pm logo

வரத பண்டிதர் எழுதிய
பிள்ளையார் கதை


piLLaiyAr katai
by varata paNTitar
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Noolaham.net for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

"வரத பண்டிதர் எழுதிய பிள்ளையார் கதை

Source:
கவிப்புலமை யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகத்தைச் சேர்ந்த
வரத பண்டிதர் அருளிச்செய்த
பிள்ளையார் கதை
இது, அவர்வழித் தோன்றல்
தமிழ்ப்பண்டிதர் வ. மு. இரத்தினேசுவர ஐயரால்
பரிசோதித்து வெளியிடப்பெற்றது.
சண்முகநாதன் புத்தகசாலை
யாழ்ப்பாணம்.
1958
-------------------------
‚
கணபதி துணை


விநாயகர் மகிமை


பிரணவ வடிவமே விநாயகர், தமக்கு மேலான நாயகர் இல்லாத பெருமான் என்பதே சொற்பொருள். தேவர், மனிதர் முதலிய, யாவராலும் முதலில் வழிபடப்படுபவர் மூத்த பிள்ளையாரே. “விக்கின விநாயக பாத நமஸ்தே” என்பர் வட நு}லார். தம்மை நினைவாரது இடையூறுகளைப் போக்கியும், நினையாதார்பால் துன்பங்களை உளவாக் கியும் விளங்குதலால் விநாயகருக்கு விக்கினேசுவரர் என்ற திருநாமமுளதாயிற்று.

சிவபிரான், திரிபுர தகனஞ் செய்யச் செல்லுங்கால் நினையாமையால் அவர் சென்ற தேரின் அச்சிறச் செய்தார் என்பர். அச்சிறு பாக்கம் இன்றும் உளது.

பாற்கடல் கடையும்போது திருமால் முதலினோர் சிந்தியாமையால், கணேசமூர்த்தி மந்தர மலையைச் சாய்த்தனர் என்றும் கூறுவர்.

ஒளவையார் பூசையை ஏற்றுக் கயிலை சேர்த்த அனுக்கிரக மூர்த்தி விநாயகரே! சேரமான் குதிரை கயிலை சார ஒளவையாரை விநாயகப் பெருமான் துதிக் கையாலெடுத்துக் கயிலையில் இட்டனர். இதனால்,

“கிழவியுங் காதம், குதிரையுங் காதம்”

என்றார் முன்னோர். நன்மை நாடொறும் நணுக விநாயகப் பெருமானைப் போற்றி நலம் பெறுவோமாக.

சுபம்.
----------

விநாயகர் விரதம்

மக்கள் சாந்த வழிபாடு செய்வதில் விரதங்களும் ஒன்றாகும். விநாயகர், சுப்பிரமணியர், சிவன், சத்தி வணக்க முடைமையால் ஆன்ம உய்தி பெறலாம்.

விநாயகர் விரதங்கள் பல. அவற்றுள் கார்த்திகை மாசம் அபரபக்கப் பிரதமை முதல் மார்கழி மாசத்துப் பூர்வ பக்கச் சஷ்டி வரையும் உள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமும் ஒன்றாகும். இது, விஷ்ணு மூர்த்தியை பாம்பாக இருக்கும்படி தேவி சபித்ததை விமோசனஞ் செய்யச் சாதனமாயிருந்தது.

“வின்னாமம் புகல்கின்ற மக்கமதி ஆறாம் பக்கம்”

என்பதால் அறியலாம் (வில் - தனுர்மாசமான மார்கழி) நமது யாழ்ப்பாணத்தில் இருபத்தொருநாளும் நியமமாக விநாயக வழிபாட்டுடன் அனுஷ்டிப்பவர் பலர் இன்றுமுளர். ஆடவர் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் இருபத்தொரு இழையாலாகிய நு}ல் காப்பு அணிந்து விரதமிருத்தல் வேண்டும். இப்படிச் செய்ய இயலாதோர் மார்கழி மாத விநாயகர் சஷ்டியினன்று விரத சீலராக இருப்பது இன்பமூலமாகும். தன வைசியர்கள், மரகத விநாயகரைச் சஷ்டியினன்று மிகவும் வழிபாடு செய்து வருகின்றனர்.

பிள்ளையார் கதையை அன்புடன் இவ்விரத நன்னாட்களில் படிப்பது புண்ணிய மாகும். பகை நோய்கள் நீங்க, வென்றி, எடுத்த காரிய சித்தி, திடகாத்திரம் முதலிய சிறப்புக்கள் உண்டாகும்.
‚-----------------------

கணபதி துணை

பிள்ளையார் கதை

சிறப்புப் பாயிரம்

செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
கந்த புராணக் கதையிலுள் ளதுவும்
இலிங்க புராணத் திருந்தநற் கதையும்
உபதேச காண்டத் துரைத்தநற் கதையுந்
தேர்ந்தெடுத் தொன்றாய்த் திரட்டியைங் கரற்கு
வாய்ந்த நல்விரத மான்மிய முரைத்தான்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்
துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
அரங்க நாத னளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தொறும்
வரம்பெற வணங்கும் வரதபண் டிதனே.

சிவமயம்
காப்பு

கரும்பு மிளிநீருங் காரௌளுந் தேனும்
விரும்பு மவல்பலவும் மேன்மே - லருந்திக்
குணமுடைய னாய்வந்து குற்றங்க டீர்க்குங்.
கணபதியே யிக்கதைக்குக் காப்பு.

திருவிளங்கு மான்மருகா சேவதனி லேறி
வருமரன்றா னீன்றருளு மைந்தா - முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா வுனைத் தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.

விநாயகர் துதி

திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை.

ஒற்றை யணிமருப்பு மோரிரண்டு கைத்தலமும்
வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தி லெப்
பொமுதுங் கொண்டக்கால் வராது கூற்று.

அதிகாரம்

பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்
கந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச்
செந்தமிழ் வகையாற் றெளிவுறச் செப்பினன்
அன்னதிற் பிறவினில் அரிறபத் திரட்டித்
தொன்னெறி விளங்கச் சொல்வுவன் கதையே.

நூல்

மந்தர கிரியில் வடபா லாங்கோர்
இந்துவளர் சோலை யிராசமா நகரியில்
அந்தண னெருவனு மாயிழை யொருத்தியுஞ்
சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்
கடவுளா லயமுங் கடிமலர்ப் பொய்கையுந்
தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்
புதல்வரைத் தருகெனப் பொருப்பர சீன்ற
மதர்விழி பாகனை வழிபடு நாளின்
மற்றவர் புரியும் மாதவங் கண்டு
சிற்றிடை யுமையாள் சிவனடி வணங்கிப்       10

பரனே சிவனே பல்லுயிர்க் குயிரே
அரனே மறையவற் கருள்புரிந் தருளென
அந்தவந் தணனுக் கிந்தநற் பிறப்பின்
மைந்தரில்லை யென்று மறுத்தர னுரைப்ப
எப்பரி சாயினு மெம்பொருட் டொருசுதன்
தப்பிலா மறையோன் றனக்கருள் செய்கென
எமையா ளுடைய வுமையாண் மொழியா
இமையா முக்க ணிறைவன் வெகுண்டு
பொண்சொற் கேட்டல் பேதைமை யென்று
பண்சொற் கேட்டல் பேதைமை யென்று
பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப்       20

பேதாய் நீபோய்ப் பிறவென மொழிய
மாதுமை யவளும் மனந்தளர் வுற்றுப்
பொன்றிடு மானுடைப் புன்பிறப் பெய்துதல்
நன்றல வென்றே நடுக்கமுற் றுரைப்பக்
கறைமிடற் றண்ணல் கருணை கூர்ந்து
பிறைநுத லவற்குநீ பிள்ளை யாகச்
சென்றவண் வளர்ந்து சிலபகற் கழித்தால்
மன்றல்செய் தருள்வோம் வருந்தலை யென்று
விடைகொடுத் தருள விலங்கன்மா மகளும்
பெடைம யிற்சாயற் பெண்மக வாகித்       30

தார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன்
சீர்மலி மனைவி திருவயிற் றுதித்துப்
பாவை சிற்றிலும் பந்தொடு கழங்கும்
யாவையும் பயின்ற வியல்பின ளாகி
ஐயாண் டடைந்தபின் னன்னையு மத்தனும்
மையார் கருங்குழல் வாணுத றன்னை
மானுட மறையோற்கு வதுவை செய்திடக்
கானமர் குழலியைக் கருதிக் கேட்பப்
பிறப்பிறப் பில்லாப் பொரியோற் கன்றி
அறத்தகு வதுவைக் கமையேன் யானென       40

மற்றவன் றன்னையுன் மணமக னாகப்
பெற்றிட லரிதெனப் பெயர்த்தவர் பேச
அருந்தவ முயற்சியா லணுகுவே னியானெனக்
கருந்தட நெடுங்கட் கவுரியங் குரைத்து
மருமலி கமல மலர்த்தடத் தருகிற்
றருமலி நிழற்றவச் சாலைய தமைத்துப்
பணியணி பற்பல பாங்கியர் சூழ
அணிமலர்க் குழலுமை யருந்தவம் பயில
அரிவைத னருந்தவ மறிவோம் யாமென
இருவரு மறியா விமையவர் பெருமான்       50

மானிட மேந்தும் வண்ணம தொழித்து
மானிட யோக மறையவ னாகிக்
குடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு
மடமயி றவம்புரி வாவிக் கரையிற்
கண்ணுதல் வந்து கருணை காட்டித்
கண்ணுறுங் கூந்தற் றையலை நோக்கி
மீள்பெறு நுண்ணிடை மெல்லிய லாய்நீ
என்பெறத் தவமிங் கியற்றுவ தென்றலுங்
கொன்றை வார்சடையனைக் கூடவென் றுரைத்தலும்
நன்றெனச் சிரித்து நான்மறை யோனும்       60

மாட்டினி லேறி மான்மழுத் தரித்துக்
காட்டினிற் சுடலையிற் கணத்துட னாடிப்
பாம்பு மெலும்பும் பஃறலை மாலையுஞ்
சாம்பரு மணிந்து தலையோ டேந்திப்
பிச்சைகொண் முழலும் பித்தன் றன்னை
நச்சிநீ செய்தவம் நகைதரு முனக்கெனப்
பூங்கொடி யருந்தவம் பூசுரன் குலைத்தலும்
ஆங்கவ ணாணமுற் றணிமனை புகுதச்
சேடியர் வந்து செழுமலர் குழலியை
வாடுத லொழிகென மனமிகத் தேற்றிச்       70

சிந்துர வாணுதற் சேடியர் தாம்போய்த்
தந்தைதா யிருவர் தாளினை வணங்கி
வாவிக் கரையில் வந்தொரு மறையோன்
பாவைதன் செய்கையைப் பாற்றினா னென்றலுந்
தோட லர்கமலத் தொடைமறை முனியை
ஆடக மாடத் தணிமனை கொணர்கென
மாடக யாழ்முரல் மங்கைய ரோடி
நீடிய புகழாய் நீயெழுந் தருளென
மைம்மலர்க் குழலி வந்தெனை யழைக்கில்
அம்மனைப் புகுவனென் றந்தண னுரைத்தலும்       80

பொற்றொடி நீபோய்ப் பொய்கை யினின்ற
நற்றவ முனியை நடத்திக் கொணர்கெனச்
சிவனை யிகழ்ந்த சிற்றறி வுடையோன்
அவனையான் சென்றிங் கழைத்திடே னென்று
சிற்றிடை மடந்தை சீறின ளாகி
மற்றைய மாதர் மதிமுக நோக்கி
நெற்றியிற் கண்ணுடை நிமலுக் கல்லதென்
பொற்பமர் வேட மறையவன் றனக்கு
யான்வெளிப் படுவ தில்லையென் றிசைப்ப       90

மலையிடை வந்த மாமுனி தன்னை
இணையடி தொழுத லிளையோர்க் கியல்பெனத்
தந்தையுந் தாயுந் தகைபெற மொழியச்
சிந்தை குளிர்ந்து சீறுத லொழிந்து
தாய்சொன் மறுத்தல் பாவமென் றஞ்சி
ஆயிழை தானு மவனெதிர் சென்று
சுற்றிவந் தவனடி சுந்தரி வணங்கி
மற்றவன் றன்னை மனையிற் கொணர்ந்து
ஆதியம் பகவற் கன்ப னாகும்
வேதியன் பழைய விருத்தனென் றெண்ணி       100

ஆசனம் நல்கி யருக்கிய முதலாப்
பாத பூசனங்கள் பண்ணிய பின்னர்ப்
போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய்
ஆன்பால் மாங்கனி யழகிய பலாச்சுளை
தேன்கத லிப்பழஞ் சீர்பெறப் படைத்து
அந்தணன் றன்னை யமுதுசெய் வித்துச்
சந்தனங் குங்குமச் சாந்திவை கொடுத்துத்
தக்கோ லத்தொடு சாதிக் காயும்
கர்ப்பூ ரத்தொடு கவின்பெறக் கொண்டு
வெள்ளிலை யடைக்காய் விளங்கிய பொன்னின்       110

ஒள்ளி யதட்டி லுகந்து முன்வைத்துச்
சிவனெனப் பாவனை செய்து நினைந்து
தவமறை முனிவனைத் தாளினை வணங்கத்
தேனமர் குழலி திருமுக நோக்கி
மோனமா முனிபுன் முறுவல் காட்டிக்
கற்றைச் சடையுங் கரமொரு நான்கும்
நெற்றியி னயனமுந் நீல கண்டமும்
மானும் மழுவும் மலர்க்கரத் திலங்கக்
கூன்மதி நிலவுங் கொழித்திட முடிமேல்
வரந்தரு முதல்வன் மடமயில் காணக்       120

கரந்ததன் னுருவங் காட்டி முளிற்ப
மரகத மேனி மலைமக டானும்
விரைவொடங் கவனடி வீழ்ந்திறைஞ் சினளே
அரியய னிந்திர னமரர் விஞ்சையர்
கருடர் கின்னரர் காய வாசியர்
ஏதமில் முனிவ ரவுண ரிராக்கதர்
பூத ரியக்கர்கிம் புருட ரலகை
சித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாக்
கணிக்கரும் பதினெண் கணத்தி லுள்ளவரும்
மணிக்கருங் களத்தனை வந்தடைந் ததற்பின்       130

மன்றலங் குழலிக்கு வதுவைநாட் குறித்துத்
தென்றல் வந்திலங்கு முன்றி லகத்துப்
பொன்றிகழ் பவளப் பொற்கா னாட்டி
மாணிக்க கத்தால் வளைபல பரப்பி
ஆணிப்பொற் றகட்டா லழுகுற வேய்ந்து
நித்தில மாலை நிரைநிரை து}க்கிப்
பத்திக டோறும் பலமணி பதித்துத்
தோரண நாட்டித் துகில்விதா னித்துப்
பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத்
திக்குத் தோறும் திருவிளக் கேற்றிப்       140

பத்திப் படாமுளைப் பாலிகை பரப்பிக்
கன்னலுங் கழுகுங் கதலியு நாட்டிப்
பன்மலர் நாற்றிப் பந்தர் சோடித்து
நலமிகு கைவலோர் நஞ்சணி மீடற்றனைக
குலவிய திருமணக் கோலம் புனைந்தார்
வருசுரர் மகளிர் மலைமக டன்னைத்
திருமணக் கோலஞ் செய்தன ராங்கே
எம்பி ரானையு மிளங்கொடி தன்னையும்
உம்ப ரெல்லா மொருங்குடன் கூடிக்
கடலென விளங்குங் காவணத் தன்னிற்       150

சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையின்
மறைபுகழ்ந் தேத்த மகிழ்த்துட னிருத்திப்
பறையொ லியோடு பனிவளை யார்ப்ப
வதுவைக் கேற்ற மறைவிதி நெறியே
சதுர்முக னோமச் சடங்குக னியற்றத்
தறுகலற் றொளிபொற் றாலி பூட்டிச்
சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின்
அரிவலஞ் சூழ வெரிவலம் வந்து
பரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப்
போதணி கருங்குழற் பூவை தன்னுடனே       160

ஓதநீர் வேலிசூ ழுஞ்சையம் பாதிபுக
ஏரார் வழியி னெண்டிசை தன்னைப்
பாரா தேவா பனிமொழி நீயென
வருங்கருங் குழலாண் மற்றுமுண் டோவெனத்
திருத்திழை மடந்தை திரும்பினாள் பார்க்கக்
களிறும் பிடியுங் கலந்துவிளை யாடல்கண்
டொளிர்ம ணிப்பூணா ளுரவோ னுடனே
இவ்வகை யாய்விளை யாடுவோ மீங்கென
அவ்வகை யரனு மதற்குடம் பட்டு
மதகரி யுரித்தோன் மதபரி யாக       170

மதர்விழி யுமைபிடி வடிவ மதாகிக்
கூடிய கலவியற் குவலயம் விளங்க
நீடிய வானோர் நெறியுடன் வாழ
அந்தணர் சிறக்க வானினம் பெருகச்
செந்தழல் வேள்விவே தாகமஞ் சிறக்க
அறப்பல பெருக மறப்பல சுருங்கத்
திறம்பல வரசர் செகதலம் விளங்க
வெங்கரி முகமும் வியன்பு மைக்கையோ
டைங்கர தலமு மலர்ப்பத மிரண்டும்
பவளத் தொளிசேர் பைந் துவர்வாயுந்       180

தவளக் கிம்புரித் தடமருப் பிரண்டுங்
கோடி சூரியர்போற் குலவிடு மேனியும்
போழைபோ லகன்ற பெருங்குட வயிறும்
நெற்றியி னயனமு முப்புரி நு}லுங்
கற்றைச் சடையுங் கனகநீண் முடியுந்
தங்கிய முறம்போற் றழைமடிச் செவியுமாய்
ஐங்கரத் தண்ணல் வந்தவ தரித்தலும்
பொங்கர வணிந்த புண்னிய மூர்த்தியும்
மங்கை மனமிக மகிழ்ந்துட னோக்கி
விண்ணுலோர்களும் விரிந்த நான் முகனும்       190

மண்ணு ளோர்களும் வந்துனை வணங்க
ஆங்கவர் தங்கட் கருள் சுரந்தருளித்
தீங்கது தீர்த்துச் செந்நெறி யளித்துப்
பாரண மாகப் பலகனி யருந்தி
ஏரணி யாலின்கீ ழினிதிரு வென்று
பூதலந் தன்னிற் புதல்வனை யிருத்திக்
காதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும்
மைவளர் சோலை மாநகர் புகுந்து
தெய்வ நாயகன் சிறந்திளி திருந்தபின்
வான வராலு மானு டராலுங்       200

கானமர் கொடிய கடுவி லங்காலுங்
கருவி களாலுங் கால னாலும்
ஒருவகை யாலு முயிர ழியாமல்
திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில்
வரம் பெறுகின்ற வலிமை யினாலே
ஐம்முகச் சீயமொத் தடற்படை சூழக்
கைம்முகம் படைத்த கயமுகத் தவுணன்
பொன்னுல கழித்துப் புலவரை வருத்தி
இந்நிலத் தவரை யிடுங்கண் படுத்திக்
கொடுந் தொழில்புரியுங் கொடுமை கண்டேங்கி       210

அடுத்தொழிற் குலிசத் தண்ணலு மமரருங்
கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி
முறையிடக் கேட்டு முப்புர மெரித்தோன்
அஞ்சலீ ரென்றவர்க் கபயங் கொடுத்தே
அஞ்சுகைக் கரிமுகத் தண்ணலை நோக்கி
ஆனைமா முகத் தவுணனோ டவன்றன்
சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது
குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி
வென்றுவா வென்று விடைகொ டுத்தருள
ஆங்கவன் றன்னோ டமர்பல வுடற்றிப்       220

பாங்குறு மவன்படை பற்றறக் கொன்றபின்
தேர்மிசை யேறிச் சினங்கொடு செருவிற்
கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல்
ஒற்றைவெண் மருப்பை யொடித்தவ னுரத்திற்
குற்றிட வெறிந்தான் குருதிசேர்ந் திடவே
சோர்ந்த வன்வீழ்ந்து நுண்ணென வெழுந்து
வாய்ந்த மூடிகமாய் வந்தவன் பொரவே
எந்தை விநாயக னேறின னிப்பால்
எறிந்த வெண்மருப்பங் கிமைநொடி யளவிற்       230

செறிந்தது மற்றவன் றிருக்கரத் தினிலே
வெல்வைக் கதிர்வேல் விழிபடைத் தருளும்
வல்லவை தனைத்தன் மளையென மணந்தே
ஒகையோ டெழுந்தாங் குயர்படை சூழ
வாகையும் புனைந்து வரும்வழி தன்னிற்
கருச்சங் கோட்டிக் கயல்முக கேறுந்
திருச்செங் காட்டிற் சிவனை யர்ச்சித்துக்
கணபதீச் சுரமெனுங் காரண நாமம்
கணபதி புகழ்தரு பதிக்குண் டாக்கிச்
சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ       240

இங்குவந் தன்புட னெய்திய பின்னர்க்
கணங்களுக் கரசாய்க் கதிர்முடி சூட்டி
இணங்கிய பெருமைபெற் றிருந்திட வாங்கே
தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர்
யாவரும் வந்திவ னேவல் செய்திடுநாள்
அதிகமா யுரைக்கு மாவணித் திங்களின்
மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில்
விநாயகற் குரிய விரதமென் றெண்ணி
மனாதிகள் களித்து மரபொடு நோற்றார்
இப்படி நோற்றிட் டெண்ணிய பெறுநாள்       250

ஒப்பரும் விரதத் துறுமொரு சதுர்த்தியில்
நேற்று நற்பூசை நுடங்கா தாற்றிப்
போற்றி செய்திட்டார் புலவ ரைக்கரனை
மருமலர் து}வும் வானவர் முன்னே
நிருமலன் குமர னிருத்தம் புரிந்தான்
அனைவருங் கைதொழு தடியிணை போற்ற
வனைகழற் சந்திரன் மனச்செருக் கதனால்
பேழைபோல் வயிறும் பெருத்த காத்திரமுந்
தாழ்துளைக் கையும் தழைமுறச் செவியுங்
கண்டன னகைத்தான் கரிமுகக் கடவுளுங்       260

கொண்டனன் சீற்றங் குபேரனை நோக்கி
என்னைக் கண்டிங் கிழந்தனை சிரித்தாய்
உன்னைக் கண்டவ ருரைக்கு மித்தினத்திற்
பழியொடு பாவமும் பலபல விதனமும்
அழிவு மெய்துவரென் றசனிபோற் சபித்தான்
விண்ணவ ரெல்லா மிகமனம் வெருவிக்
கண்ணருள் கூருங் கடவுளித் தினத்திற்
கோரவெஞ் சினமிகக் கொண்டன னந்நாண்
மார்கழித் திங்கண் மதிவளர் பக்கஞ்
சதயந் தொட்ட சட்டிநல் விரதமென்       270

றிதயத் தெண்ணி யாவரும் நோற்றார்.
இப்புவி மாந்த ரியம்பிய விரதம்
வைப்புட னோற்ற வகையினிச் சொல்வாம்
குருமணி முடிபுனை குருகுலத் துதித்த
தருமனு மிளைய தம்பி மார்களுந்
தேவகி மைந்தன் றிருமுக நோக்கி
எண்ணிய விரத மடையூ றின்றிப்
பண்ணிய பொழுதே பலிப்புண் டாகவுஞ்
செருவினி லெதிர்ந்த செறுநரை வென்று
மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும்       280

எந்தத் தெய்வ மெவ்விர தத்தை
வந்தனை செய்யில் வருநமக் குரையெனப்
பாட்டளி துதையும் பசுந்துழாய் மார்பனுங்
கேட்டருள் வீரெனக் கிளர்த்துத லுற்றான்
அக்கு நீறனியு மரன்முத லளித்தோன்
விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி
ஓடவைத் திடும்பொன் னொத்தொளி விளங்குங்
கோடி சூரியர்போற் குலவிய மேனியன்
கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன்
தடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன்       290

சர்வா பரணமுந் தரிக்கப் பெற்றவன்
உறுமதிக் குழவிபோ லொருமருப் புடையோன்
ஒருகையிற் றந்த மொருகையிற் பாசம்
ஒருகையின் மோதக மொருகையிற் செபஞ்செய்
உத்தம மாலையோ னுறுநினை வின்படி
சித்தி செய்வதனாற் சித்தி விநாயகன்
என்றிமை யவரும் யாவருந் துதிப்ப
நன்றி தருந்திரு நாமம் படைத்தோன்
புரவலர்க் காணப் புறப்படும் போதுஞ்
செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும்       300

வித்தி யாரம்பம் விரும்பிடும் போதும்
உத்தி யோகங்க ளுஞற்றிடும் போதும்
ஆங்கவன் றன்னை யருச்சனை புரிந்தாற்
றீங்குறா தொல்லாஞ் செயமுன் டாகுங்
கரால மைந்துடைக் கணபதிக் குரிய
விரதமொன் றுளதை விரும்பி நோற்றவர்க்குச்
சந்ததி தழைத்திடுஞ் சம்பத் துண்டாம்
புந்தியி னினைந்த பொருள்கை கூடும்
மேவலர் தமையும் வென்றிட லாமெனத்
தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு       310

நுவலரும் விரதம் நோற்றிடு மியல்பும்
புகர்முகக் கடவுளைப் பூசை செய்விதமும்
விரித்தெமக் குரைத்திட வேண்டுமென் றிரப்ப
வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான்
தேருநீ ராவணித் திங்களின் மதிவளர்
பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின்
முந்தும் புலரியின் முறைநீர் படிந்து
சந்தி வந்தனந் தவறா தியற்றி
அத்தின மதனி லைங்கரக் கடவுளைப்
பத்தியோ டர்ச்சனை பண்ணுதல் வேண்டும்       320

வெள்ளியாற் பொன்னால் விளங்கு மங்கவன்றன்
ஒள்ளிய வருட்டிரு வுருவுண் டாக்கிப்
பூசனை புரியப் புகன்றனர் பெரியோர்
ஆசிலா மண்ணா லமைந்தலுந் தகுமால்
பூசனஞ் செயுமிடம் புனித மாக்கி
வாசமென் மலரின் மஞ்சரி து}க்கிக்
கோடிகங் கோசிகங் கொடிவிதா னித்து
நீடிய நு}ல்வளைஇ நிறைகுடத் திருத்தி
விந்தைசேர் சித்தி விநாயக னுருவைச்
சிந்தையி னினைந்து தியானம் பண்ணி       330

ஆவா கனமுத லர்க்கிய பாத்தியம்
வாகா ராச மனம்வரை கொடத்து
ஐந்தமிர் தத்தா லிபிடே கித்தக்
கந்தஞ் சாத்திக் கணேச மந்திரத்தால்
ஈசுர புத்திர னென்னு மந்திரத்தான்
மாசக லிரண்டு வத்திரஞ் சாத்திப்
பொருந்துமை சுதனாப் புகலுமந் திரத்தாற்
றிருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
பச்சறு குடனிரு பத்தொரு விதமாச்
பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே       340

உமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன்
குமார குரவன் பாசாங் குசகரன்
ஏக தந்த னிசுர புத்திரன்
ஆகு வாகன னருடரு விநாயகன்
சர்வ காரியமுந் தந்தருள் புரிவோன்
ஏரம்ப மூர்த்தி யென்னு நாமங்களால்
ஆரம் பத்துட னர்ச்சனை பண்ணி
மோதக மப்ப முதற்பணி காரந்
தீதகன் மாங்கனி தீங்கத லிப்பழம்
வருக்கை கபித்த மாதுளங் கனியொடு       350

தரித்திடு நெட்டிலைத் தமைமுப் புடைக்காய்
பருப்புநெய் பொரிக்கறி பாறயிர் போனகம்
விருப்புள சுவைப்பொருள் மிகவு முன்வைத்து
உருத்திரப் பிரியவென் றுரைக்கு மந்திரத்தால்
நிருந்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து
நற்றவர் புகன்ற நா னான்குப சாரமும்
மற்றவன் றிருவுள மகிழ்ந்திடச் செய்து
எண்ணுந் தகுதி யிருபிறப் பாளர்க்
குண்ணறு சுவைசே ரோதன நல்கிச்
சந்தன முத்துத் தானந் தக்கிணை       360

அந்தணர்க் கீந்திட டருச்சகன் றனக்குத்
திருத்தகும் விநாயகத் திருவுரு வத்தைத்
தரித்தவத் திரத்துடன் றானமாக் கொடத்து
நைமித் திகமென நவிறரு மரபால்
இம்முறை பூசனை யாவர் செய்தலும்
எண்ணிய கருமம் யாவையு முடிப்பர்
திண்ணிய செருவிற் செயமிகப் பெறுவர்
அரனிவன் றன்னைமுன் னர்ச்சனை பண்ணிப்
புரமொரு மூன்றும் பொடிபட வெரித்தான்
உருத்திர னிவனை யுபாசனை பண்ணி       370

விருத் திராசுரனை வென்றுகொன் றிட்டான்
அகலிகை யிவன்றா ளர்ச்சனை பண்ணிப்
பகர்தருங் கணவனைப் பரிவுட னடைந்தாள்
தண்ணார் மதிமுகத் தாட மயந்தி
அன்னா னிவனை யர்ச்சனை பண்ணி
நண்ணார் பரவு நளனை யடைந்தாள்
ஐங்கரக் கடவுளை யர்ச்சனை பண்ணி
வெங்கத நிருதரை வேரறக் களைந்து
தெசரதன் மைந்தன் சீதையை யடைந்தான்
பகிரத னென்னும் பார்த்திவ னிவனை       380

மதிதலந் தன்னின் மலர்கொ டர்ச்சிந்து
வரநதி தன்னை வையகத் தழைத்தான்
அட்ட தேவதைகளு மர்ச்சித் திவனை
அட்ட போகத்துட னமிர்தமும் பெற்றார்
உருக்மணி யென்னு மொண்டொடி தன்னைச்
செருக்கொடு வவ்விச் சிசுபா லன்றான்
கொண்டு போமளவிற் குஞ்சர முகனை
வண்டு பாண்மிழற்றா மலர்கொ டர்ச்சித்துத்
தாரியின் மறித்தவன் றனைப்புறங் கண்டு
யாமு மங்கவளை யின்புறப் பெற்றோம்       390

புகர்முகக் கடவுளைப் பூசனை புரிந்து
மிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார்
இப்புவி தன்ளி லெண்ணி லருளரால்
அப்படி நிவிரு மவனை யர்ச்சித்தால்
எப்பொருள் விரும்பினீ ரப்பொருள் பெறவீர்
என்றுகன் றெரிந்தோ னெமுத்திவை யுரைப்ப
அன்றுமுற் றருமனு மனுகரு மிவனைப்
பூசனை புரிந்து கட் புலளிலான் மைந்தரை
நாசனம் பண்ணி நராதிப ராகிச்
சிந்தையி னிளைத்தவை செகத்தினிற் செயங்கொண்       400

டந்தமில் செல்வத் தரசியல் பெற்றார்.
ஈங்கிது நிற்க விவ்விர தத்தியல்
ஓங்கிய காதைமற் றொன்றுரை செய்வாம்
கஞ்சநான் முகன்றருங் காசிபன் புணர்ந்த
வஞ்சக மனத்தாண் மாயைதன் வயிற்றிற்
சூரனென் றொருவனுந் துணைவருந் தோன்றி
ஆர்கலி சூழ்புவி யனைத்தையு மழித்தே
சீருடைச் சுவர்க்கத் திரவளங் கொடுத்தும்
புரந்தரன் முதலிய புலவரை வருத்தியும்
நிரந்தரந் தீய நெறிநடத் துதலால்       410

ஆயிரங் கண்ணனு மாமரரு முனிவரும்
நீயிரங் கெமக்கென நெடுங்கரங் கூப்பி
இரசத கிரியுறை யிறைவனை வணங்கி
வரமிகுஞ் சூரன் வலிமைக ளுரைக்கச்
சுடர்விடு மணிமுடிச் சூரனை வெல்லக்
கதிர்விடு வடிவேல் கரதலத் தேந்தும்
புதல்வனைத் தருவோம் போமி னீரென
அமரர் கோனுக் கரன்விடை கொடுத்துச்
சமரவேல் விழித் தையலுந் தானுங்
கூடிய கலவியிற் கூடா து}டலும்       420

ஓடிய வானோ ரொருங்குடன் கூடிப்
பாவகன் றன்னைப் பரிவுட னழைத்துச்
சூரன் செய்யுந் துயர மெல்லாம்
ஊரர வணிந்தோற் குரையென வுரைப்பக்
காமனை யெரித்த கடவுளென் றஞ்சிப்
பாவகன் பயமுறப் பயமுனக் கேதென
உற்றிடுங் கரதலத் துன்னையே தரித்தான்
நெற்றியி னயனமு நீயே யாதலிற்
குற்ற மடாது கூறுநீ சென்றென
வாணவர் மொழிய மற்றவன் றானுந்       430

தானுமச் சபையிற் றரியா தேகி
எமையா ளுடைய வுமையா ளுடனே
அமையா வின்பத் தமர்ந் தினிதிருந்த
பள்ளி மண்டபம் பாவகன் குறுகலும்
ஒள்ளிய மடந்தை யொதுங்கி நாணுதலுந்
தௌ;ளிதிற் பரமனுந் தேயுவைக் கண்டே
ஆறுமுகப் பிள்ளையை யவன்கையி லீதலும்
வறியவன் பெற்ற வான்பொருள் போலச்
சோதி நீண்முடிச் சுடரோன் கொணர்ந்து
வாத ராசன் மலர்கையிற் கொடுப்ப       440

நீதி யோடு நின்று கையேந்திப்
போதநீள் வாயுவும் பொறுக்க வொண்ணாமற்
றரும்புனற் கங்கை தன்கையிற் கொடுப்பத்
தரும்புனற் கங்கையுந் தாங்கவொண் ணாமற்
பொருந்திரைச் சரவணப் பொய்கையில் வைப்பத்
தண்ணார் வதனத் தாமரை யாறுங்
கண்ணா றிரண்டுங் கர மீராறுந்
து}ணெனத் திரண்ட தோளீ ராறும்
மாண யிலாதி வான்படை யுங்கொண்
டறுமுகக் கடவுளங் கவதரித் திடலும்       450

மறுகிய வும்பர் மகிழ்ந் துடன்கூடி
அறுமீன் களைப்பா லளித்தி ரென்றனுப்ப
ஆங்கவர் முலையுண் டறுமுகன் றானும்
ஓங்கிய வளர்ச்சி யுற்றிடு நாளில்
விமலனு முமையும் விடையுகைத் தாறு
தலைமக னிருந்த சரவணத் தடைந்து
முருகலர் குழலுமை முலைப்பா லு}ட்ட
இருவரு மின்பா லெடுத்தெடுத் தணைத்துத்
தேவர் தம்படைக்குச் சேனா பதியெனக்
காவல்கொண் டளிக்கக் கதிர்முடி சூட்டி       460

அயில்வேன் முதற்பல வாயுதங் கொடுத்துத்
திசையெலாஞ் செல்லுந் தேருமொன் றுதவிப்
பூதப் படைகள் புடைவரப் போய்நீ
ஓதுறு மவுணரை யொறுத்தி டென்றனுப்ப
இருளைப் பருக மிரவியைப் போலத்
தகுவரென் றவரைச் சமரிடை முருக்கிக்
குருகுபேர் பெறுங் குன்றமுஞ் சூரன்
மருமமுந் துளைபட வடிவேல் விடுந்தே
யாவரும் வியப்புற விந்திரன் மகளாந்
தேவகுஞ் கரியைத் திருமணம் குணர்ந்திட்       470

டமரர் கோனுக் கமருல களித்துக்
குமர வேளுங் குவலயம் விளங்க
அமரா வதியி லமர்ந்தினி திருந்தான்
சமரவே லுடைச் சண்முகன் வடிவுகண்
டமரர் மாத ரனைவரும் மயங்கி
எண்டருங் கற்பினை யிழந்தது கண்டே
அண்ட ரெல்லா மடைவுடன் கூடி
மாதொரு பாகனை வந்தடி வணங்கி
மருமலர்க் கடம்பனெம் மாநகர் புகாமல்
அருள்செய வேண்டுநீ யம்பிகா பதியென       480

இமைய ருரைப்ப விறையவன் றானுங்
குமரனைக் கோபங் கொண்டுமுன் முனியக்
காவல்கொண் டேவினை கட்டறுத் தருளுஞ்
சேவலங் கொடியோன் றேசம் போகத்
திருந்திழை யுமையா னருந்துய ரெய்தி
வருந்திமுன் னிற்க மங்கையைப் பார்த்து
மங்கை நீதான் வருந்துத லொழிகுதி
அங்கையாற் சூதெறிந் தாடுவோம் வாவென
வென்றதுந் தோற்றதும் விளம்புவார் யாரெனக்
குன்றமென் முலையாள் கூறிய சமயம்       490

புற்றர வணிந்த புனிதனைக் காணவங்
குற்றனன் றிருமா லு}ழ்வினை வலியாற்
சக்கிர பாணியைச் சான்றெனக் குறித்து
மிக்கதோர் சூது விருப்புட னாடச்
சாயக நேருந் தடநெடுங் கருங்கண்
நாயகி வெல்ல நாயகன் றோற்ப
இன்பவாயி தழுமை யான்வென் றேனென
எம்பெரு மானும் யான்வென் றேனென
ஒருவர்க் கொருவ ருத்தரம் பேசி
இருவருஞ் சாட்சிய மிவனைக் கேட்ப       500

மாமனை வதைத்த மான்முக நோக்கிக்
காமனை யெரித்தோன் கட்கடை காட்ட
வென்ற நாயகி தோற்றா ளென்றுந்
தோற்ற நாயகன் வென்றா னென்றும்
ஒன்றிய பொய்க்கரி யுடனங் குரைப்பக்
கன்றிய மனத்தொடு கவுரி யங்குருத்து
நோக்கி யிருந்தும் நுவன்றிலை யுண்மை
வாக்கினி லொன்றாய் மனத்தினி லொன்றாய்
மைக்கரி யுரித்தோன் வதன நோக்கிப்
பொய்க்கரி யுரைத்த புன்மையி னாலே       510

கனலென வயிற்றிற் கடும்பசி கனற்ற
நிலமிசைக் குருட்டு நெட்டுடற் பாம்பாய்க்
கடகரி முகத்துக் கடவுள் வீற்றிருக்கும்
வடதரு நீழலிற் கிடவெனச் சபித்தாள்
முளரிகள் பூத்த முகினிறத் துருப்போய்த்
துளவணி மருமனுந் துணைவிழி யிழந்தே
ஆண்டரைக் கணத்தி லாயிரம் யோசனை
நீண்டபைப் பாந்த ணெட்டுட லெடுத்து
வளர்மருப் பொன்றுடை வள்ளல் வீற்றிருக்குங்
கிளர்சினை யாலின் கீழ்க்கிடந் தனனால்       520

திரிகடக் கரியின் றிருமுகக் கடவுளும்
வழிபடு மடியார் வல்வினை தீர்த்தே
எழில்பெறு வடமரத் தின்கீழ் ருந்தான்
கம்ப மாமுக் கடவுடன் பெருமையை
அம்புவி யோருக் கறிவிப் போமென
உம்ப ருலகத் தோரெழு கன்னியர்
தம்பநு} லேணியற் றாரணி வந்து
கரிமுகக் கடவுளைக் கைதொழு தேத்திக்
கார்த்திகைக் கார்த்திகைக் கழிந்தபின் னாளில்
ஆர்த்த கலிங்கத் தணியிழை வாங்கி       530

இருபத் தோரிழை யின்புறக் கட்டி
ஒருபோ துண்டி யுண்டொரு மனமாய்
வேதத் தாதியும் பூமியி லெழுந்தும்
ஆதி விநாயகற் கான வெழுந்தும்
மூன்றெழுத் ததனான் மொழிந்த மந்திரமும்
தேன்றருங் குழலியர் சிந்தையுட் செபித்தே
உரைதரு பதினா றுபசா ரத்தால்
வரைமகன் மதலையை வழிபா டாற்றி
இருகது நாளு மிப்படி நோற்று
மற்றைநா ளைங்கர மாமுகன் பிறந்த       540

வற்றைநாட் சதயமு மாறாம் பக்கமுஞ்
சேருமத் தினத்திற் றெளிபுன லாடி
வாரண முகத்தோன் வதிபெருங் கோயில்
சீர்பெற மெழுகித் திருவிளக் கேற்றிக்
குலவுபொற் கலைகள் கொடு விதானித்து
உலர்பல தொடுத்திடு மாலைக ணாற்றிக்
கொலைபுரி வடிவேற் குகற்குமுன் வருகை
மலைமுகக் கடவுளை மஞ்சன மாட்டிப்
பொற்கலை நன்னு}ற் பூந்துகில் சாத்திச்
சொற்பெறு சந்தனச் சுகந்தம் பூசிக்       550

செருந்தி சண்பகஞ் செங்கழு நீரொடு
குருத்து மல்லிகை கோங்கொடு பிச்சி
கருமுகை புன்னை கடிகமழ் பாதிரி
மருவிரி ஞாழன் மகிழிரு வாட்சி
தாமரை முல்லை தழையவிழ் கொன்றை
பூமலர் நொச்சி பூத்தமைக் குவளை
காந்த ளாத்தி கடம்பு செவ்வந்தி
வாய்ந்த நல்லெருக்கு மலர்க்கர வீரம்
பச்சிலை நொச்சி படர்கொடி யறுகு
முத்தலைக் கூவிள முதலிய சாத்தித்       560

து}ப தீபங்கள் சுகம்பெறக் கொடுத்தே
அப்ப மோதக மவலௌ; ளுண்டை
முப்பழந் தேங்காய் முதிர்மொழிக் கரும்பு
தேனுடன் சர்க்கரை செவ்விள நீரான்
பானறு நெய்தயிர் பருப்புடன் போனகங்
கற்பகக் கடவுள் களித்திடத் திருமுன்
பொற்புறப் படைத்துப் பூசனை பண்ணி
நோற்பது கண்டு நோலா திருந்த
பாப்புரு வாகிய பஞ்சா யுதனும்
யாப்புறு கொங்கையீர் யானு நோற்பேனென       570

ஆங்கவன் றனக்கும் வேண்டுவ தளித்துப்
பாங்கொ டிவ்விரதம் பரிந்து நோற்பித்தார்
அண்டர் நாயகனா மைங்கர னருளால்
விண்டுவும் பண்டுள வேடம் கெற்றே
உஞ்சைமா நகர்புகுந் துமையொடு விமலன்
கஞ்சநாண் மலர்ப்பதங் கைதொழு திடலும்
பஞ்சிமென் சீறடிப் பார்ப்பதி நெஞ்சின்
வெஞ்சின மிகுந்து விமலனை நோக்கி
யானிடுஞ் சாப நீங்கிய தேதென
மானெடுங் கண்ணி மணிக்கத வடைப்ப       580

இறையவ னிதற்குக் காரண மேதென
மறிகடற் றுயிலு மாயவ னுரைப்பான்
பிறைமருப் பொன்றுடைப் பிள்ளையன் றெனக்குத்
தந்தருள் புரிந்த தவப்பய னீதெனச்
சிந்தை மகிழ்ந்து தேவர் தேவனும்
பூங்கொடி யடைத்த பொற்றாழ் நீங்கச்
சாங்குமுன் னுரைத்த சக்கர பாணி
இக்கதை சொல்ல வக்கணி சடையனும்
மிக்கநல் விரதம் விருப்புட தோற்றபின்
மாதுமை யடைத்த வன்றாழ் நீக்கி       590

நாதனை நணுகிட நம்பனு நகைத்தான்
தானோ வந்து நகையா னதுவெனத்
தேனேர் மொழியா டெளியக் கூறென
நன்மதி நுதலாய் நானிலந் தன்னில்
உன்மக னேன்பி னுறுதி யறிந்து
சிந்தை மகிழ்ந்து சிரித்தேன் யானென
அந்தமி லரனை யாயிழை வணங்கிப்
பொருஞ் சூரறவேல் போக்கிய குமரன்
வரும்படி யானும் வருத்தி நோற்பேனென
இறைவன் கதைசொல வேந்திழை நோற்றபின்       600

குறமட மகளைக் குலமணம் புரிந்தோன்
சுடர்வடி வேலோன் றொல்வினை தீர்ந்து
தாதுமை வண்டுழுந் தாமத் தாமனை
மாதுமை யாளை வந்து கண்டனனே
கண்ணநீ கண்ணிலாக் கட்செவி யாகெனக்
தண்ணறுங் குழலுமை சாபமிட் டதுவும்
அக்கு நீறணியு மான்முத லளித்த
விக்கின விநாயகன் விரத நோற்றதன்பின்
சுடர்க்கதை யேந்துந் துளவ மாலையன்
விடப்பணி யுருவம் விட்டு நீங்கியதும்       610

பவுரிகொள் கூத்துடைப் பரமனு நோற்றுக்
கவுரியன் றடைத்த கபாடந் திறந்ததும்
வாசமென் குழலுடை மாதுமை நோற்பத்
தேசம் போகிய செவ்வேள் வந்ததும்
வானவர் நோற்று வரங்கள் பெற்றதும்
நாரத முனிவ னவின்றிடக் கேட்டே
இந்நிலந் தன்னி லிவ்விர தத்தை
மன்னவன் வச்சிர மாலிமுன் னோற்றுக்
காயத் தெழுந்த கடும்பிணி தீர்த்து
மாயிரும் புவியின் மன்னனாய் வாழ்ந்து       620

தடமுலைத் திலோத்தமை தனைமணம் புரிந்து
மழவிடை போற்பல மைந்தரைப் பெற்றுக்
கடைமுறை வெள்ளியங் கைலையி லுற்றான்
பரிவொ டிவ்விரதம் பாரகந் தன்னில்
விரைகமழ் நறுத்தார் விக்ர மாதித்தன்
மறிகடற் புவிபெற வருத்தி நோற்றிடுநாண்
மற்றவன் காத் மடவர லொருத்தி
இற்றிடு மிடையா ளிலக்கண சுந்தரி
மெத்த வன்புடனிவ் விரத நோற்பேனென
அத்தந் தன்னி லணியிழை செறித்துச்       630

சித்த மகிழ்ந்து சிலநா ளோற்றபின்
உற்ற நோன்பி னுறுதி மறந்து
கட்டிய விழையைக் காரிகை யிவிழ்த்து
வற்றிய கொவ்வையின் மாடே போட
ஆங்கது தழைத்தே யலருந் தளிருமாய்ப்
பாங்குற வோங்கிப் படர்வது கண்டு
வேப்பஞ் சேரியிற் போய்ச் சிறையிருந்த
பூப்பயில் குழல்சேர் பொற்றொடி யொருத்தி
அவ்விய மல்லா ளவ்விடந் தன்னிற்
கொவ்வை யடகு கொய்வாள் குறுகி       640

இளையது கிடப்பக் கண்டவ ளெடுத்துக்
குழைதசழ் வரிவிழிக் கோதை கைக்கட்டி
அப்பமோ டடைகா யவைபல வைத்துச்
செப்ப முடனே திருந்திழை நோற்றிடக்
கரிமுகத் தண்ணல் கரணை கூர்ந்து
பண்டையி லிரட்டி பதமவட் கருள
கொண்டுபோ யரசனுங் கோயிலுள் வைத்தான்
விக்கிர மாதித்தன் விழிதுயில் கொள்ள
உக்கிர மான உடைமணி கட்டித்
தண்டையுஞ் சிலம்புத் தாளினின் றொலிப்பக்       650

கொண்டல் போல்வருங் குஞ்சர முகத்தோன்
மனமிகக் கலங்கு மன்னவன் றன்னிடங்
கனவினில் வந்து காரண மாக
இலக்கண சுந்தரி யிம்மனை யிருக்கிற்
கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனத்
துண்ணென வெழுந்து துணைவியை நோக்கிக்
கண்ணுறக் கண்ட கனவின் காரணம்
அண்ண லுரைத்திடு மவ்வழி தன்னில்
ஆனை குதிரை யவைபல மடிவுற
மாநகர் கேடுறும் வகையது கண்டு       660

இமைப் பொழுதிவளிங் கிருக்க லாகாதென
அயற் கடையவனு மகற்றிய பின்னர்
வணிகன் றனது மனைபுந் திருப்ப
மணியும் முத்தும் வலிய கல்லாய்விட
அணியிழை தன்னை யவனு மகற்ற
உழவர் தம்மனையி லுற்றவ ளிருப்ப
வளர்பயி ரழிந்து வளம்பல குன்ற
அயன்மனை யவரு மகற்றிய பின்னர்க்
குயவன் மனையிற் கோற்றொடி செல்லக்
குயக்கல முடைந்து கொள்ளை போக       670

அயற்கடை யவனு மகற்றிய பின்னர்த்
து}சுக ளெல்லாந் துணிந்து வேறாகத்
து}சரு மவளைத் து}ரஞ் செய்ய
மாலைக் காரன் வளமனை புகலும்
மாலை பாம்பாம் வகையது கண்டு
ஞால மெல்லா நடுங்கவந் துதித்தாய்
சாலவும் பாவிநீ தான்யா ரென்ன
வெம்மன மிகவு மேவி முனிவுறா
அம்மனை யவனு மகற்றிய பின்னர்       680

அவ்வை தன்மனை அவள்புகுந் திருப்ப
அவ்வை செல்லு மகங் கடோறும்
வைதன ரெறிந்தனர் மறியத் தள்ளினர்
கைகொடு குத்தினர் கண்டோர் பழித்தனர்
அவ்வை மீண்டுதன் னகமதிற் சென்று
இவ்வகைக் கன்னிநீ யாரென வினாவக்
காத்தான் டுலகு கருணையோ டாண்ட
மார்த்தாண்ட ராசன் மாமக ளொருத்தி
எல்லார்க்கு மூத்தா ளிலக்கண சுந்தரி
சொல்லு விக்கிரம சூரியன் மனையெனச்       690

சீர்கெட விருந்த தெரிவையை நோக்கி
நீரது கொண்டு நிலமெழு கிடுகெனச்
சாணி யெடுக்கத் தையலுஞ் சென்றாள்
சாணியும் புழுத்துத் தண்ணீர் வற்றிப்
பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற
மானேர் விழியாள் வருந்துதல் கண்டு
தானே சென்று சாணி யெடுத்துத்
தண்ணீர் கொணர்ந்து தரை மெழுக்கிட்டு
மண்ணிய வீட்டின் மணிவிளக் கேற்றிப்
புத்தக மெடுத்து வாவெனப் புகலப்       700

புத்தகம் பாம்பாய்ப் பொருந்தி நின்றாட
மெத்தவுண் நடுங்கி வீழ்ந்தவள் கிடப்பக்
கொவ்வையங் கனிவாய்க் கோதையை விலக்கி
அவ்வை தானே யகமதிற் சென்று
புத்தக மெடுத்துப் பொருந்தப் பார்த்து
வித்தக நம்பி விநாயக மூர்த்தி
கற்பகப் பிள்ளைசெய் காரிய மிதுவென
உத்தமி யவ்வை யுணர்ந்து முன்னறிந்து
தவநெறி பிழைத்த தையலை நோக்கி
துவலரும் விநாயக னோன்பு நோற்றிடுகெனக்       710

கரத்து மூவேழிழைக் காப்புக் கட்டி
அப்பமு மவலு மாம்பல பண்டமுஞ்
செப்ப மதாகத் திருமுன் வைத்தே
அவ்வை கதைசொல ஆயிழை கேட்டு
மத்தகக் களிற்றின் மகா விரதத்தை
வித்தக மாக வியங்கிழை நோற்றுக்
கற்பக நம்பி கருணை பெற்றதற்பின்
சக்கர வாள சைனி யத்தோடு
விக்ர மாதித்தன் வேட்டையிற் சென்று
தானுஞ் சேனையுந் தண்ணீர் விரும்பி       720

எவ்வகை செய்வோ மெனவுள மெலிந்தே
அவ்வை தன்மனை யங்கவ ரணுக
எய்துந் தாகழு மிளைப்புங் கண்டு
செவ்வே யவற்றைத் தீர்க்க வெண்ணி
இலக்கண சுந்தரி யென்பவ டன்னை
அப்பமு நீரு மரசற் கருளெனச்
செப்பிய வன்னை திருமொழிப் படியே
உண்ணீர்க் கரகமு மொரு பணிகாரமும்
பண்ணேர் மொழியாள் பார்த்திபற் குதவ
ஒப்பறு படையு முயர்படை வேந்தனும்       730

அப்பசி தீர அருந்திய பின்னர்
ஆனை குதிரை யவைகளு முண்டுந்
தானது தொலையாத் தன்மையைக் கண்டே
இவ்வகை சமைத்தநீ யாரென வினவ
மவ்வலங் குழலாண் மௌனமாய் நிற்ப
அவ்வவை தான்சென் றரசற் குரைப்பாள்
கணபதி நோன்பின் காரணங் காணிது
குணமுடை யிவளுன் குலமனை யாட்டி
இலக்கண சுந்தரி யென் றவை கூற
மங்கையை நோக்கி மனம்மிக மகிழ்ந்து       740

திங்கணேர் வெள்ளிச் சிவிகையி னேற்றிக்
கொண்டூர் புகுந்தான் கொற்ற வேந்தனும்
ஒண்டொடி யாரி லுயர்பத முதவினன்
சிந்துர நுதலார் சென்றடி பணியச்
சுந்தரி யிருந்தாள் சுகத்துடன் மகிழ்;ந்தே.       745


போற்றித் திருவகவல்

அருள்புரிந் தருளு மரசே போற்றி
இருவினை துடைக்கு மிறைவா போற்றி
மறைமுனி யொருவன் மாங்கனி கொணர்ந்து
கறைமிடற் றிறைவன் கையிற் கொடுப்ப
வேலனு நீயும் விரும்பி முன்னிற்ப
ஒருநொடி யதனி லுலகெலாம் வலமாய்
வருமவர் தமக்கு வழங்குவோம் யாமென
விரைவுடன் மயின்மிசை வேலோன் வருமுனர்
அரனை வலம்வந் தக்கனி வாங்கிய
விரகுள விக்ன விநாயக போற்றி
முன்னடி தெரியாப் முதல்வனைப் போற்றிப்
பின்னடி தெரியாப் பெருங்கவிப் பெருமான்
மண்மிசை வைத்துனை வாவியிற் செல்லக்
கண்ணிலா னிவனெனக் கரந்தவன் போகக்
கரைமிசை யேறிக் காணா திரங்கி
உரைதடு மாறி யுள்ளங் கலங்கிக்
கூகூ கணபதி கூகூ வென்னக்
கூகூ வென்றருள் குன்றே போற்றி
அப்பணி சடையோன் முப்புர மெரிக்க
இப்புவி யதனை யிரத மாக்கித்
தினகரன் மதிசேர் சில்லி யாகப்
பொருவரு மறைகளே புரவி யாகச்
சங்கைசேர் நான்முகன் சாரதி யாகப்
பங்கயக் கண்ணன் பகழி யாக
மலைசிலை யாக வாசுகி நாணா
நிலைபெற நிற்கு நெடுந்தேர் தன்னில்
விக்கினந் தீர்க்கும் விநாயக நமவெனச்
கிக்கென விறைவன் செப்பா தேறலின்
தச்சுறச் சமைத்த தகைமணி நெடுந்தேர்
அச்சறுத் தருளு மரசே போற்றி
வேதப் பொருளாம் விமலா போற்றி
பூதப்படை யுடைப் புனிதா போற்றி
கரமைந் துடைய சளிறே போற்றி
பரமன் பயந்த பாலா போற்றி
அகில மீன்றருளு ளம்மை தனக்குத்
திரும னாகிய செல்வா போற்றி
அற்றவர்க் கருள்புரி யரசே போற்றி
கற்றவர் மனதிற் காண்பாய் போற்றி
பாசாங் குசங்கை பரித்தாய் போற்றி
தேசார் மணிமுடித் தேவே போற்றி
எழுநர கெழுபிறப் பறுப்பாய் போற்றி
எழுமையு மெமக்கங் கிரங்குவாய் போற்றி
துளைசெறி வக்கிர துண்டா போற்றி
வளநிக ரொற்றை மருப்பா போற்றி
வரமிகு மரிதிரு மருகா போற்றி
சுரர்தொழு முருகன் றுணைவா போற்றி
நல்லவர் புகழு நம்பா போற்றி
வல்லபைக் குரிய மணாளா போற்றி
கயமுகத் தவுணனைக் காய்ந்தாய் போற்றி
வயமிகு மூஷிக வாகனா போற்றி
ஓங்காரத் தனி யுருவே போற்றி
நீங்காக் கருணை நிமலா போற்றி
துறவர் தமக்கொரு துணைவா போற்றி
துண்ட மாமதிபோற் றுலங்கிய கோட்டாற்
பண்டு பாரதப் பழங்கதை பசும்பொன்
விண்டுவின் வரைந்த விமலா போற்றி
போற்றி போற்றியுன் பொற்பதம் போற்றி.

வருக்கக்கோவை

அன்புடைக் கடவுளர்க் கதிபதி செயசெய
ஆபத் தகற்று மைங்கர செயசெய
இந்துச் சடைமுடி யிறைவா செயசெய
ஈசன் பெற்ற எம்மான் செயசெய
உன்னிய முடிக்கு மொருவா செயசெய
ஊர்மனை சந்தி யுகந்தாய் செயசெய
எம்பெரு மானே யேகனே செயசெய
எழுல குந்தொழ விருப்பாய் செயசெய
ஐயா கணங்கட் காதீ செயசெய
ஒற்றை மருப்பை யுடையாய் செயசெய
ஓங்கிய கரிமுக முற்றாய் செயசெய
ஒளவிய மில்லா தவனே செயசெய
அஃர வணிந்த வாதீ செயசெய
கண்மூன் றுடைய களிறே செயசெய
ஙப்போன் மழுவொன் றேந்தீ செயசெய
சங்கரன் றேரச் சறுத்தாய் செயசெய
ஞயமுடை வித்தக நம்பீ செயசெய
இடமுடை விக்கி னேசுரா செயசெய
இணங்கிய வன்பர்க் கினியாய் செயசெய
தத்துவ முறைதரு சாமீ செயசெய
நன்னெறி வித்தக நம்பீ செயசெய
பகீரதிக் கினிய பாலா செயசெய
மன்று ளாடி மகனே செயசெய
இயக்கரைக் களையு மிறைவா செயசெய
அரவக் கிண்கிணி யணிவாய் செயசெய
இலகக் கொம்பொன் றேந்தீ செயசெய
வஞ்சனைப் பழவினை மாற்றுவாய் செயசெய
அழகிய வேலனுக் கண்ணா செயசெய
இளமத யானை முகத்தாய் செயசெய
இறக்கரி சாடு மிறைவா செயசெய
அனந்த லாடு மரசே செயசெய
கரமைந் துடைய கணபதி செயசெய
காமன் பகைவன் காதல செயசெய
கிரியிற் பாரதந் தீட்டினாய் செயசெய
கீழ்மை யொழித்துக் கிளர்வாய் செயசெய
குண்டப் பண்டிக் குருவே செயசெய
கூறிய மும்மதக் கோவே செயசெய
கெண்டையங் கண்ணுமை மகனே செயசெய
கேதாரப் பிர்ய மானாய் செயசெய
கையிற் சக்கர முடையாய் செயசெய
கொவ்வைக் கனிவாய் மதலாய் செயசெய
கோலக் குடநிகர் வயிற்றாய் செயசெய
கௌவைப் பழவினை தீர்ப்பாய் செயசெய

தத்துவ ஞானத் திருவகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞானும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்து}ரமும்
அஞ்சு கரமு மங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணு மும்மதச் சுவடும்
இரண்டு செவியு மிலங்கு பொன்முடியுந்
திரண்ட முப்புரிநு}ல் திகழொளி மார்பும்
பொற்புற விளங்கும் பொருளே கயிலை
அற்பு னீன்ற கற்பகக் களிறே
முப்பழ நுகரும் மூஷிக வாகனா
இப்பொழுது தென்னை யாட்கொள்ள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க மறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் னுளந்தனிற் புகுந்து
குருவடி வைத்துத் திரமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடயு தத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா வுபதேசம் புகட்டியென் செவியிற்
றெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் றன்னை யடக்கு முபாயம்
இன்புறு கருணையி னினிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவித்
திருவினை தன்னை யறுத்திருள் கடிந்து
தலமொரு மூன்றின் மயக்க மறுத்தே
ஒன்பது வாயி லொருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை யடைப்பதுங் காட்டி
ஆறா தாரக் தங்குள நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடை பிங்கலையி னெழுத் தறிவித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய து}ணின்
நான்றெழு பாம்பி னாவி லுணர்த்திக்
குண்டலி தன்னைக் கூறு மியல்பை
விண்டெழு மந்திரம் வெளிப்பட வுரைத்து
மூலாதா ரத்தின் மூண்டெழு கனலைக்
காலா லெழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையு மாதித்த னியக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச் சக்கரத்தி னீரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தி னுறுப்பையுங் காட்டிச்
சண்முக து}லமுஞ் சதுர்முக சூக்கமும்
எண்முக மாக வினிதெனக் கருளி
புரியட்ட பாயம் புலப்பட வெனக்குத்
தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித் தெனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கு மனமு மில்லா மனோலயத்
தேக்கியே யென்றவன் சிந்தை தெளிவித்
திருள்வெளி யிரண்டுக் கொன்றிட மென்ன
அருடரு மானந்தத் தழுத்தி யென்செவியில்
எல்லை யில்லா வானந் தம்மளித்
தல்லல் களைந்தே யருள்வழி காட்டிச்
சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி
அணுவுக் கணுவா யப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமு நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தி னரும்பொரு டன்னை
நெஞ்சக் கருத்தி னிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே.

நூற்பயன்

பொன்னுமிகுங் கல்விபுகும் புத்திரரோ டெப்பொருளும்
மன்னு நவமணியும் வந்தணுகும் - உன்னி
ஒருக்கொம்பின் யானைமுக வுத்தமனார் நோன்பின்
றிருக்கதையைக் கேட்க சிறந்தது.       (1)

பொற்பனைக்கை முக்கட் புகர்முகத்துப் பொன்மவுலிக்
கற்பகத்தி னோன்பின் கதைதன்னைச் - சொற்பெருகக்
கற்றவரு நோற்றவருங் காதலித்துக் கேட்டவரும்
பெற்றிடுவர் கற்பகத்தின் பேறு.       (2)

வெள்ளை யெருதேறும் விரிசடையோன் பெற்றெடுத்த
பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளபடி
நோற்றார் மிகவாழ்வர் நோலாதருகிருந்து
கேட்டோர்க்கும் வராது கேடு.       (3)

குலியார் நோற்கிற் றுணைவர் தமைப்பெறுவார்
சாலமிகும் வெங்கலியார் தாநோற்கில் - மேலைப்
பிறப்பெல்லா நல்ல பெருஞ்செல்வ மெய்திச்
சிறப்பிலே வாழ்வார் சிறந்து.       (4)

பிள்ளையார் கதை முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.

-------------

பிள்ளையார் கதை
சொற்கள் பிரித்து எழுதப்பட்ட மற்றொரு பதிப்பு

ஆசிரியர்: யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகத்தைச் சேர்ந்த திரு.வரத பண்டிதர்

விநாயகர் கதை ஆரம்பம்

பிள்ளையார் கதை விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இதை பெருங்கதை விரதம், விநாயக சட்டி விரதம் எனவும் அழைப்பர்.

இந்த இருபத்தொரு நாட்களிலும் விநாயகருக்குத் திருமஞ்சன முதலியவைகளைச் சிறந்த முறையில் செய்வித்து ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமாக இருபத்தொரு வகையான பணியாரங்களை நிவேதித்தல் வேண்டும்.

முதல் இருபது நாட்களிலும் ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு, பிள்ளையார் கதையைப் பெரியோர்கள் சொல்லக் கேட்டுக்கொண்டு எப்போதும் தியானத்தில் இருப்பவர்களாக நாட்களைக் கழித்தல் வேண்டும்.

இறுதிநாள் மட்டும் உணவை விடுத்து மறுநாள் காலையில் பாரணை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளுதல் மரவு. ஈழத்தில் உள்ள விநாயகர் ஆலயங்களில் இவ்விரத காலங்களில் வரதபண்டிதரின் பிள்ளையார் கதை, விநாயக புராணம் என்பவற்றைப் படனம் செய்யும் வழக்கம் நெடுங்காலமாகப் பேணப்பட்டு வருகின்றது
---------

சிறப்புப் பாயிரம்

செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
கந்த புராணக் கதையிலுள் ளதுவும்
இலிங்க புராணத் திருந்தநற் கதையும்
உபதேச காண்டத் துரைத்தநற் கதையுந்
தேர்ந்தெடுத் தொன்றாய்த் திரட்டியைங் கரற்கு
வாய்ந்த நல்விரத மான்மிய முரைத்தான்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்
துன்னிய வளவயற் சுன்னாகத்தோன்
அரங்க நாதனளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தொறும்
வரம்பெற வணங்கும் வரதபண்டிதனே.

காப்பு

கரும்பும் இளநீரும் காரெள்ளுந் தேனும்
விரும்பும் அவல்பலவும் மேன் மேலருந்திக்
குணமுடையனாய் வந்து குற்றங்கள் தீர்க்கும்
கணபதியேயிக் கதைக்குக் காப்பு.
திருவிளங்கு மான்மருகா சேவல் தனிலேறி
வரமரன்றா னீன்றருளும் மைந்தா - முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா உனைத் தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.

விநாயகர் துதி

திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை.
ஒற்றையணி மருப்பும் ஓரிரண்டு கைத்தலமும்
வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன் மனத்தில் எப்பொழுதும்
கொண்டக்கால் வராது கூற்று.

சப்பாணி

எள்ளு பொரிதேன் அவல் அப்பமிக்கும் பயறும் இளநீரும்
வள்ளிக்கிழங்கும் மாம்பழமும் வாழைப்பழமும் பலாப்பழமும்
வெள்ளைப்பாலும் மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில்
கொள்ளைக் கருணைக் கணபதியே கொட்டி அருள்க சப்பாணி.
சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி
அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே
எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்
குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே.

சரஸ்வதி துதி

புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே
வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய் வேதப் பொருளுக்கு இறைவி
முத்தின் குடை உடையாளே மூவுலகுந் தொழுது ஏத்துஞ்
செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய்
தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே
எக்காலமும் உன்னைத் தொழுவேன் இயல் இசை நாடகம் என்னும்
முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்து என்
சித்தம் தனில் நீ இருந்து திருவருள் செய்திடுவாயே.


நூல்

மந்தர கிரியில் வடபால் ஆங்கு ஓர்
இந்துவளர் சோலை இராசமா நகரியில்
அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியும்
சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்
கடவுள் ஆலயமும் கடிமலர்ப் பொய்கையுந்
தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்
புதல்வரைத் தருக எனப் பொருப்பு அரசு ஈன்ற
மதர்விழி பாகனை வழிபடும் நாளின்
மற்றவர் புரியும் மாதவங் கண்டு
சிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப் 10

பரனே சிவனே பல்லுயிர்க்கு உயிரே
அரனே மறையவற்கு அருள்புரிந்து அருளென
அந்த அந்தணனுக்கு இந்த நற்பிறப்பில்
மைந்தரில்லை என்று மறுத்து அரன் உரைப்ப
எப்பரி சாயினும் எம்பொருட்டு ஒரு சுதன்
தப்பிலா மறையோன் தனக்கு அருள் செய்கென
எமையாளுடைய உமையாள் மொழிய
இமையா முக்கண் இறைவன் வெகுண்டு
பெண்சொற் கேட்டல் பேதைமை என்று
பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப் 20

பேதாய் நீ போய்ப் பிறவென மொழிய
மாதுஉமை யவளும் மனந்தளர்வு உற்றுப்
பொன்றிடு மானுடைப் புன்பிறப்பு எய்துதல்
நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக்
கறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து
பிறைநுதல் தலவற்கு நீ பிள்ளை யாகச்
சென்று அவன் வளர்ந்து சிலபகல் கழித்தால்
மன்றல் செய்தருள்வோம் வருந்தலை என்று
விடைகொடுத்து அருள விலங்கன் மாமகளும்
பெடைம யிற்சாயற் பெண்மக வாகித் 30

தார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன்
சீர்மலி மனைவி திருவயிற்றில் உதித்துப்
பாவை சிற்றிலும் பந்தொடு கழங்கும்
யாவையும் பயின்ற இயல்பின ளாகி
ஐயாண்டு அடைந்த பின் அன்னையும் அத்தனும்
மையார் கருங்குழல் வாள்நுதல் தன்னை
மானுட மறையோற்கு வதுவை செய்திடக்
கானமர் குழலியைக் கருதிக் கேட்பப்
பிறப்பிறப் பில்லாப் பெரியோற்கு அன்றி
அறத்தகு வதுவைக்கு அமையேன் யான் என 40

மற்றவன் தன்னை உன் மணமகனாகப்
பெற்றிடல் அரிதெனப் பெயர்த்து அவர் பேச
அருந்தவ முயற்சியால் அணுகுவேன் யானெனக்
கருந்தட நெடுங்கண் கவுரி அங்கு உரைத்து
மருமலி கமல மலர்த்தடத்து அருகில்
தருமலி நிழல் தவச் சாலையது அமைத்துப்
பணியணி பற்பல பாங்கியர் சூழ
அணிமலர்க் குழல் உமை அருந்தவம் பயில
அரிவை தன் அருந்தவம் அறிவோம் யாமென
இருவரும் அறியா இமையவர் பெருமான் 50

மான் இடம் ஏந்தும் வண்ணமது ஒழிந்து

மானிட யோக மறைவன் ஆகிக்
குடையொடு தண்டு நற்குண்டிகை கொண்டு
மடமயில் தவம்புரி வாவிக் கரையில்
கண்ணுதல் வந்து கருணை காட்டித்
தண்நறும் கூந்தல் தையலை நோக்கி
மின்பெறு நுண்ணிடை மெல்லியலாய் நீ
என்பெறத் தவமிங்கு இயற்றுவது என்றலும்
கொன்றை வார்சடையனைக் கூட என்று உரைத்தலும்
நன்று எனச் சிரித்து நான்மறை யோனும் 60

மாட்டினில் ஏறி மான் மழுத் தரித்துக்
காட்டினிற் சுடலையிற் கணத்துடன் ஆடிப்
பாம்பும் எலும்பும் பல்தலை மாலையுஞ்
சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப்
பிச்சை கொண்டு உழலும் பித்தன் தன்னை
நச்சி நீ செய்தவம் நகைதரும் உமக்கெனப்
பூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும்
ஆங்கு அவள் நாணமுற்று அணிமனை புகுதச்
சேடியர் வந்து செழுமலர் குழலியை
வாடுதல் ஒழிகென மனமிகத் தேற்றிச் 70

சிந்துர வாள்நுதற் சேடியர் தாம்போய்த்
தந்தை தாயிருவர் தாளினை வணங்கி
வாவிக் கரையில் வந்தொரு மறையோன்
பாவைதன் செங்கையைப் பற்றினான் என்றலும்
தோடு அலர்கமலத் தொடைமறை முனியை
ஆடக மாடத்து அணிமனை கொணர்க என
மாடக யாழ்முரல் மங்கையர் ஓடி
நீடிய புகழாய் நீ எழுந்து அருள் என
மைம்மலர்க் குழலி வந்து எனை அழைக்கில்
அம்மனைப் புகுவன் என்று அந்தணன் உரைத்தலும் 80

பொற்றொடி நீ போய்ப் பொய்கையில் நின்ற
சிவனை இகழ்ந்த சிற்றறிவுடையோன்
அவனையான் சென்றிங்கு அழைத்திடேன் என்று
சிற்றிடை மடந்தையுஞ் சீறினள் ஆகி
மற்றைய மாதர் மதிமுகம் நோக்கி
நெற்றியிற் கண்ணுடை நிமலனுக்கு அல்லதென்
பொற்புஅமர் கொங்கை பொருந்துதற்கு அரிதால்
மானிட வேட மறையவன் தனக்கு
யான் வெளிப்படுவது இல்லையென்று இசைப்ப 90

மலையிடை வந்த மாமுனி தன்னை இணையடி
தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத்
தந்தையுந் தாயுந் தகைபெற மொழியச்
சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து
தாய் சொல்மறுத்தல் பாவமென்று அஞ்சி
ஆயிழை தானும் அவனெதிர் சென்று
சுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி
மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து
ஆதியம் பகவற்கு அன்பன் ஆகும்
வேதியன் பழைய விருத்தன் என்றெண்ணி 100

ஆசனம் நல்கி அருக்கியம் முதலாப் பாத
பூசனைகள் பண்ணிய பின்னர்ப்
போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய்
ஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை
தேன் கதலிப்பழம் சீர்பெறப் படைத்து
அந்தணன் தன்னை அமுது செய்வித்துச்
சந்தனங் குங்குமச் சாந்து இவை கொடுத்துத்
தக்கோலத்தொடு சாதிக் காயும்
கற்பூரத்தொடு கவின்பெறக் கொண்டு
வெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின் 110

ஒள்ளிய தட்டில் உகந்து முன்வைத்துச்
சிவனெனப் பாவனை செய்து நினைந்து
தவமறை முனிவனைத் தாளிணை வணங்கத்
தேனமர் குழலி திருமுகம் நோக்கி
மோனமாமுனி புன்முறுவல் காட்டிக்
கற்றைச் சடையுங் கரமொரு நான்கும்
நெற்றியில் நயனமும் நீல கண்டமும்
மானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக்
கூன்மதி நிலவும் கொழித்திட முடிமேல்
வரந்தரு முதல்வன் மடமயில் காணக் 120

கரந்ததன் உருவங் காட்டி முன்நிற்ப
மரகத மேனி மலைமகள் தானும்
விரைவொடு அங்கு அவன் அடி வீழ்ந்து இறைஞ்சினளே
அரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர்
கருடர் கின்னரர் காய வாசியர்
ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர்
பூதர் இயக்கர்கிம் புருடர் அலகை
சித்தர் தாரகை கந்தர்வர்கள் முதலாய்க்
கணிக்கரும் பதினெண் கணத்தில் உள்ளவரும்
மணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின் 130

மன்றல் அங் குழலிக்கு வதுவைநாள் குறித்துத்
தென்றல் வந்துஇலங்கு முன்றில் அகத்துப்
பொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி
மாணிக்கத்தால் வளை பல பரப்பி
ஆணிப்பொன் தகட்டால் அழகுற வேய்ந்து
நித்தில மாலை நிரைநிரை தூக்கிப்
பக்திகள் தோறும் பலமணி பதித்துத்
தோரணம் நாட்டித் துகில் விதானித்துப்
பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத்
திக்குத் தோறும் திருவிளக்கேற்றிப் 140

பத்திப் படர்முளைப் பாலிகை பரப்பிக்
கன்னலுங் கழுகுங் கதலியும் நாட்டிப்
பன்மலர் நாற்றிப் பந்தர் சோடித்து
நலமிகு கைவலோர் நஞ்சணி மிடற்றனைக்
குலவிய திருமணக் கோலம் புனைந்தார்
வருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத்
திருமணக் கோலஞ் செய்தனர் ஆங்கே
எம்பிரானையும் இளங்கொடி தன்னையும்
உம்பர் எல்லாம் ஒருங்குடன் கூடிக்
கடலென விளங்கும் காவணந் தன்னில் 150

சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையி்ல்
மறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்து உடன் இருத்திப்
பறையொலியோடு பனிவளை ஆர்ப்ப
வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே
சதுர்முகன் ஓமச் சடங்குகள் இயற்றத்
தறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச்
சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின்
அரிவலஞ் சூழ எரிவலம் வந்து
பரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப்
போதுஅணி கருங்குழற் பூவை தன்னுடனே 160

ஓதநீர் வேலிசூழ் உஞ்சையம் பதிபுக
ஏரார் வழியில் எண்திசை தன்னைப்
பாரா தேவா பனிமொழி நீ என
வருங்கருங் குழலாள் மற்றும் உண்டோ எனத்
திருந்து இழை மடந்தை திரும்பினாள் பார்க்கக்
களிறும் பிடியுங் கலந்து விளையாடல் கண்டு
ஒளிர்மணிப்பூணாள் உரவோடு உடனே
இவ் வகையாய் விளையாடுவோம் இங்கென
அவ்வகை அரனும் அதற்கு உடன் பட்டு
மதகரி உரித்தோன் மதகரி யாக 170

மதர்விழி உமைபிடி வடிவம் அதாகிக்
கூடிய கலவியில் குவலயம் விளங்க
நீடிய வானோர் நெறியுடன் வாழ
அந்தணர் சிறக்க ஆனினம் பெருகச்
செந்தழல் வேள்வி வேத ஆகமம் சிறக்க
அறம்பல பெருக மறம்பல சுருங்கத்
திறம்பல அரசர் செகதலம் விளங்க
வெங்கரி முகமும் வியன்புழைக்கையோடு
ஐங்கர தலமும் மலர்ப்பதம் இரண்டும்
பவளத்து ஒளிசேர் பைந் துவர்வாயும் 180

தவளக் கிம்புரித் தடமருப்பு இரண்டும்
கோடி சூரியர் போற் குலவிடு மேனியும்
பேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும்
நெற்றியில் நயனமும் முப்புரி நூலும்
கற்றைச் சடையுங் கனக நீண்முடியுந்
தங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய்
ஐங்கரத்து அண்ணல் வந்து அவதரித்தலும்
பொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும்
மங்கை மனமிக மகிழ்ந்து உடன் நோக்கி
விண்ணு ளோர்களும் விரிந்த நான் முகனும் 190

மண்ணு ளோர்களும் வந்து உனை வணங்க
ஆங்கு அவர் தங்கட்கு அருள் சுரந்து அருளித்
தீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப்
பாரண மாகப் பலகனி அருந்தி
ஏரணி ஆலின்கீழ் இனிதுஇரு என்று
பூதலந் தன்னிற் புதல்வனை இருத்திக்
காதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும்
மைவளர் சோலை மாநகர் புகுந்து
தெய்வ நாயகன் சிறந்து இனிது இருந்த பின்
வான வராலும் மானு டராலும் 200

கானமர் கொடிய கடு விலங்காலும்
கருவிகளாலுங் காலனாலும்
ஒரு வகையாலும் உயிரழியாமல்
திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில்
வரம் பெறுகின்ற வலிமை யினாலே
ஐம்முகச் சீயம் ஒத்து அடற்படை சூழக்
கைம்முகம் படைத்த கயமுகத்து அவுணன்
பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி
இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக்
கொடுந்தொழில் புரியுங் கொடுமை கண்டு ஏங்கி 210

அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரருங்
கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி
முறையிடக் கேட்டு முப்புரம் எரித்தோன்
அஞ்சலீர் என்று அவர்க்கு அபயங் கொடுத்தே
அஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை நோக்கி
ஆனை மாமுகத்து அவுணனோடு அவன் தன்
சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது
குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி
வென்று வா என்று விடை கொடுத்தருள
ஆங்கு அவன் தன்னோடு அமர்பல உடற்றிப் 220

பாங்குறும் அவன்படை பற்றறக் கொன்றபின்
தேர்மிசை ஏறிச் சினங்கொடு செருவிற்
கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல்
ஒற்றைவெண் மருப்பை ஒடித்து அவன் உரத்திற்
குற்றிட எறிந்தான் குருதிசோர்ந் திடவே
சோர்ந்தவன் வீழ்ந்து துண்ணென எழுந்து
வாய்ந்த மூடிகமாய் வந்து அவன் பொரவே
வந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி
எந்தை விநாயகன் ஏறினன் இப்பால்
எறிந்த வெண்மருப்பு அங்கு இமைநொடி அளவில் 230

செறிந்தது மற்று அவன் திருக் கரத்தினிலே
வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும்
வல்லவை தனைத்தன் மனை என மணந்தே
ஓகையோடு எழுந்து ஆங்கு உயர்படை சூழ
வாகையும் புனைந்து வரும் வழி தன்னிற்
கருச்சங் கோட்டிக் கயல் கமுகு ஏறும்
திருச்செங் காட்டிற் சிவனை அர்ச்சித்துக்
கணபதீச் சுரம் எனுங் காரண நாமம்
கணபதி புகழ்தரு பதிக்கு உண்டாக்கிச்
சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ 240

இங்குவந்து அன்புடன் எய்திய பின்னர்க்
கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி
இணங்கிய பெருமை பெற்று இருந்திட ஆங்கே
தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர்
யாவரும் வந்து இவன் ஏவல் செய்திடுநாள்
அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின்
மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில்
விநாயகற் குரிய விரதமென்று என்றெண்ணி
மனாதிகள் களித்து மரபொடு நோற்றார்
இப்படி நோற்றிட் எண்ணிய பெறுநாள் 250

ஒப்பரும் விரதத்து உறும் ஒரு சதுர்த்தியில்
நோற்று நற்பூசை நுடங்காது ஆற்றிப்
போற்றி செய்திட்டார் புலவர் ஐங்கரனை
மருமலர் தூவும் வானவர் முன்னே
நிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான்
அனைவருங் கைதொழுது அடிஇணை போற்ற
வனைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால்
பேழைபோல் வயிறும் பெருத்த காத்திரமும்
தாழ்துளைக் கையும் தழைமுறச் செவியும்
கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளும் 260

கொண்டனன் சீற்றம் குபேரனை நோக்கி
என்னைக் கண்டு இங்கு இகழ்ந்தனை சிரித்தாய்
உன்னைக் கண்டவர் உரைக்கும் இத்தினத்திற்
பழியொடு பாவமும் பலபல விதனமும்
அழிவும் எய்துவர் என்று அசனிபோற் சபித்தான்
விண்ணவர் எல்லாம் மிகமனம் வெருவிக்
கண்ணருள் கூருங் கடவுள் இத் தினத்திற்
கோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாள்
மார்கழித் திங்கண் மதிவளர் பக்கஞ்
சதயந் தொட்ட சட்டிநல் விரதமென் 270

இதயத்து எண்ணி யாவரும் நோற்றார்.
இப்புவி மாந்தர் இயம்பிய விரதம்
வைப்புடன் நோற்ற வகை இனிச் சொல்வாம்
குருமணி முடிபுனை குருகுலத்து உதித்த
தருமனும் இளைய தம்பி மார்களும்
தேவகி மைந்தன் திருமுக நோக்கி
எண்ணிய விரதம் இடையூ றின்றிப்
பண்ணிய பொழுதே பலிப்பு உண் டாகவுஞ்
செருவினில் எதிர்ந்த செறுநரை வென்று
மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும் 280

எந்தத் தெய்வம் எவ்விரதத்தை வந்தனை
செய்யில் வருநமக்கு உரையெனப்
பாட்டுஅளி துதையும் பசுந்துழாய் மார்பனுங்
கேட்டருள் வீர் எனக் கிளர்த்த லுற்றான்
அக்கு நீறணியும் அரன்முதல் அளித்தோன்
விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி
ஓடவைத் திடும்பொன் ஒத்துஒளி விளங்கும்
கோடி சூரியர்போற் குலவிய மேனியன்
கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன்
தடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன் 290

சர்வா பரணமுந் தரிக்கப் பெற்றவன்
உறுமதிக் குழவிபோ லொருமருப் புடையோன்
ஒருகையில் தந்தம் ஒருகையிற் பாசம்
ஒருகையின் மோதகம் ஒருகையிற் செபஞ்செய்
உத்தம மாலையோன் உறு நினைவின்படி
சித்தி செய்வதனாற் சித்தி விநாயகன்
என்று இமையவரும் யாவருந் துதிப்ப
நன்றி தரும் திருநாமம் படைத்தோன்
புரவலர்க் காணப் புறப்படும் போதும்
செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும் 300

வித்தி யாரம்பம் விரும்பிடும் போதும்
உத்தி யோகங்கள் உஞற்றிடும் போதும்
ஆங்கவன் தன்னை அருச்சனை புரிந்தாற்
தீங்கு உறாது எல்லாஞ் செயம் உண்டாகும்
கரதலம் ஐந்துக் கணபதிக்கு உரிய
விரதமொன்று உளதை விரும்பி நோற்றவர்க்குச்
சந்ததி தழைத்திடுஞ் சம்பத் துண்டாம்
புந்தியில் நினைந்த பொருள்கை கூடும்
மேலவர் தமையும் வென்றிட லாமெனத்
தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு 310

நுவலரும் விரதம் நோற்றிடும் இயல்பும்
புகர்முகக் கடவுளைப் பூசை செய்விதமும்
விரித்தெமக்கு உரைத்திட வேண்டுமென்று இரப்ப
வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான்
தேருநீர் ஆவணித் திங்களின் மதிவளர்
பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின்
முந்தும் புலரியின் முறை நீர் படிந்து
சந்தி வந்தனந் தவறாது இயற்றி
அத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப்
பத்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும் 320

வெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன் தன்
ஒள்ளிய அருள் திரு உருவுண்டாக்கிப்
பூசனை புரியப் புகன்றனர் பெரியோர்
ஆசுஇலா மண்ணால் அமைத்தலுந் தகுமால்
பூசனஞ் செயுமிடம் புனித மாக்கி
வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக்
கோடிகம் கோசிகம் கொடி விதானித்து
நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி
விந்தைசேர் சித்தி விநாயகர் உருவைச்
சிந்தையில் நினைந்து தியானம் பண்ணி 330
ஆவா கனம் முதல் அர்க்கிய பாத்தியம்
வாகார் ஆச மனம் வரை கொடுத்து
ஐந்து அமிர்தத்தால் அபிடேகித்துக்
கந்தம் சாத்திக் கணேச மந்திரத்தால்
ஈசுர புத்திரன் என்னும் மந்திரத்தால்
மாசு அகல் இரண்டு வத்திரஞ் சாத்திப்
பொருந்து உமை சுதனாப் புகலு மந்திரத்தால்
திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
பச்சறுகுடன் இருபத்தொரு விதமாய்
பத்திர புஸ்பம் பலபல கொணர்ந்தே 340
உமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன்
குமார குரவன் பாசாங் குசகரன்
ஏக தந்தன் ஈசுர புத்திரன்
ஆகு வாகனன் அருள்தரு விநாயகன்
சர்வ காரியமுந் தந்தருள் புரிவோன்
ஏரம்ப மூர்த்தி என்னும் நாமங்களால்
ஆரம்பத்துடன் அர்ச்சனை பண்ணி
மோதகம் அப்பம் முதற் பணிகாரம்
தீது அகல் மாங்கனி தீங்கதலிப்பழம்
வருக்கை கபித்த மாதுளங் கனியொடு 350

தரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய்
பருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம்
விருப்புள சுவைப்பொருள் மிகவும் முன்வைத்து
உருத்திரப்பிரியன் என்று உரைக்கும் மந்திரத்தால்
நிருந்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து
நற்றவர் புகன்ற நானான்கு உபசாரமும்
மற்றவன் திருவுளம் மகிழ்ந்திடச் செய்து
எண்ணுந் தகுதி இருபிறப் பாளர்க்கு
உண் அறு சுவைசேர் ஓதனம் நல்கிச்
சந்தன முத்துத் தானந் தக்கிணை 360

அந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத்
திருத்தகும் விநாயகத் திருவுருவத்தைத்
தரித்த வத்திரத்துடன் தானமாக் கொடுத்து
நைமித்திகம் என நவில்தரு மரபால்
இம்முறை பூசனை யாவர் செய்தலும்
எண்ணிய கருமம் யாவையும் முடிப்பர்
திண்ணிய செருவிற் செயம்மிகப் பெறுவர்
அரன் இவன் தன்னை முன் அர்ச்சனை பண்ணிப்
புரமொரு மூன்றும் பொடிபட எரித்தான்
உருத்திரன் இவனை உபாசனை பண்ணி 370

விருத்திரா சுரனை வென்று கொன்றிட்டான்
அகலிகை இவன்தாள் அர்ச்சனை பண்ணிப்
பகர்தருங் கணவனைப் பரிவுட னடைந்தாள்
தண்ணார் மதிமுகத் தாள் தமயந்தி
அன்னான் இவனை அர்ச்சனை பண்ணி
நண்ணார் பரவு நளனை அடைந்தாள்
ஐங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி
வெங்கத நிருதரை வேரறக் களைந்து
தசரதன் மைந்தன் சீதையை அடைந்தான்
பகிரதன் என்னும் பார்த்தி இவன் இவனை 380

மதிதலந் தன்னின் மலர்கொடு அர்ச்சித்து
வரநதி தன்னை வையகத்து அழைத்தான்
அட்ட தேவதைகளும் அர்ச்சித்து இவனை
அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார்
உருக்மணி என்னும் ஒண்டொடி தன்னைச்
செருக்கொடு வவ்விச் சிசுபாலன் தான்
கொண்டு போம் அளவிற் குஞ்சர முகனை
வண்டு பாண்மிழற்றா மலர்கொடு அர்ச்சித்துத்
தாரியின் மறித்தவன் தனைப்புறங் கண்டு
யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம் 390

புகர்முகக் கடவுளைப் பூசனை புரிந்து
மிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார்
இப்புவி தன்னில் எண்ணிலர் உளரால்
அப்படி நீவிரும் அவனை அர்ச்சித்தால்
எப்பொருள் விரும்பினீர் அப்பொருள் பெறுவீர்
என்று கன்றெரிந்தோன் எடுத்திவை உரைப்ப
அன்றுமுதல் தருமனும் அனுசரும் இவனைப்
பூசனை புரிந்து கட்புலன் இலான் மைந்தரை
நாசனம் பண்ணி நராதிபர் ஆகிச்சிந்தையில்
நினைத்தவை செகத்தினிற் செயங்கொண்டு 400

அந்தமில் செல்வத்து அரசியல் பெற்றார்.
ஈங்கு இது நிற்க இவ்விரதத்து இயல்
ஓங்கிய காதை மற்றொன்று உரை செய்வாம்
கஞ்சநான் முகன் தரும் காசிபன் புணர்ந்த
வஞ்சக மனத்தாள் மாயை தன் வயிற்றிற்
சூரன் என்று ஒருவனுந் துணைவருந் தோன்றி
ஆர்கலி சூழ்புவி அனைத்தையும் அழித்தே
சீருடைச் சுவர்க்கத் திருவளங் கெடுத்தும்
புரந்தரன் முதலிய புலவரை வருத்தியும்
நிரந்தரந் தீய நெறி நடத்துதலால் 410

ஆயிரங் கண்ணனும் அமரரும் முனிவரும்
நீ இரங்கு எமக்கென நெடுங்கரங் கூப்பி
இரசத கிரிஉறை இறைவனை வணங்கி
வரமிகுஞ் சூரன் வலிமைகள் உரைக்கச்
சுடர்விடு மணிமுடிச் சூரனை வெல்லக்
கதிர்விடு வடிவேல் கரதலத்து ஏந்தும்
புதல்வனைத் தருவோம் போமின் நீர்
என அமரர் கோனுக்கு அரன்விடை கொடுத்துச்
சமரவேல் விழித் தையலுந் தானுங்
கூடிய கலவியிற் கூடாது ஊடலும் 420

ஓடிய வானோர் ஒருங்குடன் கூடிப்
பாவகன் தன்னைப் பரிவுடன் அழைத்துச்
சூரன் செய்யுந் துயரம் எல்லாம்
ஊர் அரவு அணிந்தோற்கு உரையென உரைப்பக்
காமனை எரித்த கடவுள் என்றஞ்சிப்
பாவகன் பயமுறப் பயமுனக்கு ஏதென
உற்றிடுங் கரத்தலத்து உன்னையே தரித்தான்
நெற்றியின் நயனமும் நீயே ஆதலிற்
குற்றம் அடாது கூறுநீ சென்றென
வானவர் மொழிய மற்றவன் தானுந் 430

தானும் அச் சபையில் தரியாது ஏகி
எமை ஆளுடைய உமையாளுடனே
அமையா இன்பத்து அமர்ந்து இனிது இருந்த
பள்ளி மண்டபம் பாவகன் குறுகலும்
ஒள்ளிய மடந்தை ஒதுங்கி நாணுதலுந்
தெள்ளிதிற் பரமனுந் தேயுவைக் கண்டே
ஆறுமுகப் பிள்ளையை அவன் கையில் ஈதலும்
வறியவன் பெற்ற வான்பொருள் போலச்
சோதி நீண்முடிச் சுடரோன் கொணர்ந்து
வாத ராசன் மலர்கையிற் கொடுப்ப 440

நீதி யோடு நின்று கையேந்திப்
போத நீள் வாயுவும் பொறுக்க ஒண்ணாமல்
தரும்புனற் கங்கை தன்கையில் கொடுப்பத்
தரும்புனற் கங்கையுந் தாங்கவொண்ணாமற்
பொருந்திரைச் சரவணப் பொய்கையில் வைப்பத்
தண்ஆர் வதனத் தாமரை ஆறுங்
கண் ஆறு இரண்டும் கரம் ஈராறும்
தூண் எனத் திரண்ட தோள் ஈராறும்
மாண் அயில் ஆதி வான்படை யுங்கொண்டு
அறுமுகக் கடவுள் அங்கு அவதரித் திடலும் 450

மறுகிய உம்பர் மகிழ்ந்து உடன்கூடி
அறுமீன் களைப்பால் அளித்தீர் என்று அனுப்ப
ஆங்கவர் முலையுண்டு அறுமுகன் தானும்
ஓங்கிய வளர்ச்சி உற்றிடும் நாளில்
விமலனும் உமையும் விடையுகைத்து ஆறு
தலைமகன் இருந்த சரவணத்து அடைந்து
முருகுஅலர் குழல் உமை முலைப்பால் ஊட்ட
இருவரும் இன்பால் எடுத்து எடுத்து அணைத்துத்
தேவர் தம்படைக்குச் சேனா பதியெனக்
காவல்கொண்டு அளிக்கக் கதிர்முடி சூட்டி 460

அயில்வேல் முதற்பல ஆயுதங் கொடுத்துத்
திசையெலாஞ் செல்லுந் தேருமொன்று உதவிப்
பூதப் படைகள் புடைவரப் போய் நீ
ஓதுறும் அவுணரை ஒறுத்திடு என்றனுப்ப
இருளைப் பருகும் இரவியைப் போலத்
தகுவரென்று அவரைச் சமரிடை முருக்கிக்
குருகுபேர் பெறுங் குன்றமுஞ் சூரன்
மருமமுந் துளைபட வடிவேல் விடுத்தே
யாவரும் வியப்புற இந்திரன் மகளாந்
தேவகுஞ் சரியைத் திருமணம் புணர்ந்திட்டு 470

அமரர் கோனுக்கு அமருலகு அளித்துக்
குமர வேளுங் குவலயம் விளங்க
அமரா வதியில் அமர்ந்து இனிது இருந்தான்
சமர வேலுடைச் சண்முகன் வடிவுகண்டு
அமரர் மாதர் அனைவரும் மயங்கி
எண்டருங் கற்பினை இழந்தது கண்டே
அண்டர் எல்லாம் அடைவுடன் கூடி
மாதொரு பாகனை வந்து அடி வணங்கி
மருமலர்க் கடம்பன் எம் மாநகர் புகாமல்
அருள்செய வேண்டும் நீ அம்பிகா பதியென 480

இமையவர் உரைப்ப இறையவன் தானுங்
குமரனைக் கோபங் கொண்டுமுன் முனியக்
காவல்கொண்டு எம்வினை கட்டறுத்து அருளுஞ்
சேவலங் கொடியோன் தேசம் போகத்
திருந்திழை உமையாள் அருந்துயர் எய்தி
வருந்தி முன்னிற்க மங்கையைப் பார்த்து
மங்கை நீ தான் வருந்துதல் ஒழிகுதி
அங்கையாற் சூதெறிந்து ஆடுவோம் வாவென
வென்றதுந் தோற்றதும் விளம்புவார் யாரெனக்
குன்றமென் முலையாள் கூறிய சமயம் 490

புற்றுஅரவு அணிந்த புனிதனைக் காண அங்கு
உற்றனன் திருமால் ஊழ்வினை வலியாற்
சக்கிர பாணியைச் சான்றெனக் குறித்து
மிக்கதோர் சூது விருப்புடன் ஆடச்
சாயக நேருந் தடநெடுங் கருங்கண்
நாயகி வெல்ல நாயகன் தோற்ப
இன்பவாய் இதழ் உமையான் வென்றேன் என
எம்பெருமானும் யான்வென்றேன் என
ஒருவர்க் கொருவர் உத்தரம் பேசி
இருவருஞ் சாட்சியம் இவனைக் கேட்ப 500

மாமனை வதைத்த மால்முகம் நோக்கிக்
காமனை எரித்தோன் கண்கடை காட்ட
வென்ற நாயகி தோற்றாள் என்றுந்
தோற்ற நாயகன் வென்றான் என்றும்
ஒன்றிய பொய்க்கரி உடன் அங்கு உரைப்பக்
கன்றிய மனத்தொடு கவுரி அங்கு உருத்து
நோக்கி நீ இருந்தும் நுவன்றிலை உண்மை
வாக்கினில் ஒன்றாய் மனத்தினில் ஒன்றாய்
மைக்கரி யுரித்தோன் வதனம் நோக்கிப்
பொய்க்கரி உரைத்த புன்மையினாலே 510

கனலென வயிற்றிற் கடும்பசி கனற்ற
நிலமிசைக் குருட்டு நெட்டுடற் பாம்பாய்க்
கடகரி முகத்துக் கடவுள் வீற்றிருக்கும்
வடதரு நீழலிற் கிடவெனச் சபித்தாள்
முளரிகள் பூத்த முகி்ல் நிறத்து உருப்போய்த்
துளவு அணி மருமனுந் துணை விழியிழந்தே
ஆண்டு அரைக் கணத்தில் ஆயிரம் யோசனை
நீண்டபைப் பாந்தள் நெட்டுடல் எடுத்து
வளர்மருப்பு ஒன்றுடை வள்ளல் வீற்றிருக்கும்
கிளர்சினை ஆலின் கீழ்க்கிடந் தனனால் 520

திரிகடக் கரியின் திருமுகக் கடவுளும்
வழிபடும் அடியார் வல்வினை தீர்த்தே
எழில்பெறு வடமரத்தின் கீழ் இருந்தான்
கம்ப மாமுகத்துக் கடவுள் தன் பெருமையை
அம்பு வியோருக்கு அறிவிப்போம் என
உம்பர் உலகத்து ஓர் எழு கன்னியர்
தம்பநூல் ஏணியில் தாரணி வந்து
கரிமுகக் கடவுளைக் கைதொழுது ஏத்திக்
கார்த்திகைக் கார்த்திகைக் கழிந்த பின்னாளில்
ஆர்த்த கலிங்கத்து அணியிழை வாங்கி 530

இருபத்தோர் இழை இன்புறக் கட்டி
ஒருபோது உண்டி உண்டு ஒரு மனமாய்
வேதத்து ஆதியும் பூமியில் எழுத்தும்
ஆதி விநாயகற்கு ஆன எழுத்தும்
மூன்றெழுத்து அதனால் மொழிந்த மந்திரமும்
தேன்தருங் குழலியர் சிந்தையுட் செபித்தே
உரைதரு பதினாறு உபசாரத்தால்
வரைமகள் மதலையை வழிபாடு ஆற்றி
இருபது நாளும் இப்படி நோற்று
மற்றை நாள் ஐங்கர மாமுகன் பிறந்த 540

அற்றைநாள் சதயமும் ஆறாம் பக்கமுஞ்
சேரும் அத் தினத்தில் தெளிபுனல் ஆடி
வாரண முகத்தோன் வதிபெருங் கோயில்
சீர்பெற மெழுகித் திருவிளக் கேற்றிக்
குலவுபொற் கலைகள் கொடு விதானித்து
உலர்பல தொடுத்திடு மாலைகள் ஆற்றிக்
கொலைபுரி வடிவேற்கு கற்குமுன் வருகை
மலைமுகக் கடவுளை மஞ்சனம் ஆட்டிப்
பொற்கலை நன்னூற் பூந்துகில் சாத்திச்
சொற்பெறு சந்தனச் சுகந்தம் பூசிக் 550

செருந்தி சண்பகஞ் செங்கழு நீரொடு
குருத்து மல்லிகை கோங்கொடு பிச்சி
கருமுகை புன்னை கடிகமழ் பாதிரி
மருவிரி ஞாழல் மகிழ் இரு வாட்சி
தாமரை முல்லை தழையவில் கொன்றை
பூமலர் நொச்சி பூத்தமைக் குவளை
காந்தள் ஆத்தி கடம்பு செவ்வந்தி
வாய்ந்த நல்எருக்கு மலர்க்கர வீரம்
பச்சிலை நொச்சி படர்கொடி அறுகு
முத்தளக் கூவிளம் முதலிய சாத்தித் 560

தூப தீபங்கள் சுகம்பெறக் கொடுத்தே
அப்பம் மோதகம் அவல் எள்ளுருண்டை
முப்பழந் தேங்காய் முதிர்முழுக் கரும்பு
தேனுடன் சர்க்கரை செவ்விள நீருடன்
பால்நறு நெய்தயிர் பருப்புடன் போனகங்
கற்பகக் கடவுள் களித்திடத் திருமுன்
பொற்புறப் படைத்துப் பூசனை பண்ணி
நோற்பது கண்டு நோலாது இருந்த
பாப்புரு வாகிய பஞ்சா யுதனும்
யாப்புறு கொங்கையீர் யானும் நோற்பேன் என 570

ஆங்கு அவன் தனக்கும் வேண்டுவது அளித்துப்
பாங்கொடு இவ்விரதம் பரிந்து நோற்பித்தார்
அண்டர் நாயகனாம் ஐங்கரன் அருளால்
விண்டுவும் பண்டுஉள வேடம் பெற்றே
உஞ்சைமா நகர்புகுந்து உமையொடு
விமலன் கஞ்சநாள் மலர்ப்பதங் கைதொழு திடலும்
பஞ்சிமென் சீறடிப் பார்ப்பதி நெஞ்சின்
வெஞ்சினம் மிகுந்து விமலனை நோக்கி
யானிடுஞ் சாபம் நீங்கியது ஏதென
மானெடுங் கண்ணி மணிக்கதவு அடைப்ப 580

இறையவன் இதற்குக் காரணம் ஏதென
மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான்
பிறைமருப்பு ஒன்றுடைப் பிள்ளை அன்று
எனக்குத் தந்தருள் புரிந்த தவப்பயன் ஈதெனச்
சிந்தை மகிழ்ந்து தேவர் தேவனும்
பூங்கொடி அடைத்த பொன்தாழ் நீங்கச்
சாங்குமுன் உரைத்த சக்கர பாணி
இக்கதை சொல்ல அக்கணி சடையனும்
மிக்கநல் விரதம் விருப்புடன் நோற்றபின்
மாதுஉமை அடைந்த வன்தாழ் நீக்கி 590

நாதனை நணுகிட நம்பனும் நகைத்தான்
தானோ வந்தது நகையானது எனத்
தேன்நேர் மொழியாள் தெளியக் கூறென
நன்மதி நுதலாய் நானிலந் தன்னில்
உன்மகன் நோன்பின் உறுதி அறிந்து
சிந்தை மகிழ்ந்து சிரித்தேன் யானென
அந்தமில் அரனை ஆயிழை வணங்கிப்
பொருஞ் சூர் அறவேல் போக்கிய குமரன்
வரும்படி யானும் வருத்தி நோற்பேனென
இறையவன் கதைசொல ஏந்திழை நோற்றபின் 600

குறமட மகளைக் குலமணம் புரிந்தோன்.
சுடர்வடி வேலோன் தொல்வினை தீர்ந்து
தாதுமை வண்டு உழுந்தாமத் தாமனை
மாதுமை யாளை வந்து கண்டனனே

கண்ண நீ கண்ணிலாக் கட்செவி ஆகுஎனக்
தண்நறுங் குழலுமை சாபமிட்டதுவும்
அக்கு நீறணியும் அரன்முதல் அளித்த
விக்கின விநாயகன் விரதம் நோற்று அதன்பின்
சுடர்க்கதை ஏந்துந் துளவ மாலையன்
விடப்பணி உருவம் விட்டு நீங்கியதும், 610

பவுரிகொள் கூத்துடைப் பரமனும் நோற்றுக்
கவுரி அன்று அடைத்த கபாடந் திறந்ததும்,
வாசமென் குழலுடை மாதுமை நோற்பத்
தேசம் போகிய செவ்வேள் வந்ததும்,
வானவர் நோற்று வரங்கள் பெற்றதும்,
நாரத முனிவன் நவின்றிடக் கேட்டே
இந்நிலந் தன்னில் இவ்விரதத்தை
மன்னவன் வச்சிர மாலிமுன் நோற்றுக்
காயத் தெழுந்த கடும்பிணி தீர்த்து
மாயிரும் புவியின் மன்னனாய் வாழ்ந்து 620

தடமுலைத் திலோத்தமை தனைமணம் புரிந்து
மழவிடை போற்பல மைந்தரைப் பெற்றுக்
கடைமுறை வெள்ளியங் கயிலையில் உற்றான்
பரிவொடு இவ்விரதம் பாரகந் தன்னில்
விரைகமழ் நறுந்தார் விக்ர மாதித்தன்
மறிகடற் புவிபெற வருந்தி நோற்றிடுநாள்
மற்றவன் காதல் மடவரல் ஒருத்தி
இற்றிடும் இடையாள் இலக்கண சுந்தரி
மெத்த அன்புடன் இவ் விரதம் நோற்பேனென
அத்தந் தன்னில் அணியிழை செறித்துச் 630


சித்தம் மகிழ்ந்து சிலநாள் நோற்றபின்
உற்ற நோன்பின் உறுதி மறந்து
கட்டிய இழையைக் காரிகை அவிழ்த்து
வற்றிய கொவ்வையின் மாடே போட
ஆங்கு அது தழைத்தே அலருந் தளிருமாய்ப்
பாங்குற ஓங்கிப் படர்வது கண்டு
வேப்பஞ் சேரியிற் போய்ச் சிறையிருந்த
பூப்பயில் குழல்சேர் பொற்றொடி யொருத்தி
அவ்வியம் இல்லாள் அவ்விடந் தன்னிற்
கொவ்வை அடகு கொய்வாள் குறுகி 640

இழையது கிடப்பக் கண்டு அவள் எடுத்துக்
குழைதவிழ் வரிவிழிக் கோதை கைக்கட்டி
அப்பமோடு அடைக்காய் அவைபல வைத்துச்
செப்பமுடனே திருந்திழை நோற்றிடக்
கரிமுகத்து அண்ணல் கருணை கூர்ந்து
பண்டையில் இரட்டி பதம் அவட்கு அருள
கொண்டுபோய் அரசனுங் கோயிலுள் வைத்தான்
விக்கிர மாதித்தன் விழிதுயில் கொள்ள
உக்கிரமான உடைமணி கட்டித்
தண்டையுஞ் சிலம்புத் தாளினின்று ஒலிப்பக் 650

கொண்டல் போல்வருங் குஞ்சர முகத்தோன்
மனமிகக் கலங்கு மன்னவன் தன்னிடங்
கனவினில் வந்து காரண மாக
இலக்கண சுந்தரி இம்மனை இருக்கிற்

கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனத்
துண்ணென எழுந்து துணைவியை நோக்கிக்
கண்ணுறக் கண்ட கனவின் காரணம்
அண்ணல் உரைத்திடும் அவ்வழி தன்னில்
ஆனை குதிரை அவைபல மடிவுற
மாநகர் கேடுறும் வகையது கண்டு 660

இமைப்பொழுது இவள் இங்கு இருக்கலாகாது என
அயற் கடை அவனும் அகற்றிய பின்னர்
வணிகன் தனது மனைபுகுந்து இருப்ப
மணியும் முத்தும் வலிய கல்லாய்விட
அணியிழை தன்னை அவனும் அகற்ற
உழவர் தம்மனையில் உற்று அவள் இருப்ப
வளர்பயிர் அழிந்து வளம்பல குன்ற
அயன்மனை அவரும் அகற்றிய பின்னர்க்
குயவன் மனையிற் கோற்றொடி செல்லக்
குயக்கலம் உடைந்து கொள்ளை போக 670

அயற்கடை அவனும் அகற்றிய பின்னர்த்
தூசுதூய்து ஆக்குந் தொழிலோர் மனைபுகத்
தூசுகளெல்லாந் துணிந்து வேறாகத்
தூசரும் அவளைத் தூரஞ் செய்ய
மாலைக் காரன் வளமனை புகலும்
மலை பாம்பாம் வகையது கண்டு
ஞாலம் எல்லாம் நடுங்கவந்து உதித்தாய்

சாலவும் 'பாவிநீ தான்யார்?' என்ன
வெம்மனம் மிகவும் மேவி முனிவுறா
அம்மனை அவனும் அகற்றிய பின்னர் 680

அவ்வை தன்மனை அவள் புகுந்திருப்ப
அவ்வை செல்லும் அகங்கள் தோறும்
வைதனர் எறிந்தனர் மறியத் தள்ளினர்
கைகொடு குத்தினர் கண்டோர் பழித்தனர்
அவ்வை மீண்டும் தன் அகம் அதிற்சென்று
இவ்வகைக் கன்னி நீ யாரென வினாவக்
காத்தாண்டு உலகு கருணையோடு ஆண்ட
மார்த்தாண்ட ராசன் மாமகள் ஒருத்தி
எல்லார்க்கும் மூத்தாள் இலக்கண சுந்தரி
சொல்லும் விக்கிரம சூரியன் மனையெனச் 690

சீர்கெட இருந்த தெரிவையை நோக்கி
நீரது கொண்டு நிலம் மெழுகிடுக எனச்
சாணி எடுக்கத் தையலுஞ் சென்றாள்
சாணியும் புழுத்துத் தண்ணீர் வற்றிப்
பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற
மானேர் விழியாள் வருந்துதல் கண்டு
தானே சென்று சாணி எடுத்துத்
தண்ணீர் கொணர்ந்து தரை மெழுக்கிட்டு
மண்ணிய வீட்டில் மணிவிளக்கு ஏற்றிப்
புத்தகம் எடுத்து வாவெனப் புகலப் 700

புத்தகம் பாம்பாய்ப் பொருந்தி நின்றாட
மெத்தஉள் நடுங்கி வீழ்ந்தவள் கிடப்பக்
கொவ்வையங் கனிவாய்க் கோதையை விலக்கி
அவ்வை தானே அகமதிற் சென்று
புத்தக எடுத்துப் பொருந்தப் பார்த்து
வித்தக நம்பி விநாயக மூர்த்தி
கற்பகப் பிள்ளைசெய் காரியம் இதுவென
உத்தமி அவ்வை உணர்ந்து முன்அறிந்து
தவநெறி பிழைத்த தையலை நோக்கி
துவலரும் விநாயக நோன்பு நோற்றிடுக எனக் 710

கரத்து மூஏழு இழைக் காப்புக் கட்டி
அப்பமும் அவலும் மாம் பல பண்டமுஞ்
செப்ப மதாகத் திருமுன் வைத்தே
அவ்வை கதைசொல ஆயிழை கேட்டு
மத்தகக் களிற்றின் மகா விரதத்தை
வித்தகமாக வியங்கு இழை நோற்றுக்
கற்பக நம்பி கருணை பெற்றதன் பின்,
சக்கர வாள சைனியத்தோடு
விக்ர மாதித்தன் வேட்டையிற் சென்று

தானுஞ் சேனையுந் தண்ணீர் விரும்பி 720

எவ்வகை செய்வோம் எனஉளம் மெலிந்தே
அவ்வை தன்மனை அங்குஅவர் அணுக
எய்துந் தாகமும் இளைப்புங் கண்டு
செவ்வே அவற்றைத் தீர்க்க எண்ணி
இலக்கண சுந்தரி என்பவள் தன்னை
அப்பமும் நீரும் அரசற்கு அருள்எனச்
செப்பிய அன்னை திருமொழிப் படியே
உண்நீர்க் கரகமும் ஒரு பணிகாரமும்
பண்நேர் மொழியாள் பார்த்திபற்கு உதவ
ஒப்பறு படையும் உயர்படை வேந்தனும் 730

அப்பசி தீர அருந்திய பின்னர்
ஆனை குதிரை அவைகளும் உண்டுந்
தான்அது தொலையாத் தன்மையைக் கண்டே
இவ்வகை சமைத்த நீ யாரென வினவ
அவ்வல் அம் குழலாள் மௌனமாய் நிற்ப
அவ்வை தான்சென்று அரசற்கு உரைப்பாள்
கணபதி நோன்பின் காரணங் காண் இது
குணமுடை இவள் உன் குலமனையாட்டி
இலக்கண சுந்தரி என்று அவ்வை கூற
மங்கையை நோக்கி மனம்மிக மகிழ்ந்து 740

திங்கள்நேர் வெள்ளிச் சிவிகையில் ஏற்றிக்
கொண்டுஊர் புகுந்தான் கொற்ற வேந்தனும்
ஒண்தொடி யாரில் உயர்பதம் உதவினன்
சிந்துர நுதலார் சென்று அடி பணியச்
சுந்தரி இருந்தாள் சுகத்துடன் மகிழ்ந்தே.745

காப்பு

கரும்பும் இளநீரும் காரெள்ளுந் தேனும்
விரும்பும் அவல்பலவும் மேன் மேலருந்திக்
குணமுடையனாய் வந்து குற்றங்கள் தீர்க்கும்
கணபதியேயிக் கதைக்குக் காப்பு.
திருவிளங்கு மான்மருகா சேவல் தனிலேறி
வருமரன்றா னீன்றருளும் மைந்தா - முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா உனைத் தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.


This file was last updated on 24 Nov 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)