pm logo

மதுரை வாலைசாமி சித்தர் எழுதிய
ஞானக்கும்மி


njAnakkummi
by maturai vAlaicAmi cittar
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

மதுரை வாலைசாமி சித்தர் எழுதிய
ஞானக்கும்மி


Source:
ஞானக்கும்மி
சென்னை பு. முனிசாமி நாயுடு அவர்களது
கலாநிதி விளக்கஅச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது
1916, விலை அணா 1
சங்கநிதி விளக்கம் பிரஸ் , சூளைபோஸ்டு மதிராஸ்
---------------------
From Tamil wikipedia:
மதுரை வாலைசாமி ஞானக் கும்மி என்பது வாலைசாமி என்னும் சித்தரால் பாடப்பட்டது. இதில் 185 பாடல்கள் உள்ளன. எல்லாப் பாடல்களும் இரண்டு அடிகள் கொண்ட கண்ணி யாப்பினால் ஆன பாக்கள். இவற்றில் 4 பாடல்கள் காப்புப் பாடல்கள். சிவபாலன் கணபதி, சிவசுப்பிரமணியன், செந்தில் வேலவன், முக்கோண விநாயகன் ஆகிய தெய்வங்கள் முன்னின்று இந்த நூலைக் காக்க வேண்டும் என்று வேண்டுகின்றன.

சிவமயம்,
ஞானக்கும்மி

சீர்மேவுஞானவடிவான பர
தேசிகன் சற்குருதன்னருளாற்
பாறமீதின் ஞானக்கும்மிப்பாடச் சிவ
பாலன் கணபதிகாப்பாமே. 1

அம்பிகைவாலைப்பதம்போற்றி யரு
ளானந்தக் கும்மித் தமிழ்பாட
தும்பிமுகனுக்கினையவனாஞ் சிவ
சுப்பிரமணியனுங்காப்பாமே. 2

நாலாம்வேதமுமோராறும் வெகு
நானாபேதமு நின்றானை
மேலாய்ப்போற்றிக்கும்மிபாடச் செந்தில்
வேலவன் றன் பதங்காப்பாமே. 3

தாரிலுயர்மதுராபுரியில் வாலை
சாமிசொல்லுங் கும்மிப்பாடலுக்கு
மேருவதனடிமூலமுக்கோண
விநாயகன்றன்பதங்காப்பாமே. 4

ஆதியு மந்தமுமொன்றாகி வள
ரண்டபிரண்டமுமிரண்டாகிச்
சாதி பலபலவேறாகி நின்ற
தத்துவங்கேளடி ஞானப்பெண்ணே. 5

தேகமான மலபாண்டம் அதிற்
சிற்பனம்வந்திடு முற்பனத்தை
யோகமெனுந் தமிழ்ப்பாடலுக்கு மன
முவந்துகேளடி ஞானப்பெண்ணே. 6

ஏகப்பெருவெளிபட்டணமாம் அதி
லேதோசித்தனொருவ னுண்டாம்
வாசனிலைபேசவாயுமில்லை அந்த
மாப்பிள்ளை பெண்ணென்று ஞானப்பெண்ணே. 7

சாட்சிபெனும்பிர்மா பிள்ளைக்குமூல
பகைத்தியென்றொரு பெண்ணாச்சு
...சுமகாரணமிரண்டினுக்கு நிலை
தூலநாமென்கிறாள் ஞானப்பெண்ணே. 8

ஊமையனென்றேயறிந்து கொண்டா ளந்த
வூமைபேச்செல்லா நாமென்கிறாள்
சீமையையாளத்துசங்கட்டினாளந்தச்
சீமாட்டிதானடி ஞானப்பெண்ணே. 9

பெண்ணரசான துரத்தின மா மதைப்
பெண்ணென்று சொல்லவுங் கேள்வியுண்டோ
மண்ணையும்விண்ணையும் கூட்டிபயிர்செய்த
மார்க்கத்தைகேளடி ஞானப்பெண்ணே. 10

பட்டணங்கட்டிமகராசி துரை
பாங்குடன் செய்தவ திகாரச்
சட்டமுஞ்சொல்லத்தொலையாதே விதைச்
சற்றேகேளடி ஞானப்பெண்ணே. 11

அஞ்சூரஞ்சூர்வகுப்பாச்சர மதி
லஞ்சூரஞ்சு பிரிவாச்சாம்
அஞ்சூருக்கொருவித்தாச்சேமதற்
காணகுளமுண்டு ஞானப்பெண்ணே. 12

ஊரையடுத்து மலையுமுண்டா மதற்
குள்ளாயிருந்தநிலைக்காரர்
பேரையுரைக்க வினிகேளு மவர்
பெருமைதானென்னடி ஞானப்பெண்ணே. 13

தலைமன்னாரிலிருப்பவரா மந்தச்
சட்டையப்பிள்ளைநெட்டையராம்
பாவமுமானியமுமென்னதென்றா ளந்த
நிசந்தெரியுமோ ஞானப்பெண்ணே. 14

கும்பகோணத்திலேயப்புபிள்ளை யவர்
கூட்டமற்றால் வெகு வாட்டமென்று
செம்பாதிப்பங்கு கேட்டு வந்தா னியாயந்
தெளிவதெப்படி ஞானப்பெண்ணே, 15

மூலக்குடிவன்னித்தேவரைவரவர்
மூர்க்கமுந் தீர்க்கமுமார்க்கமுண்டோ
நாலுகரைபங்கு நாமென்கிறா ரிந்த
நியாயந்தெரியுமோ ஞானப்பெண்ணே. 16

காத்தவராயவகண்டனுக்குத் திசை
காவலு மற்ற விசாரணை பும்
பார்த்து வருவது நாமென்கிற ரீந்தப்
படிநிலைக்குமோ ஞானப்பெண்ணே. 17

ஆகாயமானபரஞ்சோதியவ
ரஞ்சுக்கரைப்பங்குந்தன்னுக் குள்ளே
சேகரமாமென்றுஞ் சொல்லுகிறா ரிந்த
சேதியைக்கேளடி ஞானப்பெண்ணே. 18

அம்பலக்காரருமூன்று பேராம் பின்னு
மஸ் தககாட்டுக்கணக்கனொன்றாம்
வம்பு செய்தாலந்தமுன்னாளனுப்படி
வகைதெரியுமோ ஞானப்பெண்ணே. 19

ஒன்பதுகூத்தரும்பங்காளி யெந்த
வூருக்குளூர்களூமய்படியாம்
ஐம்பதி சேருவைக்காரருக்கு மவ
னண்ணனொருவனாம் ஞானப்பெண்ணே. 20

சேரயிற்குருக்களொருபார்ப்பான்
றெப்பகுளத்தின் மேலயவன் வீடு
தாவிக்கொண்டுதொடைதட்டுகிறானிலஞ்
சாருமோகேளடி ஞானப்பெண்ணே. 21.

செட்டிபொருவனாம்பங்காளியதிற்
சேர்ந்தவனாகமிகவோங்கி
கட்டியவராகனைக்கொண்டுவந்தால காணி
யாட்சி செல்லு மோஞானப்பெண்ணே. 22

காரியக்காரரோவஞ்சுபேரா மவர்
காரியம் பார்க்க வீரஞ்சுபேராம்
மாரீசக்காரர்சமாதிகண்மூன்று பேர்
வார்த்தையைக்கேளடி ஞானப்பெண்ணே. 23

ஊழியக்காரரனேகருண்டா மவர்க்
கும்பளஞ்சம்பள நிரம்பவுண்டாம்
பானையங்கோட்டைக்குச்சாரிவைத்தா லிவர்
பதுங்குவாரடி ஞானப்பெண்ணே. 24

பாழுருக்கொருமேன் மணியா மவன்
பார்த்தாற்சின்னப்பயல்காணும்
வேளூரானரைப்பங்குத்தன் முதல்
விற்றுக்கொடுக்கிறான் ஞானப்பெண்ணே. 25

ஆராறு குடியுமுண்டா மதி
லந்நியக்குடி முப்பத்தைந்து முண்டாம்
ஒராறு பத்துக்குடி தனிலே யஃ
தொட்டுகுடியடி ஞானப்பெண்ணே. 26

இத்தனை பேருமிருந்தாலு மதி
லிரண்டேபேர்கள் சமுசாரி
அத்தனை பேரையுந் தள்ளிவைத்தாற் பயி
ராரிடுவாரடி ஞானப்பெண்ணே. 27

ஒற்றேரொற்றையெருதாகு மதி
லொன்று பரம்முச்சாலடிக்குங்
கற்றுடன்காரணங்கண்டாயோ ஞானக்
கண்கொண்டுபாரடி ஞானப்பெண்ணே. 28

இரண்டு கரைக்குடி மானியமா மதி
லிட்டவிரையொட்டிரட்டி யுண்டாம்
பண்டு பழகினமேன் புள்ளிக்காரனும்
பார்த்துப்போயினான் ஞானப்பெண்ணே. 29

புள்ளிக் சறைச்சலுமவாராமன் முன்னே
போட்ட பலனுங்கையாடாமற்
கொள்ளையிடச்சொல்லியோலை வந்தா லிது
கொடுமைசொல்லடி ஞானப்பெண்ணே. 30

வந்தவிதியென்றிருந்தாலும் வசக்
கட்டு நிலுவையுங்கேட்கிறான்
இந்தமகிமையவ றானோ விதற்
சென்னசுகமடி ஞானப்பெண்ணே. 31

தரு நிச்சிக்கிடக்கிறபெட்டியிலே யேரித்
தண்ணீர் பாய்ச்சவுஞ்சொல்லுகிறான்
வரி கொடுக்கிறதில்லையென்றார் பூசை
மாட்டுகிறானடி ஞானப்பெண்ணே. 32

ஊரிற்குடியதிருக்கவொட்டானிருத்
தூழியஞ் செய்யவும்வேலை விட்டான்
றீரமில்லையென்று சொன்னாலு மவன்
றெண்டகம்பிடிக்கிறான் ஞானப்பெண்ணே. 33

அந்தவிருபத்தோரா யிரத்திருநூற்
றுக்குலநெல்லுங்கண்டு முதல்
வந்ததுண்டோவதின்மூன்றத்தொருபங்கு
வாரம்பிடித்தாண்டி ஞானப்பெண்ணே. 34

மிச்சமிருந்தநெல்லுத் தொகையில் வாரம்
விண்ணுநோய்கொண்டபேயனுடன்
அச்சுதன் சேயனுந் தூங்ககோனானுமா
யழித்துப்போட்டாரடி ஞானப்பெண்ணே. 35

நிலம்விளைந்ததுங்காணீரோ வதிற்
செலவழிந்ததும்பாரீரோ
அலமந் திரியாம லரு
ளானந்தஞ்சேரடி ஞானப்பெண்ணே. 36

எண்சாணீள மொருவீட மதி
லெட்டொருபீற்றன் மலக்கூடாம்
பஞ்சாயக்காரரீரைந்து பேருந்தெய்வப்
பதியிதென்றார் ஞானப்பெண்ணே. 37

தேகமெனுஞ்சிவவாலயமா மதிற்
சென்னிசிறுவாயிற்கோபுரமாம்,
காகமன விரண்டு கரக்கோடுங்
கையாங்கேளடி ஞானப்பெண்ணே. 38

உண்ணாக்கென்ற கொடிமரமா மதிற்
கோபுரசந்திரபுட்கரணி
அண்ணாக்கென்றவலப்புறத்திறகண்ட
தக்கினி தீர்த்தமாம் ஞானப்பெண்ணே, 39

நாற்பத்து முக்கோண மண்டபமா மதி
நடுவீருக்குதஞ் சிங்காரம்
பார்ப்பது சக்கரக்கோட்டையிலே யிந்தப்
படியிருக்குதாம் ஞானப்பெண்ணே. 40

பீடமிருப்பதுமையத்திலே பலி
பீடமிருப்பதுங்குய்யத்திலே
மாடமிருந்தசிவாலயத்தின் மணி
விளக்கிருக்குதுஞானப்பெண்ணே. 41

இப்படியான திருக்கோவி லதற்
கெப்படிவாயலிருக்காதோ
அப்படியென்று தெறியாமற் றெறிக்
தலைகிறாரடி ஞானப்பெண்ணே. 42

பூட்டைதிறப்பதுங்கையாலே மனப்
பூட்டை திரப்ப தமெய்யாலே
வீட்டைதிறக்கமுடியாமல் விட்ட
விதியிதென்குறார் ஞானப்பெண்ணே. 43

வாசலிலேயொருமேல்வாச லந்த
லாசலிலேசிறுவாசலுண்டு
நேசமுடன் றிருவாசலிற்பூட்டு
நெருக்கம்பாரடி ஞானப்பெண்ணே. 44

அக்ஷரமாமௌனாக்ஷாமா மது
வானால் நல்லதிறவுகோலாம்
முத்திதமாகத்திறந்தாலே யந்த
வுச்சிவழிகாணும்ஞானப்பெண்ணே. 45

கண்ணாலேமனகண்ணாலேயதைக்
கண்டாலேவழியுண்டாகும்
பெண்ணாசை தனையடுக்காமல் வழி
பேணிப்பாரடி ஞானப்பெண்ணே. 46

பார்த்து நடப்பதுமேல்வாசலந்தப்
பாதையறிவதுமெவ்வாறு
மாத்திரைநேரம்பிரியாமற் பாதை
மார்க்கங்கேளடி ஞானப்பெண்ணே. 47

எருக்கிடத் தகுழி தாண்டி யதி
லிரண்டு விரற்கடைமேற்றாண்டி
கருக்கிடைக்குமடையாள மதைக்
கண்டுகேளடி ஞானப்பெண்ணே. 48

மாயனரண்மனைகாணீரோ வன்னி
மரமிருப்பதுந்தோணீரோ
நேயமதுகடந்தப்பாலேயறு
கோணப்படியடி ஞானப்பெண்ணே. 49

கோணத்தினின்று மயங்காதே சுழிக்
காற்றையடக்கிச்சிணுங்காதே
வீணுக்கலைந்து தியங்காதே தூல
வேடத்தைத் தள்ளடி ஞானப்பெண்ணே. 50

தூலத்தைவிட்டு விடாயாகி லதிற்
சூட்சத்தைக்காணமுடியாது
பாலத்திலேறி நடந்தாக்காற் பெரும்
பாதையி தல்லவோ ஞானப்பெண்ணே. 51

பாதையான பெரும்பாதை கிட்டப்
பட்டணமுண்டொருவட்டமதாய்
நாதமுங்கீதமுங்கேட்குதடி தெய்வ
நாயகன் சந்நிதி ஞானப்பெண்னே. 52

சந்நிதியென்னடி கண்டதுண்டோ கண்டாற்
றரத்துவம் பேசத்திறமுமுண்டோ
முன்னே முப்பாழுங்கடப்பதுண்டோ வதின்
முச்சுடருண்டடி ஞானப்பெண்ணே. 53

முச்சுடர்வட்டமேசக்கரமா மது
மூக்கு நுனியதுசுழிமுனையா
மச்சுடர்வட்டத்திருந்தவனே குரு
வானந்தநந்தியா ஞானப்பெண்ணே. 54

நந்தியிருந்தது வன்னிவட்டமதி
னாட்டம் புருவமத்தியான திட்டங்
சந்திரனுங்க தீர்சூரியனு மந்தத்
தலத்தில் நின்றனர் ஞானப்பெண்ணே. 55

நாதவிந்தல்லவோ நால்போனி தச
நாதவிந்தல்லோ வெழுதோற்றம்
நாதவிந்தா லுட முயிரும பர
நந்தியைப் போற்றடி ஞானப்பெண்ணே. 56

விந்துவிருந்த தலந்தனிலே குரு
நந்தியிருந்தார்கொலுவாகி
சிந்தைதெளிந்து மகாரமவைத்தா லந்தச்
சீமானைக்காணலாம் ஞானப்பெண்ணே. 57

சீமான் கிட்டவடுத்தாக்கான் மேலைச்
சீமைநமக்குக்குடியாச்சு
ஆமாமென்று கும்மிப்பாடி யரு
ளானந்தஞ்சேரடி ஞானப்பெண்ணே. 58

ஆனந்தமான தலந்தானே அது
அவ் வீதமான தலந்தானே
தானந்தமான சதாசிவத்தைப் போற்றித்
தாண்டி கும்மியடியங்கடி. 59

ஞானமா மாயிரத்தெட்டி தழ்ப்பீடம்
நாட்டமாஞ்சந்திரனார் வீடு
மோனமிருந்தமகார மௌனத்தை
மூட்டிகும்மியடியுங்கடி. 60

குண்டலிவாசியகாராடி பிடர்க்
கண்டமதிலேயகாரமடி
உண்டுசுழியின் மகாரம்வைத்தாற் சிவ
யோகமிதல்லவோ ஞானப்பெண்ணே. 61

ஓங்காரமான பிரணவத்தாரல் எங்கு
முயந்தசோமகலை நிறத்தாள்
றீங்காரமான பராசக்தியை நீங்கள்
நேர்ந்துகும்மியடியுங்கடி. 62

பூரகமுப்பத்திரண்டாகு மனப்
பூரணகும்பமிரட்டியதாம்
கூறவேரேசகமெண்ணிரண்டா மந்தக்
குறிப்பறிந்துகொள் ஞானப்பெண்ணே, 63

பிங்கலையாவதிரேசகத்தை வளர்
பூரகந் தன்னிலிடத் தூதி
நங்களை நந்தியிற்கும்பிக்கவே சிவ
நாட்டமி தல்லவோ ஞானப்பெண்ணே. 64

அறிந்துகொள்ளுமெழுத்தோடே பௌ
ரணை முதலமாவாசிமட்டும்
மறந்திடாமற்செய்மாத்திரையின்படி
வாசிவசமாகும் ஞானப்பெண்ணே. 65

காலாலேகனலேற்றுங்கடி சுழி
மேலேகொண்டமுதூட்டுங்கடி
மூலாதாரத் தலங்கேசரமென்று
முழங்கிக்கும்மியடியுங்கடி. 66

சார்ந்து கொள்ளடிகேசரத்தை முதற்
றன்னையறியலாந்தானாகக்
கூர்ந்து மூலக்கண பதபாதத்தைக்
கும்பிட்டுக்கொள்ளடி ஞானப்பெண்ணே. 67

நவ்வெழுத்தேபிரகனாராகு மதில்
நாரணன் மவ்வெழுத்தானானே
கிவ்வெழுதேதெய்வருத்திரனா மின்னுஞ்
செப்பவன் கேளடி ஞானப்பெண்ணே. 68

செப்பவேவவ்வுமகேசுரனாம் வட்டஞ்
சேர்க்கவுபசாரஞ்சதாசிவனாம்
தப்பிலாவைந்தெழுத்தாலேசராசரந்
தங்கியிருந்தது ஞானப்பெண்ணே. 69

வாலையினட்சரமூன்றாகும் அதை
வாய்கொண்டு சொல்பவரார்காணும்
மேலொன்று கீழொன்று மத்திபமுங்கூட்டி
விரைந்துபாரடி ஞானப்பெண்ணே. 70

விரைந்து சொல்லுவன் மூன்றெழுத்தாற் சதம்
விரிந்து தானுயி ருண்டாச்சு
தெரிந்து கண்டவர் தங்களுக்காவலை
தீட்சையிதல்லவோ ஞானப்பெண்ணே. 71

தீட்சையெனுஞ்சிவ சக்கரத்தின் மையந்
தேவியெழுத்தை நிறு நிறுத்திக்
காட்சியுடன் சிவ பூசைசெய்தாற் சித்தி
கைவசமாமடி ஞானப்பெண்ணே. 72

கள்ளுண்டு தள்ளுண்டு நில்லாதே யவின்
கஞ்சாவுறக்கமும் கொள்ளாதே
உள்ளுண்டுசோமக் கலையாதிபானத்தை
யூட்டிக்கும்மி யடியுங்கடி. 73

கும்மியடிப்பெண்கள் அம்பலத்தையரைக்
கூட்டியமுதங் குடியுங்கடி
அம்மென்று மும்மென்றுஞ் சொல்லாமனின்ற
அத்வீதம்பாடி ஞானப்பெண்ணே. 74

அக்லீதமாவத்துக்காதியடி மதி
ஆயிரத்தெட்டிதழ்ப் பூசைபண்ண
முத்திதருஞ்சோமப் பாலையனுதின
மூட்டிக்கும்மி யடியுங்கடி. 75

மூட்டுவதென்ன திரிகோணவட்ட
மூலத்தில் குண்டலி வாகியினால்
நாட்டுவன் பூரண நாலையுங்கட்டினா
னியாபமிதல்லனோ ஞானப்பெண்ணே. 76

கட்டி கொள்விந்துவைத் தள்ளாதே சுழிக்
காற்றையடக்கிப் பொருதாதே
சுட்டிமனப்பொருதுறாதேகாமச்
சோம்பலைத்தள்ளடி ஞானப்பெண்ணே. 77

சோம்பலுந் தூக்கமுமாகாதே அன்ன
சுதியுங்சோகமுங் கொள்ளாதே
சாம்பசதாசிவ நாட்டத்திலேநின்று
சார்ந்துகும்மி யடியுங்கடி. 78

கைவசமாமது சஷ்டிவித்தை ஞானக்
கற்பமும்வந்து லயிக்குமடி
தெய்வமிவரென்று சொன்னாரே நல்ல
சித்தருமுத்தரு ஞானப்பெண்ணே. 79

யோகத்துக்காதி யுமைதீட்சை மற்ற்
யோகத்துக்கெல்லா முதற்றீட்சை
போகத்தைக்கைவிடலாகாதே சத்திப்
பூசையை வேண்டிக்கொள் ஞானப்பெண்ணே. 80

வேண்டிக்கொள்விந்து மூதனாதஞ் சத்தி
மேவுஞ்சிவத்துடனே பரமாம்
தாண்டிக்கொளிந்த வகையாறும் யோக
சாதகசாக்கிரம் ஞானப்பெண்ணே 81

சாக்கிரம் விந்துக்கு மேலண்டமா மதைச்
சார்ந்திடுநிற்குண நிஷ்களந்தான்
பார்க்கினி ராதாராமலத்தை அத்தைப்
பாராவிடமந்தமாம் ஞானப்பெண்ணே, 82

அந்தமடியிந்த மேலாறுங்கண்டே
ஆரறிவாரடி ஞானவழி
சிந்தைதெரிந்த பெரியோரைக்கண்டு
சேவித்துக் கும்மியடியுங்கடி 83

சேவிப்பதுந்தவ னந்தியடி யோக
மாய்நிற்பது விந்துநாதமடி
ஆவிக்கிசைந்த சதா சிவசாக்கிரம்
அவ்விடமாமடி ஞானப்பெண்ணே. 84

அவ்விட்டேயுவ்விட்டே மேற்சுழியிற் சுவடி
அங்கியைவிட்டுக் காலாலே
மவ்விட்டுநாதவிந் துட் பொருளைக்கண்டு
வாழ்த்திக் கும்மியடியுங்கடி. 85

முழக்கமென்ன பிராணாபமதை
மூட்டுச்சமாதியி லிரேசகத்தை
விளக்குமாகு மிரவிகாந்தித்தம்
வேண்டிக்கும்மி யடியுங்கடி. 86

பார்க்குஞ்சுழிமுனை காணாரேயது
மூக்கு நுனி யென்றறியாரே
மார்க்க மறித்து பெரியோரைக்கண்டு
வாழ்த்திக்கும்மி படியுங்கடி. 87

வாழ்த்தியடி பெண்ணே சேகரத்தை வினை
மாற்றியடி பெண்ணே பூரணத்தை
தூற்று மகாமிய சஞ்சிதத்தை
தொலையை தொலைத்துக்கும்மியடி. 88

பாசமற்ற விடம் கேச மாம் ஒரு.
பாதியினின்றிட யோகமுமாம்
தேசமற்றார்பிர்ம் ஞானசமாதியு
விருவிசர்பமாம் ஞானப்பெண்ணே 89

கற்பமடியிது மெய்யாகு மற்றைக்
காமமெல்லாமிக அற்பமடி
தற்பரானந்த சதாசிவமோனத்தைச்
சார்ர் கும்மியடியுங்கடி. 90

பாசத்தைச் சொல்லு முடலாக அந்தப்
பசுவைச்சொல்லு முயிராக
நேசத்தினிற்பது யாதுபிர்ம
நிஷ்டையென்பாரடி ஞானப்பெண்ணே. 91

தேகத்துக்காதியா மைம்பூத மற்றைச்
செவலுக்காதியாம் விட்சேபம்
மோகத்திக்காதியா மாயையின்னு
முழுதுங்கேளடி ஞானப்பெண்ணே. 92

இண்டமுண்ட வியாகிருதற்கும்
இரணியார்ப்பன் விஷ்ணுவிக்கும்
மின்னியவிராட புருடனுக்குமிண்ணு.
மேலுண்டுசைதன்னியம் ஞானப்பெண்ணே 93

சைதன்னியவஸ்துவே பிரம்மடி அந்த
சாட்சிக்குபிந்தி பிம்பமடி
மெய்நின்றசுத்த வறிவானால் பிரதி
பிம்பத்தைத் தள்ளலாம் ஞானப்பெண்ணே. 94

ஆமடியிந்தப் பதந்தானே கண்டா
லாதியுமந்தமு நீதானே
நாமடிவாசிக்கு திரையினான்மிக்க
நல்லகதியடி ஞானப்பெண்ணே. 95

சாதிக்குதிரை வலுவேகஞ் சரு
தாருயிருக்கின்றான் மேலாக
வீதிக்கு வீதி சாரிவைத்தாற்பரி
வேடிக்கை பார்க்கலாம் ஞானப்பெண்ணே, 96

கட்டுபடாதந்த வச்சு மட்டம் அது
காலோ பன்னிரண் டாகையினால்
எட்டு கயிற்றினால் கட்டிகொண்டாலிது
மட்டுப்படுமடி ஞானப்பெண்ணே , 97

கட்டுப்படுமோ மலவாயில நடு
மையத்தின் குண்டலி வாசியினால்
எட்டையு நாலையுங் கட்டியே போற்றிடி
லேறி நடத்தலாம் ஞானப்பெண்ணே. 98

சூட்சக்குதிரை யடக்காது சுழிக்
கோட்டுக்குட் செல்லமுடியாது
மூச்சுக்காயிரங் காதவழிமிக
முந்திநடக்குதாம் ஞானப்பெண்ணே. 99

குதிரைகட்டிய லாயத்திலே மனக்
கோட்டையிலே சந்தைப்பேட்டையிலே
எதிரி தான் வந்து தட்டுகிறானதை
யேதென்றுகேளடி ஞானப்பெண்ணே. 100

காமனெவருக்கு மூத்தவனா மவன்
கற்றிடும்வித்தைகண் மெத்தவுண்டாம்
தாமதமான குரோதனும்லோ பனுந்
தம்பியாங்கேளடி ஞானப்பெண்ணே. 101

மோகமதமிரண்டு பிள்ளைகளாம். ஒரு
மூர்க்க மசியக் காரனொடு
சேகா வீரஷைடம்பனுஞ்சம்பனுஞ்
சினேகிதமாமடி ஞானப்பெண்ணே 102

சிநேகிதெனுக்கேற்ற வுரவாளி பொல்லாத
தீபவனா மோராங்காரி
அனேகத்தைசெய்யுமதியில் ரோஷனு
மத்தைமகனடி ஞானப்பெண்ணே 103

இவண்ணேகேளுபதின்மூன்று
பேர்களுண்டு பகையாளி
ஒன்றேயொன்று வசமானாலவ
ரொடுங்குவாரடி ஞானப்பெண்ணே. 104

ஒடுக்கமில்லை யிவராலே பல
னோட்டமில்லா மனக்கோட்டையிலே
படுகளத்துக்கு மேய்ந் துவரப் பசு
பற்று கிறாரடி ஞானப்பெண்ணே . 105

பாம்பிருக்குது புற்றுக்குள்ளே சக
பந்தமிருக்குது நெஞ்சுக்குள்ளே
வீம்பையடக்கி யுயர்ந்தாக்காற பரி
வேடிக்கை பாக்கலாம் ஞானப்பெண்ணே, 106

பித்து பிடித்தமனக் குரங்கு வெறிப்
பேயும்பிடித்திக் கொண்டாட்டமிட்டால்
அத்தையடக்க மருந்து செய்தாற் பரி
யன்று நடத்தலாம் ஞானப்பெண்ணே . 107

நடத்தலாமே மோனவாசி ஒரு
நாலைந் துபீத்தலை மூடாமல்
திடத்தினான் மனஞ் சித்தானாற்சித்தர்
தெளிந்து கொள்ளலாம் ஞானப்பெண்ணே. 108

தெளிந்தசித்தகம் பூட்டியதிற்
தேறு மறிவை பதிற்சேர்த்துக்
குனிர்ந்துஞான வைராக்கியகுறடா
கொண்டு மாட்டடி ஞானப்பெண்ணே.109

மூலத்தெருவி லொருபாச்ச லந்த
முச்சந்தி வீதியி வேர்பாய்ச்சல்
மேலைத்தெருவிலோர் பாய்ச்சற் பரி
வேடிக்கை பார்க்கலாம் ஞானப்பெண்ணே. 110

இந்தவி தங்களரியா மன் மணி
மந்திரமென்று திரிகின்றார்
அந்தரமான வெழுத்தறிந்தால் மணி
மந்திரமல்லவோ ஞானப்பெண்ணே. 111

மௌனமந்திரங்களினாலே தங்கள்
வாய் தனை மூடித் திரிவார்கள்
யுவனசாரம் புசிப்பார்க்கு மதி
போசனமாகுமோ ஞானப்பெண்ணே. 112

தாயென்று சொல்வார் சொற்பனத்திற் காம
சன்ன தம்வந்தா னினைப்பாறோ
வாய்கொண்டுவேதம் படித்தாலுஞ் சுத்த
மௌனந்தங்குமோ ஞானப்பெண்ணே. 113

தாடி வளர்த்துச் சடைவளர்த்து நல்ல
சந்தியா சியென் றொரு வேடமிட்டு
ஓடித்திரிந்த புலையாட்டை யிங்கோ
யொப்புவதாரடி ஞானப்பெண்ணே. 114

பேசா திருக்குமிடம்பார்த்து அதைப்
பெற்றேயிருப்ப மந்திரமாம்
ஆசானேன்றுபதேசவிட்டாற் குரு
வல்லவனென்று கும்மியடியுங்கடி. 115

சொற்குருவாலே தியாமோ பொய்யைச்
சொல்லுவார் தங்க இறவ மோ
சற்குருவானவரைச் சேர்ந்தேயவர்
தன் சொல்லைக்கேளடி ஞானப்பெண்னே. 116

நானென்றவாணவம் பேசார்க ணல்ல
நாடென் மங்காடென்றுஞ் சொல்வார்கள்
தானென்றி யாவையும் கண்டரே கல்ல
சற்குருவரமடி ஞானப்பெண்ணே . 117

குருவிருப்பது முள்ளத்திலே மன
கோணலறுப்பதுந் தன்னுக்குள்ளே
பொருளிறப்பதறியாமற் புடம்
போடுவதெப்படி ஞானப்பெண்ணே . 118

வாதஞ்செய்பவறியாமல் ரச
வாதஞ் செய்கின்றோ மென்று சொல்லிச்
சூதங்கெந்திபுடத்திலிட்டா வதிற்
சொர்னம் விளையுமோ ஞானப்பெண்ணே, 119

லிங்கமுருக்க வளைவார்கள் சாதி
லிங்கமிருப்ப தறியாமல்
வங்கமுக்தங்கஞ் சேர்த்திருக்கதை
பங்கமிதல்லவோ ஞானப்பெண்ணே 120

பாஷாணங்குகை தன்னில்வைத்து வெள்ளைப்
பாலூட்டி குசைமூடி
யீசானியப்புடமிட்டாலு மதி
லிருப்பதென்னடி ஞானப்பெண்ணே. 121

காரணமானது காரியா மதைக்
சுட்டவறியார் முழுமூடர்
பூரணமென்று திரிந்தாலு மதிற்
புண்ணியமுண்டாமோ ஞானப்பெண்ணே. 122

முப்பூவென்று திரிவார்கள் அந்த
முப்பூவந்த வகைகாணார்
அப்பூவென்று மறித்தாக்காற் சித்தி
யாமென்று கும்மியடியுங்கடி 123

காரத்தைக் கட்டவறியார்கள் கடுஞ்
சாரத்தை நீற்றினஞ் செய்யாமல்
வீசத்தைப்பூரத்தைச் சேர்த்ததினாலது
வீணல்லவோ சொல்லு ஞானப்பெண்ணே. 124

கோரவித்தையை யறியாமல் லோக
வேஷத்தினின்று மலைவார்கள்
சோசபீசமறிந்தாலே வாதங்
கேசரமாமடி ஞானப்பெண்ணே 125.

வாதக்கிறவுகோல்காணாரே பஞ்ச
பூதச்சரக்கையும் தோணாரே
யேதுக்குகணபுகைத் தூதுகின்றாரிதை
யேதென்று கேளடி ஞானப்பெண்ணே. 126

திருசுசுன்னமுடிந்தாச்சு அசைச்
சோதிக்க வெட்டாரை மாற்றாச்சு
பொருளைச் சொல்லிப் பணம்பரிப்பாரிவர்
பொய்க்குருவல்லவோ ஞானப்பெண்ணே. 127

கவனசூதமுடிந்ததென்பார் ஊசிக்
காந்தத்தைக்கிண்ணமுஞ்செய்தோமென்பார்
புவனவாதைப் புரட்டாலேயவர்
பிழைக்கிறாரடி ஞானப்பெண்ணே. 128

பிழைக்க முத்தி யறியாமற்சென்ம
பூர்வக்கியானமுந் தெறியாமற்
மழையைத்தின்று சறுகாகித்
தயங்குகிறாரடி ஞானப்பெண்ணே . 129

தயங்கியென்ன பலனாமோ மனஞ்
சாதித்துவிற்கத் திறமாமோ
மயங்கிடாதேவழலை மகத்துவம்
வருவதெப்படி ஞானப்பெண்ணே 130

உப்பையறிந்தவனேவாதி சகத்
துப்பையழிந்தவனே யோகி
தப்பிலையேபூமி நாதமகிமையைச்
சார்ந்து பாரடி ஞானப்பெண்ணே. 131

வீட்டிலிருக்குதொருமூலம் வெளிக்
காட்டிலிருக்கு திருமூலம்
மாட்டிவிருக்கும் பெரியோர்க்கு ரச
வாதமிதல்வவோ ஞானப்பெண்ணே. 132

தோணாதென்றசரக்கெடுத்துக் கருஞ்
சூரசூரையில் வைத்தெடுப்பச்
காணான் கண்ட பொருள்போலேசித்தி
தானென்று கும்மியடியுங்கடி 133

நெல்லியிருக்குது காட்டுக்குள்ளே கரு
நெல்லியிருக்கு வீட்டுக்குள்ளே
கொல்லி மலைக்குத் தரித்தாலுங்குரு
கொண்டு வருவாரோ ஞானப்பெணணே. 134

காயாம்பட்டிகுளத்துக்குள்ளே வெள்ளை
காசாம்வேரு முளைத்திருக்கும்
வாயாற்றினின்று நிமிர்ந்தாக்கானுடல்
மாயாதல்லவோ ஞானப்பெண்ணே, 135

கற்பநிலையறிந்தென்ணாமல் வெறிக்
கஞ்சாவுன்டு விருப்பார்கள்
அற்பர்குகை மலை சென்றாலும் வஸ்து
வரியலாகுமோ ஞானப்பெண்ணே. 136

கொங்கணர் சொன்ன கடைக்காண்டம் அதிற்
சங்கையறிவது பிர்மாண்டம்
எங்கள் குரு சட்டமாமுனியா
ரிருதூறும்பாரடி ஞானப்பெண்ணே. 137

நூறிலுரைத்தது மெஞ்ஞானர் திரு
மூலருணர்ந்ததுவே ஞானம்
பூரணகும்பமுனி சொன்ன சூத்திரம்
பூட்டகம்பாரடி ஞானப்பெண்ணே. 138

தீட்சையின் மச்சமுனி தீட்சையவர்
செப்பின ஞான மொறு நூறும்
தாழ்ச்சி வராது பெரியோரைக்கண்டு
காட்சிகேளடி ஞானப்பெண்ணே. 139

ரேசக பூரக கும்பத்தால்வாசி
நேரிட்டு செய்யவது மாசையடி
கேசரமாகிய வத்விதபிர்மத்தைக்
கிட்டிக்கும்மி யடியுங்கடி. 140

உப்பைவிடுவதுமாசைபடி யன்ன
மோர்பொழு துன்பதாசையடி
செப்பவொண்ணாக மனோன் மணித் தேவனைச்
சேர்ந்து கும்மியடியுங்கடி 141

வாசலிலேயொரு மேலவாச லந்த
வாசலிலேசிறு வாசலுண்டு
நேசமுடன் சிறு வாசலிற்பூட்டி
நெருக்கப்பாரடி ஞானப்பெண்ணே 142

தேசங்கள் போவது மாசையடி குல
தெய்வமுண்டென்பது மாசையடி
நேசமெம்பிர்ம ஞான சே.தியை
சேர்ந்துகும்மி படியுங்கடி. 143

சமயபேதமுமாசையடி கங்கா
ஸ்நானபூசையு மாசையடி
மமதையற்றிருக்கின்ற மமதையை
வாழ்த்தி கும்மி யடிடியுங்கடி. 144

பால்கறவாப்பசு தள்ளுங்கடி பதி
பாசத்தையும் விட்டுத் தீருங்கடி
மேல் விளங்கிய தற்பரசோதியை
வேண்டிகும்மி யடியுங்கடி, 145

தத்தவகுப்பையைத் தள்ளுங்கடி வேத
சாஸ்திரப் பொத்தலை முடுங்கடி
முத்தி தருஞான வஸ்துவைவாவென்று
மூட்டிகும்மி யடியுங்கடி. 146

ஆறாதாரமுந்தொல்லையடி யதற்
கப்பாலேயொன்றுமில்லை யடி
சீராய்நின்ற நிலைத்துப்பெண்கள்
சேர்ந்து கும்மி யடியுங்கடி. 147

சித்தர் சொற்படி சிந்தாந்தங் கண்டு
தெளிந்து கொள்ளடி வேதாந்தம்
தத்துவமாகிய வுற்பத்தி சூக்குமச்
சார்புசேளடி ஞானப்பெண்ணே 148

சார்புதானென்னடி வேதாந்தஞ் சொல்லும்
தத்துவந்தா னிவ்வகையுடனே
காரணாதிய வஸ்தைநிலைகளின்
கணக்குறைக்கிறேன் ஞானப்பெண்ணே 149

உரைக்குந்தத்துவ நாலேழிற்கண்
டோதுஞ்சித்துரு நாலாறாம்
மறைக் குட்சொலலிய சித்துருதாலாகு
மகிமைபாரடி ஞானப்பெண்ணே 150

மகிமையாகிய தொம்பதமா மதில்
வந்தவுபாதி யுணர்த்துகிறேன்
தகைமையென்னமுன் சொன்னவசித்திரு
தன்செயல்கேளடி ஞானப்பெண்ணே. 151

வாசன் மிகுந்த வுடம்போடு பிராண
வாயுவோடிந்திரிய மானதொன்று
காசலையா மதி சேர்ந்து வளர்ந்த
காரணநாலடி ஞானப்பெண்ணே . 152

காரணமென்பதிவையேழும் வந்து
கலந்ததாமடி தொம்பத்ததைத்
காரணதொம்பத மான துஅரியத்திற்
றன்னுடலாச்சுதா ஞானப்பெண்ணே. 153

தன்றூலமாகிய சாக்கிரத்தைத்தன
தாகவிருந்திடு மாத்து மற்குப்
பின் சொல்வதாம் விஸ்வ னென்றபிமானப்
போல்லோசொல்லடி ஞானப்பெண்ணே, 154

பேர்பெறுமெந்தர முபாதியுடன் கூடப்
பெற்றிடுஞ்சூட்சம் சொற்பனத்தின்
கார்பிலிருந்த தரியற்குநாமமுந்
சைதனாமடி ஞானப்பெண்ணே 155

ஆகும் பிராணனல வாயுவடன் கூடி
யடங்கிமூலத்துடன் சேர்த்து
சேகரமாவந்த நாததுரியத்தை
சேர்த்திடிற்காரண தேகமடி. 156

சேர்ந்தவவத்தை சுழுத்தியடி யதைச்
சேர்ந்தவனும் பிராக்ஞனாகுமடி
கூர்ந்தமூன்றையும் கண்டராமத்தைக்
கும்பிட்டுக்கும்மி யடியுங்கடி. 157

கும்பிட்டுத்தொம்பதச் சித்தார்த்தங் கண்டு
கூறியஞாய மிதுபோல
வம்பிட்டுத்தற்பத மானவிவேகத்தை
யறிச்சொல்லுவேன் ஞானப்பெண்ணே. 158

அறிவகென்னடி தொம்பதமாம் பொரு
னானவுபாதியு மானதுபோற்
சருவதற்பா மான பொருளுக்குத்
தன்னுடல் சீவன் றுரியமடி. 159

சர்வஞ்ஞன் சருவக்காரனுஞ் சரு
வேந்தரியாமிசர்வேஸ்வரனுஞ்
சர்வ கிருஷ்டிசர்வதிதிசர்வ
சங்காரனும்பேராம் ஞானப்பெண்ணே . 160

பேரான தென்ன விவையேழு மிகப்
பேசிடில்வாதம் தரியமடி
தோராவுபாதியைப் பெற்றதினான் முத்தி
தூஷணமுண்டாச்சு ஞானப்பெண்னே. 161

தூஷ ணச்சீவனிவையேழுங் கண்டு
சொல்லும்பானுக்குடலாச்சு
சாஸ்வுதமென்றதானத்தினாற்சாயா
கிரகமென்றுபேர் ஞானப்பெண்ணே, 162

சாக்கிரந்தன்னை தானென்று சொல்லி யப்பால்
தானபிமானிதருந்தாக்காற்
சேர்க்க விராட்டனச் சொல்லுவார்காமர்
தெரிந்துக் கொள்ளடி ஞானப்பெண்ணே. 163

தெரிந்தமூன்றனுபாதியுமா மதிற்
சேர்ந்தபானபர சொப்பனமாம்
பிரிந்திடாதபி மானனிரனிய
கற்பனென்பாரடி ஞானப்பெண்ணே. 164

பாருமிதிலொரு பாதியுடன்
பானுக்கல்லவோர் பார்சுழித்தி
சேரும்பொழுது வியாகிருதனெனச்
சிந்தையிற்காணடி ஞானப்பெண்ணே. 165

காணடி தற்பத சத்தாரத்த பதைக்
கண்டு தெரிந்த வகை போலே
யூண்டிஞான சிவகாதத்தி
னுண்மையைக்கேளடி ஞானப்பெண்னே. 166

உண்மையான்தற்பரநற்றுரியங் கண்டு
முற்றுப்பாரா தொரு தோஷமதால்
தண்மைச்சிவப்பத சுத்தனுக்குப்பரன்
தன்னுடலாச்சுக ஞானப்பெண்ணே. 167

ஓதும்பரமவிஸ்வகிராசமடி யுப
சாந்தமெனுமவகை மூன்றிலொன்றைச்
சாதனை செய்தசிவத்துக் கல்லோ பர
சாக்கிரமாகுமே ஞானப்பெண்ணே. 168

ஆகும்பொருள் சிவ சாக்கிரத்தை யபி
மானிதிருந்த சிவதரியம
சேகரமாயிடிறசிறசொலிதையென்று
செப்பிடுமவாக்கிய ஞானப்பெண்ணே 169

வாக்கிய மாம்விஸ்வ கிராசமடி பந்த
மார்க்கமென்னசிவ சொப்பனத்தைப்
பாக்கியனபிமானிடத்திற் பிரசா
பத்தனென் - சொல் ஞானப்பெண்ணே . 170

சொல்லுவதுமென்ன வு பசாந்தஞ் சிவ
சுழுத்திதானென் றிருர்தாக்கால்
நல்லது பொற்புறு சாந்தனென்ற லது
காமமதல்லவோ ஞானப்பெண்ணே 171.

நாமச்சிவ துரியத்திலடி யபி
மானமிழந்து தனித்ததினால்
சேமமிதல்லவோ வாதி துரியத்தி
னிலைமைகண்டிலா ஞானப்பெண்ணே, 172

கண்டறியாதது முற்றிரிய மதைக்
கண்டுசுழன்று மேலான தடி
பண்டுபிர்மவானந்த சொரூபத்தைப்
பணிந்துகும்மி யடியுங்கடி. 173

பணிந்தஞானமதுதாண்டி பர
மானந்தமான திதுதாண்டி
துணிந்து பாரு மானந்தசொரூபனைத்
தொழுதுகும்மி யடியுங்கடி. 174

தொழுது கொள்ளுஞ்சுகசீவ பர
சுத்தப்பொருளு மிதுதாண்டி
பழுதிலாத சொரூபக்குருவுடைப்
பாதமிதல்லவோ ஞானப்பெண்ணே. 175

பதமாகியதொம்பதமாம் அதிற்
பாதமுந்தற்பத மான தடி
பேதவுபாதியவத்தைகளும் பல
பேர்களுமானது ஞானப்பெண்ணே. 176

பேருக்குச்சாந்த துரியமடி யதைப்
பேசுவுந்தற்பிர காசமடி
யாருக்குங்கண்டறி யாதபொருளைக்கண்
டகக்தெளிந்துகும்மி யடியுங்கடி. 177

முத்திபெறுந்தேவ தத்தனைப்போற் சக
முழுதுந்தன் மய மான தடி
நந்தியே விட்டு விடாதேவிலக்கண
ஞாயமி தல்லவோ ஞானப்பெண்ணே . 178

ஞானமாமோட்சமி துதாண்டி மற்ற
ஞாயமெல்லா மன மாயமடி
தானசங்கற்ப விகற்பசமயமுந்
தன்மயமானது ஞானப்பெண்ணே. 179

தூரதூரமுமில்லையடி யதைச்
சொல்வ துங்கேட்பது மில்லையடி
தாரார்பிர மநிலை பார்த்துப் பெண்கள்
தாண்டிக்கும்மி யடியுங்கடி. 180

அண்டமும்பிண்டமும்பாழாச்சே அறுக்
கப்பாலும் பெரும்பாழாச்சே
உண்டில்லையென்று பராபரப்பிரமத்தை
யுவந்துகும்மி யடியுங்கடி. 181

சொல்லினுங் கல்லிது நில்லாதே பிர்ம
சோதிபையாகியைத் தூவெளியை
வல்லத்தற்பிர காசமவுனத்தை
கையரிந்துகொள் ஞானப்பெண்ணே. 182

பிருதிவியில் தூய்மை வயமாச்சே பதில்
பேதம்பலபல வுண்டாச்சே
சுருதிமுடிவைக்குருசொல்லுவா பரந்த
சூட்சந்தெரியுமோ ஞானப்பெண்ணே. 183

அரிந்துகொண்டபெரியோர்பாதங்க
ளர்ச்சனை செய்து கும்மித்தமிழைப்
பிரிந்திடாமனூற்றெண்பத்தைந்துகண்ணி
பேசினேன் சற்குரு தாள்வாழி. 184

சற்குருபாதமிகவாழி வாலை
சாமிதமிழ்நிதந் தான்வாழி
நற்குண ஞானக் கும்மித் தமிழ்கற்றவர்
ஞானநெறியே மிகவாழி. 185

ஞானக்கும்மி - முற்றிற்று

------------------