேகி மாமாது ...... மிளையோனும் 
      இனிமையொடு வருமாய மாணச மானாவி 
    குலையவரு கரதூஷ ணாவீரர் போர்மாள 
       இறுகிநெடு மரமேழு தூளாக வேவாலி ...... யுயிர்சீறி 
          அநுமனொடு கவிகூட வாராக நீராழி 
              யடைசெய்தணை தனிலேறி மாபாவி யூர்மேவி 
                அவுணர்கிளை கெடநூறி யாலால மாகோப ...... நிருதேசன் 
       அருணமணி திகழ்பார வீராக ராமோலி 
             யொருபதுமொர் கணைவீழ வேமோது போராளி 
 அடல்மருக குமரேச மேலாய வானோர்கள் ...... பெருமாளே. 
    பாடல் 1154  ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;                  தாளம் - 
     தனதன தனனத் தனனத், தனதன தனனத் தனனத் 
    தனதன தனனத் தனனத் ...... தனதான 
               கொலைவிழி சுழலச் சுழலச் சிலைநுதல் குவியக் குவியக் 
             கொடியிடை துவளத் துவளத் ...... தனபாரக் 
         குறியணி சிதறச் சிதறக் கரவளை கதறக் கதறக் 
             குயில்மொழி பதறப் பதறப் ...... ப்ரியமோகக் 
                கலவியி லொருமித் தொருமித் திலவிதழ் பருகிப் பருகிக் 
              கரமொடு தழுவித் தழுவிச் ...... சிலநாளிற் 
     கையிலுள பொருள்கெட் டருள்கெட் டனைவரும் விடுசிச் சியெனக் 
            கடியொரு செயலுற் றுலகிற் ...... றிரிவேனோ 
    சலநிதி சுவறச் சவறத் திசைநிலை பெயரப் பெயரத் 
   தடவரை பிதிரப் பிதிரத் ...... திடமேருத் 
   தமனிய நெடுவெற் பதிரப் பணிமணி சிரம்விட் டகலச் 
              சமனுடல் கிழியக் கிழியப் ...... பொருசூரன் 
               பெலமது குறையக் குறையக் கருவிகள் பறையப் பறையப் 
              பிறநரிதொடரத் தொடரத் ...... திரள்கூகை 
       பெடையொடு குழறக் குழறச் சுரபதி பரவப் பரவப் 
          ப்ரபையயில் தொடுநற் குமரப் ...... பெருமாளே. 
    பாடல் 1155 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;    தாளம் - 
  தானனா தனன தத்த, தானனா தனன தத்த 
          தானனா தனன தத்த ...... தனதான 
           கோழையா ணவமி குத்த வீரமே புகல்வர் அற்பர் 
     கோதுசே ரிழிகு லத்தர் ...... குலமேன்மை 
  கூறியே நடுவி ருப்பர் சோறிடார் தரும புத்ர 
     கோவுநா னென இசைப்பர் ...... மிடியூடே 
          ஆழுவார் நிதியு டைக்கு பேரனா மெனஇ சைப்பர் 
         ஆசுசேர் கலியு கத்தி ...... னெறியீதே 
 ஆயுநூ லறிவு கெட்ட நானும் வேறல அதற்கு 
     ளாகையா லவைய டக்க ...... வுரையீதே 
             ஏழைவா னவர ழைக்க ஆனைவா சவனு ருத்ர 
    ஈசன்மேல் வெயிலெ றிக்க ...... மதிவேணி 
             ஈசனார் தமதி டுக்க மாறியே கயிலை வெற்பில் 
       ஏறியே யினிதி ருக்க ...... வருவோனே 
          வேழமீ துறையும் வஜ்ர தேவர்கோ சிறைவி டுத்து 
       வேதனா ரையும் விடுத்து ...... முடிசூடி 
 வீரசூ ரவன் முடிக்கு ளேறியே கழுகு கொத்த 
    வீறுசேர் சிலை யெடுத்த ...... பெருமாளே. 
    பாடல் 1156  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;    தாளம் - 
            தந்தனந் தனந்த தந்த, தந்தனந் தனந்த தந்த 
         தந்தனந் தனந்த தந்த ...... தனதான 
     சந்தனங் கலந்த குங்கு மம்புனைந் தணிந்த கொங்கை 
      சந்திரந் ததும்ப சைந்து ...... தெருவூடே 
     சங்கினங் குலங்க செங்கை யெங்கிலும் பணிந்து டம்பு 
 சந்தனந் துவண்ட சைந்து ...... வருமாபோல் 
    கொந்தளங் குலுங்க வண்சி லம்புபொங்க இன்சு கங்கள் 
   கொஞ்சிபொன் தொடர்ந்தி டும்பொன் ...... மடவார்தோள் 
 கொங்கைபைங் கரம் புணர்ந்த ழிந்துணங் கலுந்த விர்ந்து 
             கொஞ்சுநின் சரண்க ளண்ட ...... அருள்தாராய் 
  தந்தனந் தசெஞ்சி லம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச 
   தண்டையம்ப தம்பு லம்ப ...... வருவோனே 
 சந்தனம் புனைந்த கொங்கை கண்களுஞ் சிவந்து பொங்க 
            சண்பகம் புனங்கு றம்பொன் ...... அணைமார்பா 
         வந்தநஞ் சுகந் தமைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி 
              மந்தரம் பொதிந்த கொங்கை ...... யுமையீனும் 
  மைந்தனென் றுகந்து விஞ்சு மன்பணிந் தசிந்தை யன்பர் 
    மங்கலின் றுளம்பு குந்த ...... பெருமாளே. 
    பாடல் 1157   ( பொதுப்பாடல்கள் ) 
 
 
  ராகம் - குந்தலவராளி 
 தாளம் - அங்கதாளம் (7 1/2) 
   தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமி-2 
               தனன தனதனன தான தானன 
      தனதனன தான தானன 
    தனன தனதனன தான தானன தந்ததான 
            சுருதி வெகுமுகபு ராண கோடிகள் 
           சரியை கிரியைமக யோக மோகிகள் 
            துரித பரசமய பேத வாதிகள் ...... என்றுமோடித் 
                தொடர வுணரஅரிதாய தூரிய 
        பொருளை யணுகியநு போக மானவை 
                தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய ...... நின்ப்ரகாசங் 
            கருதி யுருகியவி ரோதி யாயருள் 
  பெருகு பரமசுக மாம கோததி 
         கருணை யடியரொடு கூடியாடிம ...... கிழ்ந்துநீபக் 
  கனக மணிவயிர நூபு ராரிய 
                கிரண சரண அபி ராம கோமள 
            கமல யுகளமற வாது பாடநி ...... னைந்திடாதோ 
         மருது நெறுநெறென மோதி வேரோடு 
         கருது மலகைமுலை கோதி வீதியில் 
  மதுகை யொடுதறுக ணானை வீரிட ...... வென்றுதாளால் 
 வலிய சகடிலறி மாய மாய்மடி 
             படிய நடைபழகி யாயர் பாடியில் 
       வளரு முகில்மருக வேல்வி நோதசி ...... கண்டிவீரா 
           விருதர் நிருதர்குல சேனை சாடிய 
 விஜய கடதடக போல வாரண 
              விபுதை புளகதன பார பூஷண ...... அங்கிராத 
               விமலை நகிலருண வாகு பூதர 
     விபுத கடககிரிமேரு பூதர 
             விகட சமரசத கோடி வானவர் ...... தம்பிரானே. 
    பாடல் 1158  ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;    தாளம் - 
              தத்தத் தனதன தத்தன தனதன 
              தத்தத் தனதன தத்தன தனதன 
           தத்தத் தனதன தத்தன தனதன ...... தனதானத் 
             சுற்றத் தவர்களு மக்களு மிதமுள 
        சொற்குற் றரிவையும் விட்டது சலமிது 
       சுத்தச் சலமினி சற்றிது கிடைபடு ...... மெனமாழ்கித் 
    துக்கத் தொடுகொடி தொட்டியெ யழுதழல் 
         சுட்டக் குடமொடு சுட்டெரிகனலொடு 
               தொக்குத் தொகுதொகு தொக்கென இடுபறை ...... பிண்முடச் 
    சற்றொப் புளதொரு சச்சையு மெழுமுடல் 
           சட்டப் படவுயிர் சற்றுடன் விசியது 
       தப்பிற் றவறுறு மத்திப நடையென ...... உ ரையாடிச் 
    சத்திப் பொடுகரம் வைத்திடர் தலைமிசை 
       தப்பிற் றிதுபிழை யெப்படி யெனுமொழி 
      தத்தச் சடம்விடு மப்பொழு திருசர ...... ணருள்வாயே 
        சிற்றிற் கிரிமகள் கொத்தலர் புரிகுழல் 
   சித்ரப் ப்ரபைபுனை பொற்பின ளிளமயில் 
         செற்கட் சிவகதி யுத்தமி களிதர ...... முதுபேய்கள் 
           திக்குச் செககெண தித்தரிதிகுதிகு 
  செச்செச் செணக்ருத டொட்டரிசெணக்ருத 
         டெட்டெட் டுடுடுடு தத்தரிதரியென ...... நடமாடுங் 
        கொற்றப் புலியதள் சுற்றிய அரனருள் 
           குட்டிக் கரிமுக னிக்கவ லமுதுசெய் 
     கொச்சைக் கணபதி முக்கண னிளையவ ...... களமீதே 
           குப்புற் றுடனெழு சச்சரிமுழவியல் 
        கொட்டச் சுரர்பதி மெய்த்திட நிசிசரர் 
                கொத்துக் கிளையுடல் பட்டுக அமர்செய்த ...... பெருமாளே. 
    பாடல் 1159  ( பொதுப்பாடல்கள் ) 
 
     ராகம் - ..... ;    தாளம் - 
           தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன 
        தந்த தத்தன தானாதன ...... தனதான 
             செங்கை னற்புகை யோமாதிகள் குண்ட மிட்டெழு சோமாசிகள் 
         தெண்டெ னத்துணை தாள்மேல்விழ ...... அமராடிச் 
   சிந்த னைப்படி மோகாதியி லிந்த்ரியத்தினி லோடாசில 
 திண்டி றற்றவ வாள்வீரரொ ...... டிகலாநின் 
                றங்கம் வெட்டிய கூர்வாள்விழி மங்கை யர்க்கற மாலாய்மன 
   மந்தி பட்டிருள் மூடாவகை ...... யவிரோத 
           அந்த நிற்குண ஞானோதய சுந்த ரச்சுட ராராயந 
              லன்பு வைத்தரு ளாமோர்கழ ...... லருளாதோ 
   கொங்க டுத்தகு ராமாலிகை தண்க டுக்கைது ழாய்தாதகி 
           கும்பி டத்தகு பாகீரதி ...... மதிமீது 
   கொண்ட சித்ரக லாசூடிகை யிண்டெ ருக்கணி காகோதர 
   குண்ட லத்தர்பி னாகாயுத ...... ருடனேயச் 
    சங்கு சக்ரக தாபாணியு மெங்க ளுக்கொரு வாழ்வேசுரர் 
 தங்க ளைச்சிறை மீளாயென ...... அசுரேசன் 
             தஞ்ச மற்றிட வேதாகர னஞ்ச வெற்புக வீராகர 
   சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே. 
    பாடல் 1160 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;    தாளம் - 
 தானதனத் தானதனத் தானதனத் தானதனத் 
         தானதனத் தானதனத் ...... தனதான 
         சேலையடர்த் தாலமிகுத் தேயுழையைச் சீறுவிதித் 
     தூறுசிவப் பேறுவிழிக் ...... கணையாலே 
 தேனிரதத் தேமுழுகிப் பாகுநிகர்த் தாரமுதத் 
     தேறலெனக் கூறுமொழிச் ...... செயலாலே 
         ஆலிலையைப் போலும்வயிற் றாலளகத் தாலதரத் 
              தாலுமிதத் தாலும்வளைப் ...... பிடுவோர்மேல் 
         ஆசையினைத் தூரவிடுத் தேபுகழ்வுற் றேப்ரியநற் 
  றாளிணையைச் சேரஎனக் ...... கருள்வாயே 
      காலனைமெய்ப் பாதமெடுத் தேயுதையிட் டேமதனைக் 
        காயஎரித் தேவிதியிற் ...... றலையூடே 
          காசியினிற் காணஇரப் போர்மதியைச் சூடியெருத் 
     தேறிவகித் தூருதிரைக் ...... கடல்மீதில் 
            ஆலமிடற் றானையுரித் தோலையுடுத் தீமமதுற் 
  றாடியிடத் தேயுமைபெற் ...... றருள்வாழ்வே 
    ஆழியினைச் சூரனைவெற் பேழினையுற் றேயயில்விட் 
       டாதுலருக் காறுமுகப் ...... பெருமாளே. 
    பாடல் 1161  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;    தாளம் - 
    தத்தத்தத் தத்தத் தத்தன 
    தத்தத்தத் தத்தத் தத்தன 
      தத்தத்தத் தத்தத் தத்தன ...... தனதான 
         சொக்குப்பொட் டெத்திக் கைப்பொரு 
             ளைக்கெத்திற் பற்றிச் சிக்கொடு 
            சுற்றுப்பட் டெற்றித் தெட்டிகள் ...... முலைமீதே 
                சுற்றுப்பொற் பட்டுக் கச்சினர் 
             முற்றிக்குத் தத்தைக் கொப்பென 
 சொற்பித்துக் கற்பிற் செப்பிய ...... துயராலே 
  சிக்குப்பட் டுட்கிப் பற்கொடு 
              வெற்றிக்கைக் குத்துப் பட்டிதழ் 
        தித்திப்பிற் கொத்துப் பித்துயர் ...... கொடுநாயேன் 
              திக்குக்கெட் டொட்டுச் சிட்டென 
     பட்டத்துற புத்திக் கட்டற 
  செப்பத்துற் பற்றற் கற்புத ...... மருள்வாயே 
    தக்குத்தக் குக்குக் குக்குட 
 தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென 
          தக்குத்திக் கெட்டுப் பொட்டெழ ...... விருதோதை 
                தத்தித்தித் தித்தித் தித்தென 
                தெற்றுத்துட் டக்கட் டர்ப்படை 
             சத்திக்கொற் றத்திற் குத்திய ...... முருகோனே 
   துக்கித்திட் டத்தித் துக்கக 
 நெக்குப்பட டெக்கித் துட்டறு 
          சுத்தப்பொற் பத்தர்க் குப்பொரு ...... ளருள்வேலா 
 துற்றப்பொற் பச்சைக் கட்கல 
   பச்சித்ரப் பக்ஷிக் கொற்றவ 
          சொக்கர்க்கர்த் தத்தைச் சுட்டிய ...... பெருமாளே. 
    பாடல் 1162   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;    தாளம் - 
             தானான தானன தானன தானன 
             தானான தானன தானன தானன 
             தானான தானன தானன தானன ...... தனதான 
             ஞானாவி பூஷணி காரணி காரணி 
           காமாவி மோகினி வாகினி யாமளை 
      மாமாயி பார்வதி தேவிகு ணாதரி...... உ மையாள்தன் 
               நாதாக்ரு பாகர தேசிகர் தேசிக 
           வேதாக மேயருள் தேவர்கள் தேவந 
             லீசாச டாபர மேசர்சர் வேசுரி...... முருகோனே 
             தேனார்மொ ழீவளி நாயகி நாயக 
        வானாடு ளோர்தொழு மாமயில் வாகன 
        சேணாளு மானின்ம னோகர மாகிய ...... மணவாளா 
              சீர்பாத சேகர னாகவு நாயினன் 
            மோகாவி காரவி டாய்கெட ஓடவெ 
       சீராக வேகலை யாலுனை ஓதவும் ...... அருள்வாயே 
       பேணார்கள் நீறதி டாஅம ணோர்களை 
 சூராடி யேகழு மீதினி லேறிட 
          கூனான மீனனி டேறிட கூடலில் ...... வருவோனே 
        பேராண்மை யாளனி சாசரர் கோனிரு 
              கூறாக வாளிதொ டூரகு நாயகன் 
         பூவாய னாரணன் மாயனி ராகவன் ...... மருகோனே 
         வாணாள்ப டாவரு சூரர்கள் மாளவெ 
             சேணாடு ளோரவர் வீடதி டேறிட 
  கோனாக வேவரு நாதகு ரூபர ...... குமரேசா 
  வாசாம கோசர மாகிய வாசக 
             தேசாதி யோரவர் பாதம தேதொழ 
             பாசாவி நாசக னாகவு மேவிய ...... பெருமாளே. 
    பாடல் 1163  ( பொதுப்பாடல்கள் ) 
 
 
  ராகம் - அமிர்தவர்ஷணி 
  தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை (35) 
         (எடுப்பு - /4/4/4 0) 
              நடை - தகதகிட 
     தனதனன தனதனன தந்தனந் தந்தனந் 
     தனதனன தனதனன தந்தனந் தந்தனந் 
    தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தனதான 
            தரணிமிசை அனையினிட வுந்தியின் வந்துகுந் 
             துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின் 
            தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கவொன் ...... பதுவாயுந் 
              தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும் 
             பெருகியொரு பதினவனி வந்துகண் டன்புடன் 
              தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின் ...... வசமாகித் 
          திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின் 
             கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன் 
           சிதறுவுயிர் பிணமெனவெ மைந்தரும் பந்துவும் ...... அயர்வாகிச் 
       செடமிதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன் 
           சுடலைமிசை யெரியினிட வெந்துபின் சிந்திடுஞ் 
       செனனமிது தவிரஇரு தண்டையுங் கொண்டபைங் ...... கழல்தாராய் 
             செருவெதிரு மசுரர்கிளை மங்கஎங் கெங்கணுங் 
   கழுகருட னயனமிது கண்டுகொண் டம்பரந் 
           திரியமிகு அலகையுடன் வெங்கணந் தங்களின் ...... மகிழ்வாகிச் 
    சினவசுர ருடலமது தின்றுதின் றின்புடன் 
             டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண் 
              டிமிலைபறை முழவுதுடி பம்பையுஞ் சங்கமுந் ...... தவமோதச் 
  சரவரிசை விடுகுமர அண்டர்தம் பண்டுறுஞ் 
 சிறைவைட வருமுருக என்றுவந் திந்திரன் 
               சதுமுகனு மடிபரவ மண்டுவெஞ் சம்பொருங் ...... கதிர்வேலா 
             சகமுழுது மடையஅமு துண்டிடுங் கொண்டலுந் 
     தெரிவரிய முடியினர வங்ளுந் திங்களுஞ் 
               சலமிதழி யணியுமொரு சங்கரன் தந்திடும் ...... பெருமாளே. 
    பாடல் 1164  ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;    தாளம் - 
       தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் 
      தனந்தத்தத் தனந்தத்தத் ...... தனதான 
  தனஞ்சற்றுக் குலுங்கப்பொற் கலன்கட்பட் டிலங்கப்பொற் 
         சதங்கைக்கற் சிலம்பொத்திக் ...... கையில்வீணை 
 ததும்பக்கைக் குழந்தைச்சொற் பரிந்தற்புக் கிதங்கப்பொற் 
   சரஞ்சுற்றிட் டிணங்கக்கட் ...... சரவேலால் 
 தினம்பித்திட் டிணங்கிச்சொற் கரங்கட்டிப் புணர்ந்திட்டுத் 
              தினந்தெட்டிக் கடன்பற்றிக் ...... கொளுமாதர் 
    சிலம்பத்திற் றிரிந்துற்றிட் டவம்புக்கக் குணஞ்செற்றுச் 
 சிவம்பெற்றுத் தவம்பற்றக் ...... கழல்தாராய் 
    தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட் 
              டடண்டட்டட் டிமிண்டுட்டுட் ...... டியல்தாளந் 
               தகுந்தொத்தித் திமிந்தித்தித் தவண்டைக்குட் கயர்ந்துக்கத் 
  தகண்டத்தர்க் குடன்பட்டுற் ...... றசுராரைச் 
           சினந்தத்திக் கொளுந்தக்கைச் சரந்தொட்டுச் சதம்பொர்ப்பைச் 
    சிரந்தத்தப் பிளந்துட்கக் ...... கிரிதூளாச் 
  செகந்திக்குச் சுபம்பெற்றுத் துலங்கப்பொர்க் களம்புக்குச் 
          செயம்பற்றிக் கொளுஞ்சொக்கப் ...... பெருமாளே. 
    பாடல் 1165  ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;    தாளம் - 
  தனனதன தான தான தனனதன தான தான 
          தனனதன தான தான ...... தனதான 
      நகரமிரு பாத மாகி மகரவயி றாகி மார்பு 
            நடுசிகர மாகி வாய்வ ...... கரமாகி 
   நதிமுடிய சார மாகி உ தயதிரு மேனி யாகி 
          நவசிவய மாமை யாகி ...... எழுதான 
 அகரவுக ரேத ரோம சகர வுணர் வான சூரன் 
         அறிவிலறி வான பூர ...... ணமுமாகும் 
            அதனைஅடி யேனும் ஓதி இதயகம லாலை யாகி 
     மருவுமவ தான போதம் ...... அருள்வாயே 
 குகனுமரு ளாண்மை கூர மகரமெனு சாப தாரி
      குறையகல வேலை மீது ...... தனியூருங் 
    குழவிவடி வாக வேநம் பரதர்தவ மாக மீறு 
       குலவுதிரை சேரு மாது ...... தனைநாடி 
             அகிலவுல கோர்கள் காண அதிசயம தாக மேவி 
      அரியமண மேசெய் தேக ...... வலைதேடி 
 அறுமுகவன் மீக ரான பிறவியம ராசை வீசும் 
    அசபைசெகர் சோதி நாத ...... பெருமாளே. 
    பாடல் 1166 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - நாதநாமக்ரியா 
 தாளம் - அங்கதாளம் (7 1/2) 
                (எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி) 
       தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2 
  தனதன தத்த தந்த தானத்த 
  தனதன தத்த தந்த தானத்த 
   தனதன தத்த தந்த தானத்த ...... தனதான 
         நரையொடு பற்க ழன்று தோல்வற்றி 
        நடையற மெத்த நொந்து காலெய்த்து 
         நயனமி ருட்டி நின்று கோலுற்று ...... நடைதோயா 
   நழுவும்வி டக்கை யொன்று போல்வைத்து 
             நமதென மெத்த வந்த வாழ்வுற்று 
          நடலைப டுத்து மிந்த மாயத்தை ...... நகையாதே 
           விரையொடு பற்றி வண்டு பாடுற்ற 
               ம்ருகமத மப்பி வந்த வோதிக்கு 
  மிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும் ...... வினையோடு 
              மிகுகவி னிட்டு நின்ற மாதர்க்கு 
        மிடைபடு சித்த மொன்று வேனுற்றுன் 
         விழுமிய பொற்ப தங்கள் பாடற்கு ...... வினவாதோ 
        உ ரையொடு சொற்றெ ரிந்த மூவர்க்கு 
          மொளிபெற நற்ப தங்கள் போதித்து 
      மொருபுடை பச்சை நங்கை யோடுற்று ...... முலகூடே 
         உ றுபலி பிச்சை கொண்டு போயுற்று 
             முவரிவி டத்தை யுண்டு சாதித்து 
            முலவிய முப்பு ரங்கள் வேவித்து ...... முறநாகம் 
         அரையொடு கட்டி யந்த மாய்வைத்து 
       மவிர்சடை வைத்த கங்கை யோடொக்க 
         அழகுதி ருத்தி யிந்து மேல்வைத்து ...... மரவோடே 
      அறுகொடு நொச்சி தும்பை மேல்வைத்த 
              அரியய னித்தம் வந்து பூசிக்கும் 
           அரநிம லர்க்கு நன்றி போதித்த ...... பெருமாளே. 
    பாடல் 1167 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - காபி 
  தாளம் - சதுஸ்ர ரூபகம் (6) 
           தனந்த தனனந் தனந்த தனந்த தனனந் தனந்த 
       தனந்த தனனந் தனந்த ...... தனதான 
        நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி 
     நிறைந்த வயிறுஞ் சரிந்து ...... தடியூணி 
   நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங் கிருண்டு 
            நினைந்த மதியுங் கலங்கி ...... மனையாள்கண் 
      டுமிழ்ந்து பலருங் கடிந்து சிறந்த வியலும் பெயர்ந்து 
            உ றைந்த உ யிருங் கழன்று ...... விடுநாள்முன் 
    உ கந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து 
             ஒடுங்கி நினையும் பணிந்து ...... மகிழ்வேனோ 
  திமிந்தி யெனவெங் கணங்கள் குணங்கர் பலவுங் குழும்பி 
      திரண்ட சதியும் புரிந்து ...... முதுசூரன் 
           சிரங்கை முழுதுங் குடைந்து நிணங்கொள் குடலுந் தொளைந்து 
  சினங்க ழுகொடும் பெருங்கு ...... ருதமுழ்க 
               அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ்கொண்டு மண்ட 
             அடர்ந்த அயில்முன் துரந்து ...... பொருவேளே 
   அலங்க லெனவெண் கடம்பு புனைந்து புணருங் குறிஞ்சி 
            அணங்கை மணமுன் புணர்ந்த ...... பெருமாளே. 
    பாடல் 1168 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - மத்யமாவதி 
 தாளம் - அங்கதாளம் (7 1/2) 
  தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதமி-2 
                தனன தாத்தன தானா தானன 
                தனன தாத்தன தானா தானன 
 தனன தாத்தன தானா தானன ...... தனதான 
            நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய 
               சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய 
          நிமல னார்க்கொரு பாலா ஜேஜெய ...... விறலான 
            நெடிய வேற்படை யானே ஜேஜெய 
              எனஇ ராப்பகல் தானே நான்மிக 
        நினது தாட்டொழு மாறே தானினி ...... யுடனேதான் 
        தரையி னாழ்த்திரை யேழே போலெழு 
 பிறவி மாக்கட லுடே நானுறு 
         சவலை தீர்த்துன தாளே சூடியு ...... னடியார்வாழ் 
          சபையி னேற்றியின் ஞானா போதமு 
             மருளி யாட்கொளு மாறே தானது 
            தமிய னேற்குமு னேநீ மேவுவ ...... தொருநாளே 
          தருவி னாட்டர சாள்வான் வேணுவி 
              னுருவ மாய்ப்பல நாளே தானுறு 
         தவசி னாற்சிவ னீபோய் வானவர் ...... சிறைதீரச் 
               சகல லோக்கிய மேதா னாளுறு 
               மசுர பார்த்திப னோடே சேயவர் 
          தமரை வேற்கொடு நீறா யேபட ...... விழமோதென் 
 றருள ஏற்றம ரோடே போயவ 
           ருறையு மாக்கிரியோடே தானையு 
              மழிய வீழ்த்தெதிர் சூரோ டேயம ...... ரடலாகி 
           அமரில் வீட்டியும் வானோர் தானுறு 
           சிறையை மீட்டர னார்பால் மேவிய 
              அதிப ராக்ரம வீரா வானவர் ...... பெருமாளே. 
    பாடல் 1169   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - கேதாரம் 
  தாளம் - ஆதி - திஸ்ர நடை (2 களை) (24) 
              தான தான தான தந்த தான தான தான தந்த 
         தான தான தான தந்த ...... தனதான 
  ஆர வார மாயி ருந்து ஏம தூத ரோடி வந்து 
             ஆழி வேலை போன்மு ழங்கி ...... யடர்வார்கள் 
             ஆக மீதி லேசி வந்து ஊசி தானு மேநு ழைந்து 
      ஆலைமீதி லேக ரும்பு ...... எனவேதான் 
        வீர மான சூரிகொண்டு நேரை நேரை யேபி ளந்து 
    வீசு வார்கள் கூகு வென்று ...... அழுபோது 
        வீடு வாச லான பெண்டிர் ஆசை யான மாதர் வந்து 
    மேலை வீழ்வ ணது கண்டு ...... வருவாயே 
              நாரிவீரிசூரியம்பை வேத வேத மேபு கழ்ந்த 
        நாதர் பாலி லேயி ருந்த ...... மகமாயி 
        நாடி யோடி வாற அன்பர் காண வேண தேபு கழ்ந்து 
       நாளு நாளு மேபு கன்ற ...... வரைமாது 
         நீரின் மீதி லேயி ருந்த நீலி சூலி வாழ்வு மைந்த 
      நீப மாலை யேபு னைந்த ...... குமரேசா 
           நீல னாக வோடி வந்த சூரை வேறு வேறு கண்ட 
  நீத னான தோர்கு ழந்தை ...... பெருமாளே. 
    பாடல் 1170 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - நவரஸ கண்டை 
             தாளம் - ஆதி - திஸ்ர நடை (12) 
              தான தந்த தான தான தான தந்த தான தான 
         தான தந்த தான தான ...... தனதான 
    நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்க ளோடு 
           நீளு மங்க மாகி மாய ...... வுயருறி 
 நேச மொன்று தாதை தாய ராசை கொண்ட போதில் மேவி 
  நீதி யொன்று பால னாகி ...... யழிவாய்வந் 
         தூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாத 
     ரோடு சிந்தை வேடை கூர ...... உ றவாகி 
         ஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீச 
      ஊனு டம்பு மாயு மாய ...... மொழியாதோ 
                சூர னண்ட லோக மேன்மை சூறை கொண்டு போய் விடாது 
           தோகை யின்கண் மேவி வேலை ...... விடும்வீரா 
      தோளி லென்பு மாலை வேணி மீது கங்கை சூடி யாடு 
 தோகை பங்க ரோடு சூது ...... மொழிவோனே 
  பாரை யுண்ட மாயன் வேயை யூதி பண்டு பாவ லோர்கள் 
   பாடல் கண்டு ஏகு மாலின் ...... மருகோனே 
    பாத கங்கள் வேறி நூறி நீதி யின்சொல் வேத வாய்மை 
   பாடு மன்பர் வாழ்வ தான ...... பெருமாளே. 
    பாடல் 1171 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ..... ;    தாளம் - 
   தனதத்தத் தத்தத் தனதன 
   தனதத்தத் தத்தத் தனதன 
     தனதத்தத் தத்தத் தனதன ...... தனதான 
             பகல்மட்கச் செக்கர்ப் ப்ரபைவிடு 
                நவரத்நப் பத்தித் தொடைநக 
   நுதிபட்டிட் டற்றுச் சிதறிட ....... ; த்ழுறல் 
 பருகித்தித் திக்கப் படுமொழி 
             பதறக்கைப் பத்மத் தொளிவளை 
     வதறிச்சத் திக்கப் புளகித ...... தனபாரம் 
  அகலத்திற் றைக்கப் பரிமள 
 அமளிக்குட் கிக்கிச் சிறுகென 
   இறுகக்கைப் பற்றித் தழுவிய ...... அநுராக 
 அவசத்திற் சித்தத் தறிவையு 
          மிகவைத்துப் பொற்றித் தெரிவையர் 
   வசம்விட்டர்ச் சிக்கைக் கொருபொழு ...... துணர்வேனோ 
               இகல்வெற்றிச் சத்திக் கிரணமு 
                முரணிர்த்தப் பச்சைப் புரவியு 
  மிரவிக்கைக் குக்டத் துவசமு ...... மறமாதும் 
           இடைவைத்துச் சித்ரத் தமிழ்கொடு 
  கவிமெத்தச் செப்பிப் பழுதற 
            எழுதிக்கற் பித்துத் திரிபவர் ...... பெருவாழ்வே 
               புகலிற்றர்க் கிட்டுப் ப்ரமையுறு 
  கலகச்செற் றச்சட் சமயிகள் 
   புகலற்குப் பற்றற் கரியதொ ...... ருபதேசப் 
              பொருளைப்புட் பித்துக் குருபர 
              னெனமுக்கட் செக்கர்ச் சடைமதி 
         புனையப்பர்க் கொப்பித் தருளிய ...... பெருமாளே. 
    பாடல் 1172   ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;    தாளம் - 
   தத்தத்தன தத்தத் தனதன 
   தத்தத்தன தத்தத் தனதன 
     தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான 
             பத்தித்தர ளக்கொத் தொளிர்வரி
                பட்டப்புள கச்செப் பிளமுலை 
              பட்டிட்டெதிர் கட்டுப் பரதவ ...... ருயர்தாளப் 
     பத்மத்திய ரற்புக் கடுகடு 
 கட்சத்தியர் மெத்தத் திரவிய 
             பட்சத்திய ரிக்குச் சிலையுரு ...... விலிசேருஞ் 
 சித்தத்தரு ணர்க்குக் கனியத 
 ரப்புத்தமு தத்தைத் தருமவர் 
           சித்ரக்கிர ணப்பொட் டிடுபிறை ...... நுதலார்தந் 
  தெட்டிற்படு கட்டக் கனவிய 
   பட்சத்தரு ளற்றுற் றுனதடி 
            சிக்கிட்டிடை புக்கிட் டலைவது ...... தவிராதோ 
      மத்தப்பிர மத்தக் கயமுக 
             னைக்குத்திமி தித்துக் கழுதுகள் 
              மட்டிட்டஇ ரத்தக் குருதியில் ...... விளையாட 
             மற்றைப் பதினெட்டுக் கணவகை 
     சத்திக்கந டிக்கப் பலபல 
       வர்க்கத்தலை தத்தப் பொருபடை ...... யுடையோனே 
  முத்திப்பர மத்தைக் கருதிய 
              சித்தத்தினில் முற்றத் தவமுனி 
         முற்பட்டுழை பெற்றுத் தருகுற ...... மகள்மேல்மால் 
 முற்றித்திரிவெற்றிக் குருபர 
 முற்பட்டமு ரட்டுப் புலவனை 
        முட்டைப்பெயர் செப்பிக் கவிபெறு ...... பெறுமாளே. 
    பாடல் 1173   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;    தாளம் - 
         தனதனன தந்ததன தானத் தாத்தன 
         தனதனன தந்ததன தானத் தாத்தன 
         தனதனன தந்ததன தானத் தாத்தன ...... தனதான 
          பரதவித புண்டரிக பாதத் தாட்டிகள் 
      அமுதுபொழி யுங்குமுத கீதப் பாட்டிகள் 
            பலர்பொருள்க வர்ந்திடைக லாமிட் டோ ட்டிகள் ...... கொடிதாய 
  பழுதொழிய அன்புமுடை யாரைப் போற்சிறி 
    தழுதழுது கண்பிசையு மாசைக் கூற்றிகள் 
    பகழியென வந்துபடு பார்வைக் கூற்றினர் ...... ஒருகாம 
 விரகம்விளை கின்றகழு நீரைச் சேர்த்தகில் 
      ம்ருகமதமி குந்தபனி நீரைத் தேக்கியெ 
    விபுதர்பதி யங்கதல மேவிச் சாற்றிய ...... தமிழ்நூலின் 
   விததிகமழ் தென்றல்வர வீசிக் கோட்டிகள் 
  முலைகளில்வி ழுந்துபரிதாபத் தாற்றினில் 
                விடியளவு நைந்துருகு வேனைக் காப்பது ...... மொருநாளே 
       உ ரகபணை பந்தியபி ஷேகத் தாற்றிய 
          சகலவுல குந்தரும மோகப் பார்ப்பதி 
   யுடனுருவு பங்குடைய நாகக் காப்பனும் ...... உ றிதாவும் 
      ஒருகளவு கண்டுதனி கோபத் தாய்க்குல 
  மகளிர்சிறு தும்புகொடு மோதிச் சேர்ந்திடும் 
     உ ரலொடுத வழ்ந்தநவ நீதக் கூற்றனு ...... மதிகோபக் 
        கரவிகட வெங்கடக போலப் போர்க்கிரி
    கடவியபு ரந்தரனும் வேளைப் போற்றுகை 
       கருமமென வந்துதொழ வேதப் பாற்பதி ...... பிறியாத 
      கடவுளைமு னிந்தமர ரூரைக் காத்துயர் 
        கரவடக்ர வுஞ்சகிரிசாயத் தோற்றெழு 
 கடலெனவு டைந்தவுண ரோடத் தாக்கிய ...... பெருமாளே. 
    பாடல் 1174   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;    தாளம் - 
            தனதன தானத் தனந்த தனதன தானத் தனந்த 
        தனதன தானத் தனந்த ...... தனதான 
         பழுதற வோதிக் கடந்து பகைவினை தீரத் துறந்து 
       பலபல யோகத் திருந்து ...... மதராசன் 
       பரிமள பாணத் தயர்ந்து பனைமட லுர்தற் கிசைந்து 
     பரிதவி யாமெத்த நொந்து ...... மயல்கூர 
          அழுதழு தாசைப் படுங்க ணபிநய மாதர்க் கிரங்கி 
           யவர்விழி பாணத்து நெஞ்ச ...... மறைபோய்நின் 
        றழிவது யான்முற் பயந்த விதிவச மோமற்றையுன்ற 
   னருள்வச மோஇப்ர மந்தெ ...... ரிகிலேனே 
     எழுதரு வேதத்து மன்றி முழுதினு மாய்நிற்கு மெந்தை 
 யெனவொரு ஞானக் குருந்த ...... ருளமேவும் 
      இருவுரு வாகித் துலங்கி யொருகன தூணிற் பிறந்து 
           இரணியன் மார்பைப் பிளந்த ...... தனியாண்மை 
      பொழுதிசை யாவிக்ர மன்தன் மருகபு ராரிக்கு மைந்த 
     புளகப டீரக் குரும்பை ...... யுடன்மேவும் 
          புயல்கரிவாழச் சிலம்பின் வனசர மானுக் குகந்து 
   புனமிசை யோடிப் புகுந்த ...... பெருமாளே. 
    பாடல் 1175  ( பொதுப்பாடல்கள் ) 
 
 
  ராகம் - ஹரிகாம்போதி 
 தாளம் - திஸ்ர த்ருபுடை (7) 
      தானத்தத் தனான தானன தானத்தத் தனான தானன 
    தானத்தத் தனான தானன ...... தந்ததான 
 பாணிக்குட் படாது சாதகர் காணச்சற் றொணாது வாதிகள் 
        பாஷிக்கத் தகாது பாதக ...... பஞ்சபூத 
     பாசத்திற்படாது வேறொரு பாயத்திற் புகாது பாவனை 
              பாவிக்கப் பெறாது வாதனை ...... நெஞ்சமான 
                ஏணிக்கெட் லொணாது மீதுயர் சேணுக்குச் சமான நூல்வழி 
            யேறிபபற் றொணாது நாடினர் ...... தங்களாலும் 
               ஏதுச்செப் பொணாத தோர்பொருள் சேரத்துக் கமாம கோததி 
         யேறச்செச் சைநாறு தாளைவ ...... ணங்குவேனோ 
               ஆணிப்பொற் ப்ரதாப மேருவை வேலிட்டுக் கடாவி வாசவன் 
 ஆபத்தைக் கெடாநி சாசரர் ...... தம்ப்ரகாசம் 
        ஆழிச்சத் ரசாயை நீழலி லாதித்தப் ப்ரகாச நேர்தர 
 ஆழிச்சக் ரவாள மாள்தரும் ...... எம்பிரானே 
      மாணிக்க ப்ரவாள நீலம தாணிப்பொற் கிராதைநூபுர 
        வாசப்பத் மபாத சேகர ...... சம்புவேதா 
      வாசிக்கப் படாத வாசகம் ஈசர்க்குச் சுவாமி யாய்முதல் 
   வாசிப்பித் ததேசி காசுரர் ...... தம்பிரானே. 
    பாடல் 1176   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;    தாளம் - 
           தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த 
       தானன தனத்தத் தாத்த ...... தனதான 
 பால்மொழி படித்துக் காட்டி ஆடையை நெகிழ்த்துக் காட்டி 
      பாயலி லிருத்திக் காட்டி ...... யநுராகம் 
     பாகிதழ் கொடுத்துக்காட்டி நூல்களை விரித்துக்காட்டி 
    பார்வைகள் புரட்டிக் காட்டி ...... யுறவாகி 
        மேல்நக மழுத்திக் காட்டி தோதக விதத்தைக் காட்டி 
              மேல்விழு நலத்தைக் காட்டு ...... மடவார்பால் 
     மேவிடு மயக்கைத் தீர்த்து சீர்பத நினைப்பைக் கூட்டு 
          மேன்மையை யெனக்குக் காட்டி ...... யருள்வாயே 
  காலனை யுதைத்துக் காட்டி யாவியை வதைத்துக் காட்டி 
           காரணம் விளைத்துக்காட்டி ...... யொருங்காலங் 
        கானினில் நடித்துக் காட்டி யாலமு மிடற்றிற் காட்டி 
    காமனை யெரித்துக் காட்டி ...... தருபாலா 
      மாலுற நிறத்தைக் காட்டி வேடுவர் புனத்திற் காட்டில் 
     வாலிப மிளைத்துக்காட்டி ...... அயர்வாகி 
   மான்மகள் தனத்தைச் சூட்டி ஏனென அழைத்துக் கேட்டு 
  வாழ்வுறு சமத்தைக்காட்டு ...... பெருமாளே. 
    பாடல் 1177 ( பொதுப்பாடல்கள் ) 
 
 
  ராகம் - மலய மாருதம் 
 தாளம் - அங்கதாளம் (7 1/2) 
                (எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி) 
 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 
                தனன தானன தந்தன தந்தன 
                தனன தானன தந்தன தந்தன 
 தனன தானன தந்தன தந்தன ...... தனதான 
                புகரில் சேவல தந்துர சங்க்ரம 
            நிருதர் கோபக்ர வுஞ்சநெ டுங்கிரி
      பொருத சேவக குன்றவர் பெண்கொடி ...... மணவாளா 
 புனித பூசுர ருஞ்சுர ரும்பணி 
               புயச பூதர என்றிரு கண்புனல் 
           பொழிய மீமிசை யன்புது ளும்பிய ...... மனனாகி 
               அகில பூதவு டம்புமு டம்பினில் 
               மருவு மாருயி ருங்கர ணங்களு 
           மவிழ யானுமி ழந்தஇ டந்தனி ...... லுணர்வாலே 
              அகில வாதிக ளுஞ்சம யங்களும் 
         அடைய ஆமென அன்றென நின்றதை 
           யறிவி லேனறி யும்படி யின்றருள் ...... புரிவாயே 
             மகர கேதன முந்திகழ் செந்தமிழ் 
 மலய மாருத மும்பல வெம்பரி
              மளசி லீமுக மும்பல மஞ்சரி...... வெறியாடும் 
               மதுக ராரம்வி குஞ்சணி யுங்கர 
             மதுர கார்முக மும்பொர வந்தெழு 
           மதன ராஜனை வெந்துவி ழும்படி ...... முனிபால 
           முகிழ்வி லோசன ரஞ்சிறு திங்களு 
             முதுப கீரதி யும்புனை யுஞ்சடை 
            முடியர் வேதமு நின்றும ணங்கமழ் ...... அபிராமி 
    முகர நூபுர பங்கய சங்கரி
              கிரிகு மாரித்ரியம்பகி தந்தருள் 
             முருக னேசுர குஞ்சரிரஞ்சித ...... பெருமாளே. 
    பாடல் 1178  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ..... ;    தாளம் - 
  தனனத்த தனத்த தனத்தன 
  தனனத்த தனத்த தனத்தன 
   தனனத்த தனத்த தனத்தன ...... தனதான 
            புருவத்தை நெறித்து விழிக்கயல் 
                பயிலிட்டு வெருட்டி மதித்திரு 
            புதுவட்டை மினுக்கி யளிக்குல ...... மிசைபாடும் 
           புயல்சற்று விரித்து நிரைத்தொளி 
           வளையிட்ட கரத்தை யசைத்தகில் 
         புனைமெத்தை படுத்த பளிக்கறை ...... தனிலேறிச் 
            சரசத்தை விளைத்து முலைக்கிரி
                புளகிக்க அணைத்து நகக்குறி 
         தனைவைத்து முகத்தை முகத்துட ...... னுறமேவித் 
  தணிவித்தி ரதத்த தரத்துமி 
             ழமுதத்தை யளித்து வுருக்கிகள் 
      தருபித்தை யகற்றி யுனைத்தொழ ...... முயல்வேனோ 
  பரதத்தை யடக்கி நடிப்பவர் 
             த்ரிபுரத்தை யெரிக்க நகைப்பவர் 
         பரவைக்குள் விடத்தை மிடற்றிடு ...... பவர்தேர்கப் 
  பரையுற்ற கரத்தர் மிகப்பகி 
 ரதியுற்ற சிரத்தர் நிறத்துயர் 
           பரவத்தர் பொருப்பி லிருப்பவ ...... ருமையாளர் 
             சுரர் சுத்தர் மனத்துறை வித்தகர் 
              பணிபத்தர் பவத்தை யறுப்பவர் 
       சுடலைப்பொடி யைப்பரிசிப்பவர் ...... விடையேறுந் 
           துணையொத்த பதத்த ரெதிர்த்திடு 
               மதனைக்கடி முத்தர் கருத்தமர் 
   தொலைவற்ற க்ருபைக்கு ளுதித்தருள் ...... பெருமாளே. 
    பாடல் 1179   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ஷண்முகப்ரியா 
  தாளம் - சருஸ்ர ரூபகம் (6) 
            தனத்தந் தான தனதன தனத்தந் தான தனதன 
        தனத்தந் தான தனதன ...... தனதான 
     புவிக்குன் பாத மதைநினை பவர்க்குங் கால தரிசனை 
     புலக்கண் கூடு மதுதனை ...... அறியாதே 
           புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை 
 புழுக்கண் பாவ மதுகொளல் ...... பிழையாதே 
       கவிக்கொண் டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி 
   களைக்கும் பாவ சுழல்படு ...... மடிநாயேன் 
    கலக்குண் டாகு புவிதனி லெனக்குண் டாகு பணிவிடை 
  கணக்குண் டாதல் திருவுள ...... மறியாதோ 
     சிவத்தின் சாமி மயில்மிசை நடிக்குஞ் சாமி யெமதுளெ 
 சிறக்குஞ் சாமி சொருபமி ...... தொளிகாணச் 
    செழிக்குஞ் சாமி பிறவியை யொழிக்குஞ் சாமி பவமதை 
   தெறிக்குஞ் சாமி முனிவர்க ...... ளிடமேவுந் 
     தவத்தின் சாமி புரிபிழை பொறுக்குஞ் சாமி குடிநிலை 
    தரிக்குஞ் சாமி யசுரர்கள் ...... பொடியாகச் 
     சதைக்குஞ் சாமி யெமைபணி விதிக்குஞ் சாமி சரவண 
    தகப்பன் சாமி யெனவரு ...... பெருமாளே. 
    பாடல் 118 0 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ..... ;    தாளம் - 
 தானன தந்தன தந்த தந்தன 
 தானன தந்தன தந்த தந்தன 
  தானன தந்தன தந்த தந்தன ...... தனதான 
              பூசல்த ருங்கய லும்பொ ருந்திய 
                வாசந றுங்குழ லுந்து லங்கிய 
 பூரண கும்பமெ னுந்த னங்களு ...... மடமாதர் 
             போகம டங்கலை யும்பு ணர்ந்தநு 
         ராகம்வி ளைந்துவ ரும்பெ ரும்பிழை 
       போயக லும்படி யொன்றை யன்புற ...... நினையாதே 
             ஆசையெ னும்படி யுந்த னங்களு 
           மோகைந டந்திட வுந்தி னங்களும் 
           ஆருட னும்பகை கொண்டு நின்றுற ...... நடமாடி 
 ஆடிய பம்பர முன்சு ழன்றெதி 
            ரோடிவி ழும்படி கண்ட தொன்றுற 
           ஆவிய கன்றுவி டும்ப யங்கெட ...... அருள்வாயே 
               வாசவ னன்புவி ளங்க நின்றசு 
               ரேசர்கு லங்கள டங்க லுங்கெட 
        வானவர் நின்றுதி யங்கு கின்றதொர் ...... குறைதீர 
               வாரிய திர்ந்துப யந்து நின்றிட 
               மேருஅ டங்கஇ டிந்து சென்றிட 
            வாகைபு னைந்தொரு வென்றி கொண்டரு ...... ளிளையோனே 
            வீசிய தென்றலொ டந்தி யும்பகை 
                யாகமு யங்கஅ நங்க னும்பொர 
      வேடையெ னும்படி சிந்தை நொந்திட ...... அடைவாக 
             வேடர்செ ழும்புன வஞ்சி யஞ்சன 
             வேலினு ளங்கள்க லங்கி யின்புற 
    வேளையெ னும்படி சென்றி றைஞ்சிய ...... பெருமாளே. 
    பாடல் 1181   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - 
          தாளம் - 
             தான தந்தன தானா தானன 
             தான தந்தன தானா தானன 
                           தான தந்தன தானா தானன ...... தனதான 
         பூசல் வந்திரு தோடார் காதொடு 
       மோதி டுங்கயல் மானார் மானமில் 
                     போக மங்கையர் கோடா கோடிய ...... மனதானார் 
                பூர குங்கும தூளா மோதப 
               டீர சண்பக மாலா லாளித 
                            பூத ரங்களின் மீதே மூழ்கிய ...... அநுராக 
            ஆசை யென்கிற பாரா வாரமு 
            மேறு கின்றில னானா பேதஅ 
                          நேக தந்த்ரக்ரியாவே தாகம ...... கலையாய 
             ஆழி யுங்கரை காணே னூபுர 
              பாத பங்கய மோதே னேசில 
                        னாயி னுங்குரு நாதா நீயருள் ...... புரிவாயே 
             வாச வன்பதி பாழா காமல்நி 
             சாச ரன்குலம் வாழா தேயடி 
                          மாள வன்கிரிகூறாய் நீறெழ ...... நெடுநேமி 
          மாத வன்தரு வேதா வோடலை 
    மோது தெண்கடல் கோகோ கோவென 
                    மாமு றிந்திட நீள்வே லேவிய ....... ; ளையோனே 
         வீசு தென்றலும் வேள்பூ வாளியு 
            மீறு கின்றமை யாமோ காமவி 
                     டாய்கெ டும்படி காவா யாவியை ...... யெனஏனல் 
           மீது சென்றுற வாடா வேடுவர் 
  பேதை கொங்கையின் மீதே மால்கொடு 
                 வேடை கொண்டபி ரானே வானவர் ...... பெருமாளே. 
    பாடல் 1182   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
                       தந்தந் தனன தாத்தன தந்தந் தனன தாத்தன 
    தந்தந் தனன தாத்தன ...... தனதான 
             பொங்குங் கொடிய கூற்றனு நஞ்சும் பொதுவில் நோக்கிய 
                             பெங்கும் புதிய நேத்திர ...... வலைவீசிப் 
              பொன்கண் டிளகு கூத்திகள் பூன்கண் கலவி வேட்டுயிர் 
                          பூண்கொண் டுருகி யாட்படு ...... மயல்தீரக் 
                 கொங்கின் புசக கோத்திரிபங்கங் களையு மாய்க்குடி 
                           கொங்கின் குவளை பூக்கிற ...... கிரிசோண 
                    குன்றங் கதிரை பூப்பர முன்துன் றமரர் போற்றிய 
                        குன்றம் பிறவும் வாழ்த்துவ ...... தொருநாளே 
                       எங்கும் பகர மாய்க்கெடி விஞ்சும் பகழி வீக்கிய 
                             வெஞ்சண் டதனு வேட்டுவர் ...... சரணார 
               விந்தம் பணிய வாய்த்தரு ளந்தண் புவன நோற்பவை 
 மென்குங் குமகு யாத்திரி...... பிரியாதே 
                     எங்குங் கலுமி யார்த்தெழ எங்குஞ் சுருதி கூப்பிட 
                            எங்குங் குருவி யோச்சிய ...... திருமானை 
              என்றென் றவச மாய்த்தொழு தென்றும் புதிய கூட்டமொ 
                        டென்றும் பொழுது போக்கிய ...... பெருமாளே. 
    பாடல் 1183   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
       தனன தனதன தனத்தத் தாத்தன 
       தனன தனதன தனத்தத் தாத்தன 
                     தனன தனதன தனத்தத் தாத்தன ...... தனதான 
   பொருத கயல்விழி புரட்டிக் காட்டுவர் 
      புளக தனவட மசைத்துக் காட்டுவர் 
               புயலி னளகமும் விரித்துக் காட்டுவர் ...... பொதுமாதர் 
   புனித விதழ்மது நகைத்துக் காட்டுவர் 
                        பொலிவி னிடைதுகில் குலைத்துக் காட்டுவர் 
                   புதிய பரிபுர நடித்துக் காட்டுவ ...... ரிளைஞோரை 
                           உ ருக அணைதனி லணைத்துக் காட்டுவர் 
                          உ டைமை யடையவெ பறித்துத் தாழ்க்கவெ 
              உ ததி யமுதென நிகழ்த்திக் கேட்பவர் ...... பொடிமாயம் 
      உ தர மெரிதர மருத்திட் டாட்டிகள் 
                            உ யிரினிலைகளை விரித்துச் சேர்ப்பவர் 
           உ றவு கலவியை விடுத்திட் டாட்கொள ...... நினையாதோ 
 மருது பொடிபட வுதைத்திட் டாய்ச்செரி
 மகளி ருறிகளை யுடைத்துப் போட்டவர் 
                 மறுக வொருகயி றடித்திட் டார்ப்புற ...... அழுதூறும் 
 வளரு நெடுமுகி லெதிர்த்துக் காட்டென 
 அசட னிரணிய னுரத்தைப் பேர்த்தவன் 
          மழையி னிரைமலை யெடுத்துக் காத்தவன் ...... மருகோனே 
    விருது பலபல பிடித்துச் சூர்க்கிளை 
     விகட தடமுடி பறித்துத் தோட்களை 
                   விழவு முறியவு மடித்துத் தாக்கிய ...... அயில்வீரா 
   வெகுதி சலதியை யெரித்துத் தூட்பட 
                             வினைசெ யசுரர்கள் பதிக்குட் பாய்ச்சிய 
                 விபுத மலரடி விரித்துப் போற்றினர் ...... பெருமாளே. 
    பாடல் 1184 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
              தந்தானந் தாத்தந் தனதன 
              தந்தானந் தாத்தந் தனதன 
                            தந்தானந் தாத்தந் தனதன ...... தனதான 
             மங்காதிங் காக்குஞ் சிறுவரு 
     முண்டேயிங் காற்றுந் துணைவியும் 
                     வம்பாருந் தேக்குண் டிடவறி ...... தெணும்வாதை 
        வந்தேபொன் தேட்டங் கொடுமன 
          நொந்தேயிங் காட்டம் பெரிதெழ 
                       வண்போதன் தீட்டுந் தொடரது ...... படியேமன் 
        சங்காரம் போர்ச்சங் கையிலுடல் 
     வெங்கானம் போய்த்தங் குயிர்கொள 
                        சந்தேகந் தீர்க்குந் தனுவுட ...... னணுகாமுன் 
            சந்தாரஞ் சாத்தும் புயவியல் 
            கந்தாஎன் றேத்தும் படியென 
                      சந்தாபந் தீர்த்தென் றடியிணை ...... தருவாயே 
          கங்காளன் பார்த்தன் கையிலடி 
      யுண்டேதிண் டாட்டங் கொளுநெடு 
                         கன்சாபஞ் சார்த்துங் கரதல ...... னெருதேறி 
            கந்தாவஞ் சேர்த்தண் புதுமல 
      ரம்பான்வெந் தார்ப்பொன் றிடவிழி 
                        கண்டான்வெங் காட்டங் கனலுற ...... நடமாடி 
        அங்காலங் கோத்தெண் டிசைபுவி 
          மங்காதுண் டாற்கொன் றதிபதி 
                 அந்தாபந் தீர்த்தம் பொருளினை ...... யருள்வோனே 
            அன்பாலந் தாட்கும் பிடுமவர் 
           தம்பாவந் தீர்த்தம் புவியிடை 
                        அஞ்சாநெஞ் சாக்கந் தரவல ...... பெருமாளே. 
    பாடல் 1185  ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் -    ...;  தாளம் - 
             தனன தனதன தனத்தா தன 
             தனன தனதன தனத்தா தன 
                           தனன தனதன தனத்தா தன ...... தனதான 
            மதன தனுநிக ரிடைக்கே மன 
          முருக வருபிடி நடைக்கே யிரு 
                          வனச பரிபுர மலர்க்கே மது ...... கரம்வாழும் 
          வகுள ம்ருகமத மழைக்கே மணி 
            மகர மணிவன குழைக்கே மட 
                      மகளிர் முகுளித முலைக்கே கட ...... லமுதூறும் 
           அதர மதுரித மொழிக்கே குழை 
            யளவு மளவிய விழிக்கே தள 
                  வனைய தொருசிறு நகைக்கே பனி ...... மதிபோலும் 
            அழகு திகழ்தரு நுதற்கே யந 
            வரத மவயவ மனைத்தூ டினு 
                  மவச முறுமயல் தவிர்த்தாள் வது ...... மொருநாளே 
       உ ததி புதைபட அடைத்தா தவன் 
           நிகரிலிரதமும் விடுக்கா நகர் 
                    ஒருநொ டியில்வெயி லெழச்சா நகி ...... துயர்தீர 
     உ பய வொருபது வரைத்தோள் களு 
             நிசிச ரர்கள்பதி தசக்ண வமு 
                     முருள ஒருகணை தெரித்தா னும ...... வுனஞான 
           திதமி லவுணர்த மிருப்பா கிய 
              புரமு மெரியெழ முதற்பூ தர 
                     திலத குலகிரிவளைத்தா னும ...... கிழவானோர் 
               திருவ நகர்குடி புகச்சீ கர 
           மகர சலமுறை யிடச்சூ ரொடு 
                         சிகர கிரிபொடி படச்சா டிய ...... பெருமாளே. 
    பாடல் 1186  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - தோடி 
                 தாளம் - திஸ்ர ஏகம் (3) 
                       தனதானன தனதானன தனதானன தனதானன 
   தனதானன தனதானன ...... தனதான 
             மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும் 
 வடிவாயுடல் நடமாடுக ...... முடியாதேன் 
              மனமாயையொ டிருகாழ்வினை யற்முதுடை மலம்வேரற 
                            மகிழ்ஞானக அநுபூதியி ...... னருள்மேவிப் 
               பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெ 
    பரிபூரண கிருபாகர ...... முடன்ஞான 
                     பரிமேலழ குடனேறிவி ணவர்பூமழை யடிமேல்விட 
                         பலகோடிவெண் மதிபோலவெ ...... வருவாயே 
               சதகோடிவெண் மடவார்கட லெனசாமரை யசையாமுழு 
                            சசிசூரியர் சுடராமென ...... வொருகோடிச் 
              சடைமாமுடி முநிவோர்சர ணெனவேதியர் மறையோதுக 
                           சதிநாடக மருள்வேணிய ...... னருள்பாலா 
                 விதியானவ னிளையாளென துளமேவிய வளிநாயகி 
                          வெகுமாலுற தனமேலணை ...... முருகோனே 
                வெளியாசையொ டடைபூவணர் மருகாமணி முதிராடக 
                          வெயில்வீசிய அழகாதமிழ் ...... பெருமாளே. 
    பாடல் 1187  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
           தானதனத் தத்த தத்த தத்தன 
           தானதனத் தத்த தத்த தத்தன 
                         தானதனத் தத்த தத்த தத்தன ...... தனதான 
       மாடமதிட் சுற்று மொக்க வைத்திட 
           வீடுகனக் கத்த னத்தி லச்சுறு 
                    மாலிபமொத் துப்ர புத்த னத்தினி ...... லடைவாக 
        மாதர்பெருக் கத்த ருக்க மற்றவர் 
            சூழவிருக் கத்த ரிக்க இப்படி 
          வாழ்க்கையில்மத் தப்ர மத்த சித்திகொள் ...... கடைநாளிற் 
      பாடையினிற் கட்டி விட்டு நட்டவர் 
         கூடஅரற் றிப்பு டைத்து றுப்புள 
                    பாவையெடுத் துத்த ழற்கி ரைப்பட ...... விடலாய 
    பாடுதொலைத் துக்க ழிக்க அக்ருபை 
       தேடுமெனைத் தற்பு ரக்க வுற்றிரு 
            பாதுகையைப் பற்றி நிற்க வைத்தெனை ...... யருளாதோ 
     ஆடகவெற் பைப்பெ ருத்த மத்தென 
        நாகவடத் தைப்பி ணித்து ரத்தம 
                    ரார்கள்பிடித் துத்தி ரித்தி டப்புகை ...... யனலாக 
      ஆழிகொதித் துக்க தற்றி விட்டிமை 
     யோர்களொளிக் கக்க ளித்த உ க்கிர 
                      ஆலவிடத் தைத்த ரித்த அற்புதர் ...... குமரேசா 
     வேடர்சிறுக் கிக்கி லச்சை யற்றெழு 
     பாரும்வெறுத் துச்சி ரிப்ப நட்பொடு 
             வேளையெனப் புக்கு நிற்கும் வித்தக ....... ; ளையோனே 
         வேகமிகுத் துக்க திக்கும் விக்ரம 
     சூரர்சிரத் தைத்து ணித்த டக்குதல் 
                    வீரமெனத் தத்து வத்து மெச்சிய ...... பெருமாளே. 
    பாடல் 1188( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - சங்கராபரணம் 
            தாளம் - அங்கதாளம் (6 1/2) 
    தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2 
                தாந்தான தந்தன தந்தன 
                தாந்தான தந்தன தந்தன 
 தாந்தான தந்தன தந்தன ...... தனதான 
          மாண்டாரெ லும்பணி யுஞ்சடை 
        யாண்டாரிறைஞ்ச மொழிந்ததை 
                            வான்பூத லம்பவ னங்கனல் ...... புனலான 
               வான்பூத முங்கர ணங்களு 
            நான்போயொ டுங்கஅ டங்கலு 
                மாய்ந்தால்வி ளங்கும தொன்றினை ...... யருளாயேல் 
    வேண்டாமை யொன்றைய டைந்துள 
           மீண்டாறி நின்சர ணங்களில் 
              வீழந்தாவல் கொண்டுரு கன்பினை ...... யுடையேனாய் 
           வேந்தாக டம்புபு னைந்தருள் 
             சேந்தாச ரண்சர ணென்பது 
                     வீண்போம தொன்றல என்பதை ...... யுணராதோ 
             ஆண்டார்த லங்கள ளந்திட 
          நீண்டார்மு குந்தர்த டந்தனில் 
                     ஆண்டாவி துஞ்சிய தென்றுமு ...... தலைவாயுற் 
              றாங்கோர்சி லம்புபு லம்பிட 
             ஞான்றுது துங்கச லஞ்சலம் 
                            ஆம்பூமு ழங்கிய டங்கும ...... ளவில்நேசம் 
           பூண்டாழி கொண்டுவ னங்களி 
        லேய்ந்தாள வென்றுவெ றுந்தனி 
                     போந்தோல மென்றுத வும்புயல் ...... மருகோனே 
           பூம்பாளை யெங்கும ணங்கமழ் 
       தேங்காவில் நின்றதொர் குன்றவர் 
                    பூந்தோகை கொங்கைவி ரும்பிய ...... பெருமாளே. 
    பாடல் 1189   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
     தானதன தான தத்த தானதன தான தத்த 
      தானதன தான தத்த ...... தனதான 
                 மாறுபொரு கால னொக்கும் வானிலெழு மாம திக்கும் 
                           வாரிதுயி லாவ தற்கும் ...... வசையேசொல் 
                       மாயமட வார்த மக்கும் ஆயர்குழ லுதி சைக்கும் 
  வாயுமிள வாடை யிற்கு ...... மதனாலே 
                     வேறுபடு பாய லுக்கு மேயெனது பேதை யெய்த்து 
     வேறுபடு மேனி சற்று ...... மழியாதே 
                       வேடர்குல மாதி னுக்கு வேடைகெட வேந டித்து 
   மேவுமிரு பாத முற்று ...... வரவேணும் 
                         ஆறுமிடை வாள ரக்கர் நீறுபட வேலெ டுத்த 
    ஆறுமுக னேகு றத்தி ...... மணவாளா 
                           ஆழியுல கேழ டக்கி வாசுகியை வாய டக்கி 
                             ஆலுமயி லேறி நிற்கு ...... மிளையோனே 
                           சீறுபட மேரு வெற்பை நீறுபட வேசி னத்த 
                            சேவலவ நீப மொய்த்த ...... திரள்தோளா 
                     சேருமட லால்மி குத்த சூரர்அகாடு போய டைத்த 
                             தேவர்சிறை மீள விட்ட ...... பெருமாளே. 
    பாடல் 1190 ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் -    ...;  தாளம் - 
                         தன்னதன தத்த தத்த தன்னதன தத்த தத்த 
     தன்னதன தத்த தத்த ...... தனதான 
                மின்னினில்ந டுக்க முற்ற நுண்ணியநு சுப்பில் முத்த 
                        வெண்ணகையில் வட்ட மொத்து ...... அழகார 
                 விம்மியிள கிக்க தித்த கொம்மைமுலை யிற்கு னித்த 
                        வின்னுதலி லிட்ட பொட்டில் ...... விலைமாதர் 
                 கன்னல்மொழி யிற்சி றக்கு மன்னநடை யிற்க றுத்த 
                        கண்ணினிணை யிற்சி வத்த ...... கனிவாயிற் 
              கண்ணழிவு வைத்த புத்தி ஷண்முகநி னைக்க வைத்த 
    கன்மவச மெப்ப டிக்கு ...... மறவேனே 
               அன்னநடை யைப்ப ழித்த மஞ்ஞைமலை யிற்கு றத்தி 
                         யம்மையட விப்பு னத்தில் ...... விளையாடும் 
                அன்னையிறு கப்பி ணித்த பன்னிருதி ருப்பு யத்தில் 
 அன்னியஅ ரக்க ரத்த ...... னையுமாளப் 
              பொன்னுலகி னைப்பு ரக்கு மன்னநல்வ்ர தத்தை விட்ட 
                            புன்மையர்பு ரத்ர யத்தர் ...... பொடியாகப் 
              பொன்மலைவ ளைத்தெ ரித்த கண்ணுதலி டத்தி லுற்ற 
                        புண்ணியவொ ருத்தி பெற்ற ...... பெருமாளே. 
    பாடல் 1191  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                      தத்தன தான தனத்தன தத்தன தான தனத்தன 
   தத்தன தான தனத்தன ...... தனதான 
             முத்தமு லாவு தனத்தியர் சித்தச னாணை செலுத்திகள் 
                        முத்தமி டாம னுருக்கிக ...... ளிளைஞோர்பால் 
           முட்டவி லாவி மருட்டிகள் நெட்டிலை வேலின் விழிச்சியர் 
  முப்பது கோடி மனத்திய ...... ரநுராகத் 
            தத்தைக ளாசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள் 
                             தப்புறு மாறக மெத்திக ...... ளளவேநான் 
                   தட்டழி யாது திருப்புகழ் கற்கவு மோதவு முத்தமிழ் 
                            தத்துவ ஞான மெனக்கருள் ...... புரிவாயே 
                    மத்தக யானை யுரித்தவர் பெற்றகு மார இலட்சுமி 
                         மைத்துன னாகிய விக்ரமன் ...... மருகோனே 
               வற்றிட வாரிதி முற்றிய வெற்றிகொள் சூரர் பதைப்புற 
                       வற்புறு வேலைவி டுத்தரு ...... ளிளையோனே 
              சித்திர மான குறத்தியை யுற்றொரு போது புனத்திடை 
                          சிக்கென வேதழு விப்புணர் ...... மணவாளா 
            செச்சையு லாவு பதத்தின மெய்த்தவர் வாழ்வு பெறத்தரு 
                             சித்தவி சாக வியற்சுரர் ...... பெருமாளே. 
    பாடல் 1192   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
          தனன தானன தத்தான தானன 
          தனன தானன தத்தான தானன 
                        தனன தானன தத்தான தானன ...... தனதான 
     முருகு லாவிய மைப்பாவு வார்குழல் 
   முளரிவாய்நெகிழ் வித்தார வேல்விழி 
            முடுகு வோர்குலை வித்தான கோடேனு ...... முலையாலே 
                            முறைமை சேர்கெட மைத்தார்வு வார்கடல் 
     முடுகு வோரென எய்த்தோடி யாகமு 
           மொழியும் வேறிடு பித்தேறி னாரெனு ...... முயல்வேகொண் 
        டுருகு வார்சிக சிற்றாம னோலய 
     முயிரு மாகமு மொத்தாசை யோடுள 
                முருகி தீமெழு கிட்டான தோவென ...... வுரையாநண் 
      புலக வாவொழி வித்தார் மனோலய 
        முணர்வு நீடிய பொற்பாத சேவடி 
               யுலவு நீயெனை வைத்தாள வேயருள் ...... தருவாயே 
         குருகு லாவிய நற்றாழி சூழ்நகர் 
      குமர னேமுனை வெற்பார் பராபரை 
                   குழக பூசுரர் மெய்க்காணும் வீரர்தம் ...... வடிவேலா 
        குறவர் சீர்மக ளைத்தேடி வாடிய 
    குழையு நீள்கர வைத்தோடி யேயவர் 
                  குடியி லேமயி லைக்கொடு சோதிய ...... வுரவோனே 
     மருகு மாமது ரைக்கூடல் மால்வரை 
         வளைவு ளாகிய நக்கீர ரோதிய 
                      வளகை சேர்தமி ழுக்காக நீடிய ...... கரவோனே 
         மதிய மேவிய சுற்றாத வேணியர் 
      மகிழ நீநொடி யற்றான போதினில் 
                   மயிலை நீடுல கைச்சூழ வேவிய ...... பெருமாளே. 
    பாடல் 1193   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
              தனனானத் தனந்த தந்தன 
              தனனானத் தனந்த தந்தன 
                            தனனானத் தனந்த தந்தன ...... தனதான 
         முலைமேலிற் கலிங்க மொன்றிட 
         முதல்வானிற் பிறந்த மின்பிறை 
                         நுதல்மேல்முத் தரும்ப புந்தியி ...... லிதமார 
               முகநேசித் திலங்க வும்பல 
         விநன்முசிப் புரண்ட வண்கடல் 
                      முரணோசைக் கமைந்த வன்சர ...... மென்முவா 
        மலர்போலச் சிவந்த செங்கணில் 
      மருள்கூர்கைக் கிருண்ட அஞ்சனம் 
                        வழுவாமற் புனைந்து திண்கய ...... மெனநாடி 
            வருமாதர்க் கிரங்கி நெஞ்சமு 
            மயலாகிப் பரந்து நின்செயல் 
                       மருவாமற் கலங்கும் வஞ்சக ...... மொழியாதோ 
     தொலையாநற் றவங்க ணின்றுனை 
       நிலையாகப் புகழ்ந்து கொண்டுள 
                   அடியாருட் டுலங்கி நின்றருள் ...... துணைவேளே 
        துடிநேரொத் திலங்கு மென்கொடி 
 யிடைதோகைக் கிசைந்த வொண்டொடி 
                            சுரர்வாழப் பிறந்த சுந்தரி...... மணவாளா 
       மலைமாளப் பிளந்த செங்கையில் 
           வடிவேலைக் கொடந்த வஞ்சக 
                          வடிவாகக் கரந்து வந்தமர் ...... பொருசூரன் 
            வலிமாளத் துரந்த வன்திறல் 
          முருகாமற் பொருந்து திண்புய 
                          வடிவாமற் றநந்த மிந்திரர் ...... பெருமாளே. 
    பாடல் 1194   ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - சங்கரானந்தப்ரியா 
            தாளம் - அங்கதாளம் (7 1/2) 
           (எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி) 
                         தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 
          தனன தந்தன தாத்தன தந்தன 
          தனன தந்தன தாத்தன தந்தன 
                        தனன தந்தன தாத்தன தந்தன ...... தனதான 
    முனைய ழிந்தது மேட்டிகு லைந்தது 
    வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது 
              முதுகு வெஞ்சிலை காட்டிவ ளைந்தது ...... ப்ரபையான 
       முகமி ழிந்தது நோக்குமி ருண்டது 
      இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது 
               மொழித ளர்ந்தது நாக்குவி ழுந்தது ...... அறிவேபோய் 
    நினைவ யர்ந்தது நீட்டல் முடங்கலு 
           மவச மும்பல ஏக்கமு முந்தின 
                    நெறிம றந்தது மூப்பு முதிர்ந்தது ...... பலநோயும் 
                            நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது 
        சலம லங்களி னாற்றமெ ழுந்தது 
             நிமிஷ மிங்கினி யாச்சுதென் முன்பினி ...... தருள்வாயே 
  இனைய இந்திர னேற்றமு மண்டர்கள் 
     தலமு மங்கிட வோட்டியி ருஞ்சிறை 
                   யிடுமி டும்புள ராக்கதர் தங்களில் ...... வெகுகோடி 
                             எதிர்பொ ரும்படி போர்க்குளெ திர்ந்தவர் 
      தசைசி ரங்களு நாற்றிசை சிந்திட 
           இடிமு ழங்கிய வேற்படை யொன்றனை ...... யெறிவோனே 
       தினைவ னங்கிளி காத்தச வுந்தரி
  அருகு சென்றடி போற்றிம ணஞ்செய்து 
               செகம றிந்திட வாழ்க்கைபு ரிந்திடு ...... மிளையோனே 
         திரிபு ரம்பொடி யாக்கிய சங்கரர் 
           குமர கந்தப ராக்ரம செந்தமிழ் 
              தெளிவு கொண்டடி யார்க்குவி ளம்பிய ...... பெருமாளே. 
    பாடல் 1195   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
               தத்தத்தத் தத்தத் தனதன 
               தத்தத்தத் தத்தத் தனதன 
                             தத்தத்தத் தத்தத் தனதன ...... தனதான 
         மைக்குக்கைப் புக்கக் கயல்விழி 
      யெற்றிக்கொட் டிட்டுச் சிலைமதன் 
                      வர்க்கத்தைக் கற்பித் திடுதிற ...... மொழியாலே 
             மட்டிட்டுத் துட்டக் கெருவித 
               மிட்டிட்டுச் சுற்றிப் பரிமள 
                        மச்சப்பொற் கட்டிற் செறிமல ...... ரணைமீதே 
         புக்குக்கைக் கொக்கப் புகுமொரு 
          அற்பச்சிற் றிற்பத் தெரிவையர் 
                  பொய்க்குற்றுச் சுற்றித் திரிகிற ...... புலையேனைப் 
            பொற்பித்துக் கற்பித் துனதடி 
         அர்ச்சிக்கச் சற்றுக் க்ருபைசெய 
                       புத்திக்குச் சித்தித் தருளுவ ...... தொருநாளே 
             திக்குக்குத் திக்குத் திகுதிகு 
             டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு 
                       தித்தித்தித் தித்தித் திதியென ...... நடமாடுஞ் 
             சித்தர்க்குச் சுத்தப் பரமநல் 
         முத்தர்க்குச் சித்தக் க்ருபையுள 
                         சித்தர்க்குப் பத்தர்க் கருளிய ...... குருநாதா 
              ஒக்கத்தக் கிட்டுத் திரியசுர் 
             முட்டக்கொட் டற்றுத் திரிபுர 
                       மொக்கக்கெட் டிட்டுத் திகுதிகு ...... வெனவேக 
             உ ற்பித்துக் கற்பித் தமரரை 
            முற்பட்டக் கட்டச் சிறைவிடு 
                   மொட்குக்டக் கொற்றக் கொடியுள ...... பெருமாளே. 
    பாடல் 1196  ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ஹம்ஸத்வனி 
            தாளம் - அங்கதாளம் (7 1/2) 
             தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமி-2 
          தான தனதனன தான தாத்தன 
          தான தனதனன தான தாத்தன 
                        தான தனதனன தான தாத்தன ...... தனதான 
    மோது மறலியொரு கோடி வேற்படை 
         கூடி முடுகியெம தாவி பாழ்த்திட 
                   மோக முடையவெகு மாதர் கூட்டமு ...... மயலாரும் 
    மூளு மளவில்விசை மேல்வி ழாப்பரி
    தாப முடனும்விழி நீர்கொ ளாக்கொடு 
         மோக வினையில்நெடு நாளின் மூத்தவ ...... ரிளையோர்கள் 
        ஏது கருமமிவர் சாவெ னாச்சிலர் 
            கூடி நடவுமிடு காடெ னாக்கடி 
                  தேழு நரகினிடை வீழ்மெ னாப்பொறி ...... யறுபாவி 
          ஏழு புவனமிகு வான நாட்டவர் 
        சூழ முநிவர்கிளை தாமு மேத்திட 
                      ஈச னருள்குமர வேத மார்த்தெழ ...... வருவாயே 
       சூது பொருதரும னாடு தோற்றிரு 
      வாறு வருஷம்வன வாச மேற்றியல் 
                 தோகை யுடனுமெவி ராட ராச்சிய ...... முறைநாளிற் 
      சூறை நிரைகொடவ ரேக மீட்டெதி 
      ராளு முரிமைதரு மாறு கேட்டொரு 
                  தூது செலஅடுவ லாண்மை தாக்குவ ...... னெனமீள 
           வாது சமர்திருத ரான ராட்டிர 
         ராஜ குமரர்துரியோத னாற்பிறர் 
                       மாள நிருபரொடு சேனை தூட்பட ...... வரிசாப 
        வாகை விஜயனடல் வாசி பூட்டிய 
        தேரை முடுகுநெடு மால்ப ராக்ரம 
                  மாயன் மருகஅமர் நாடர் பார்த்திப ...... பெருமாளே. 
    பாடல் 1197   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
             தனனத்தன தானன தானன 
             தனனத்தன தானன தானன 
                           தனனத்தன தானன தானன ...... தனதான 
            வடிகட்டிய தேனென வாயினி 
             லுறுதுப்பன வூறலை யார்தர 
                        வரைவிற்றிக ழூடலி லேதரு ...... மடவார்பால் 
          அடிபட்டலை பாவநிர் மூடனை 
            முகடித்தொழி லாமுன நீயுன 
                  தடிமைத்தொழி லாகாஎ நாளினி ...... லருள்வாயோ 
           பொடிபட்டிட ராவணன் மாமுடி 
          சிதறச்சிலை வாளிக ளேகொடு 
                    பொருகைக்கள மேவிய மாயவன் ...... மருகோனே 
       கொடுமைத்தொழி லாகிய கானவர் 
       மகிமைக்கொள வேயவர் வாழ்சிறு 
                       குடிலிற்குற மானொடு மேவிய ...... பெருமாளே. 
    பாடல் 1198 ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் -    ...;  தாளம் - 
          தத்த தனத்தத் தனத்த தத்தன 
          தத்த தனத்தத் தனத்த தத்தன 
                        தத்த தனத்தத் தனத்த தத்தன ...... தனதான 
  வட்ட முலைக்கச் சவிழ்த்து வைத்துள 
      முத்து வடத்தைக் கழுத்தி லிட்டிரு 
                மைக்கு வளைக்கட் குறிப்ப ழுத்திய ...... பொதுமாதர் 
       மட்டம ளிக்குட் டிருத்தி முத்தணி 
                             மெத்தை தனக்குட் செருக்கி வெற்றிலை 
                வைத்த பழுப்பச் சிலைச்சு ருட்கடி ...... யிதழ்கோதிக் 
    கட்டி யணைத்திட் டெடுத்து டுத்திடு 
   பட்டை யவிழ்த்துக் கருத்தி தத்தொடு 
              கற்ற கலைச்சொற் களிற்ப யிற்றுள ...... முயல்போதுங் 
    கைக்கு ளிசைத்துப் பிடித்த கட்கமும் 
   வெட்சி மலர்ப்பொற் பதத்தி ரட்சணை 
                    கட்டு மணிச்சித் திரத்தி றத்தையு ...... மறவேனே 
     கொட்ட மிகுத்திட் டரக்கர் பட்டணம் 
  இட்டு நெருப்புக் கொளுத்தி யத்தலை 
              கொட்டை பரப்பச் செருக்க ளத்திடை ...... யசுரோரைக் 
        குத்தி முறித்துக் குடிப்ப ரத்தமும் 
     வெட்டு யழித்துக் கனக்க ளிப்பொடு 
                கொக்கரியிட்டுத் தெரித்த டுப்பன ...... வொருகோடிப் 
      பட்ட பிணத்தைப் பிடித்தி ழுப்பன 
        சச்சரிகொட்டிட் டடுக்கெ டுப்பன 
                    பற்கள் விரித்துச் சிரித்தி ருப்பன ...... வெகுபூதம் 
     பட்சி பறக்கத் திசைக்குள் மத்தளம் 
   வெற்றி முழக்கிக் கொடிப்பி டித்தயில் 
                   பட்டற விட்டுத் துரத்தி வெட்டிய ...... பெருமாளே. 
    பாடல் 1100 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
                          தனதன தாத்த தாத்த தனதன தாத்த தாத்த 
     தனதன தாத்த தாத்த ...... தனதான 
                  வளைகர மாட்டி வேட்டி னிடைதுயில் வாட்டி யீட்டி 
                            வரிவிழி தீட்டி யேட்டின் ...... மணம்வீசும் 
           மழைகுழல் காட்டி வேட்கை வளர்முலை காட்டி நோக்கின் 
 மயில்நடை காட்டி மூட்டி ...... மயலாகப் 
               புளகித வார்த்தை யேற்றி வரிகலை வாழ்த்தி யீழ்த்து 
                       புணர்முலை சேர்த்து வீக்கி ...... விளையாடும் 
                பொதுமட வார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை 
                          புலைகுண மோட்டி மாற்றி ...... யருள்வாயே 
             தொளையொழு கேற்ற நோக்கி பலவகை வாச்சி தூர்த்து 
    சுடரடி நீத்த லேத்து ...... மடியார்கள் 
         துணைவன்மை நோக்கி னிடைமுறை யாய்ச்சி மார்ச் சொல் 
                           சொலியமு தூட்டி யாட்டு ...... முருகோனே 
                இளநகை யோட்டி மூட்டர் குலம்விழ வாட்டி யேட்டை 
                            யிமையவர் பாட்டை மீட்ட ...... குருநாதா 
                 இயல்புவி வாழ்த்தி யேத்த எனதிடர் நோக்கி நோக்க 
                            மிருவினை காட்டி மீட்ட ...... பெருமாளே. 
    பாடல் 1200 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                தானன தனன தனத்தத்த 
                தானன தனன தனத்தத்த 
 தானன தனன தனத்தத்த ...... தனதான 
       வாடையில் மதனை யழைத்துற்று 
         வாள்வளை கலக லெனக்கற்றை 
                         வார்குழல் சரிய முடித்திட்டு ...... துகிலாரும் 
          மால்கொள நெகிழ வுடுத்திட்டு 
            நூபுர மிணையடி யைப்பற்றி 
                      வாய்விட நுதல்மிசை பொட்டிட்டு ...... வருமாய 
                 நாடக மகளிர் நடிப்புற்ற 
              தோதக வலையில கப்பட்டு 
                           ஞாலமு முழுது மிகப்பித்த ...... னெனுமாறு 
              நாணமு மரபு மொழுக்கற்று 
                 நீதியு மறிவும றக்கெட்டு 
                          நாயடி மையுமடி மைப்பட்டு ...... விடலாமோ 
           ஆடிய மயிலினை யொப்புற்று 
             பீலியு மிலையு முடுத்திட்டு 
                            ஆரினு மழகு மிகப்பெற்று ...... யவனாளும் 
           ஆகிய விதண்மிசை யுற்றிட்டு 
              மானின மருள விழித்திட்டு 
                     ஆயுத கவணொரு கைச்சுற்றி ...... விளையாடும் 
           வேடுவர் சிறுமி யொருத்திக்கு 
         யான்வழி யடிமை யெனச்செப்பி 
                        வீறுள அடியிணை யைப்பற்றி ...... பலகாலும் 
               வேதமு மமரரு மெய்ச்சக்ர 
             வாளமு மறிய விலைப்பட்டு 
                       மேருவில் மிகவு மெழுத்திட்ட ...... பெருமாளே. 
    பாடல் 1201 ( பொதுப்பாடல்கள் ) 
 
 
           ராகம் -    ...;  தாளம் - 
  தனதனன தனதனன தனன தாத்ததன 
  தனதனன தனதனன தனன தாத்ததன 
                தனதனன தனதனன தனன தாத்ததன ...... தனதான 
                       விரைசொரியு ம்ருகமதமு மலரும் வாய்த்திலகு 
                           விரிகுழலு மவிழநறு மெழுகு கோட்டுமுலை 
 மிசையில்வரு பகலொளியை வெருவ வோட்டுமணி ...... வகையாரம் 
                   விடுதொடைகள் நகநுதியி லறவும் வாய்த்தொளிர 
                           விழிசெருக மொழிபதற அமுது தேக்கியகை 
         விதறிவளை கலகலென அழகு மேற்பொழிய ...... அலர்மேவும் 
    இருசரண பரிபுரசு ருதிக ளார்க்கவச 
                            மிலகுகடல் கரைபுரள இனிமை கூட்டியுள 
           மிதம்விளைய இருவரெனு மளவு காட்டரிய ...... அநுராகத் 
                           திடைமுழுகி யெனதுமன தழியு நாட்களினு 
                        மிருசரண இயலும்வினை யெறியும் வேற்கரமு 
          மெழுதரிய திருமுகமு மருளு மேத்தும்வகை ...... தரவேணும் 
     அரிபிரம ரடிவருட வுததி கோத்தலற 
                           அடல்வடவை யனலுமிழ அலகை கூட்டமிட 
        அணிநிணமு மலைபெருக அறையும் வாச்சியமு ...... மகலாது 
                       அடல்கழுகு கொடிகெருட னிடைவி டாக்கணமு 
                             மறுகுறளு மெறிகுருதி நதியின் மேற்பரவ 
             அருணரண முகவயிர வர்களு மார்ப்பரவ ...... மிடநாளும் 
                            பரவுநிசி சரர்முடிகள் படியின் மேற்குவிய 
                           பவுரிகொடு திரியவரை பலவும் வேர்ப்பறிய 
              பகர்வரிய ககனமுக டிடிய வேட்டைவரு ...... மயில்வீரா 
                         படருநெறி சடையுடைய இறைவர் கேட்குரிய 
                         பழயமறை தருமவுன வழியை யார்க்குமொரு 
               பரமகுரு பரனெனவு மறிவு காட்டவல ...... பெருமாளே. 
    பாடல் 1202  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                             தானத்த தந்த தந்த தானத்த தந்த தந்த 
       தானத்த தந்த தந்த ...... தனதான 
                 வேலொத்து வென்றி யங்கை வேளுக்கு வெஞ்ச ரங்க 
                            ளாமிக்க கண்க ளென்று ...... மிருதோளை 
        வேயொக்குமென்று கொங்கை மேல்வெற்ப தென்றுகொண்டை 
                         மேகத்தை வென்ற தென்று ...... மெழில்மாதர் 
             கோலத்தை விஞ்ச வெஞ்சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர் 
 கூடத்தில் நின்று நின்று ...... குறியாதே 
                      கோதற்ற நின்ப தங்கள் நேர்பற்றி யின்ப மன்பு 
                            கூர்கைக்கு வந்து சிந்தை ...... குறுகாதோ 
                  ஞாலத்தை யன்ற ளந்து வேலைக்கு ளுந்து யின்று 
   நாடத்தி முன்பு வந்த ...... திருமாலும் 
                      நாடத்த டஞ்சி லம்பை மாவைப்பி ளந்த டர்ந்து 
  நாகத்த லங்கு லுங்க ...... விடும்வேலா 
                     ஆலித்தெ ழுந்த டர்ந்த ஆலத்தை யுண்ட கண்ட 
 ராகத்தில் மங்கை பங்கர் ...... நடமாடும் 
                   ஆதிக்கு மைந்த னென்று நீதிக்குள் நின்ற அன்பர் 
 ஆபத்தி லஞ்ச லென்ற ...... பெருமாளே. 
    பாடல் 1203  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ஸாமா 
            தாளம் - அங்கதாளம் (5 1/2) 
                            தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 
                            தனதான தந்த தந்த தனதான தந்த தந்த 
      தனதான தந்த தந்த ...... தனதான 
                           அடியார்ம னஞ்சலிக்க எவராகி லும்ப ழிக்க 
   அபராதம் வந்து கெட்ட ...... பிணமுடி 
                அனைவோரும் வந்து சிச்சி யெனநால்வ ருஞ்சி ரிக்க 
                           அனலோட ழன்று செத்து ...... விடுமாபோற் 
                  கடையேன்ம லங்கள் முற்று மிருநோயு டன்பி டித்த 
 கலியோடி றந்து சுத்த ...... வெளியாகிக் 
                         களிகூர என்ற னுக்கு மயிலேறி வந்து முத்தி 
                          கதியேற அன்பு வைத்து ...... னருள்தாராய் 
                சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை சுத்த 
                           தழல்மேனி யன்சி ரித்தொர் ...... புர்முணும் 
                      தவிடாக வந்தெ திர்த்த மதனாக முஞ்சி தைத்த 
                            தழல்பார்வை யன்ற ளித்த ...... குருநாதா 
                     மிடிதீர அண்ட ருக்கு மயிலேறி வஞ்சர் கொட்டம் 
                          வெளியாக வந்து நிர்த்த ...... மருள்வோனே 
                 மினநூல்ம ருங்குல் பொற்பு முலைமாதி ளங்கு றத்தி 
                           மிகுமாலொ டன்பு வைத்த ...... பெருமாளே. 
    பாடல் 1204  ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் -    ...;  தாளம் - 
      தனதன தாத்தன தனதன தாத்தன 
          தனதன தாத்தன ...... தனதான 
 அடியில்வி டாப்பிண மடையவி டாச்சிறி 
    தழியுமுன் வீட்டுமு ...... னுயர்பாடை 
                          அழகொடு கூட்டூமி னழையுமின் வார்ப்பறை 
                             யழுகையை மாற்றுமி ...... னொதியாமுன் 
                            எடுமினி யாக்கையை யெனஇடு காட்டெரி
                             யிடைகொடு போய்த்தமர் ...... சுடுநாளில் 
                           எயினர்கு லோத்தமை யுடன்மயில் மேற்கடி 
    தெனதுயிர் காத்திட ...... வரவேணும் 
                        மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படு 
           மதகரிகூப்பிட ...... வளையூதி 
                            மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றிய 
       மகிபதி போற்றிடு ...... மருகோனே 
    படர்சடை யாத்திகர் பரிவுற ராட்சதர் 
 பரவையி லார்ப்பெழ ...... விடும்வேலாற் 
    படமுனி யாப்பணி தமனிய நாட்டவர் 
       பதிகுடி யேற்றிய ...... பெருமாளே. 
    பாடல் 1205   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
                           தத்தன தான தானன தத்தன தான தானன 
     தத்தன தான தானன ...... தனதான 
                        அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி 
                         னக்ரம்வி யோம கோளகை ...... மிசைவாழும் 
                         அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிய 
                         னைத்துரு வாய காயம ...... தடைவேகொண் 
                     டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல 
     கிற்றடு மாறி யேதிரி...... தருகாலம் 
                       எத்தனை யூழி காலமெ னத்தெரியாது வாழியி 
   னிப்பிற வாது நீயருள் ...... புரிவாயே 
                         கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறை 
   கற்புடை மாது தோய்தரு ...... மபிராம 
 கற்புர தூளி லேபன மற்புய பாக சாதன 
       கற்பக லோக தாரண ...... கிரிசால 
   விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவல 
                             வெட்சியு நீப மாலையு ...... மணிவோனே 
                       மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னீறெழ 
                             விக்ரம வேலை யேவிய ...... பெருமாளே. 
    பாடல் 1206  ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் -    ...;  தாளம் - 
         தனன தானனம் தனன தானனம் 
           தனன தானனம் ...... தனதான 
      அயில்வி லோசனங் குவிய வாசகம் 
         பதற ஆனனங் ...... குறுவெர்வுற் 
      றளக பாரமுங் குலைய மேல்விழுந் 
         ததர பானமுண் ...... டியல்மாதர் 
            சயில பாரகுங் குமப யோதரந் 
         தழுவு மாதரந் ...... தமியேனால் 
  தவிரொ ணாதுநின் கருணை கூர்தருந் 
         தருண பாதமுந் ...... தரவேணும் 
      கயிலை யாளியுங் குலிச பாணியுங் 
         கமல யோனியும் ...... புயகேசன் 
      கணப ணாமுகங் கிழிய மோதுவெங் 
          கருட வாகனந் ...... தனிலேறும் 
          புயலி லேகரும் பரவ வானிலும் 
           புணரிமீதுனுங் ...... கிரிமீதும் 
       பொருநி சாசரன் தனது மார்பினும் 
    புதைய வேல்விடும் ...... பெருமாளே. 
    பாடல் 1207 ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் -    ...;  தாளம் - 
       தனத்த தத்தனா தனத்த தத்தனா 
          தனத்த தத்தனா ...... தனதான 
                             அருக்கி மெத்ததோள் திருத்தி யுற்றுமார் 
   பசைத்து வக்குமா ...... லிளைஞோரை 
 அழைத்து மிக்ககா சிழைத்து மெத்தைமீ 
        தணைத்து மெத்தமா ...... லதுகூர 
                           உ ருக்கி யுட்கொள்மா தருக்கு ளெய்த்துநா 
      வுலற்றி யுட்குநா ...... ணுடன்மேவி 
                             உ ழைக்கு மத்தைநீ யொழித்து முத்திபா 
     லுறக்கு ணத்ததா ...... ளருள்வாயே 
     சுருக்க முற்றமால் தனக்கு மெட்டிடா 
      தொருத்தர் மிக்கமா ...... நடமாடுஞ் 
      சுகத்தி லத்தர்தா மிகுத்த பத்திகூர் 
   சுரக்க வித்தைதா ...... னருள்வோனே 
                          பெருக்க வெற்றிகூர் திருக்கை கொற்றவேல் 
       பிடித்து குற்றமா ...... ரொருசூரன் 
                       பெலத்தை முட்டிமார் தொளைத்து நட்டுளோர் 
  பிழைக்க விட்டவோர் ...... பெருமாளே. 
    பாடல் 1208  ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் -    ...;  தாளம் - 
    தனந்த தாத்தனத் தனந்த தாத்தனத் 
        தனந்த தாத்தனத் ...... தனதான 
                            அரும்பி னாற்றனிக் கரும்பி னாற்றொடுத் 
      தடர்ந்து மேற்றெறித் ...... தமராடும் 
                         அநங்க னார்க்கிளைத் தயர்ந்த ணாப்பியெத் 
    தரம்பை மார்க்கடைக் ...... கலமாகிக் 
                        குரும்பை போற்பணைத் தரும்பு றாக்கொதித் 
                             தெழுந்து கூற்றெனக் ...... கொலைசூழுங் 
                           குயங்கள் வேட்டறத் தியங்கு தூர்த்தனைக் 
    குணங்க ளாக்கிநற் ...... கழல்சேராய் 
                             பொருந்தி டார்ப்பரத் திலங்கை தீப்படக் 
  குரங்கி னாற்படைத் ...... தொருதேரிற் 
                           புகுந்து நூற்றுவர்க் கொழிந்து பார்த்தனுக் 
     கிரங்கி யாற்புறத் ...... தலைமேவிப் 
                          பெருங்கு றோட்டைவிட் டுறங்கு காற்றெனப் 
       பிறங்க வேத்தியக் ...... குறுமாசூர் 
 பிறங்க லார்ப்பெழச் சலங்கள் கூப்பிடப் 
      பிளந்த வேற்கரப் ...... பெருமாளே. 
    பாடல் 1209   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
   தனதன தத்தனாத் தனதன தத்தனாத் 
        தனதன தத்தனாத் ...... தனதான 
                            அலமல மிப்புலாற் புலையுடல் கட்டனேற் 
      கறுமுக நித்தர்போற் ...... றியநாதா 
                        அறிவிலி யிட்டுணாப் பொறியிலி சித்தமாய்த் 
     தணிதரு முத்திவீட் ...... டணுகாதே 
                           பலபல புத்தியாய்க் கலவியி லெய்த்திடாப் 
     பரிவொ தத்தைமார்க் ...... கிதமாடும் 
                          பகடிது டுக்கன்வாய்க் கறையனெ னத்தராப் 
   படியில்ம னித்தர்தூற் ...... றிடலாமோ 
                       குலகிரிபொற்றலாய்க் குரைகடல் வற்றலாய்க் 
    கொடியஅ ரக்கரார்ப் ...... பெழவேதக் 
                        குயவனை நெற்றியேற் றவனெதிர் குட்டினாற் 
  குடுமியை நெட்டைபோக் ...... கியவீரா 
                        கலைதலை கெட்டபாய்ச் சமணரை நட்டகூர்க் 
      கழுநிரை முட்டஏற் ...... றியதாளக் 
                        கவிதையும் வெற்றிவேற் கரமுடன் வற்றிடாக் 
                             கருணையு மொப்பிலாப் ...... பெருமாளே. 
    பாடல் 1210   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                      தனன தான தந்த தந்த தனன தான தந்த தந்த 
   தனன தான தந்த தந்த ...... தனதான 
               அளக பார முங்கு லைந்து அரிய பார்வை யுஞ்சி வந்து 
                            அணுகி யாக மும்மு யங்கி ...... யமுதூறல் 
                அதர பான மும்நு கர்ந்து அறிவு சோர வும்மொ ழிந்து 
                            அவச மாக வும்பு ணர்ந்து ...... மடவாரைப் 
                    பளக னாவி யுந்த ளர்ந்து பதறு மாக மும்ப யந்து 
 பகலி ராவை யும்ம றந்து ...... திரியாமற் 
                  பரம ஞான முந்தெ ளிந்து பரிவு நேச முங்கி ளர்ந்து 
                            பகரு மாறு செம்ப தங்கள் ...... தரவேணும் 
                    துளப மாய னுஞ்சி றந்த கமல வேத னும்பு கழ்ந்து 
                       தொழுது தேட ரும்ப்ர சண்ட ...... னருள்பாலா 
              சுரர்கள் நாய கன்ப யந்த திருவை மாம ணம்பு ணர்ந்து 
                             சுடரு மோக னம்மி குந்த ...... மயில்பாகா 
                  களப மார்பு டன்த யங்கு குறவர் மாது டன்செ றிந்து 
                         கலவி நாட கம்பொ ருந்தி ...... மகிழ்வோனே 
               கடிய பாத கந்த விர்ந்து கழலை நாடொ றுங்கி ளர்ந்து 
                            கருது வார்ம னம்பு குந்த ...... பெருமாளே. 
    பாடல் 1211 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ஹம்ஸவிநோதினி 
                  தாளம் - அங்தாளம் (6) 
  தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2 
                       தானான தான தனதன தானான தான தனதன 
    தானான தான தனதன ...... தனதான 
                        ஆசார வீன னறிவிலி கோபாப ராதி யவகுண 
   னாகாத நீச னநுசிதன் ...... விபாணதன் 
                            ஆசாவி சார வெகுவித மோகாச ணத பரவச 
 னாகாச நீர்ம ணனல்வளி ...... யுருமாறி 
             மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம் 
                           வாயாத பாவி யிவனென ...... நினையாமல் 
                    மாதாபி தாவி னருணல மாறாம காரிலெனையினி 
                          மாஞான போத மருள்செய ...... நினைவாயே 
                   வீசால வேலை சுவறிட மாசூரர் மார்பு தொளைபட 
   வேதாள ராசி பசிகெட ...... அறைகூறி 
                      மேகார வார மெனஅதிர் போர்யாது தான ரெமபுர 
                       மீதேற வேல்கொ டமர்செயு ...... மிளையோனே 
                    கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை 
    கூறாம னீய அவனுகர் ...... தருசேடங் 
                  கோதாமெ னாம லமுதுசெய் வேதாக மாதி முதல்தரு 
                            கோலோக நாத குறமகள் ...... பெருமாளே. 
    பாடல் 1212   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - யமுனா கல்யாணி 
    தாளம் - ஆதி 
            தானனா தத்த தானனா தத்த 
             தானனா தத்த ...... தனதான 
       ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம 
         மானபூ வைத்து ...... நடுவேயன் 
            பானநூ லிட்டு நாவிலே சித்ர 
          மாகவே கட்டி ...... யொருஞான 
             வாசம்வீ சிப்ர காசியா நிற்ப 
           மாசிலோர் புத்தி ...... யளிபாட 
        மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர 
        வாளபா தத்தி ...... லணிவேனோ 
            மூசுகா னத்து மீதுவாழ் முத்த 
             மூரல்வே டிச்சி ...... தனபார 
             மூழ்குநீ பப்ர தாபமார் பத்த 
      மூரிவே ழத்தன் ...... மயில்வாழ்வே 
          வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு 
           வேகவே தித்து ...... வருமாசூர் 
            வீழமோ திப்ப ராரைநா கத்து 
      வீரவேல் தொட்ட ...... பெருமாளே. 
    பாடல் 1213   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
   தானத் தனத்ததன தானத் தனத்ததன 
        தானத் தனத்ததன ...... தனதான 
                           ஆசைக் கொளுத்திவெகு வாகப் பசப்பிவரு 
 மாடைப் பணத்தையெடெ ...... னுறவாடி 
                          ஆரக் கழுத்துமுலை மார்பைக் குலுக்கிவிழி 
   யாடக் குலத்துமயில் ...... கிளிபோலப் 
                           பேசித் சிரித்துமயிர் கோதிக் குலைத்துமுடி 
      பேதைப் படுத்திமய ...... லிடுமாதர் 
 பீறற் சலத்துவழி நாறப் படுத்தியெனை 
   பீடைப் படுத்துமய ...... லொழியாதோ 
                            தேசத் தடைத்துபிர காசித் தொலித்துவரி
      சேடற் பிடுத்துதறு ...... மயில்வீரா 
                             தேடித் துதித்தஅடி யார்சித்த முற்றருளு 
    சீர்பொற் பதத்தஅரி...... மருகோனே 
                          நேசப் படுத்தியிமை யோரைக் கெடுத்தமுழு 
      நீசற் கனத்தமுற ...... விடும்வேலா 
                             நேசக் குறத்திமய லோடுற் பவித்தபொனி 
                           நீர்பொற் புவிக்குள்மகிழ் ...... பெருமாளே. 
    பாடல் 1214   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                           தான தான தனத்தன தான தான தனத்தன 
     தான தான தனத்தன ...... தனதான 
                        ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள் 
  ஆவி சோர வுருக்கிகள் ...... தெருமீதே 
                     யாவ ரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர் 
 ஆல கால விழிச்சிகள் ...... மலைபோலு 
                         மாசி லாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர் 
  வாரியோதி முடிப்பவர் ...... ஒழியாமல் 
                      வாயி லுற லளிப்பவர் நாளு நாளு மினுக்கிகள் 
 வாசல் தேடி நடப்பது ...... தவிர்வேனோ 
                     ஓசை யான திரைக்கடல் ஏழு ஞால முமுற்றருள் 
   ஈச ரோடுற வுற்றவள் ...... உ மையாயி 
                           யோகி ஞானி பரப்ரமி நீலி நாரணி யுத்தமி 
  ஓல மான மறைச்சிசொல் ...... அபிராமி 
                    ஏசி லாத மலைக்கொடி தாய்ம னோமணி சற்குணி 
                             ஈறி லாதம லைக்கொடி ...... அருள்பாலா 
                    ஏறு மேனி யொருத்தனும் வேத னான சமர்த்தனும் 
   ஈச னோடு ப்ரியப்படு ...... பெருமாளே. 
    பாடல் 1215  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                            தான தாத்த தனதன தான தாத்த தனதன 
      தான தாத்த தனதன ...... தனதான 
                           ஆல மேற்ற விழியினர் சால நீட்டி யழுதழு 
                           தாக மாய்க்க முறைமுறை ...... பறைமோதி 
                   ஆடல் பார்க்க நிலையெழு பாடை கூட்டி விரையம 
     யான மேற்றி யுறவின ...... ரயலாகக் 
                          கால மாச்சு வருகென ஓலை காட்டி யமபடர் 
                             காவ லாக்கி யுயிரது ...... கொடுபோமுன் 
                காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழலிணை 
  காத லாற்க ருதுமுணர் ...... தருவாயே 
                        வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண 
                             வியாழ கோத்ர மருவிய ...... முருகோனே 
                  வேடர் நாட்டில் விளைபுன ஏனல் காத்த சிறுமியை 
 வேட மாற்றி வழிபடு ...... மிளையோனே 
                          ஞால மேத்தி வழிபடு மாறு பேர்க்கு மகவென 
                          நாணல் பூத்த படுகையில் ...... வருவோனே 
                        நாத போற்றி யெனமுது தாதை கேட்க அநுபவ 
                           ஞான வார்த்தை யருளிய ...... பெருமாளே. 
    பாடல் 1216 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
    தானதன தானத்த தானதன தானத்த 
         தானதன தானத்த ...... தனதான 
                         ஆலுமயில் போலுற்ற தோகையர்க ளெமெத்த 
        ஆரவட மேலிட்ட ...... முலைமீதே 
   ஆனதுகி லேயிட்டு வீதிதனி லேநிற்க 
     ஆமவரை யேசற்று ...... முரையாதே 
                             வேலுமழ கார்கொற்ற நீலமயில் மேலுற்று 
         வீறுமுன தார்பத்ம ...... முகமாறு 
                            மேவியிரு பாகத்தும் வாழுமனை மார்தக்க 
    மேதகவு நானித்த ...... முரையேனோ 
                            நாலுமுக வேதற்கு மாலிலையில் மாலுக்கு 
    நாடவரியார்பெற்ற ...... வொருபாலா 
                        நாணமுடை யாள்வெற்றி வேடர்குல மீதொக்க 
    நாடுகுயில் பார்மிக்க ...... எழில்மாது 
                            வேலைவிழி வேடச்சி யார்கணவ னேமத்த 
  வேழமுக வோனுக்கு ...... மிளையோனே 
    வீரமுட னேயுற்ற சூரனணி மார்பத்து 
   வேலைமிக வேவிட்ட ...... பெருமாளே. 
    பாடல் 1217  ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் -    ...;  தாளம் - 
                  தனனத்தன தனனத்தன தனனத்தன ...... தனதான 
        இடையித்தனை யுளதத்தைய ரிதழ்துய்த்தவ ...... ரநுபோகம் 
                    இளகிக்கரை புரளப்புள கிதகற்புர ...... தனபாரம் 
          உ டன்மற்கடை படுதுற்குண மறநிற்குண ...... வுணர்வாலே 
             ஒருநிஷ்கள வடிவிற்புக வொருசற்றருள் ...... புரிவாயே 
           திடமற்றொளிர் நளினப்ரம சிறைபுக்கன ...... னெனவேகுந் 
          தெதிபட்சண க்ருதபட்சண செகபட்சண ...... னெனவோதும் 
    விடபட்சணர் திருமைத்துனன் வெருவச்சுரர் ...... பகைமேல்வேல் 
          விடுவிக்ரம கிரியெட்டையும் விழவெட்டிய ...... பெருமாளே. 
    பாடல் 1218  ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் -    ...;  தாளம் - 
                         தனதன தான தானன, தனதன தான தானன 
     தனதன தான தானன ...... தனதான 
                        இருகுழை மீது தாவடி யிடுவன வோதி நீழலி 
 னிடமது லாவி மீள்வன ...... நுதல்தாவி 
                    இழிவன காம வேதமு மொழிவன தாரை வேலென 
      எறிவன காள கூடமு ...... மமுதாகக் 
                           கருகிய நீல லோசன அபிநய மாத ரார்தரு 
                             கலவியில் மூழ்கி வாடிய ...... தமியேனுங் 
                             கதிபெற ஈட றாதன பதிபசு பாச மானவை 
                             கசடற வேறு வேறுசெய் ...... தருள்வாயே 
                          ஒருபது பார மோலியு மிருபது வாகு மேருவு 
                             முததியில் வீழ வானர ...... முடனேசென் 
                   றொருகணை யேவு ராகவன் மருகவி பூதி பூஷணர் 
 உ ணருப தேச தேசிக ...... வரையேனற் 
                            பரவிய கான வேடுவர் தருமபி ராம நாயகி 
         பரிபுர பாத சேகர ...... சுரராஜன் 
                         பதிகுடி யேற வேல்தொடு முருகம யூர வாகன 
                             பரவச ஞான யோகிகள் ...... பெருமாளே. 
    பாடல் 1219  ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - ஸிந்துபைரவி 
                 தாளம் - அங்கதாளம் (5) 
  தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1 
  தனனா தனத்ததன தனனா தனத்ததன 
       தனனா தனத்ததன ...... தனதான 
                 இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை 
  யினிதாவ ழைத்தெனது ...... முடிமேலே 
                    இணைதாள ளித்துனது மயில்மேலி ருத்தியொளி 
 ரியல்வேல ளித்துமகி ...... ழிருவோரும் 
                      ஒருவாகெ னக்கயிலை யிறையோன ளித்தருளு 
                            மொளிர்வேத கற்பகந ...... லிளையோனே 
                        ஒளிர்மாம றைத்தொகுதி சுரர்பார்து தித்தருள 
     உ பதேசி கப்பதமு ...... மருள்வாயே 
                          கருநோய றுத்தெனது மிடிதூள்ப டுத்திவிடு 
       கரிமாமு கக்கடவு ...... ளடியார்கள் 
                      கருதாவ கைக்குவர மருள்ஞான தொப்பைமகிழ் 
     கருணாக டப்பமல ...... ரணிவோனே 
                       திருமால ளித்தருளு மொருஞான பத்தினியை 
  திகழ்மார்பு றத்தழுவு ...... மயில்வேலா 
                      சிலைதூளே ழுப்பிகவ டவுணோரை வெட்டிசுரர் 
  சிறைமீள விட்டபுகழ் ...... பெருமாளே. 
    பாடல் 1220 ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் - பூபாளம் 
                 தாளம் - அங்கதாளம் (5) 
  தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1 
 தனதனன தந்தனம் தனதனன தந்தனம் 
      தனதனன தந்தனம் ...... தந்ததான 
                    இனமறைவி தங்கள்கொஞ் சியசிறுச தங்கைகிண் 
                             கிணியிலகு தண்டையம் ...... புண்டாணகம் 
                          எனதுமன பங்கயங் குவளைகுர வம்புனைந் 
   திரவுபகல் சந்ததஞ் ...... சிந்தியாதோ 
                 உ னதருளை யன்றியிங் கொருதுணையு மின்றிநின் 
  றுளையுமொரு வஞ்சகன் ...... பஞ்சபூத 
                       உ டலதுசு மந்தலைந் துலகுதொறும் வந்துவந் 
  துழலுமது துன்புகண் ...... டன்புறாதோ 
                             கனநிவத தந்தசங் க்ரமகவள துங்கவெங் 
   கடவிகட குஞ்சரந் ...... தங்கும்யானை 
                           கடகசயி லம்பெறும் படியவுணர் துஞ்சமுன் 
       கனககிரிசம்பெழுந் ...... தம்புராசி 
                        அனலெழமு னிந்தசங் க்ரமமதலை கந்தனென் 
    றரனுமுமை யும்புகழ்ந் ...... தன்புகூர 
                          அகிலபுவ னங்களுஞ் சுரரொடுதி ரண்டுநின் 
    றரிபிரமர் கும்பிடுந் ...... தம்பிரானே. 
    பாடல் 1221  ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - சங்கராபரணம் 
    தாளம் - ஆதி 
            தானா தனந்த தானா தனந்த 
             தானா தனந்த ...... தனதான 
             ஊனே றெலும்பு சீசீ மலங்க 
            ளோடே நரம்பு ...... கசுமாலம் 
       ஊழ்நோ யடைந்து மாசான மண்டு 
      மூனோ டுழன்ற ...... கடைநாயேன் 
        நானா ரொடுங்க நானார் வணங்க 
     நானார் மகிழ்ந்து ...... உ னையோத 
            நானா ரிரங்க நானா ருணங்க 
         நானார் நடந்து ...... விழநானார் 
         தானே புணர்ந்து தானே யறிந்து 
        தானே மகிழ்ந்து ...... அ    ளுறித் 
       தாய்போல் பரிந்த தேனோ டுகந்து 
         தானே தழைந்து ...... சிவமாகித் 
         தானே வளர்ந்து தானே யிருந்த 
   தார்வேணி யெந்தை ...... யருள்பாலா 
    சாலோக தொண்டர் சாமீப தொண்டர் 
      சர்ருப தொண்டர் ...... பெருமாளே. 
    பாடல் 1222  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ஹம்ஸாநந்தி 
           தாளம் - அங்கதாளம் (18 1/2) 
                      தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2 
                      தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2 
                   தகிட-1 1/2, தகதிமி-2 
                           தனதனன தனதனன தனதனன தனதனன 
        தத்தத்த தத்தான ...... தந்ததான 
                     எதிரொருவ ரிலையுலகி லெனஅலகு சிலுகுவிரு 
 திட்டுக்ரியைக்கேயெ ...... ழுந்துபாரின் 
                         இடையுழல்வ சுழலுவன சமயவித சகலகலை 
                            யெட்டெட்டு மெட்டாத ...... மந்த்ரவாளால் 
                        விதிவழியி னுயிர்கவர வருகொடிய யமபடரை 
                        வெட்டித் துணித்தாண்மை ...... கொண்டுநீபம் 
                     விளவினிள இலைதளவு குவளைகமழ் பவளநிற 
                           வெட்சித் திருத்தாள்வ ...... ணங்குவேனோ 
                  திதிபுல்வ ரொடுபொருது குருதிநதி முழுகியொளிர் 
                             செக்கச் செவத்தேறு ...... செங்கைவேலா 
    சிகரகிரிதகரவிடு முருவமர கதகலப 
      சித்ரக் ககத்தேறு ...... மெம்பிரானே 
                      முதியபதி னொருவிடையர் முடுகுவன பரிககன 
    முட்டச் செலுத்தாறி ...... ரண்டுதேரர் 
                       மொழியுமிரு அசுவினிக ளிருசதுவி தவசுவெனு 
   முப்பத்து முத்தேவர் ...... தம்பிரானே. 
    பாடல் 1223 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
  தனந்தனந் தத்தத் தனந்தனந் தத்தத் 
      தனந்தனந் தத்தத் ...... தனதானம் 
                         எழுந்திடுங் கப்புச் செழுங்குரும் பைக்கொத் 
                           திரண்டுகண் பட்டிட் ...... டிளையோர்நெஞ் 
                        சிசைந்திசைந் தெட்டிக் கசிந்தசைந் திட்டிட் 
  டிணங்குபொன் செப்புத் ...... தனமாதர் 
                            அழுங்கலங் கத்துக் குழைந்துமன் பற்றுற் 
  றணைந்துபின் பற்றற் ...... றகல்மாயத் 
                            தழுங்குநெஞ் சுற்றுப் புழுங்குபுண் பட்டிட் 
                        டலைந்தலைந் தெய்த்திட் ...... டுழல்வேனோ 
  பழம்பெருந் தித்திப் புறுங்கரும் பப்பத் 
   துடன்பெருங் கைக்குட் ...... படவாரிப் 
                        பரந்தெழுந் தொப்பைக் கருந்திமுன் பத்தர்க் 
                         கிதஞ்செய்தொன் றத்திக் ...... கிளையோனே 
                    தழைந்தெழுந் தொத்துத் தடங்கைகொண் டப்பிச் 
    சலம்பிளந் தெற்றிப் ...... பொருசூரத் 
                       தடம்பெருங் கொக்கைத் தொடர்ந்திடம் புக்குத் 
   தடிந்திடுஞ் சொக்கப் ...... பெருமாளே. 
    பாடல் 1224  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - காவடிச் சிந்து 
              தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
                   தகிட-1 1/2, தகதிமி-2 
            தாத்த தானன தாத்த தானன 
           தாத்த தானன ...... தந்ததான 
           ஏட்டி லேவரை பாட்டி லேசில 
         நீட்டி லேயினி ...... தென்றுதேடி 
        ஈட்டு மாபொருள் பாத்து ணாதிக 
       லேற்ற மானகு ...... லங்கள்பேசிக் 
        காட்டி லேயியல் நாட்டி லேபயில் 
          வீட்டி லேஉ ல ...... கங்களேசக் 
       காக்கை நாய்நரிபேய்க்கு ழாமுண 
   யாக்கை மாய்வதொ ...... ழிந்திடாதோ 
          கோட்டு மாயிர நாட்ட னாடுறை 
      கோட்டு வாலிப ...... மங்கைகோவே 
    கோத்த வேலையி லார்த்த சூர்பொரு 
    வேற்சி காவள ...... கொங்கில்வேளே 
       பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர் 
        பூட்கை சேர்குற ...... மங்கைபாகா 
            பூத்த மாமலர் சாத்தி யேகழல் 
     போற்று தேவர்கள் ...... தம்பிரானே. 
    பாடல் 1225   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
             தத்தத் தாத்த தத்தத் தாத்த 
             தத்தத் தாத்த ...... தனதான 
            கச்சுப் பூட்டு கைச்சக் கோட்ட 
          கத்திற் கோட்டு ...... கிரியாலங் 
        கக்கித் தேக்கு செக்கர்ப் போர்க்க 
            யற்கட் கூற்றில் ...... மயலாகி 
              அச்சக் கூச்ச மற்றுக் கேட்ட 
      வர்க்குத் தூர்த்த ...... னெனநாளும் 
           அத்தப் பேற்றி லிச்சிப் பார்க்க 
         றப்பித் தாய்த்தி ...... ரியலாமோ 
         பச்சைக் கூத்தர் மெச்சிச் சேத்த 
           பத்மக் கூட்டி ...... லுறைவோரி
         பத்திற் சேர்ப்பல் சக்கிற் கூட்டர் 
          பத்தக் கூட்ட ...... ரியல்வானம் 
       மெச்சிப் போற்ற வெற்புத் தோற்று 
         வெட்கத் கோத்த ...... கடல்மீதே 
    மெத்தக் காய்த்த கொக்குக் கோட்டை 
      வெட்டிச் சாய்த்த ...... பெருமாளே. 
    பாடல் 1226   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                            தனதனந் தனதனன தனதனந் தனதனன 
      தனதனந் தனதனன ...... தனதான 
                      கடலினும் பெரியவிழி மலையினும் பெரியமுலை 
 கவரினுந் துவரதர ...... மிருதோள்பைங் 
                     கழையினுங் குழையுமென மொழிபழங் கிளவிபல 
                           களவுகொண் டொருவர்மிசை ...... கவிபாடி 
                        அடலசஞ் சலனதுல னநுபமன் குணதரன்மெய் 
   அருள்பரங் குரனபய ...... னெனஆசித் 
                             தலமரும் பிறவியினி யலமலம் பிறவியற 
   அருணபங் கயசரண ...... மருள்வாயே 
                           வடநெடுங் குலரசத கிரியினின் றிருகலுழி 
        மகிதலம் புகவழியு ...... மதுபோல 
                             மதசலஞ் சலசலென முதுசலஞ் சலதிநதி 
    வழிவிடும் படிபெருகு ...... முதுபாகை 
                            உ டையசங் க்ரமகவள தவளசிந் துரதிலக 
                        னுலகுமிந் திரனுநிலை ...... பெறவேல்கொண் 
                   டுததிவெந் தபயமிட மலையொடுங் கொலையவுண 
                             ருடனுடன் றமர்பொருத ...... பெருமாளே. 
    பாடல் 1227   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
   தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன 
            தத்தத் தனத்த ...... தனதான 
                     கட்டக் கணப்பறைகள் கொட்டக் குலத்திளைஞர் 
         கட்டிப் புறத்தி ...... லணைமீதே 
                             கச்சுக் கிழித்ததுணி சுற்றிக் கிடத்தியெரி
  கத்திக் கொளுத்தி ...... யனைவோரும் 
                            சுட்டுக் குளித்துமனை புக்கிட் டிருப்பரிது 
    சுத்தப் பொயொப்ப ...... துயிர்வாழ்வு 
 துக்கப் பிறப்பகல மிக்கச் சிவத்ததொரு 
   சொர்க்கப் பதத்தை ...... யருள்வாயே 
                          எட்டுக் குலச்சயில முட்டத் தொளைத்தமரர் 
       எய்ப்புத் தணித்த ...... கதிர்வேலா 
                            எத்திக் குறத்தியிரு முத்தத் தனக்கிரியை 
 யெற்பொற் புயத்தி ...... லணைவோனே 
                            வட்டக் கடப்பமலர் மட்டுற்ற செச்சைமலர் 
    வைத்துப் பணைத்த ...... மணிமார்பா 
                       வட்டத் திரைக்கடலில் மட்டித் தெதிர்த்தவரை 
     வெட்டித் துணித்த ...... பெருமாளே. 
    பாடல் 1228   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
              தந்த தானன தந்த தானன 
              தந்த தானன ...... தனதான 
   கண்டு போல்மொழி வண்டு சேர்குழல் 
 கண்கள் சேல்மதி ...... முகம்வேய்தோள் 
    கண்டு பாவனை கொண்டு தோள்களி 
        லொண்டு காதலி ...... லிருகோடு 
       மண்டி மார்பினில் விண்ட தாமென 
         வந்த கூர்முலை ...... மடவார்தம் 
        வஞ்ச மாலதில் நெஞ்சு போய்மடி 
          கின்ற மாயம ...... தொழியாதோ 
  கொண்ட லார்குழல் கெண்டை போல்விழி 
     கொண்டு கோகில ...... மொழிகூறுங் 
    கொங்கை யாள்குற மங்கை வாழ்தரு 
  குன்றில் மால்கொடு ...... செலும்வேலா 
         வெண்டி மாமன மண்டு சூர்கடல் 
         வெம்ப மேதினி ...... தனில்மீளா 
     வென்று யாயையு மன்றி வேளையும் 
        வென்று மேவிய ...... பெருமாளே. 
    பாடல் 1229   ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் -    ...;  தாளம் - 
          தத்தன தத்தன தத்தன தத்தன 
           தத்தன தத்தன ...... தனதான 
                          கப்பரை கைக்கொள வைப்பவர் மைப்பயில் 
      கட்பயி லிட்டிள ...... வளவோரைக் 
    கைக்குள்வ சப்பட பற்கறை யிட்டுமு 
       கத்தைமி னுக்கிவ ...... ருமுபாயப் 
  பப்பர மட்டைகள் பொட்டிடு நெற்றியர் 
  பற்றென வுற்றவொர் ...... தமியேனைப் 
                           பத்மப தத்தினில் வைத்தருள் துய்த்திரை 
      பட்டதெ னக்கினி ...... யமையாதோ 
           குப்பர வப்படு பட்சமி குத்துள 
     முத்தரை யர்க்கொரு ...... மகவாகிக் 
  குத்திர மற்றுரை பற்றுணர் வற்றவொர் 
      குற்றம றுத்திடு ...... முதல்வோனே 
   விப்ரமு னிக்குழை பெற்றகொ டிச்சிவி 
       சித்ரத னக்கிரி...... மிசைதோயும் 
    விக்ரம மற்புய வெற்பினை யிட்டெழு 
   வெற்பைநெ ருக்கிய ...... பெருமாளே. 
    பாடல் 1230 ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் -    ...;  தாளம் - 
        தனதாத்த தய்ய தனதாத்த தய்ய 
           தனதாத்த தய்ய ...... தனதான 
                            கலைகோட்டு வல்லி விலைகாட்டு வில்ல 
   ரிவைமார்க்கு மெய்யி ...... லவநூலின் 
                          கலைகாட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல 
         கடுகாட்டி வெய்ய ...... அதிபாரக் 
                          கொலைகோட்டு கள்ளி டறிவோர்க்கு முள்ள 
  முகையாக்கை நையு ...... முயிர்வாழக் 
                      கொடிகோட்டு மல்லி குரவார்க்கொள் தொல்லை 
  மறைவாழ்த்து செய்ய ...... கழல்தாராய் 
                         சிலைகோட்டு மள்ளர் தினைகாத்த கிள்ளை 
 முலைவேட்ட பிள்ளை ...... முருகோனே 
                             திணிகோட்டு வெள்ளி பவனாட்டி லுள்ள 
       சிறைமீட்ட தில்ல ...... மயில்வீரா 
                         அலைகோட்டு வெள்ள மலைமாக்கள் விள்ள 
   மலைவீழ்த்த வல்ல ...... அயில்மோகா 
     அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல 
      அடியார்க்கு நல்ல ...... பெருமாளே. 
    பாடல் 1231   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                           தனன தந்த தத்தான தனன தந்த தத்தான 
     தனன தந்த தத்தான ...... தனதான 
                     களவு கொண்டு கைக்காசி னளவ றிந்து கர்ப்பூர 
    களப துங்க வித்தார ...... முலைமீதே 
                     கலவி யின்பம் விற்பார்க ளவய வங்க ளைப்பாடு 
                             கவிதெ ரிந்து கற்பார்கள் ...... சிலர்தாமே 
                      உ ளநெ கிழ்ந்த சத்தான வுரைம றந்து சத்தான 
                           உ னையு ணர்ந்து கத்தூரி...... மணநாறும் 
                       உ பய பங்க யத்தாளி லபய மென்று னைப்பாடி 
                             யுருகி நெஞ்சு சற்றோதி ...... லிழிவாமோ 
                       அளவில் வன்க விச்சேனை பரவ வந்த சுக்ணவ 
 அரசு டன்க டற்றுளி ...... யெழவேபோய் 
                           அடலி லங்கை சுட்டாடி நிசிச ரன்த சக்ணவ 
                            மறவொ ரம்பு தொட்டார்த ...... மருகோனே 
                  வளரு மந்த ரச்சோலை மிசைசெ றிந்த முற்பாலை 
                          வனசர் கொம்பி னைத்தேடி ...... யொருவேட 
                   வடிவு கொண்டு பித்தாகி யுருகி வெந்த றக்கானில் 
                           மறவர் குன்றி னிற்போன ...... பெருமாளே. 
    பாடல் 1232   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
   தய்யனா தத்ததன தய்யனா தத்ததன 
        தய்யனா தத்ததன ...... தனதான 
                             கள்ளமீ னச்சுறவு கொள்ளுமீ னற்பெரிய 
        கல்விவீ றக்கரிய ...... மனமாகுங் 
                         கல்விடா துற்றதிசை சொல்விசா ரத்திசைய 
                          மெய்கள்தோ ணிப்பிறவி ...... யலைவேலை 
                         மெள்ள ஏறிக்குரவு வெள்ளிலார் வெட்சிதண 
    முல்லைவே ருற்பலமு ...... ளரிநீபம் 
                          வில்லநீள் பொற்கனக வல்லிமே லிட்டுனது 
                          சொல்லையோ திப்பணிவ ...... தொருநாளே 
                        துள்ளுமா னித்தமுனி புள்ளிமான் வெற்புதவு 
                             வள்ளிமா னுக்குமயல் ...... மொழிவோனே 
                    தொல்வியா ளத்துவளர் செல்வர்யா கத்தரையன் 
    எல்லைகா ணற்கரியர் ...... குருநாதா 
                   தெள்ளுநா தச்சுருதி வள்ளல்மோ லிப்புடைகொள் 
                            செல்வனே முத்தமிணர் ...... பெருவாழ்வே 
                தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ 
                             தெய்வயா னைக்கினிய ...... பெருமாளே. 
    பாடல் 1233 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
      தன்னன தனதன தன்னன தனதன 
          தன்னன தனதன ...... தனதான 
      கன்னியர் கடுவிட மன்னிய கயலன 
       கண்ணிலு மிருகன ...... தனமீதுங் 
   கன்மைகள் மருவிய மன்மத னுருவிலி 
    மென்மைகொ ளுருவிலு ...... மயலாகி 
                           இன்னல்செய் குடிலுட னின்னமு முலகினி 
     லிந்நிலை பெறவிங ...... னுதியாதே 
                            யெண்ணுமு னடியவர் நண்ணிய பதமிசை 
  யென்னையும் வழிபட ...... விடவேணும் 
  பொன்னவ மணிபயில் மன்னவ புனமற 
        மின்முலை தழுவிய ...... புயவீரா 
                          புண்ணிய முளபல விண்ணவர் தொழுமுதல் 
                             எண்மலை யொடுபொரு ...... கதிர்வேலா 
                            தன்னிறை சடையிறை யென்முனி பரவரு 
  இன்னிசை யுறுதமிழ் ...... தெரிவோனே 
                            தண்ணளி தருமொரு பன்னிரு விழிபயில் 
        சண்முக மழகிய ...... பெருமாளே. 
    பாடல் 1234   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                            தந்ததன தத்த தத்த தந்ததன தத்த தத்த 
      தந்ததன தத்த தத்த ...... தனதான 
                 கிஞ்சுகமெ னச்சி வத்த தொண்டையள்மி கக்க றுத்த 
                        கெண்டையள்பு னக்கொ டிச்சி ...... யதிபாரக் 
                   கிம்புரிம ருப்பை யொத்த குங்குமமு லைக்கு றத்தி 
                            கிங்கரனெ னப்ப டைத்த ...... பெயர்பேசா 
             நெஞ்சுருகி நெக்கு நெக்கு நின்றுதொழு நிர்க்கு ணத்தர் 
                        நிந்தனையில் பத்தர் வெட்சி ...... மலர்தூவும் 
                      நின்பதயு கப்ர சித்தி யென்பனவ குத்து ரைக்க 
                         நின்பணித மிழ்த்ர யத்தை ...... யருள்வாயே 
                      கஞ்சன்வர விட்ட துட்ட குஞ்சரம ருப்பொ சித்த 
  கங்கனும தித்தி கைக்க ...... மதம்வீசுங் 
                     கந்தெறிக ளிற்று ரித்து வென்றுதிரு நட்ட மிட்ட 
                            கம்பனும திக்க வுக்ர ...... வடிவேல்கொண் 
                      டஞ்சியஜ கத்ர யத்தை யஞ்சலென விக்ர மித்து 
 அன்பர்புக ழப்பொ ருப்பொ ...... டமராடி 
               அன்றவுண ரைக்க ளத்தில் வென்றுததி யைக்க லக்கி 
                        அண்டர்சிறை வெட்டி விட்ட ...... பெருமாளே. 
    பாடல் 1235   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
  தனதனன தாத்தன தனதனன தாத்தன 
       தனதனன தாத்தன ...... தனதான 
                    குடிமைமனை யாட்டியும் அடிமையொடு கூட்டமும் 
        குலமுமிறு மாப்புமி ...... குதியான 
                   கொடியபெரு வாழ்க்கையி லினியபொரு ளீட்டியெ 
  குருடுபடு மோட்டென ...... வுடல்வீழில் 
                    அடைவுடைவி டாச்சிறு பழையதுணி போர்த்தியெ 
      அரிடசுடு காட்டிடை ...... யிடுகாயம் 
                             அழியுமள வாட்டிலுன் அமலமலர் மாப்பத 
 அருணசர ணாஸ்பதம் ...... அருள்வாயே 
                    அடியினொடு மாத்தரு மொளமொளமொ ளாச்சென 
    அலறிவிழ வேர்க்குல ...... மொடுசாய 
                     அவுணர்படை தோற்பெழ அருவரைக ளார்ப்பெழ 
    அயிலலகு சேப்பெழ ...... மறைநாலும் 
                          உ டையமுனி யாட்பட முடுகவுணர் கீழ்ப்பட 
         உ யரமரர் மேற்பட ...... வடியாத 
                            உ ததிகம ராப்பிள முதுகுலிச பார்த்திபன் 
    உ லகுகுடி யேற்றிய ...... பெருமாளே. 
    பாடல் 1236   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
     தனன தந்த தத்த தனன தந்த தத்த 
         தனன தந்த தத்த ...... தனதான 
                             குறைவ தின்றி மிக்க சலமெ லும்பு துற்ற 
 குடிலி லொன்றி நிற்கு ...... முயிர்மாயம் 
                  குலைகு லைந்து தெர்ப்பை யிடைநி னைந்து நிற்ப 
                             கொடிய கொண்ட லொத்த ...... வுருவாகி 
                     மறலி வந்து துட்ட வினைகள் கொண்ட லைத்து 
    மரண மென்ற துக்க ...... மணுகாமுன் 
                           மனமி டைஞ்ச லற்று னடிநி னைந்து நிற்க 
   மயிலில் வந்து முத்தி ...... தரவேணும் 
 அறுக மிந்து மத்த மலையெ றிந்த அப்பு 
           மளிசி றந்த புட்ப ...... மதுசூடி 
 அருந டஞ்செ யப்ப ரருளி ரங்கு கைக்கு 
                             அரிய இன்சொல் செப்பு ...... முருகோனே 
  சிறுகு லந்த னக்கு ளறிவு வந்து தித்த 
 சிறுமி தன்த னத்தை ...... யணைமார்பா 
                            திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த 
   சிறைதி றந்து விட்ட ...... பெருமாளே. 
    பாடல் 1237   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
     தான தனன தத்த தான தனன தத்த 
         தான தனன தத்த ...... தனதான 
  கோக னகமு கிழ்த்த போக புளகி தத்த 
                             கோடு தலைகு லைத்த ...... முலையாலே 
  கூட வரவ ழைக்கு மாடு குழைய டர்த்த 
   நீடி யகுவ ளைக்கண் ...... மடமானார் 
  ஆக முறவ ணைத்து காசை யபக ரித்து 
        மீள விதழ்க டிப்ப ...... தறியாதே 
 ஆசை யதுகொ ளுத்து மால மதுகு டித்த 
    சேலில் பரித விப்ப ...... தினியேனோ 
      மாக நதிம திப்ர தாப மவுலி யர்க்கு 
                             சாவி யதுவோ ரர்த்த ...... மொழிவோனே 
                            வாகு வலைய சித்ர ஆறி ருபுய வெற்பில் 
    வாழ்வு பெருகு றத்தி ...... மணவாளா 
         வேக வுரக ரத்ந நாக சயன சக்ர 
     மேவி மரக தத்தின் ...... மருகோனே 
                           வீசு திரைய லைத்த வேலை சுவற வெற்றி 
   வேலை யுருவ விட்ட ...... பெருமாளே. 
    பாடல் 1238   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - அமிர்த வர்ஷணி 
    தாளம் - ஆதி 
           தந்தந் தனந்த தந்தந் தனந்த 
            தந்தந் தனந்த ...... தனதான 
        சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த 
 தண்கொங் கைவஞ்சி ...... மனையாளுந் 
     தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை 
      தங்கும் பதங்க ...... ளிளைஞோரும் 
   எந்தன் தனங்க ளென்றென்று நெஞ்சி 
      லென்றும் புகழ்ந்து ...... மிகவாழும் 
    இன்பங் களைந்து துன்பங்கள் மங்க 
      இன்றுன் பதங்கள் ...... தரவேணும் 
   கொந்தின் கடம்பு செந்தண் புயங்கள் 
  கொண்டங் குறிஞ்சி ...... யுறைவோனே 
  கொங்கின் புனஞ்செய் மின்கண்ட கந்த 
         குன்றம் பிளந்த ...... கதிர்வேலா 
                            ஐந்திந் த்ரியங்கள் வென்றொன்று மன்பர் 
       அங்கம் பொருந்து ...... மழகோனே 
       அண்டந் தலங்க ளெங்குங் கலங்க 
      அன்றஞ் சலென்ற ...... பெருமாளே. 
    பாடல் 1239   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - குந்தலவராளி 
            தாளம் - அங்கதாளம் (5 1/2) 
           தகதிமிதகதிமி-4, தகிட-1 1/2 
                          தனதன தனத்த தத்த தனதன தனத்த தத்த 
     தனதன தனத்த தத்த ...... தனதான 
                     சலமல மசுத்த மிக்க தசைகுரு தியத்தி மொய்த்த 
 தடியுடல் தனக்கு ளுற்று ...... மிகுமாயம் 
                        சகலமு மியற்றி மத்த மிகுமிரு தடக்கை யத்தி 
                             தனிலுரு மிகுத்து மக்க ...... ளொடுதாரம் 
               கலனணி துகிற்கள் கற்பி னொடுகுல மனைத்து முற்றி 
                             கருவழி யவத்தி லுற்று ...... மகிழ்வாகிக் 
                     கலைபல பிடித்து நித்த மலைபடு மநர்த்த முற்ற 
                        கடுவினை தனக்குள் நிற்ப ...... தொழியாதோ 
            மலைமக ளிடத்து வைத்து மதிபுனல் சடைக்குள் வைத்து 
                        மழுவனல் கரத்துள் வைத்து ...... மருவார்கள் 
            மடிவுற நினைத்து வெற்பை வரிசிலை யிடக்கை வைத்து 
                       மறைதொழ நகைத்த அத்தர் ...... பெருவாழ்வே 
                  பலதிசை நடுக்க முற்று நிலைகெட அடற்கை யுற்ற 
                        படையது பொருப்பில் விட்ட ...... முருகோனே 
                   பழுதறு தவத்தி லுற்று வழிமொழி யுரைத்த பத்தர் 
                         பலருய அருட்கண் வைத்த ...... பெருமாளே. 
    பாடல் 124 0 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - வாசஸ்பதி 
         தாளம் - ஸங்கீர்ணசாபு (4 1/2) 
            தகதிமி-2, தகிட-1 1/2, தக-1 
    தாந்தன தானதன தாந்தன தானதன 
         தாந்தன தானதன ...... தனதான 
    சாங்கரிபாடியிட வோங்கிய ஞானசுக 
       தாண்டவ மாடியவர் ...... வடிவான 
    சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர் 
     தாங்களு ஞானமுற ...... வடியேனுந் 
                         தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு 
 தோன்றிய சோதியொடு ...... சிவயோகந் 
                           தூண்டிய சீவனோடு வேண்டிய காலமொடு 
                           சோம்பினில் வாழும்வகை ...... அருளாதோ 
                    வாங்குகை யானையென வீன்குலை வாழைவளர் 
  வான்பொழில் சூழும்வய ...... லயலேறி 
                        மாங்கனி தேனொழுக வேங்கையில் மேலரிகள் 
     மாந்திய வாரணிய ...... மலைமீதிற் 
                            பூங்கொடி போலுமிடை யேங்கிட வாரமணி 
         பூண்பன பாரியன ...... தனபாரப் 
            பூங்குற மாதினுட வாடியிருள் 
 பூம்பொழில் மேவிவளர் ...... பெருமாளே. 
    பாடல் 1241  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - கல்யாணி 
              தாளம் - கண்டசாபு (2 1/2) 
   தனதான தந்ததன தனதான தந்ததன 
        தனதான தந்ததன ...... தனதான 
                             சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி 
      சிவபோக மன்பருக ...... அறியாமற் 
                            செகமீது ழன்றுமல வடிவாயி ருந்துபொது 
                             திகழ்மாதர் பின்செருமி ...... யழிவேனோ 
                        தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு 
                           தயவாய்ம கிழ்ந்துதினம் ...... விளையாடத் 
                         தமியேன்ம லங்களிரு வினைநோயி டிந்தலற 
                          ததிநாளும் வந்ததென்முன் ...... வரவேணும் 
                        உ வகாரியன்பர்பணி கலியாணி யெந்தையிட 
       முறைநாய கங்கவுரி...... சிவகாமி 
                      ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது ளங்கனியை 
                          யொருநாள்ப கிர்ந்தவுமை ...... யருள்பாலா 
                             அவமேபி றந்தஎனை யிறவாம லன்பர்புகு 
   மமுதால யம்பதவி ...... யருள்வோனே 
                            அழகாந கம்பொலியு மயிலாகு றிஞ்சிமகிழ் 
                             அயிலாபு கழ்ந்தவர்கள் ...... பெருமாளே. 
    பாடல் 1242   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                             தானத்த தான தந்த தானத்த தான தந்த 
       தானத்த தான தந்த ...... தனதான 
                      சீறிட்டு லாவு கண்கள் மாதர்க்கு நாள்ம ருண்டு 
                       சேவித்து மாசை கொண்டு ...... முழல்வேனைச் 
                          சீரிட்ட மாக நின்ற காசைக்கொ டாத பின்பு 
    சீரற்று வாழு மின்பம் ...... நலியாதே 
                       ஆறெட்டு மாய்வி ரிந்து மாறெட்டு மாகி நின்று 
     மாருக்கு மேவி ளம்ப ...... அறியாதே 
                         ஆகத்து ளேம கிழ்ந்த ஜோதிப்ர காச இன்பம் 
   ஆவிக்கு ளேது லங்கி ...... அருளாதோ 
                         மாறிட்டு வான டுங்க மேலிட்டு மேல கண்டம் 
  வாய்விட்டு மாதி ரங்கள் ...... பிளவாக 
                   வாள்தொட்டு நேர்ந டந்த சூர்வஜ்ர மார்பு நெஞ்சும் 
                        வான்முட்ட வீறு செம்பொன் ...... வரையோடு 
  கூறிட்ட வேல பங்க வீரர்க்கு வீர கந்த 
                            கோதற்ற வேடர் தங்கள் ...... புனம்வாழுங் 
               கோலப்பெண் வாகு கண்டு மாலுற்று வேளை கொண்டு 
  கூடிக்கு லாவு மண்டர் ...... பெருமாளே. 
    பாடல் 1243  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - வாசஸ்பதி 
              தாளம் - கண்டசாபு (2 1/2) 
                       தகிட-1 1/2, தக-1 
   தானதன தானதன தானதன தானதன 
        தானதன தானதன ...... தனதான 
                            சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென 
        தூசுவழ கானவடி ...... வதனாலே 
                           சூதமுட னேருமென மாதர்நசை தேடுபொரு 
     ளாசைதமி லேசுழல ...... வருகாலன் 
                            ஆதிவிதி யோடுபிற ழாதவகை தேடியென 
    தாவிதனை யேகுருகி ...... வருபோது 
  ஆதிமுரு காதிமுரு காதிமுரு காஎனவு 
    மாதிமுரு காநினைவு ...... தருவாயே 
     ஓதமுகி லாடுகிரியேறுபட வாழசுரர் 
       ஓலமிட வேயயில்கொ ...... டமராடீ 
   ஓநமசி வாயகுரு பாதமதி லேபணியும் 
    யோகமயி லாஅமலை ...... மகிழ்பாலா 
     நாதரகு ராமஅரிமாயன்மரு காபுவன 
 நாடுமடி யார்கள்மன ...... துறைவோனே 
                             ஞானசுர வானைகண வாமுருக னேயமரர் 
  நாடுபெற வாழவருள் ...... பெருமாளே. 
    பாடல் 1244  ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
                             தனந்தான தானான தனந்தான தானான 
       தனந்தான தானான ...... தனதான 
                             செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடு 
  சிறந்தியாதி லுமாசை ...... யொழியாத 
   திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடி 
    செயுங்காய நோயாள ...... னரகேழில் 
                           விழுந்தாழ வ்முழ்க இடுங்காலன் மேயாவி 
                            விடுங்கால மேநாயென் ...... வினைபாவம் 
                           விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞான 
  விளம்போசை யேபேசி ...... வரவேணும் 
                             அழுங்கோடி தேவார்க ளமர்ந்தார வானீடி 
     அழன்றேகி மாசீத ...... நெடுவேலை 
                         அதிர்ந்தோட வேகாலன் விழுந்தோட வேகூர 
    அலங்கார வேலேவு ...... முருகோனே 
                      கொழுங்கானி லேமாதர் செழுஞ்சேலை யேகோடு 
 குருந்தேறு மால்மாயன் ...... மருகோனே 
                             குறம்பாடு வார்சேரிபுகுந்தாசை மாதோடு 
    குணங்கூடி யேவாழு ...... பெருமாளே. 
    பாடல் 1245   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - சுத்த சாவேரி
    தாளம் - ஆதி 
         தத்த தனதனன தத்த தனதனன 
           தத்த தனதனன ...... தனதான 
   தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர் 
  தக்க மனையினமு ...... மனைவாழ்வுந் 
   தப்பு நிலைமையணு கைக்கு வரவிரகு 
  தைக்கு மயல்நினைவு ...... குறுகாமுன் 
      பத்தி யுடனுருகி நித்த முனதடிகள் 
     பற்று மருள்நினைவு ...... தருவாயே 
      பத்து முடியுருளு வித்த பகழியினர் 
    பச்சை நிறமுகிலின் ...... மருகோனே 
     அத்தி முகவனழ குற்ற பெழைவயிற 
    னப்ப மவரைபொரி...... அவல்தேனும் 
   அப்பி யமுதுசெயு மொய்ப்ப னுதவஅட 
 விக்குள் மறமகளை ...... யணைவோனே 
                            முத்தி தருமுதல்வர் முக்க ணிறைவரொடு 
                            முற்று மறைமொழியை ...... மொழிவோனே 
  முட்ட வசுரர்கிளை கெட்டு முறியமுதல் 
   வெட்டி யமர்பொருத ...... பெருமாளே. 
    பாடல் 1246   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - பிலஹரி
                 தாளம் - அங்கதாளம் (5) 
           (எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி) 
      தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1 
 தனதனன தானனம் தனதனன தானனம் 
       தனதனன தானனம் ...... தனதான 
                           தலைவலய போகமுஞ் சலனமிகு மோகமுந் 
   தவறுதரு காமமுங் ...... கனல்போலுந் 
                          தணிவரிய கோபமுந் துணிவரிய லோபமுஞ் 
      சமயவெகு ரூபமும் ...... பிறிதேதும் 
                           அலமலமெ னாஎழுந் தவர்களநு பூதிகொண் 
  டறியுமொரு காரணந் ...... தனைநாடா 
 ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின் 
   றபரிமித மாய்விளம் ...... புவதோதான் 
                            கலகஇரு பாணமுந் திலகவொரு சாபமுங் 
 களபமொழி யாதகொங் ...... கையுமாகிக் 
  கவருமவ தாரமுங் கொடியபரிதாபமுங் 
   கருதியிது வேளையென் ...... றுகிராத 
                           குலதிலக மானுடன் கலவிபுரிவாய்பொருங் 
        குலிசகர வாசவன் ...... திருநாடு 
    குடிபுகநி சாசரன் பொடிபடம கீதரன் 
                           குலையநெடு வேல்விடும் ...... பெருமாளே. 
    பாடல் 1247   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ஆபோகி 
           தாளம் - சதுஸ்ர த்ருவம் (14) 
                    (எடுப்பு - /4/4 0/4) 
             தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான 
         தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய ...... பரபாதத் 
    தருமிகள் கருமிகள் வெகுவித சமயிக ளவரொடு ...... சருவாநின் 
      றவனிவ னுவனுட னவளிவ ளுவளது இதுவுது ...... வெனுமாறற் 
  றருவுரு வொழிதரு வுருவுடை யதுபதி தமியனு ...... முணர்வேனோ 
           குவலய முழுவதும் மதிர்பட வடகுவ டிடிபட ...... வுரகேசன் 
   கொடுமுடி பலநெரிதரநெடு முதுகுரை கடல்புனல் ...... வறிதாகத் 
   துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசி ...... சரர்சேனை 
          துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல ...... பெருமாளே. 
    பாடல் 1248   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
   தனதன தாத்தனத் தனதன தாத்தனத் 
        தனதன தாத்தனத் ...... தனதான 
 திதலையு லாத்துபொற் களபம்வி டாப்புதுத் 
      த்ரிவிதக டாக்களிற் ...... றுரகோடு 
                             சிகரம காப்ரபைக் குவடென வாய்த்துநற் 
      சுரர்குடி யேற்றிவிட் ...... டிளநீரை 
                          மதனவி டாய்த்தனத் திளைஞரை வாட்செப் 
                          பிணமுலை மாத்தவக் ...... கொடிபோல்வார் 
                         வலையிலி ராப்பகற் பொழுதுகள் போக்குமற் 
                       றெனையுனை வாழ்த்தவைத் ...... தருள்வாயே 
  சததள பார்த்திபற் கரிபுரு ஷோத்தமற் 
   கெரிகன லேற்றவற் ...... குணராதோர் 
     சகலச மார்த்தசத் தியவன சூக்ஷமுக் 
    கியபர மார்த்தமுற் ...... புகல்வோனே 
   கதிர்மணி நீர்க்கடற் சுழிபுகு ராக்ஷதக் 
         கலகப ராக்ரமக் ...... கதிர்வேலா 
                             கருதிய பாட்டினிற் றலைதெரிமாக்ஷணக் 
 கவிஞரு சாத்துணைப் ...... பெருமாளே. 
    பாடல் 1249   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - நாட்டக்குறிஞ்சி 
              தாளம் - கண்டசாபு (2 1/2) 
 தனதந்த தனதனன தனதந்த தனதனன 
       தனதந்த தனதனன ...... தனதான 
                      திரைவஞ்ச இருவினைகள் நரையங் கமலமழிய 
                          சிவகங்கை தனில்முழுகி ...... விளையாடிச் 
                     சிவம்வந்து குதிகொளக வடிவுன்றன் வடிவமென 
                            திகழண்டர் முநிவர்கண ...... மயன்மாலும் 
                     அரன்மைந்த னெனகளிறு முகனெம்பி யெனமகிழ 
     அடியென்க ணளிபரவ ...... மயிலேறி 
                 அயில்கொண்டு திருநடன மெனதந்தை யுடன்மருவி 
                          அருமந்த பொருளையினி ...... யருள்வாயே 
                    பரியென்ப நரிகள்தமை நடனங்கொ டொருவழுதி 
     பரிதுஞ்ச வருமதுரை ...... நடராஜன் 
                         பழியஞ்சி யெனதருகி லுறைபுண்ட ரிகவடிவ 
                         பவளஞ்சொ லுமைகொழுந ...... னருள்பாலா 
                    இருள்வஞ்ச கிரியவுண ருடனெங்க ளிருவினையு 
                          மெரியுண்டு பொடியஅயில் ...... விடுவோனே 
                       எனதன்பி லுறைசயில மகிழ்வஞ்சி குறமகளொ 
                         டெணுபஞ்ச ணையின்மருவு ...... பெருமாளே. 
    பாடல் 1250 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
          தானான தாத்த தானான தாத்த 
           தானான தாத்த ...... தனதான 
           தீயுதை தாத்ரிபானீய மேற்ற 
        வானீதி யாற்றி ...... கழுமாசைச் 
      சேறுறு தோற்பை யானாக நோக்கு 
         மாமாயை தீர்க்க ...... அறியாதே 
         பேய்பூத மூத்த பாறோரிகாக்கை 
       பீறாஇ ழாத்தி ...... னுடல்பேணிப் 
   பேயோன டாத்து கோமாளி வாழ்க்கை 
       போமாறு பேர்த்து ...... னடிதாராய் 
     வேயூறு சீர்க்கை வேல்வேடர் காட்டி 
       லேய்வாளை வேட்க ...... வுருமாறி 
        மீளாது வேட்கை மீதூர வாய்த்த 
  வேலோடு வேய்த்த ....... ; ளையோனே 
      மாயூர வேற்றின் மீதே புகாப்பொன் 
          மாமேரு வேர்ப்ப ...... றியமோதி 
         மாறான மாக்கள் நீறாக வோட்டி 
         வானாடு காத்த ...... பெருமாளே. 
    பாடல் 1251   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                             தனத்தன தனத்தன தனத்தன தனத்தன 
       தனத்தன தனத்தன ...... தனதான 
                         துடித்தெதிர் வடித்தெழு குதர்க்கச மயத்தவர் 
                          சுழற்கொரு கொடிக்கொடி ...... யெதிர்கூறித் 
                     துகைப்பன கிதத்தலை யறுப்பன யில்விட்டுடல் 
  துணிப்பன கணித்தலை ...... மிசைபார 
                          முடித்தலை விழுப்பன முழுக்கஅ டிமைப்பட 
    முறைப்படு மறைத்திர ...... ளறியாத 
                   முதற்பொருள் புலப்பட வுணர்த்துவ னெனக்கொரு 
                          மொழிப்பொருள் பழிப்பற ...... அருள்வாயே 
 குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன 
   கொழுத்தகு ருதிக்கட ...... லிடையூடே 
 குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன 
   குவட்டினை யிடிப்பன ...... சிலபாடல் 
 படிப்பன திருப்புக ழெடுப்பன முடிப்பன 
                            பயிற்றிய லகைக்குலம் ...... விளையாடப் 
                   பகைத்தெழு மரக்கரை யிமைப்பொழு தினிற்பொடி 
   படப்பொரு துழக்கிய ...... பெருமாளே. 
    பாடல் 1252  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                            தத்த தத்த தானனம் தத்த தத்த தானனம் 
      தத்த தத்த தானனத் ...... தனதான 
                        துத்தி நச்ச ராவிளம் பிச்சி நொச்சி கூவிளஞ் 
   சுக்கி லக்க லாமிர்தப் ...... பிறைசூதம் 
                         சுத்த ரத்த பாடலம் பொற்க டுக்கை யேடலஞ் 
   சுத்த சொற்ப கீரதித் ...... திரைநீலம் 
                     புத்தெ ருக்கு பாழிகங் கொத்தெ டுத்த தாளிதண் 
                          பொற்பு மத்து வேணியர்க் ...... கருள்கூரும் 
                          புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம் 
  புற்பு தப்பி ராணனுக் ...... கருள்வாயே 
                     பத்தி யுற்ற தோகையம் பச்சை வெற்றி வாகனம் 
    பக்க மிட்டு லாவியச் ...... சுரர்மாளப் 
                     பக்க விட்டு வாய்நிணங் கக்க வெட்டி வாய்தரும் 
  பத்ம சிட்ட னோடமுத் ...... தெறிமீனக் 
                     கைத்த லைப்ர வாகையுந் தத்த ளிக்க மாமுறிந் 
     துட்க முத்து வாரணச் ...... சதகோடி 
                     கைக்க ளிற்று வாரணம் புக்கொ ளிக்க வாரணங் 
  கைப்பி டித்த சேவகப் ...... பெருமாளே. 
    பாடல் 1253   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
    தனன தத்த தய்ய தனன தத்த தய்ய 
         தனன தத்த தய்ய ...... தனதான 
                     தெரிவை மக்கள் செல்வ முரிமை மிக்க வுண்மை 
   தெரிவ தற்கு உ ள்ள ...... முணராமுன் 
                       சினமி குத்த திண்ணர் தனிவ ளைத்து வெய்ய 
                           சிலுகு தைத்து வன்மை ...... சிதையாமுன் 
                        பரவை புக்கு தொய்யு மரவ ணைக்குள் வைகு 
       பரம னுக்கு நல்ல ...... மருகோனே 
                 பழுதில் நிற்சொல் சொல்லி யெழுதி நித்த முண்மை 
     பகர்வ தற்கு நன்மை ...... தருவாயே 
                            இருகி ரிக்க ளுள்ள வரைத டிக்கு மின்னு 
 மிடியு மொய்த்த தென்ன ...... எழுசூரை 
                          எழுக டற்கு ளுள்ளு முழுகு வித்து விண்ணு 
                            ளிமைய வர்க்கு வன்மை ...... தருவோனே 
                            அரிவை பக்க முய்ய வுருகி வைக்கு மைய 
                             ரறிய மிக்க வுண்மை ...... யருள்வோனே 
                    அறிவி னுக்கு ளென்னை நெறியில் வைக்க வல்ல 
    அடிய வர்க்கு நல்ல ...... பெருமாளே. 
    பாடல் 1254  ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் -    ...;  தாளம் - 
              தந்தன தந்த தந்தன தந்த 
              தந்தன தந்த ...... தனதான 
     தென்றலு மன்றி யின்றலை பொங்கு 
       திண்கட லொன்று ...... மிகமோதச் 
      செந்தழ லென்று வெந்தழல் சிந்து 
       திங்களும் வந்து ...... துணையேய 
           அன்றிலு மன்றி துன்றுச ரங்க 
       ளைந்துமெ னெஞ்ச ...... மழியாதே 
       அந்தியி லென்றன் வெந்துய ரஞ்ச 
      அன்பொட லங்கல் ...... தரவேணும் 
       வென்றிவி ளங்கு குன்றவர் வஞ்சி 
    விஞ்சிய கொங்கை ...... புணர்மார்பா 
    வெண்டர ளங்கள் தண்டைச தங்கை 
        மின்கொடி லங்கு ...... கழலோனே 
        கொன்றைய ணிந்த சங்கர ரன்று 
              கும்பிட வந்த ...... குமரேசா 
        குன்றிட அண்ட ரன்றுய வென்று 
         குன்றமெ றிந்த ...... பெருமாளே. 
    பாடல் 1255  ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - மோஹனம் 
              தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
                   தகதிமி-2, தகிட-1 1/2 
            தானன தனன தானன தனன 
             தானன தனன ...... தனதான 
          தோரண கனக வாசலில் முழவு 
            தோல்முர சதிர ...... முதிராத 
          தோகையர் கவரிவீசவ யிரியர் 
           தோள்வலி புகழ ...... மதகோப 
               வாரண ரதப தாகினி துரக 
             மாதிர நிறைய ...... அரசாகி 
         வாழினும் வறுமை கூரினு நினது 
      வார்கழ லொழிய ...... மொழியேனே 
               பூரண புவன காரண சவரி
                  பூதர புளக ...... தனபார 
         பூஷண நிருதர் தூஷண விபுதர் 
                 பூபதி நகரி...... குடியேற 
                ஆரண வனச ஈரிரு குடுமி 
          ஆரியன் வெருவ ...... மயிலேறு 
                மாரிய பரம ஞானமு மழகு 
    மாண்மையு முடைய ...... பெருமாளே. 
    பாடல் 1256   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
       தத்தனா தனத்த தத்தனா தனத்த 
          தத்தனா தனத்த ...... தனதான 
    நச்சுவாள் விழிக்கொ டெற்றியே தனத்தை 
        நத்துவார் சுகத்தில் ...... நலமாக 
   நட்டமா மனத்தை யிட்டமே கொடுத்து 
   நத்துவாழ் கடற்கு ...... ளணைபோலே 
       கச்சமே செலுத்தி யச்சமே படுத்து 
       கட்டஏழ் பிறப்பு ...... விடவேதான் 
      கற்றநூ லுகக்க வெட்கமே செறித்த 
   கட்டனே னினைப்ப ...... தொருநாளே 
 இச்சையே செலுத்தி யுச்சிதாள் பலிக்கு 
        மிட்டமா லவற்கு ...... மருகோனே 
                           எற்றுவா ரிதிக்குள் முற்றிநீள் பொருப்பை 
   யெக்கிநேர் மடித்த ....... ; ளையோனே 
   மெச்சவே புடைத்த முத்தமார் தனத்தி 
     மிக்கவாள் படைத்த ...... விழியாலே 
    வெட்டுமா மறத்தி யொக்கவே யிருக்க 
    வெற்றிவே லெடுத்த ...... பெருமாளே. 
    பாடல் 1257   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                           தத்ததன தான தத்த, தத்ததன தான தத்த 
      தத்ததன தான தத்த ...... தனதான 
                நற்குணமு ளார்த மைப்பொல் மைக்குழலி லேசி றக்க 
      நற்பரிம ளாதி துற்ற ...... மலர்சூடி 
                       நச்சுவிழி யால்ம யக்கி யிச்சைபல பேசி யுற்று 
   நற்பொருள வாம னத்தர் ...... வசமாகி 
               வெற்பனைய மாத னத்தை பொற்புறவு றாவ ணைத்து 
   மெத்தமய லாகி நித்த ...... மெலியாதே 
                        வெட்சிகமழ் நீப புஷ்ப வெற்றிசிறு பாத பத்ம 
                          மெய்க்கிருபை நீய ளிப்ப ...... தொருநாளே 
                     ரத்தினப ணாதி ருத்தன் மெய்ச்சுதனு நாடு மிக்க 
   லக்ஷணகு மார சுப்ர ...... மணியோனே 
                  நற்றிசையு மேறி யிட்ட பொய்ச்சமணை வேர றுத்து 
 நற்றிருநி றேப தப்பி ...... விளையாடும் 
                     சற்சனகு மார வ்ருத்தி அற்புதசி வாய னுக்கொர் 
   சற்குருவி நோத சித்ர ...... மயில்வீரா 
                          சக்ரதரன் மார்ப கத்தி லுக்ரமுட னேத ரித்த 
 சத்தியடை யாள மிட்ட ...... பெருமாளே. 
    பாடல் 1258  ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் -    ...;  தாளம் - 
                     தானாந்த தானந் தாத்த தானாந்த தானந் தாத்த 
  தானாந்த தானந் தாத்த ...... தனதான 
                      நாகாங்க ரோமங் காட்டி வாரேந்து நாகங் காட்டி 
    நாமேந்து பாலங் காட்டி ...... யபிராம 
                      நானாங்க ராகங் காட்டி நாகேந்த்ர நீலங் காட்டி 
   நாயேன்ப்ர காசங் காட்டி ...... மடலுர 
                     மேகாங்க கேசங் காட்டி வாயாம்பல் வாசங் காட்டி 
                            மீதூர்ந்த போகங் காட்டி ...... யுயிணர்வார் 
             மேல்வீழ்ந்து தோயுந் தூர்த்தன் மோகாந்த காரந் தீர்க்க 
                             வேதாந்த தீபங் காட்டி ...... யருள்வாயே 
                      ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி 
                            யேடார்ந்த நீபம் போற்றி ...... முகில்தாவி 
            ஏறோங்க லேழுஞ் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றி 
                        யார்வேண்டி னாலுங் கேட்ட ...... பொருளீயும் 
                த்யாகாங்க சீலம் போற்றி வாயோந்தி டாதன் றார்த்து 
 தேசாங்க சூரன் தோற்க ...... மயிலேறிச் 
                      சேவேந்தி தேசம் பார்க்க வேலேந்தி மீனம் பூத்த 
                          தேவேந்த்ர லோகங் காத்த ...... பெருமாளே. 
    பாடல் 1259  ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
    தனதன தனதனத் தனதன தனதனத் 
         தனதன தனதனத் ...... தனதான 
  பரிமள மலரடுத் தகில்மண முழுகிமைப் 
     பரவிய ம்ருகமதக் ...... குழல்மானார் 
                             பருமணி வயிரமுத் திலகிய குழையினிற் 
   படைபொரு வனவிழிக் ...... கயலாலே 
                            எரியுறு மெழுகெனத் தனிமன மடையநெக் 
 கினமையோ டுருகவிட் ...... டவமேயான் 
                         இருவினை நலியமெய்த் திறலுட னறிவுகெட் 
    டிடர்படு வதுகெடுத் ...... தருள்வாயே 
                            சொரிமத அருவிவிட் டொழுகிய புகர்முகத் 
                           தொளைபடு கரமலைக் ...... கிளையோனே 
                           துடியிடை யொருகுறக் குலமயில் புளகிதத் 
 துணைமுலை தழுவுபொற் ...... புயவீரா 
                            அரியன பலவிதத் தொடுதிமி லையுமுடுக் 
 கையுமொகு மொகுவெனச் ...... சதகோடி 
 அலகையு முடனடித் திடவடி யயிலெடுத் 
     தமர்செயு மறுமுகப் ...... பெருமாளே. 
    பாடல் 1260 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
  தத்தனத் தத்தனத் தத்தனத் தத்தனத் 
                  தத்தனத் ...... தனதான 
                       பற்றநெட் டைப்படைத் துட்டிருட் டைத்தயிர்ப் 
   பத்தைமுட் டிப்படுத் ...... தயில்மாதர் 
                            பக்கமிட் டுப்பொருட் கொட்குமிட் டப்பரப் 
                             பற்றுகெட் டுப்பயிர்க் ...... களைபோலுங் 
                          கற்றகட் டுக்கவிக் கொட்டமொட் டிக்கனைத் 
      திட்டுகத் தத்தினுற் ...... றகமாயுங் 
   கட்டமற் றுக்கழற் பற்றிமுத் திக்கருத் 
                            தொக்கநொக் குக்கணித் ...... தருள்வாயே 
   வற்றவட் டக்கடற் கிட்டிவட் டித்துரத் 
    திட்டுமட் டுப்படப் ...... பொருமாயன் 
  மற்றுமொப் புத்தரித்தெட்டஎட் டப்புறத் 
  துற்றஅத் தர்க்கருட் ...... பெருவாழ்வே 
                        செற்றமுற் றச்சினத் திட்டுநெட் டைப்பொருப் 
                            பெட்டைமுட் டிச்செருச் ...... செயும்வேலா 
                             சித்தர்சித் தத்துறப் பற்றிமெத் தப்புகழ்ச் 
  செப்புமுத் தித்தமிழ்ப் ...... பெருமாளே. 
    பாடல் 1261  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                             தானன தான தாத்த தானன தான தாத்த 
       தானன தான தாத்த ...... தனதான 
                         பாதக மான யாக்கை வாதுசெய் பாவி கோத்த 
                             பாணமும் வாளு மேற்ற ....... ; ருபார்வை 
  பாரப டிர மாப்ப யோதர மாதர் வாய்த்த 
   பாயலின் மீத ணாப்பி ...... யிதமாடுந் 
                          தோதக மாய வார்த்தை போதக மாக நோக்கு 
                        தூய்மையில் நாயி னேற்கும் ...... வினைதீரச் 
                           சூழும னாதி நீத்த யானொடு தானி லாச்சு 
                           கோதய ஞான வார்த்தை ...... யருள்வாயே 
 சாதன வேத நூற்பு ராதன பூண நூற்ப்ர 
                            ஜாபதி யாண்மை தோற்க ...... வரைசாடிச் 
 சாகர சூர வேட்டை யாடிய வீர வேற்ப்ர 
       தாபம கீப போற்றி ...... யெனநேமி 
  மாதவன் மாது பூத்த பாகர னேக நாட்ட 
       வாசவ னோதி மீட்க ...... மறைநீப 
                     மாமலர் தூவி வாழ்த்த யானையை மாலை சூட்டி 
                             வானவர் சேனை காத்த ...... பெருமாளே. 
    பாடல் 1262   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
          தான தனந்தன தான தனந்தன 
           தான தனந்தன ...... தனதான 
      பார நறுங்குழல் சோர நெகிழ்ந்துப 
             டீர தனம்புள ...... கிதமாகப் 
    பாவைய ருந்தியல் மூழ்கி நெடும்பரி
          தாப முடன்பரி...... மளவாயின் 
      ஆரமு துண்டணை மீதி லிருந்தநு 
     ராகம் விளைந்திட ...... விளையாடி 
              ஆக நகம்பட ஆர முயங்கிய 
   ஆசை மறந்துனை ...... யுணர்வேனோ 
         நாரத னன்றுச காய மொழிந்திட 
           நாயகி பைம்புன ...... மதுதேடி 
          நாண மழிந்துரு மாறிய வஞ்சக 
           நாடியெ பங்கய ...... பதநோவ 
            மார சரம்பட மோக முடன்குற 
                             வாணர் குறிஞ்சியின் ...... மிசையேபோய் 
       மாமுநி வன்புணர் மானுத வுந்தனி 
   மானை மணஞ்செய்த ...... பெருமாளே. 
    பாடல் 1263   ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் -    ...;  தாளம் - 
        தனதன தனதன தனதன தனதன 
          தானத் தனந்தம் ...... தனதான 
                         பிரமனும் விரகொடு பிணிவினை யிடர்கொடு 
     பேணிக் கரங்கொண் ...... டிருகாலும் 
   பெறநிமிர் குடிலென வுறவுயிர் புகமதி 
           பேதித் தளந்தம் ...... புவியூடே 
     வரவிட வருமுட லெரியிடை புகுதரு 
       வாதைத் தரங்கம் ...... பிறவாமுன் 
   மரகத மயில்மிசை வருமுரு கனுமென 
  வாழ்க்கைக் கொரன்புந் ...... தருவாயே 
                            அருவரை தொளைபட அலைகடல் சுவறிட 
         ஆலிப் புடன்சென் ...... றசுரேசர் 
   அனைவரு மடிவுற அமர்பொரு தழகுட 
                         னாண்மைத் தனங்கொண் ...... டெழும்வேலா 
                             இருவினை யகலிட எழிலுமை யிடமுடை 
      யீசர்க் கிடுஞ்செந் ...... தமிழ்வாயா 
                         இயல்பல கலைகொடு இசைமொழி பவரினும் 
       ஏழைக் கிரங்கும் ...... பெருமாளே. 
    பாடல் 1264   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                           தானன தானன தந்த தானன தானன தந்த 
     தானன தானன தந்த ...... தனதான 
                      பூதக லாதிகள் கொண்டு யோகமு மாகம கிழ்ந்து 
                            பூசைகள் யாதுநி கழ்ந்து ...... பிழைகோடி 
                       போம்வழி யேதுதெ ரிந்து ஆதிய நாதியி ரண்டு 
   பூரணி காரணி விந்து ...... வெளியான 
                            நாதப ராபர மென்ற யோகியு லாசம றிந்து 
                            ஞானசு வாச முணர்ந்து ...... வொளிகாண 
                        நாடியொ ராயிரம் வந்த தாமரை மீதில மர்ந்த 
 நாயகர் பாதமி ரண்டு ...... மடைவேனோ 
                        மாதுசர் வேஸ்வரிவஞ்சி காளிபி டாரிவி பஞ்சி 
    வாணிவ ராகிம டந்தை ...... யபிராமி 
                        வாழ்சிவ காம சவுந்த்ரியாலமெ லாமுக பஞ்ச 
   வாலைபு ராரியி டந்த ...... குமையாயி 
                       வேதபு ராணம்வி ளம்பி நீலமு ராரியர் தங்கை 
 மேலொடு கீழுல கங்கள் ...... தருபேதை 
                       வேடமெ லாமுக சங்க பாடலொ டாடல்ப யின்ற 
 வேணியர் நாயகி தந்த ...... பெருமாளே. 
    பாடல் 1265  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - கரஹரப்ரியா 
        தாளம் - ஆதி - கண்டநடை (20) 
                       (எடுப்பு - அதீதம்) 
     தனந்தா தனந்தா தனந்தா தனந்தா 
          தனந்தா தனந்த ...... தனதான 
                            பெருங்கா ரியம்போல் வருங்கே டுடம்பால் 
         ப்ரியங்கூர வந்து ...... கருவூறிப் 
                             பிறந்தார் கிடந்தா ரிருந்தார் தவழ்ந்தார் 
     நடந்தார் தளர்ந்து ...... பிணமானார் 
                       அருங்கான் மருங்கே யெடுங்கோள் சுடுங்கோள் 
        அலங்கார நன்றி ...... தேன்முழ்கி 
                           அகன்றா சையும்போய் விழும்பா ழுடம்பால் 
  அலந்தேனை யஞ்ச ...... லெனவேணும் 
                            இருங்கா னகம்போ யிளங்கா ளைபின்போ 
      கவெங்கே மடந்தை ...... யெனவேகி 
       எழுந்தே குரங்கா லிலங்கா புரந்தீ 
    யிடுங்கா வலன்றன் ...... மருகோனே 
                     பொருங்கார் முகம்பா ணிகொண்டே யிறைஞ்சார் 
      புறஞ்சாய அம்பு ...... தொடும்வேடர் 
   புனங்கா வலங்கோ தைபங்கா வபங்கா 
   புகழ்ந்தோது மண்டர் ...... பெருமாளே. 
    பாடல் 1266 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
    தத்தத் தனத்தத்த தத்தத் தனத்தத்த 
        தத்தத் தனத்தத்த ...... தனதான 
  மக்கட் பிறப்புக்கு ளொக்கப் பிறப்புற்ற 
   மட்டுற்ற சுற்றத்தர் ...... மனையாளும் 
 மத்யத் தலத்துற்று நித்தப் பிணக்கிட்டு 
    வைத்துப் பொருட்பற்று ...... மிகநாட 
                             நிக்ரித் திடுத்துட்டன் மட்டித் துயிர்பற்ற 
                            நெட்டைக் கயிற்றிட்டு ...... வளையாமுன் 
 நெக்குக் குருப்பத்தி மிக்குக் கழற்செப்ப 
  நிற்றத் துவச்சொற்க ...... ளருள்வாயே 
                             திக்கப் புறத்துக்குள் நிற்கப் புகழ்ப்பித்த 
                            சித்ரத் தமிழ்க்கொற்ற ...... முடையோனே 
                             சிப்பக் குடிற்கட்டு மற்பக் குறத்திச்சொல் 
   தித்திப்பை யிச்சிக்கு ...... மணவாளா 
                            முக்கட் சடைச்சித்த ருட்புக் கிருக்கைக்கு 
 முத்தித் துவக்குற்று ...... மொழிவோனே 
                        முட்டச் சினத்திட்டு முற்பட் டிணர்க்கொக்கை 
                            முட்டித் தொளைத்திட்ட ...... பெருமாளே. 
    பாடல் 1267   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
    தத்தனா தத்ததன தத்தனா தத்ததன 
         தத்தனா தத்ததன ...... தனதான 
                          மக்கள்தா யர்க்குமரு கர்க்குமா மர்க்குமனை 
   விக்கும்வாழ் நர்க்குமிக ...... மனதூடே 
                          மைத்தவே லைக்குநெடி துற்றமா யத்துயரம் 
    வைத்துவா டச்சமனு ...... முறமேவித் 
 திக்குநா டிக்கரிய மெய்க்கடா விற்றிருகி 
     திக்கஆ விக்களவு ...... தெரியாமுன் 
 சித்தமோ வித்துயிலு மற்றுவா ழச்சிறிது 
       சித்ரபா தக்கமல ...... மருள்வாயே 
                           இக்குவே ளைக்கருக முக்கணா டிக்கனலை 
                             யிட்டுயோ கத்தமரு ...... மிறையோர்முன் 
    எச்சரா திக்குமுற நிற்குமா யற்குமுத 
                        லெட்டொணா வித்தைதனை ...... யினிதீவாய் 
                             பக்கஆர் வத்துடனுள் நெக்குநா டிப்பரவு 
    பத்தர்பா டற்குருகு ...... முருகோனே 
                       பக்கம் யானைத்திருவொ டொக்கவா ழக்குறவர் 
   பச்சைமா னுக்கினிய ...... பெருமாளே. 
    பாடல் 1268  ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் -    ...;  தாளம் - 
       தனனத் தனதன தனனத் தனதன 
          தனனத் தனதன ...... தனதான 
       மதனிக் கதுகொடு பதுமப் புதுமலர் 
        மலையப் படவிடு ...... வலியாலே 
 வனமுற் றினவளை யினநித் திலமலை 
   வலையத் துகள்வளை ...... கடலாலே 
       விதனப் படுமதி வதனக் கொடியற 
      வெருவிப் பரிமள ...... அணைமீதே 
                             மெலியக் கலைதலை குலையத் தகுமினி 
      விரையக் குரவலர் ...... தரவேணும் 
    புதனைச் சதுமுக விதியச் சுதனெதிர் 
   புனைவித் தவர்தொழு ...... கழல்வீரா 
   பொருகைச் சரிவரிபெருகச் செறிவுறு 
     புனமெய்க் குறமகள் ...... மணவாளா 
         முதுநற் சரவண மதனிற் சததள 
     முளரிப் பதிதனி ...... லுறைவோனே 
       முதுமைக் கடலட ரசுரப் படைகெட 
      முடுகிப் பொரவல ...... பெருமாளே. 
    பாடல் 1269   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - தன்யாஸி 
            தாளம் - அங்கதாளம் (5 1/2) 
    தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 
                          தனதன தனான தான தனதன தனான தான 
     தனதன தனான தான ...... தனதான 
                      மதிதனை யிலாத பாவி குருநெற யிலாத கோபி 
                            மனநிலை நிலாத பேயன் ...... அவமாயை 
                      வகையது விடாத பேடி தவநினை விலாத மோடி 
                            வரும்வகை யிதேது காய ...... மெனநாடும் 
                விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை 
                         வினையிகல் விடாத கூள ...... னெனைநீயும் 
                         மிகுபர மதான ஞான நெறிதனை விசார மாக 
  மிகுமுன ருப தான ...... மருள்வாயே 
                        எதிர்வரு முதார சூர னிருபிள வதாக வேலை 
     யியலொடு கடாவு தீர ...... குமரேசா 
                   இனியசொல் மறாத சீலர் கருவழி வராமல் நாளும் 
                           இளமையது தானு மாக ...... நினைவோனே 
                           நதியுட னராவு பூணு பரமர்குரு நாத னான 
   நடைபெறு க்டுர மான ...... மயில்வீரா 
                       நகைமுக விநோத ஞான குறமினுட னேகு லாவு 
 நவமணி யுலாவு மார்ப ...... பெருமாளே. 
    பாடல் 1270 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
                           தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத் 
       தனந்தாத் தனத்தம் ...... தனதான 
                          மலந்தோற் சலந்தேற் றெலும்பாற் கலந்தீட் 
       டிடுங்கூட் டினிற்றங் ...... கிடுமாய 
                           மயங்காத் தியங்காப் பயங்கோட் டிடுங்காற் 
  றுடன்போக் குறத்தந் ...... தையுமாதும் 
                        குலந்தாய்க் குடம்பாற் பிறந்தேற் றிடுங்கோத் 
      தடங்கூப் பிடத்தம் ...... புவியாவும் 
                      குலைந்தார்ப் பெழுங்காட் டிலந்தாட் களன்பாற் 
                             குணங்காத் துனைக்கும் ...... பிடஆளாய் 
                    தலந்தாட் டொடண்டாத் தளைந்தார்க் கிளங்காத் 
  தடந்தாட் புடைத்தன் ...... பினர்வாழத் 
                          தருங்கூத் தரும்பார்த் துகந்தேத் திடஞ்சாத் 
  திரஞ்சாற் றிநிற்கும் ...... பெருவாழ்வே 
                       அலைந்தாற் றெழுங்கோச் சலந்தீக் கலந்தாட் 
  டரம்போச் செனக்கன் ...... றிடும்வேலா 
                       அறங்காத் துறங்காத் திறம்பார்த் திருந்தோர்க் 
                             கயர்ந்தோர்க் களிக்கும் ...... பெருமாளே. 
    பாடல் 1271  ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
                            தனதான தான தந்த தனதான தான தந்த 
      தனதான தான தந்த ...... தனதான 
                      மனநூறு கோடி துன்ப நொடிமீதி லேநி னைந்து 
       மதனூட லேமு யங்கி ...... யதீருப 
                         மடமாத ராசை கொண்டு புவிமீதி லேம யங்கி 
    மதிசீரெ லாம ழிந்து ...... கொடிதான 
                        விநன்முடி யேதி ரிந்து புவிமீதி லேயு ழன்று 
                           விரகான்மெ யேத ளர்ந்து ...... விடுநாளில் 
                    விசையான தோகை துங்க மயிலேறி யோடி வந்து 
                             வெளிஞான வீடு தந்து ...... அருள்வாயே 
                  தினைவேடர் காவல் தங்கு மலைகாடெ லாமு ழன்று 
  சிறுபேதை கால்ப ணிந்த ...... குமரேசா 
                 திரையாழி சேது கண்டு பொருராவ ணேசை வென்ற 
                            திருமால்மு ராரிதங்கை ...... யருள்பாலா 
                முனிவோர்கள் தேவ ரும்பர் சிறையாக வேவ ளைந்த 
                           மதுசூரர் தானை தங்கள் ...... கிளையோடு 
                        முடிகோடி தூளெ ழுந்து கழுகோடு பாற ருந்த 
                          முனைவேலி னாலெ றிந்த ...... பெருமாளே. 
    பாடல் 1272  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                        தானதன தனத்ததந்த, தானதன தனத்ததந்த 
     தானதன தனத்ததந்த ...... தனதான 
                    மாதர்மயல் தனிற்கலந்து காமபனி யெனப்புகுந்து 
   மாடவிய லெனச்சுழன்று ...... கருவூறி 
                     மாறிபல வெனச்சுமந்து தேனுகுட மெனத்திரண்டு 
                            மாதமிது வெனத்தளர்ந்து ...... வெளியாகி 
                   வேதபுவி தனிற்கழன்று ஏனமென வெனத்தவழ்ந்து 
                       வீறுமணி களைப்புனைந்து ...... நடைமேலாய் 
                   வேணவித மெனத்திரிந்து நாறுபுழு குடற்றிமிர்ந்து 
                            வேசிவலை தனிற்கலந்து ...... மடிவேனோ 
                  ஆதிசர ணெனக்கயங்கு லாவமுத லையைக்கிடங்கி 
 லாரவுடல் தனைப்பிளந்த ...... அரிநேமி 
              ஆமைகய லெனச்செயங்கொள் கோலகுற ளரித்தடங்கை 
                          யானஅர வணைச்சயந்தன் ...... மருகோனே 
               சோதியுரு வெனத்திரண்டு கோலஅரு ணையிற்கலந்த 
                            சோமனணி குடிற்சிலம்ப ...... னருள்பாலா 
                      தோகைமயி லெனச்சிறந்த ரூபிகுற மகட்கிரங்கி 
                         தோள்களிறு கிடப்புணர்ந்த ...... பெருமாளே. 
    பாடல் 1273   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
   தத்ததன தானனத் தத்ததன தானனத் 
        தத்ததன தானனத் ...... தனதான 
                         முத்துமணி யாரமொய்த் திட்டஇரு கோடுமுற் 
        பட்டகரிபோலுமத் ...... தனமாதர் 
                           முற்றுமதி யார்முகத் துற்றமுனை வேலுறப் 
                            பட்டுமுகில் போல்மனத் ...... திருள்மூடிச் 
                        சுத்தமதி போய்வினைத் துட்டனவ னாய்மனத் 
        துக்கமுற வேமிகச் ...... சுழலாதே 
                     சொற்கள்பல நாவினிற் றொட்டுனிரு தாடொழச் 
 சொற்கமல வாழ்வுசற் ...... றருள்வாயே 
                             கொத்துமுடி யானபத் தற்றுவிழ வேகுறிப் 
    புற்றஅதி கோபனச் ...... சுதன்மாயன் 
                           கொற்றமரு காகுறக் கொச்சைமற மாதினுக் 
     கிச்சைமொழி கூறுநற் ...... குமரேசா 
                       பத்தியுட னேநினைத் தெத்துமடி யார்வினைப் 
                             பற்றுவிடு மாமறைப் ...... பொருளானாய் 
                            பத்திவர ஞானசொற் கற்றவர்கள் பாடுநற் 
   பக்ஷபத தேவர்மெய்ப் ...... பெருமாளே. 
    பாடல் 1274   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - பாகேஸ்ரீ 
            தாளம் - அங்கதாளம் (5 1/2) 
       தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2 
                      தனதன தானத் தானன தனதன தானத் தானன 
   தனதன தானத் தானன ...... தனதான 
                             முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரி
   முகுளப டீரக் கோமள ...... முலைமீதே 
                      முழுகிய காதற் காமுக பதிபசு பாசத் தீர்வினை 
                            முதியபு ராரிக் கோதிய ...... குருவேயென் 
                        றுருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியு 
                          முணர்வினோ டூடிக் கூடியும் ...... வழிபாடுற் 
              றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி 
                          யுனதடி யாரைச் சேர்வது ...... மொருநாளே 
                மருகனெ னாமற் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன் 
                           வரவிடு மாயப் பேய்முலை ...... பருகாமேல் 
              வருமத யானைக் கோடவை திருகிவி ளாவிற் காய்கனி 
 மதுகையில் வீழச் சாடிய ...... சதமாபுட் 
               பொருதிரு கோரப் பாரிய மருதிடை போயப் போதொரு 
                      சகடுதை யாமற் போர்செய்து ...... விளையாடிப் 
                  பொதுவியர் சேரிக் கேவளர் புயல்மரு காவஜ் ராயுத 
                          புரமதில் மாபுத் தேளிர்கள் ...... பெருமாளே. 
    பாடல் 1275   ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - பந்து வராளி 
    தாளம் - ஆதி 
           தானா தனதன தானா தனதன 
            தானா தனதன ...... தனதான 
         மூலா நிலமதின் மேலே மனதுறு 
         மோகா டவிசுடர் ...... தனைநாடி 
  மோனா நிலைதனை நானா வகையிலு 
     மோதா நெறிமுறை ...... முதல்கூறும் 
           லீலா விதமுன தாலே கதிபெற 
             நேமா ரகசிய ...... வுபதேசம் 
      நநடு ழிதனிலை வாடா மணியொளி 
             நீதா பலமது ...... தருவாயே 
         நாலா ருசியமு தாலே திருமறை 
         நாலா யதுசெப ...... மணிமாலை 
           நாடாய் தவரிடர் கேடா வரிகரி
        நாரா யணர்திரு ...... மருகோனே 
       சூலா திபர்சிவ ஞானார் யமனுதை 
           காலார் தரவரு ...... குருநாதா 
            தோதீ திகுதிகு தீதீ செகசெக 
          சோதீ நடமிடு ...... பெருமாளே. 
    பாடல் 1276  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
     தனதனந் தனந்த தனதனந் தனந்த 
         தனதனந் தனந்த ...... தனதான 
    வரிபரந் திரண்டு நயனமுஞ் சிவந்து 
 வதனமண் டலங்கள் ...... குறுவேர்வாய் 
  மணிசிலம் பலம்ப அளகமுங் குலைந்து 
         வசமழிந் திழிந்து ...... மயல்கூர 
                             இருதனங் குலுங்க இடைதுவண் டனுங்க 
                         இனியதொண் டையுண்டு ...... மடவார்தோள் 
                             இதமுடன் புணர்ந்து மதிமயங் கினும்பொ 
     னிலகுநின் பதங்கள் ...... மறவேனே 
      விரிபரந் தியங்கு முததியுங் கலங்க 
   விடமினும் பிறந்த ...... தெனவானோர் 
                            வெருவிநெஞ் சமஞ்சி யுரனொடுந் தயங்கி 
                            விரைபதம் பணிந்து ...... முறையோவென் 
                         றுரைமறந் துணங்க அயில்தொடும் ப்ரசண்ட 
    உ யர்தலங் குலுங்க ...... வருதோகை 
 ஒருபெருஞ் சிகண்டி மயிலமர்ந் திலங்கி 
       உ லகமும் புரந்த ...... பெருமாளே. 
    பாடல் 1277  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                             தனதன தான தான, தனதன தான தான 
       தனதன தான தான ...... தனதான 
   வரிவிழி பூச லாட இருகுழை யூச லாட 
  வளர்முலை தானு மாட ...... வளையாட 
                           மணிவட மாலை யாட முருகவி ழோதி யாட 
        மதுரமு தூறி வீழ ...... அநுராகம் 
                            இருவரு மேக போக மொருவர்த மாக மாக 
  இதமொடு கூடி மாயை ...... படுபோதும் 
    இருகர மாறு மாறு மறுமுக நீப மார்பு 
    மிருகழல் தானு நானு ...... மறவேனே 
  திருநட மாடு காளி பயிரவி மோடி சூலி 
     திரிபுர நீற தாக ...... அனல்மோதுஞ் 
                           சிவைகயி லாச வாசி மலைமகள் நாரிபாரி
 திருமுலை யாயி தாயி ...... யருள்பாலா 
                            குருபர நாத னாகி யரனொரு காதி லோது 
  குணநிதி யாசை நேச ...... முருகோனே 
 குறமக ளார பார முகிழ்முலை மீது தாது 
  குலவிய மாலை மேவு ...... பெருமாளே. 
    பாடல் 1278   ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் - ஆனந்த பைரவி 
                           தாளம் - சதுஸ்ர மட்யம் - கண்டநடை (25) 
                           தனதனன தனதனன தனதனன தனதனன 
                தத்தத் தனந்தனம் தத்தத் தனந்தனம் ...... தந்ததான 
                  விழையுமனி தரையுமுநி வரையுமவ ருயிர் துணிய 
      வெட்டிப் பிளந்துளம் பிட்டுப் பறிந்திடுஞ் ...... செங்கண்வேலும் 
                        விரையளக முகிலுமிள நகையும்ருக மதகனவி 
        சித்ரத் தனங்களுந் தித்தித்த தொண்டையும் ...... புண்டாணகச் 
                           சுழிமடுவு மிடையுமழ கியமகளிர் தருகலவி 
         சுட்டித் திரிந்திஙன் தட்டுப் படுங்கொடும் ...... பங்கவாழ்வுந் 
                      தொலைவில்பிற வியுமகல வொருமவுன பரமசுக 
           சுத்தப் பெரும்பதஞ் சித்திக்க அன்புடன் ...... சிந்தியாதோ 
                         எழுதரிய அறுமுகமு மணிநுதலும் வயிரமிடை 
        யிட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களுந் ...... துங்கநீள்பன் 
                   னிருகருணை விழிமலரு மிலகுபதி னிருகுழையும் 
          ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களுஞ் ...... செம்பொனூலும் 
                   மொழிபுகழு முடைமணியு மரைவடமு மடியிணையு 
      முத்தச் சதங்கையுஞ் சித்ரச் சிகண்டியுஞ் ...... செங்கைவேலும் 
  முழுதுமழ கியகுமர கிரிகுமரியுடனுருகு 
           முக்கட் சிவன்பெருஞ் சற்புத்ர வும்பர்தந் ...... தம்பிரானே. 
    பாடல் 1279   ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் -    ...;  தாளம் - 
         தானதன தாத்த தானதன தாத்த 
           தானதன தாத்த ...... தனதான 
   வீணையிசை கோட்டி யாலமிட றுட்டு 
      வீரமுனை யீட்டி ...... விழியார்தம் 
 வேதனையில் நாட்ட மாகியிடர் பாட்டில் 
          வீழுமயல் தீட்டி ...... யுழலாதே 
   ஆணியுள வீட்டை மேவியுள மாட்டை 
          யாவலுட னீட்டி ...... யழியாதே 
    ஆவியுறை கூட்டில் ஞானமறை யூட்டி 
     யானநிலை காட்டி ...... யருள்வாயே 
    கேணியுற வேட்ட ஞானநெறி வேட்டர் 
    கேள்சுறுதி நாட்டி ...... லுறைவோனே 
      கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு 
      கீரரியல் கேட்ட ...... க்ருபைவேளே 
    சேணினுயர் காட்டில் வாழுமற வாட்டி 
    சீதவிரு கோட்டி ...... லணைவோனே 
      சீறவுணர் நாட்டி லாரவழல் மூட்டி 
      தேவர்சிறை மீட்ட ...... பெருமாளே. 
    பாடல் 1280 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
    தானனா தத்ததன தானனா தத்ததன 
         தானனா தத்ததன ...... தனதான 
                       வேலைவா ளைக்கொடிய ஆலகா லத்தைமதன் 
    வீசுபா ணத்தைநிக ...... ரெனலாகும் 
                           வேதைசா தித்தவிழி மாதரா பத்தில்விளை 
      யாடிமோ கித்திரியும் ...... வெருப 
                             கோலகா லத்தைவிட லாகிமா றக்குணவி 
        காரமோ டத்தெளிய ...... அரிதான 
 கூறொணா தற்பரம ஞான்ரு பத்தின்வழி 
      கூடலா கப்பெருமை ...... தருவாயே 
                            வாலிமார் பைத்துணிய ஏழ்மரா இற்றுவிழ 
      வாளிபோ டக்கருது ...... மநுராமன் 
                            வானுலோ கத்திலம ரேசனோ லிக்கவளை 
    யூதிமோ கித்துவிழ ...... அருள்கூரும் 
     நீலமே னிக்குமரு காவுதா ரத்துவரு 
                          நீசர்வாழ் வைக்களையு ...... மிளையோனே 
                           நேசமா கக்குறவர் தோகைமா னைப்புணரு 
    நீபதோ ளொப்பரிய ...... பெருமாளே. 
    பாடல் 1281   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - அஸாவேரி
    தாளம் - ஆதி 
                    (எடுப்பு - 3/4 இடம்) 
          தத்ததன தானத் ...... தனதான 
         இத்தரணி மீதிற் ...... பிறவாதே 
         எத்தரொடு கூடிக் ...... கலவாதே 
      முத்தமிழை யோதித் ...... தளராதே 
      முத்தியடி யேனுக் ...... கருள்வாயே 
   தத்துவமெய்ஞ் ஞானக் ...... குருநாதா 
      சத்தசொரு பாபுத் ...... தமுதோனே 
    நித்தியக்ரு தாநற் ...... பெருவாழ்வே 
   நிர்த்தஜெக ஜோதிப் ...... பெருமாளே. 
    பாடல் 1282   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - பூர்வி கல்யாணி 
              தாளம் - மிஸ்ர ஜம்பை (10) 
                           தந்தந்த தனத்தன தாத்தன ...... தனதான 
                  என்பந்த வினைத்தொடர் போக்கிவி ...... சையமாகி 
                         இன்பந்தனை யுற்றும காப்ரிய ...... மதுவாகி 
                       அன்புந்திய பொற்கிணி பாற்கட ...... லமுதான 
                   அந்தந்தனி லிச்சைகொ ளாற்பத ...... மருள்வாயே 
                      முன்புந்தி நினைத்துரு வாற்சிறு ...... வடிவாகி 
                        முன்திந்தி யெனப்பர தாத்துட ...... னடமாடித் 
                         தம்பந்த மறத்தவ நோற்பவர் ...... குறைதீரச் 
                     சம்பந்த னெனத்தமிழ் தேக்கிய ...... பெருமாளே. 
    பாடல் 1283   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - நடபைரவி 
                 தாளம் - திஸ்ர ஏகம் (3) 
          தனத்தத் தானத் ...... தனதான 
          கருப்பற் றுறிப் ...... பிறவாதே 
          கனக்கப் பாடுற் ...... றுழலாதே 
          திருப்பொற் பாதத் ...... தநுபூதி 
       சிறக்கப் பாலித் ...... தருள்வாயே 
         பரப்பற் றாருக் ...... குரியோனே 
        பரத்தப் பாலுக் ...... கணியோனே 
   திருக்கைச் சேவற் ...... கொடியோனே 
     செகத்திற் சோதிப் ...... பெருமாளே. 
    பாடல் 1284   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ஆரபி 
    தாளம் - சங்கீர்ண த்ருபுடை /9 0 0 
             (எடுப்பு - 1 அக்ஷரம் தள்ளி) 
                தனத்த தத்தத் தனத்த தத்தத் தனத்த ...... தனதான 
          கருப்பை யிற்சுக் கிலத் துலைத்துற் பவித்து ...... மறுகாதே 
            கபட்ட சட்டர்க் கிதத்த சித்ரத் தமிழ்க்க ...... ளுரையாதே 
        விருப்ப முற்றுத் துதித்தெ னைப்பற் றெனக்க ...... ருதுநீயே 
           வெளிப்ப டப்பற் றிடப்ப டுத்தத் தருக்கி ...... மகிழ்வோனே 
        பருப்ப தத்தைத் தொளைத்த சத்திப் படைச்ச ...... மரவேளே 
         பணிக்கு லத்தைக் கவர்ப்ப தத்துக் களித்த ...... மயிலோனே 
        செருப்பு றத்துச் சினத்தை முற்றப் பரப்பு ...... மிசையோனே 
     தினைப்பு னத்துக் குறத்தி யைக்கைப் பிடித்த ...... பெருமாளே. 
    பாடல் 1285   ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் - வாசஸ்பதி 
            தாளம் - அங்கதாளம் (7 1/2) 
 தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3 
         தனதனன தானத் ...... தனதான 
                             கொடியமத வேள்கைக் ...... கணையாலே 
      குரைகணெடு நீலக் ...... கடலாலே 
   நெடியபுகழ் சோலைக் ...... குயிலாலே 
 நிலைமைகெடு மானைத் ...... தழுவாயே 
      கடியரவு பூணர்க் ...... கினியோனே 
                             கலைகள்தெரிமாமெய்ப் ...... புலவோனே 
    அடியவர்கள் நேசத் ...... துறைவேலா 
     அறுமுகவி நோதப் ...... பெருமாளே. 
    பாடல் 1286   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
       தானான தானதனத் ...... தனதான 
  கோடான மேருமலைத் ...... தனமானார் 
      கோமாள மாவலைக் ...... குழலாதே 
                          நாடோ று மேன்மைபடைத் ...... திடவேதான் 
                         நாயேனை யாளநினைத் ...... திடொணாதோ 
  ஈடேற ஞானமுரைத் ...... தருள்வோனே 
                             ஈராறு தோள்கள்படைத் ...... திடுவோனே 
     மாடேறு மீசர்தமக் ...... கினியோனே 
   மாதானை யாறுமுகப் ...... பெருமாளே. 
    பாடல் 1287   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - சாரங்கா 
            தாளம் - அங்கதாளம் (8 1/2) 
                      தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமிதக-3 
   தனன தத்தன தாத்தன ...... தனதான 
                         சமய பத்தி வ்ருதாத்தனை ...... நினையாதே 
                            சரண பத்ம சிவார்ச்சனை ...... தனைநாடி 
                          அமைய சற்குரு சாத்திர ...... மொழிநூலால் 
                         அருளெ னக்கினி மேற்றுனை ...... தருவாயே 
                        உ மைமுலைத்தரு பாற்கொடு ...... அருள்கூறி 
                             உ ரிய மெய்த்தவ மாக்கிந ...... லுபதேசத் 
                         தமிழ்த னைக்கரை காட்டிய ...... திறலோனே 
                           சமண ரைக்கழு வேற்றிய ...... பெருமாளே. 
    பாடல் 1288 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
        தனதன தாத்தனத் ...... தனதான 
        சருவிய சாத்திரத் ...... திரளான 
        சடுதிக ழாஸ்பதத் ...... தமையாத 
       அருமறை யாற்பெறற் ...... கரிதாய 
                           அனிதய வார்த்தையைப் ...... பெறுவேனோ 
       நிருதரை மூக்கறுத் ...... தெழுபார 
                           நெடுதிரை யார்ப்பெழப் ...... பொருதோனே 
    பொருளடி யாற்பெறக் ...... கவிபாடும் 
  புலவரு சாத்துணைப் ...... பெருமாளே. 
    பாடல் 1289  ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் -    ...;  தாளம் - 
          தனத்தத் தானன ...... தனதான 
        சினத்துச் சீறிய ...... வழிகாணச் 
         சிரித்துப் பேசியு ...... மயல்பூண 
                             கனத்துப் போர்செயு ...... முலைதோணக் 
       கலைக்குட் பாதியு ...... மறைவாக 
        மனத்துக் காறுதல் ...... வருமாறு 
        மலைப்பப் பேணியு ...... மிகவாய 
                             தனத்தைச் சூறைகொள் ...... மடவார்தம் 
   சதிக்குப் போம்வழி ...... தவிர்வேனோ 
    தெனத்தத் தாதென ...... எனவேபண் 
     திருத்தத் தோடளி ...... யிசைபாடும் 
  புனத்துக் காவல்கொள் ...... குறமாதின் 
      புணர்ச்சிக் கேயொரு ...... வழிதேடி 
         இனத்துக் காவல ...... ரறியாமல் 
                          இணக்கித் தோகையை ...... மகிழ்வோயென் 
                           றெனக்குத் தாளிணை ...... யருள்வாய்சூர் 
   இறக்கப் போர்செய்த ...... பெருமாளே. 
    பாடல் 1290 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
           தானத் தானன ...... தந்ததான 
        தீதுற் றேயெழு ...... திங்களாலே 
      தீயைத் தூவிய ...... தென்றலாலே 
         போதுற் றாடும ...... நங்கனாலே 
       போதப் பேதைந ...... லங்கலாமோ 
    வேதத் தோனைமு ...... னிந்தகோவே 
       வேடப் பாவைவி ...... ரும்புமார்பா 
           ஓதச் சூதமெ ...... றிந்தவேலா 
     ஊமைத் தேவர்கள் ...... தம்பிரானே. 
    பாடல் 1291   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ஹம்ஸாநந்தி 
            தாளம் - அங்கதாளம் (7 1/2) 
                          தகிட-1 1/2, தக-1, தகதிமி-2, தகதிமிதக-3 
          தய்யதன தானத் ...... தனதான 
 துள்ளுமத வேள்கைக் ...... கணையாலே 
    தொல்லைநெடு நீலக் ...... கடலாலே 
   மெள்ளவரு சோலைக் ...... குயிலாலே 
     மெய்யுருகு மானைத் ...... தழுவாயே 
  தெள்ளுதமிழ் பாடத் ...... தெளிவோனே 
       செய்யகும ரேசத் ...... திறலோனே 
  வள்ளல்தொழு ஞானக் ...... கழலோனே 
     வள்ளிமண வாளப் ...... பெருமாளே. 
    பாடல் 1292   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                தானதனத் ...... தனதான 
          தேனியல்சொற் ...... கணிமாதர் 
            சேவைதனைக் ...... கருதாதே 
            யானெனதற் ...... றிடுபோதம் 
             யானறிதற் ...... கருள்வாயே 
                 வானவருக் ...... கரசான 
             வாசவனுக் ...... கினியோனே 
         ஆனைமுகற் ...... கிளையோனே 
              ஆறுமுகப் ...... பெருமாளே. 
    பாடல் 1293  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
        தானதன தானனத் ...... தனதான 
    நாரியர்க ளாசையைக் ...... கருதாதே 
         நானுனிரு பாதபத் ...... மமுநாட 
      ஆரமுத மானசர்க் ...... கரைதேனே 
      ஆனஅநு பூதியைத் ...... தருவாயே 
          காரணம தானவுத் ...... தமசீலா 
  கானகுற மாதினைப் ...... புணர்வோனே 
                             சூரர்கிளை தூளெழப் ...... பொரும்வேலா 
 தோகைமயில் வாகனப் ...... பெருமாளே. 
    பாடல் 1294   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - கமாஸ் 
            தாளம் - அங்கதாளம் (6 1/2) 
    தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமிதக-3 
              தான தனத்த ...... தனதான 
              நாளு மிகுத்த ...... கசிவாகி 
          ஞான நிருத்த ...... மதைநாடும் 
               ஏழை தனக்கு ...... மநுபூதி 
         ராசி தழைக்க ...... அருள்வாயே 
            பூளை யெருக்கு ...... மதிநாக 
           பூண ரளித்த ...... சிறியோனே 
            வேளை தனக்கு ...... சிதமாக 
         வேழ மழைத்த ...... பெருமாளே. 
    பாடல் 1295  ( பொதுப்பாடல்கள் ) 
 
    ராகம் - கந்தலவராளி 
            தாளம் - அங்கதாளம் (8 1/2) 
          தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமிதக-3 
      தத்தனத் தனனதத்த ...... தனதான 
                             நித்தமுற் றுனைநினைத்து ...... மிகநாடி 
                         நிட்டைபெற் றியல்கருத்தர் ...... துணையாக 
     நத்தியு தமதவத்தி ...... னெறியாலே 
 லக்யலக் கணநிருத்த ...... மருள்வாயே 
  வெற்றிவிக் ரமவரக்கர் ...... கிளைமாள 
   விட்டநத் துகரனுக்கு ...... மருகோனே 
                             குற்றமற் றவருளத்தி ...... லுறைவோனே 
  குக்குடக் கொடிதரித்த ...... பெருமாளே. 
    பாடல் 1296   ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - சாரங்கா / குறிஞ்சி 
                         தாளம் - அங்கதாளம் (8) கண்டநடை /5 யு 0 
              லகு - தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தக-1, திமிதக-2 
       தானந்த தானத்தம் ...... தனதான 
 நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே 
  நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே 
                           மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும் 
 மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே 
                      வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே 
   வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா 
 நாலந்த வேதத்தின் ...... பொருளோனே 
 நானென்று மார்தட்டும் ...... பெருமாளே. 
    பாடல் 1297   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - கானடா 
             தாளம் - சதுஸ்ர ஜம்பை (7) 
            தத்தத் தனான ...... தனதான 
              பட்டு படாத ...... மதனாலும் 
        பக்கத்து மாதர் ...... வசையாலும் 
           சுட்டுச் சுடாத ...... நிலவாலும் 
    துக்கத்தி லாழ்வ ...... தியல்போதான் 
           தட்டுப் படாத ...... திறல்வீரா 
           தர்க்கித்த சூரர் ...... குலகாலா 
           மட்டுப் படாத ...... மயிலோனே 
       மற்றொப்பி லாத ...... பெருமாளே. 
    பாடல் 1298  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ராமப்பரியா 
                 தாளம் - திஸ்ர ஏகம் (3) 
           தனனத் தத்தன ...... தனதான 
    பரவைக் கெத்தனை ...... விசைதூது 
        பகரற் குற்றவ ...... ரெனமாணுன் 
             மரபுக் குச்சித ...... ப்ரபுவாக 
          வரமெத் தத்தர ...... வருவாயே 
        கரடக் கற்பக ...... னிளையோனே 
     கலைவிற் கட்குற ...... மகள்கேள்வா 
       அரனுக் குற்றது ...... புகல்வோனே 
      அயனைக் குட்டிய ...... பெருமாளே. 
    பாடல் 1299 ( பொதுப்பாடல்கள் ) 
 
 
   ராகம் - கல்யாணி 
                      தாளம் - அங்கதாளம் (8) கண்டஜம்பை (15யு 0) 
                 தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3 
      தனதனன தாத்தனத் ...... தனதான 
  பிறவியலை யாற்றினிற் ...... புகுதாதே 
  பிரகிருதி மார்க்கமுற் ...... றலையாதே 
 உ றுதிகுரு வாக்கியப் ...... பொருளாலே 
  உ னதுபத காட்சியைத் ...... தருவாயே 
  அறுசமய சாத்திரப் ...... பொருளோனே 
 அறிவுளறி வார்க்குணக் ...... கடலோனே 
 குறுமுனிவ னேத்துமுத் ...... தமிழோனே 
 குமரகுரு கார்த்திகைப் ...... பெருமாளே. 
    பாடல் 1300 ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - ஆபோகி 
                 தாளம் - அங்கதாளம் (9) 
                 தகிடதக-2 1/2, தகதமி-2, தகிட-1 1/2, தகதிமிதக-3 
  தத்தனத் தாத்தத் தாத்த ...... தனதான 
   புத்தகத் தேட்டிற் றீட்டி ...... முடியாது 
                           பொற்புறக் கூட்டிக் காட்டி ...... யருள்ஞான 
                          வித்தகப் பேற்றைத் தேற்றி ...... யருளாலே 
                         மெத்தெனக் கூட்டிக் காக்க ...... நினைவாயே 
                      தத்தைபுக் கோட்டிக் காட்டி ...... லுறைவாளைச் 
                          சற்கரித் தேத்திக் கீர்த்தி ...... பெறுவோனே 
                          கைத்தலத் தீக்குப் பார்த்து ...... நுழையாத 
                            கற்பகத் தோப்புக் காத்த ...... பெருமாளே. 
    பாடல் 1301  ( பொதுப்பாடல்கள் ) 
 
 ராகம் -    ...;  தாளம் - 
          தன்ன தனந்தன ...... தனதான 
   பொன்னை விரும்பிய ......பொதுமாதர் 
      புன்மை விரும்பியெ ...... தடுமாறும் 
                             என்னை விரும்பிநி ...... யொருகால்நின் 
     எண்ணி விரும்பவு ...... மருள்வாயே 
    மின்னை விரும்பிய ...... சடையாளர் 
     மெய்யின் விரும்பிய ...... குருநாதா 
     அன்னை விரும்பிய ...... குறமானை 
      அண்மி விரும்பிய ...... பெருமாளே. 
    பாடல் 1302  ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - ராமப்ரியா 
                 தாளம் - திஸ்ர ஏகம் (3) 
           தனனத்த தத்த ...... தனதான 
      மனைமக்கள் சுற்ற ...... மெனுமாயா 
       வலையைக்க டக்க ...... அறியாதே 
   வினையிற்செ ருக்கி ...... யடிநாயேன் 
      விழலுக்கி றைத்து ...... விடலாமோ 
    சுனையைக்க லக்கி ...... விளையாடு 
       சொருபக்கு றத்தி ...... மணவாளா 
          தினநற்ச ரித்ர ...... முளதேவர் 
     சிறைவெட்டிவிட்ட ...... பெருமாளே. 
    பாடல் 1303  ( பொதுப்பாடல்கள் ) 
 
  ராகம் - குறிஞ்சி 
            தாளம் - அங்கதாளம் (8 1/2) 
              தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2 
         தானனா தானன ...... தந்ததான 
        வாரிமீ தேயெழு ...... திங்களாலே 
        மாரவே ளேவிய ...... அம்பினாலே 
       பாரெலா மேசிய ...... பண்பினாலே 
       பாவியே னாவிம ...... யங்கலாமோ 
  சூரனீள் மார்புதொ ...... ளைந்தவேலா 
   சோதியே தோகைய ...... மர்ந்தகோவே 
    மூரிமால் யானைம ...... ணந்தமார்பா 
     மூவர்தே வாதிகள் ...... தம்பிரானே. 
    பாடல் 1304   ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் - பூர்வி கல்யாணி 
 தாளம் - சதுஸ்ர ரூபகம் - 2 களை (12) 
                         தானத் தத்தத் தத்தன தத்தத் ...... தனதான 
                       வானப் புக்குப் பற்றும ருத்துக் ...... கனல்மேவு 
                 மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப் ...... பிறவாதே 
                      ஞானச் சித்திச் சித்திர நித்தத் ...... தமிழாலுன் 
                    நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப் ...... புரிவாயே 
                கானக் கொச்சைச் சொற்குற விக்குக் ...... கடவோனே 
            காதிக் கொற்றப் பொற்குல வெற்பைப் ...... பொரும்வேலா 
             தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத் ...... தொடையோனே 
                  தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் ...... பெருமாளே. 
    பாடல் 1305 ( பொதுப்பாடல்கள் ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
         தனதன தனதன தனன தனதன 
         தனதன தனதன தனன தனதன 
                             தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன ... 
    ...... தனதான 
         குருபர சரவண பவசண் முககுக 
       ஒருபர வயமியல் எயினர் மகள்சுக 
                         மண்டத் தனங்கள்புணர் சண்டத் திரண்டபுஜ 
 உ ழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள் 
                           இளைகளை நெறுநெறு நெறென உ லவுவி 
          லங்கற்குறிஞ்சியுறைதொங்கற்கடம்ப ...... அருள் தருவாயே 
                ... அடிபடு முரசு தவில்பட 
                           கந்தக்கை துந்துமித டந்தப்பு டன் சலிகை 
                            ... கரடிகை யறைபறை திமிலை .. அபிநவ 
                சங்கொற்றை கொம்புகுழல் வங்கக் கருங்கடல் கொள் 
     பிரளய மிதுவென அதிர உ லகர்கள் 
            அரகர சிவசிவ அபய மபயமெ 
   னுஞ்சத்த மெங்குமெழ வெஞ்சத்தி கொண்டுபடை ...... புகவானோர் 
                       ... வனச மலர்நிகர், செம்பொற் சதங்கையடி யன்பர்க்கு வந்துதவு ...... பெருமாளே. 
   பாடல் 1306 ( க்ஷேத்திரக் கோவை ) 
 
    ராகம் - யமுனா கல்யாணி 
                 தாளம் - அங்கதாளம் (8) 
           (எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி) 
                   தகிட-1 1/2, தகதிமி-2, தகதகிட-2 1/2, தகதிமி-2 
  தந்த தானன தானான தந்தன 
           தந்த தானன தானான தந்தன 
                         தந்த தானன தானான தந்தன ...... தனதான 
       கும்ப கோணமொ டர்ருர் சிதம்பரம் 
       உ ம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு 
                   கொன்றை வேணியர் மாயூர மம்பெறு ...... சிவகாசி 
         கொந்து லாவிய ராமே சுரந்தனி 
    வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர் 
                    கும்பு கூடிய வ்ளுர் பரங்கிரி...... தனில்வாழ்வே 
         செம்பு கேசுர மாடானை யின்புறு 
    செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி
                    தென்றன் மாகிரிநாடாள வந்தவ ...... செகநாதஞ் 
       செங்சோ லேரக மாவா வினன்குடி 
  குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல் 
            செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் ...... வருதேவே 
             கம்பை மாவடி மீதேய சுந்தர 
            கம்பு லாவிய காவேரிசங்கமு 
                      கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர ...... வயலுரா 
           கந்த மேவிய பேர்ருர் நடம்புரி
          தென்சி வாயமு மேயா யகம்படு 
                       கண்டி யூர்வரு சாமீக டம்பணி ...... மணிமார்பா 
      எம்பி ரானொடு வாதாடு மங்கையர் 
   உ ம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி
                எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு ...... துதியோதும் 
       இந்தி ராணிதன் மாதோடு நன்குற 
     மங்கை மானையு மாலாய்ம ணந்துல 
                  கெங்கு மேவிய தேவால யந்தொறு ...... பெருமாளே. 
   பாடல் 1307 ( பழமுதிர்சோலை ) 
 
   ராகம் - ஸிந்துபைரவி / பூர்விகல்யாணி 
              தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
                   தகதிமி-2, தகிட-1 1/2 
             தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான 
                அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி 
    அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் 
    இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே 
     இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும் 
       மகபதி யாகி மருவும் வலாரிமகிழ்களி கூரும் ...... வடிவோனே 
  வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே 
       செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே 
 திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே. 
         பாடல் 1308 ( பழமுதிர்சோலை ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                                தனதன தான தான தனதன தான தான தனதன தான தான ...... தனதான 
                           இலவிதழ் கோதி நேதி மதகலை யார வார இளநகை யாட ஆடி ...... மிகவாதுற் 
                   றெதிர்பொரு கோர பார ம்ருகமத கோல கால இணைமுலை மார்பி லேற ...... மதராஜன் 
                             கலவியி லோடி நீடு வெகுவித தாக போக கரணப்ர தாப லீலை ...... மடமாதர் 
                    கலவியின் மூழ்கி யாழு மிழிதொழி லேனு மீது கருதிய ஞான போத ...... மடைவேனோ 
                              கொலைபுரிகாளி சூலி வயரவி நீலி மோடி குலிச குடாரியாயி ...... மகமாயி 
                               குமரிவ ராகி மோகி பகவதி யாதி சோதி குணவதி யால வூணி ...... யபிராமி 
                பலிகொள்க பாலி யோகி பரமகல் யாணி லோக பதிவ்ரதை வேத ஞானி ...... புதல்வோனே 
                       படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர பழமுதிர் சோலை மேவு ...... பெருமாளே. 
     பாடல் 1309 ( பழமுதிர்சோலை ) 
 
   ராகம் - ஹம்ஸத்வனி 
            தாளம் - அங்கதாளம் (8 1/2) 
              தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3 
      தானதன தான தந்த ...... தனதான 
       காரணம தாக வந்து ...... புவிமீதே 
   காலனணு காதி சைந்து ...... கதிகாண 
                             நாரணனும் வேதன் முன்பு ...... தெரியாத 
     ஞானநட மேபு ரிந்து ...... வருவாயே 
     ஆரமுத மான தந்தி ...... மணவாளா 
  ஆறுமுக மாறி ரண்டு ...... விழியோனே 
                            சூரர்கிளை மாள வென்ற ...... கதிர்வேலா 
                          சோலைமலை மேவி நின்ற ...... பெருமாளே. 
     பாடல் 1310 ( பழமுதிர்சோலை ) 
 
   ராகம் - ஸிம்மேந்திரமத்யமம் 
            தாளம் - அங்கதாளம் (5 1/2) 
                            தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 
                            தானதன தான தந்த தானதன தான தந்த 
      தானதன தான தந்த ...... தனதான 
                    சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர் 
                            சேருபொரு ளாசை நெஞ்சு ...... தடுமாறித் 
                  தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று 
   தேடினது போக என்று ...... தெருவூடே 
                    வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள் 
                            மாதர்மய லோடு சிந்தை ...... மெலியாமல் 
                வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன் 
    மாயவினை தீர அன்பு ...... புரிவாயே 
                         சேலவள நாட னங்கள் ஆரவயல் சூழ மிஞ்சி 
                         சேணிலவு தாவ செம்பொன் ...... மணிமேடை 
                          சேருமம ரேசர் தங்க ளூரிதென வாழ்வு கந்த 
   தீரமிகு சூரை வென்ற ...... திறல்வீரா 
                         ஆலவிட மேவு கண்டர் கோலமுட னீடு மன்று 
    ளாடல்புரியீசர் தந்தை ...... களிகூர 
                    ஆனமொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த 
    ஆதிமுத லாக வந்த ...... பெருமாளே. 
     பாடல் 1311 ( பழமுதிர்சோலை ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
                            தானதன தான தந்த தானதன தான தந்த 
      தானதன தான தந்த ...... தனதான 
                         வீரமத னூல்வி ளம்பு போகமட மாதர் தங்கள் 
                             வேல்விழியி னான்ம யங்கி ...... புவிமீதே 
                  வீசுகையி னாலி தங்கள் பேசுமவர் வாயி தஞ்சொல் 
                          வேலைசெய்து மால்மி குந்து ...... விரகாகிப் 
                      பாரவச மான வங்க ணீடுபொருள் போன பின்பு 
   பாதகனு மாகி நின்று ...... பதையாமல் 
                          பாகம்வர சேர அன்பு நீபமலர் சூடு தண்டை 
                             பாதமலர் நாடி யென்று ...... பணிவேனோ 
                        புரணம தான திங்கள் சூடுமர னாரிடங்கொள் 
                           பூவையரு ளால்வ ளர்ந்த ...... முருகோனே 
                           பூவுல கெலாம டங்க வோரடியி னால ளந்த 
   பூவைவடி வானு கந்த ...... மருகோனே 
                          சூரர்கிளை யேத டிந்து பாரமுடி யேய ரிந்து 
  தூள்கள்பட நீறு கண்ட ...... வடிவேலா 
                       சோலைதனி லேப றந்து லாவுமயி லேறி வந்து 
                          சோலைமலை மேல மர்ந்த ...... பெருமாளே. 
      பாடல் 1312 ( பழமுதிர்சோலை ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
                            தானதன தந்த தந்த தானதன தந்த தந்த 
      தானதன தந்த தந்த ...... தனதான 
                         வாரண முகங்கி ழிந்து வீழவு மரும்ப லர்ந்து 
                            மால்வரை யசைந்த நங்கன் ...... முடிசாய 
                     வாளகிரியண்ட ரண்ட கோளமுற நின்றெ ழுந்த 
   மாதவ மறந்து றந்து ...... நிலைபேரப் 
                           பூரண குடங்க டிந்து சிதகள பம்பு னைந்து 
                           பூசலை விரும்பு கொங்கை ...... மடவார்தம் 
                        போக சயனந் தவிர்ந்து னாடக பதம்ப ணிந்து 
                     பூசனைசெய் தொண்ட னென்ப ...... தொருநாளே 
                         ஆரண முழங்கு கின்ற ஆயிர மடந்த வங்கள் 
                            ஆகுதி யிடங்கள் பொங்கு ...... நிறைவீதி 
                      ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை 
     யாரமர வந்த லம்பு ...... துறைசேரத் 
                       தோரண மலங்கு துங்க கோபுர நெருங்கு கின்ற 
                       சூழ்மணிபொன் மண்ட பங்கள் ...... ரவிபோலச் 
              சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற 
                          சோலைமலை வந்து கந்த ...... பெருமாளே. 
   பாடல் 1313 ( பழமுதிர்சோலை ) 
 
   ராகம் - பீம்பளாஸ் 
                 தாளம் - அங்கதாளம் (9) 
         தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1 
  தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தக-1 
       தான தானதன தத்ததன தத்ததன 
       தான தானதன தத்ததன தத்ததன 
                    தான தானதன தத்ததன தத்ததன ...... தந்ததான 
  ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி 
                             வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி 
           ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு ...... மிந்துவாகை 
 ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி 
   யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத 
              ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் ...... விந்துநாத 
      ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக 
 மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு 
                   மோது வேதசர சத்தியடி யுற்றதிரு ...... நந்தியூடே 
                        ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற 
                          மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர் 
     யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை ...... யின்றுதாராய் 
                            வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ் 
                          வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள் 
         மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண ...... செங்கையாளி 
   வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை 
                       வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென் 
              மாசு சேரழுபி றப்பையும றுத்தவுமை ...... தந்தவாழ்வே 
       காசி ராமெசுரம் ரத்நகிரிசர்ப்பகிரி
                          எருர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல் 
        காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல் ...... செந்தில்நாகை 
  காழி வ்ளுர்பழ நிக்கிரிகுறுக்கைதிரு 
                        நாவ லுர்திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ் 
     காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் ...... தம்பிரானே. 
    பாடல் 1314 ( பழமுதிர்சோலை ) 
 
   ராகம் - தேநுக 
                  தாளம் - திஸ்ரத்ரிபுடை 
              தனனாதன தானன தத்தன 
              தனனாதன தானன தத்தன 
                            தனனாதன தானன தத்தன ...... தனதான 
             கருவாகியெ தாயுத ரத்தினி 
       லுருவாகவெ கால்கையு றுப்பொடு 
                       கனிவாய்விழி நாசியு டற்செவி ...... நரைமாதர் 
        கையிலேவிழ வேகிய ணைத்துயி 
             லெனவேமிக மீதுது யிற்றிய 
                     கருதாய்முலை யாரமு தத்தினி ...... லினிதாகித் 
                தருதாரமு மாகிய சுற்றமு 
           நலவாழ்வுநி லாதபொ ருட்பதி 
                      சதமாமிது தானென வுற்றுனை ...... நினையாத 
       சதுராயுன தாளிணை யைத்தொழ 
          அறியாதநிர் மூடனை நிற்புகழ் 
            தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வ ...... தொருநாளே 
            செருவாயெதி ராமசு ரத்திரள் 
       தநல்முளைக ளோடுநி ணத்தசை 
                      திமிர்தாதுள பூதக ணத்தொடு ...... வருபேய்கள் 
           திகுதாவுண வாயுதி ரத்தினை 
             பலவாய்நரியோடுகு டித்திட 
                           சிலகூகைகள் தாமுந டித்திட ...... அடுதீரா 
        அருமாமறை யோர்கள்து தித்திடு 
          புகர்வாரண மாதுத னைத்திகழ் 
                 அளிசேர்குழல் மேவுகு றத்தியை ...... அணைவோனே 
       அழகானபொன் மேடையு யர்த்திடு 
         முகில்தாவிய சோலைவி யப்புறு 
                   அலையாமலை மேவிய பத்தர்கள் ...... பெருமாளே. 
      பாடல் 1315 ( பழமுதிர்சோலை ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
          தானதத்த தான தனாதனா தன 
          தானதத்த தான தனாதனா தன 
                       தானதத்த தான தனாதனா தன ...... தனதானா 
      சீர்சிறக்கு மேனி பசேல் பசே லென 
      நூபுரத்தி னோசை கலீர் கலீ ரென 
            சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவே லென ...... வருமானார் 
                            சேகரத்தின் வாலை சிலோர் சிலோர் களு 
    நூறுலக்ஷ கோடி மயால் மயால் கொடு 
             தேடியொக்க வாடி யையோ வையோ வென ...... மடமாதர் 
     மார்படைத்த கோடு பளீர் பளீ ரென 
        ஏமலித்தெ னாவி பகீர் பகீ ரென 
              மாமசக்கி லாசை யுளோ முளோ மென ...... நினைவோடி 
  வாடை பற்று வேளை யடா வடா வென 
    நீமயக்க மேது சொலாய் சொலாயென 
              வாரம்வைத்த பாத மிதோ இதோ என ...... அருள்வாயே 
    பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ் 
                         கோடொ டித்த நாளில் வரைஇ வரைஇ பவர் 
              பானி றக்க ணேசர் குவா குவா கனர் ....... ; ளையோனே 
      பாடல்முக்ய மாது தமீழ் தமீ ழிறை 
   மாமுநிக்கு காதி லுணார் வுணார் விடு 
                          பாசமற்ற வேத ரு ரு பர ...... குமரோசா 
                            போர்மிகுத்த சூரன் விடோ ம் விடோ  மென 
     நேரெதிர்க்க வேலை படீர் படீ ரென 
                   போயறுத்த போது குபீர் குபீ ரென ...... வெகுசோரி
           பூமியுக்க வீசு குகா குகா திகழ் 
                 சோலைவெற்பின் மேவு தெய்வா தெய்வா னைதொள் 
                  பூணியிச்சை யாறு புயா புயா றுள ...... பெருமாளே. 
     பாடல் 1316 ( பழமுதிர்சோலை ) 
 
   ராகம் - சங்கராபரணம் 
         தாளம் - ஆதி - திஸ்ரநடை (12) 
                  தனன தான தான தத்த 
                  தனன தான தான தத்த 
   தனன தான தான தத்த ...... தனதான 
          துடிகொ ணோய்க ளோடு வற்றி 
             தருண மேனி கோழை துற்ற 
                             இரும லீளை வாத பித்த ...... மணுகாமல் 
            துறைக ளோடு வாழ்வு விட்டு 
            உ லக நூல்கள் வாதை யற்று 
   சுகமு ளாநு பூதி பெற்று ...... மகிழாமே 
        உ டல்செய் கோர பாழ்வ யிற்றை 
              நிதமு மூணி னாலு யர்த்தி 
 யுயிரினீடு யோக சித்தி ...... பெறலாமே 
             உ ருவி லாத பாழில் வெட்ட 
              வெளியி லாடு நாத நிர்த்த 
                            உ னது ஞான பாத பத்ம ...... முறுவேனோ 
                 கடிது லாவு வாயு பெற்ற 
                 மகனும் வாலி சேயு மிக்க 
                      மலைகள் போட ஆழி கட்டி ...... யிகலுர்போய்க் 
              களமு றானை தேர்நு றுக்கி 
               தலைக ளாறு நாலு பெற்ற 
                        அவனை வாளி யால டத்தன் ...... மருகோனே 
                    முடுகு வீர சூர பத்மர் 
            தலையின் மூளை நீறு பட்டு 
 முடிவ தாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா 
              முநிவர் தேவர் ஞான முற்ற 
            புநித சோலை மாமலைக்குள் 
                         முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே. 
     பாடல் 1317 ( பழமுதிர்சோலை ) 
 
    ராகம் -    ...;  தாளம் - 
          தானத் தானன தத்தன தத்தன 
          தானத் தானன தத்தன தத்தன 
                        தானத் தானன தத்தன தத்தன ...... தனதான 
   பாசத் தால்விலை கட்டிய பொட்டிகள் 
        நேசித் தாரவர் சித்தம ருட்டிகள் 
                     பாரப் பூதர மொத்தத னத்திகள் ...... மிகவேதான் 
     பாவத் தால்மெயெ டுத்திடு பட்டிகள் 
        சீவிக் கோதிமு டித்தள கத்திகள் 
                  பார்வைக் கேமயலைத்தரு துட்டிக ...... ளொழியாத 
       மாசுற் றேறிய பித்தளை யிற்பணி 
      நீறிட் டேயொளி பற்றவி ளக்கிகள் 
                    மார்பிற் காதினி லிட்ட பிலுக்கிகள் ...... அதிமோக 
     வாய்வித் தாரமு ரைக்கும பத்திகள் 
       நேசித் தாரையு மெத்திவ டிப்பவர் 
              மாயைக் கேமனம் வைத்தத னுட்டின ...... மலைவேனோ 
        தேசிக் கானக முற்றதி னைப்புன 
     மேவிக் காவல்க வட்கல்சு ழற்றுவள் 
               சீதப் பாதகு றப்பெண்ம கிழ்ச்சிகொள் ...... மணவாளா 
        தேடிப் பாடிய சொற்புல வர்க்கித 
          மாகத் தூதுசெ லத்தரில் கற்பக 
                    தேவர்க் காதிதி ருப்புக லிப்பதி ...... வருவோனே 
          ஆசித் தார்மன திற்புகு முத்தம 
       கூடற் கேவைகை யிற்கரை கட்டிட 
                  ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி ...... படுவோனோ 
          டாரத் தோடகி லுற்றத ருக்குல 
      மேகத் தோடொரு மித்துநெ ருக்கிய 
               ஆதிச் சோலை மலைப்பதி யிற்றிகழ் ...... பெருமாளே. 
   பாடல் 1318 ( பழமுதிர்சோலை ) 
 
   ராகம் - சக்ரவாஹம் / குந்தலவராளி 
    தாளம் - ஆதி 
                     (எடுப்பு - 1/2 இடம்) 
           தானதன தந்த தானதன தந்த 
            தானதன தந்த ...... தனதான 
                             வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் 
      மாயமதொ ழிந்து ...... தெளியேனே 
                           மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து 
         மாபதம ணிந்து ...... பணியேனே 
       ஆதியொடு மந்த மாகிய நலங்கள் 
        ஆறுமுக மென்று ...... தெரியேனே 
    ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட 
         தாடுமயி லென்ப ...... தறியேனே 
  நாதமொடு விந்து வானவுடல் கொண்டு 
       நானிலம லைந்து ...... திரிவேனே 
      நாகமணி கின்ற நாதநிலை கண்டு 
     நாடியதில் நின்று ...... தொழுகேனே 
   சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற 
    சோகமது தந்து ...... எனையாள்வாய் 
                             சூரர்குலம் வென்று வாகையொடு சென்று 
   சோலைமலை நின்ற ...... பெருமாளே. 
    பாடல் 1319 ( பழமுதிர்சோலை ) 
 
   ராகம் -    ...;  தாளம் - 
           தானதன தத்த தானதன தத்த 
            தானதன தத்த ...... தனதான 
                             வார்குழையை யெட்டி வேளினைம ருட்டி 
             மாயநம னுக்கு ...... முறவாகி 
       மாதவம ழித்து லீலைகள் மிகுத்து 
      மாவடுவை யொத்த ...... விழிமாதர் 
   சீருட னழைத்து வாய்கனிவு வைத்து 
          தேனித ழளித்து ...... அநுபோக 
                           சேர்வைதனை யுற்று மோசம்விளை வித்து 
     சீர்மைகெட வைப்ப ...... ருறவாமோ 
     வாரினை யறுத்து மேருவை மறித்து 
            மாகனக மொத்த ...... குடமாகி 
    வாரவணை வைத்து மாலளித முற்று 
      மாலைகளு மொய்த்த ...... தனமாது 
      தோரணி புயத்தி யோகினி சமர்த்தி 
  தோகையுமை பெற்ற ...... புதல்வோனே 
     சூர்கிளை மடித்து வேல்கர மெடுத்து 
    சோலைமலை யுற்ற ...... பெருமாளே. 
       பாடல் 1320 ( பழமுதிர்சோலை ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
          தனன தனதன தனத்தத் தாத்த 
          தனன தனதன தனத்தத் தாத்த 
                        தனன தனதன தனத்தத் தாத்த ...... தனதான 
      அழகு தவழ்குழல் விரித்துக் காட்டி 
   விழிகள் கடையிணை புரட்டிக் காட்டி 
                  அணிபொ னணிகுழை புரித்துக் காட்டி ...... யநுராக 
         அவச இதமொழி படித்துக் காட்டி 
      அதர மழிதுவர் வெளுப்பைக் காட்டி 
                அமர்செய் நகநுதி யழுத்தைக் காட்டி ...... யணியாரம் 
        ஒழுகு மிருதன மசைத்துக் காட்டி 
     எழுத வரியிடை வளைத்துக் காட்டி 
                உ லவு முடைதனை நெகிழ்த்திக் காட்டி ...... யுறவாடி 
       உ ருகு கடிதட மொளித்துக் காட்டி 
          உ பய பரிபுர பதத்தைக் காட்டி 
         உ யிரை விலைகொளு மவர்க்குத் தேட்ட ...... மொழிவேனோ 
        முழுகு மருமறை முகத்துப் பாட்டி 
   கொழுநர் குடுமியை யறுத்துப் போட்ட 
               முதல்வ குகைபடு திருப்பொற் கோட்டு ...... முனிநாடா 
    முடுகு முதலையை வரித்துக் கோட்டி 
      அடியர் தொழமக வழைத்துக் கூட்டி 
               முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட ...... முதுநீதர் 
        பழைய கடதட முகத்துக் கோட்டு 
   வழுவை யுரியணி மறைச்சொற் கூட்டு 
                         பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு ...... பரமேசர் 
     பணிய அருள்சிவ மயத்தைக் காட்டு 
        குமர குலமலை யுயர்த்திக் காட்டு 
                பரிவொ டணிமயில் நடத்திக் காட்டு ...... பெருமாளே. 
     பாடல் 1321 ( பழமுதிர்சோலை ) 
 
   ராகம் - யமுனா கல்யாணி (மத்யம ஸ்ருதி) 
    தாளம் - ஆதி 
                     (எடுப்பு - 1/2 இடம்) 
          தனதன தத்தத் தனதன தத்தத் 
          தனதன தத்தத் தனதன தத்தத் 
                       தனதன தத்தத் தனதன தத்தத் ...... தனதானா 
 தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக் 
        கலகலெ னப்பற் கட்டது விட்டுத் 
                    தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத் ...... தடுமாறித் 
     தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட் 
      டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச் 
                     சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் ...... பலகாலும் 
      திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத் 
       திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத் 
           தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட் ......டுயிர்போமுன் 
  திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித் 
    திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச் 
                செனனம றுக்கைக் குப்பர முத்திக் ...... கருள்தாராய் 
    கலணைவி சித்துப் பக்கரை யிட்டுப் 
 புரவிசெ லுத்திக் கைக்கொடு வெற்பைக் 
                   கடகுந டத்தித் திட்டென எட்டிப் ...... பொருசூரன் 
       கனபடை கெட்டுத் தட்டற விட்டுத் 
        திரைகட லுக்குட் புக்கிட எற்றிக் 
               களிமயி லைச்சித் ரத்தில்ந டத்திப் ...... பொருகோவே 
        குலிசன்ம கட்குத் தப்பியு மற்றக் 
     குறவர்ம கட்குச் சித்தமும் வைத்துக் 
              குளிர்தினை மெத்தத் தத்துபு னத்திற் ...... றிரிவோனே 
  கொடியபொ ருப்பைக் குத்திமு றித்துச் 
      சமரம்வி ளைத்துத் தற்பர முற்றுக் 
                   குலகிரியிற்புக் குற்றுரை யுக்ரப் ...... பெருமாளே. 
      பாடல் 1322 ( பழமுதிர்சோலை ) 
 
    ராகம் -    ...;  தாளம் - 
                          தனதன தனந்த தான தனதன தனந்த தான 
     தனதன தனந்த தான ...... தனதான 
                        மலரணை ததும்ப மேக குழல்முடி சரிந்து வீழ 
                          மணபரிமளங்கள் வேர்வை ...... யதனோடே 
                    வழிபட இடங்க ணாட பிறைநுதல் புரண்டு மாழ்க 
                        வனைகலை நெகிழ்ந்து போக ....... ; ளநீரின் 
               முலையிணை ததும்ப நூலின் வகிரிடை சுழன்று வாட 
                             முகமுகமொ டொன்ற பாய ...... லதுனூடே 
                   முதுமயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்க லாடு 
                            முடிவடிவொ டங்கை வேலு ...... மறவேனே 
             சிலைநுத லிளம்பெண் மோகி சடையழகி யெந்தை பாதி 
                           திகழ்மர கதம்பொன் மேனி ...... யுமைபாலா 
                       சிறுநகை புரிந்து சூரர் கிரிகட லெரிந்து போக 
 திகழயி லெறிந்த ஞான ......முருகோனே 
                கொலைமிக பயின்ற வேடர் மகள்வளி மணந்த தோள 
                            குணவலர் கடம்ப மாலை ...... யணிமார்பா 
                  கொடிமின லடைந்த சோதி மழகதிர் தவழ்ந்த ஞான 
 குலகிரிமகிழ்ந்து மேவு ...... பெருமாளே. 
    பாடல் 1323 ( புதிய பாடல்கள் ) 
 
     ராகம் -    ...;  தாளம் - 
             தனதன தான தனதன தான 
             தனதன தான ...... தனதான 
    கருவெனு மாயை உ ருவினில் மூழ்கி 
             வயதள வாக ...... நிலமீதில் 
   கலைதெரிவாணர் கலைபல நூல்கள் 
           வெகுவித மாக ...... கவிபாடித் 
     தெருவழி போகி பொருளெனு மாசை 
         திரவியம் நாடி ...... நெடிதோடிச் 
    சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி 
           சிறுவித மாக ...... திரிவேனோ 
         அருளநு போக குருபர னேஉ ன் 
       அடியவர் வாழ ...... அருள்வோனே 
          அரனிரு காதில் அருள்பர ஞாந 
      அடைவினை ஓதி ...... அருள்பாலா 
         வெருவிடு சூரர் குலஅடி வேரை 
             விழவிடு சாசு ...... வதிபாலா 
             மிடலுட லாளர் அடரசுர் மாள 
        விடுமயில் வேல ...... பெருமாளே. 
    பாடல் 1324 ( புதிய பாடல்கள் ) 
 
  ராகம் -    ...;  தாளம் - 
            தந்த தனந்த தனத்த தானன 
            தந்த தனந்த தனத்த தானன 
                         தந்த தனந்த தனத்த தானன ...... தனதானா 
        தங்க மிகுந்த முலைக்க டாமலை 
    பொங்க விரும்பிய முத்து மாலைகள் 
                 தங்க அணிந்து முறுக்கும் வேசியர் ...... மொழியாலே 
            சஞ்ச லமிஞ்சி மயக்கி யேஒரு 
          மஞ்ச மிருந்து சுகிக்க வேவளர் 
                     சந்து சுகந்த முடித்து நூலிடை ...... கிடையாடக் 
     கொங்கை குலுங்க வளைத்து வாயத 
            ரங்க ளருந்தி ருசிக்க வேமத 
                      குங்கு மமிஞ்சு கழுத்தி லேகுயி ...... லெனஓசை 
         கொண்ட வரிந்த விதத்தி னாடர 
    சங்கி லிகொண்டு பிணித்து மாமயில் 
                 கொஞ்சி மகிழ்ந்த வறட்டு வீணியர் ...... உ றவாமோ 
       திங்கள் அரும்பு சலத்தி லேவிடம் 
           வந்த துகண்டு பயப்ப டாதவர் 
                  சிந்தை நடுங்கி இருக்க வேமயில் ...... மிசையேறிச் 
      சிங்க முகன்தலை வெட்டி மாமுகன் 
            அங்க மறுந்து கிடக்க வேவரு 
                       சிம்பு ளெனும்படி விட்ட வேலுள ...... குருநாதா 
         மங்கை மடந்தை கதிக்கு நாயகி 
          சங்கரிசுந்தரிஅத்தி யானனை 
                       மைந்த னெனும்படி பெற்ற ஈசுரி...... தருபாலா 
          மந்திர தந்திர முத்த யோகியர் 
     அஞ்சலி செங்கை முடிக்க வேஅருள் 
                        வந்து தரும்படி நித்த மாடிய ...... பெருமாளே. 
     பாடல் 1325 ( புனவாயில் ) 
 
   ராகம் - ரஞ்சனி 
    தாளம் - ஆதி 
                    (எடுப்பு - 3/4 இடம்) 
         தனனந் தந்தன தானன தந்தன 
         தனனந் தந்தன தானன தந்தன 
                       தனனந் தந்தன தானன தந்தன ...... தனதான 
 உ ரையுஞ் சென்றது நாவும் உ லர்ந்தது 
    விழியும் பஞ்சுபொ லானது கண்டயல் 
             உ ழலுஞ் சிந்துறு பால்கடை நின்றது ...... கடைவாயால் 
      ஒழுகுஞ் சஞ்சல மேனிகு ளிர்ந்தது 
                             முறிமுன் கண்டுகை கால்கள்நி மிர்ந்தது 
                      உ டலுந் தொந்தியும் ஓடிவ டிந்தது ...... பரிகாரி
                             வரவொன் றும்பலி யாதினி என்றன்பின் 
     உ றவும் பெண்டிரு மோதிவி ழுந்தழ 
          மறல்வந் திங்கென தாவிகொ ளுந்தினம் ....... ; யல்தோகை 
    மயிலுஞ் செங்கைக ளாறிரு திண்புய 
   வரைதுன் றுங்கடி மாலையும் இங்கித 
              வனமின் குஞ்சரிமாருடன் என்றன்முன் ...... வருவாயே 
     அரிமைந் தன்புகழ் மாருதி என்றுள 
        கவியின் சங்கமி ராகவ புங்கவன் 
             அறிவுங் கண்டருள் வாயென அன்பொடு ...... தரவேறுன் 
        அருளுங் கண்டத ராபதி வன்புறு 
   விஜயங் கொண்டெழு போதுபு லம்பிய 
              அகமும் பைந்தொடி சீதமை றைந்திட ...... வழிதோறும் 
     மருவுங் குண்டலம் ஆழிசி லம்புகள் 
     கடகந் தண்டைபொன் நூபுர மஞ்சரி
                  மணியின் பந்தெறி வாயிது பந்தென ...... முதலான 
  மலையுஞ் சங்கிலி போலம ருங்குவிண் 
     முழுதுங் கண்டந ராயணன் அன்புறு 
               மருகன் தென்புன வாயில மர்ந்தருள் ...... பெருமாளே. 
   பாடல் 1326 (திருவெழுகூற்றிருக்கை) 
 
   ராகம் - தர்பாரிகானடா 
    தாளம் - ஆதி 
    (எடுப்பு 3/4 இடம்) 
   ஓருரு வாகிய தாரகப் பிரமத் 
 தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி 
                ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை 
   இருபிறப் பாளரினொருவ னாயினை 
                            ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்
                           நான்முகன் குடிமி இமைப்பினிற் பெயர்த்து 
     மூவரும் போந்து இருதாள் வேண்ட 
                  ஒருசிறை விடுத்தனை 
 ஒருநொடி யதனில் இருசிறை மயிலின் 
                  முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை 
                             நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி 
                            ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை 
 ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய 
        மும்மதன் தனக்கு மூத்தோ னாகி 
                           நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள் 
      அறுகு சூடிக் கிளையோ னாயினை 
                            ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து 
 முக்கட் சுடரினை இருவினை முருந்துக் 
                    கொருகுரு வாயினை 
                             ஒருநாள் உ மையிரு முலைப்பா லருந்தி 
       முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன் 
   ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென 
                            எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை 
  அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன் 
                       நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட் 
டன்றி லங்கிரியிருபிள வாக ஒருவேல் விடுத்தனை 
காவிரிவடகரை மேவிய குருகிரிஇருந்த 
 ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற 
  ஏரகத் திறைவ னென இருந்தனையே. 
 
   This file was last revised on  24  Sept 2003
  Please send your comments to the webmasters of this website.