pm logo

விநாயகர் அகவல்கள் -திரட்டு (ஔவையார்,
அருணகிரி நாதர், நக்கீரர் எழுதியவை)
& காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம்


vinayakar akavalkaL, composed by
auvaiyAr, aruNakirinAtar and nakkIrar
and vinAyaka kavacam of kAcipa munivar
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

விநாயகர் அகவல்கள் -திரட்டு
ஔவையார் அருளிச் விநாயகரகவல்,
அருணகிரி நாதர் அருளிச்செய்த முத்திவிநாயகரகவல் &
நக்கீரர் அருளிச்செய்த விநாயகர் திருவகவல்

Source:
விநாயகர் அகவல்கள்
(ஔவையார் அருளிச் விநாயகரகவல், அருணகிரி நாதர் அருளிச்செய்த முத்திவிநாயகரகவல்,
நக்கீரர் அருளிச்செய்த விநாயகர் திருவகவல்)
திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனத்தில்
24-வது குருமூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ-ல-ஸ்ரீ
சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் ஆக்ஞையின்படி
இவ்வாதீனத்துக்குச் சொந்தமான திருக்குறுக்கை
தேவஸ்தானத்தில் வெளியிடப்பட்டன.
1942
ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம்.
----------------

முகவுரை

குருபாதம்
திருக்கயிலாயபரம்பரைத் தருமபுர ஆதீனத்தில் 24-வது குருமூர்த்தியாக எழு தருளியுள்ள, அத்தனார் திருவடிக்கீழ் நினைவகலா அன்புருகும் மெய்த்தன்மை உணர்வுடைய விழுத்தவத்து ஸ்ரீ-ல-ஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் செய்துவரும் அறப்பணிகள் உலகு அறிந்ததே. அவைகளுள் இந்த வெளியீடு இவ்வாதீனத்துக்குச் சொந்தமான திருக் குறுக்கை (வீரட்டானம்) தேவஸ்தானத்தில் அவர்களின் 36-வது ஆண்டு நிறைவு நாளாகிய சித்திரபானு ஆண்டு கார்த்திகைத் திங்கள் 11-ம் நாள் குருவார நன்னாளில் வெளியிடப்படுகிறது. இதனை யாவரும் பெற்று ஆனைமுகன் திருவருளைச் சிந்திக்கற்பாற்று.

தருமபுரம்       மௌன. சோமசுந்தரத் தம்பிரான்,
20.11-42       திருச்சி மலைக்கோட்டை மௌனமட ம்
      கட்டளை விசாரணை.
--------------------

விநாயகர் வரலாறு

உ - குருபாதம்
திருச்சிற்றம்பலம்

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.

திருச்சிற்றம்பலம்

முழுமுதற் கடவுளாகிய இறைவன் அம்மையாருடன் திருநந்தனவனத் தினுள் ஓவியங்கள் தீட்டப்பெற்ற மண்டபத்தினை அணுகினன். உமை யம்மையார் அவ்வோவியப் பண்புகளை உற்று ஒருமனப்பட நோக்கினர். இறைவர் ஆணையினால் அம்மண்டபத்தில் வரையப்பட்ட ஓமெனும் ஓரக்கரமே ஈருருக்கொண்டு யானை களின் வடிவாய்த்தோன்றிப் புணர்ச்சி யின் முயன்றது. அதனை அம்மையார் பார்த்து ஈதென்னை யென்றுன்னி ஆண்டவனை யன்பொடும் வணங்கி, 'ஓமெனுமக்கரம் யானை உருவாய் ஊற் றின்பமுறுவது என்? சொல்லும்" என வினவினர். அதற்குப் பரமனார் “எவற்றிற்கும் மூலமாகிய பெருமை பொருந் திய பிரணவம், நீ விரும்பி நோக்கி னமையினால், இரண்டாகி யானையுருவு கொண்டு புல்லுகின்றது. ஆகலின் உன் னாற்றல் நீ உணர்கின்றிலை. காட்சி மாத்திரைதன்னானே இதனை யியற்று தற்குக் காரணமாயுள்ள உன்னுடைய மாட்சியை யாமன்றி வேறு யார் அறி வர்? உன்னருட்
உன்னருட் செய்கையின் திறம் மறைகளும் அறியா" என மொழிந்தருளி னர். அவ்விருயானைகளும் தூய தம் கல வியைவிட்டு முன்போலப் பிரணவ வடி வுற்றன.

அப்பொழுது ஐந்துகரங்களையும், முக்கண்களையும், நான்ற வாயினையும், இளம்பிறைதரித்த எழில்மிகு செஞ்சடா முடியினையும், மும்மதத்தினையும் உடைய ஒரு குழவியார் தோன்றினர். அவர் உண்மை யன்போடு உன்னும் அன் பர்கட்கு அறிவுக்கறிவாயுள்ளவர்; எங் கும் நிறைந்தவர்; யாவராலும் அறியப் படாதவர்; எவரும் வணங்கும் இயல் பினர்; இறைவனார் இருவர் என இயம் பும்படி நின்றருள் புரிபவர்; நான் மறைப் பொருளாயுள்ளவர்; உலகிலுள் ளோர் அனைவருடைய அறியாமையினை யும் அகத்துன்பப் புறத்துன்பங்களையும் நீக்குதற் பொருட்டே திரு அவதார மெடுத்தவர்.

இங்ஙனம் அவதரித்தருளிய ஆனை முகப்பிரான் அம்மையப்பர் திருவடி களில் வந்து வணங்கினர். அங்ஙனம் வணங்கிய பிள்ளையாரை அம்மையப்பர் மார்போடு அணைத்து அருள்புரிந்தனர். பெருமான் கணபதியைப் பார்த்து, 'யாவரே யாயினும் யாதொரு செயலைத் தொடங்குமுன் அது இடையூறின்றி இனிது முடிவுபெறல் வேண்டுமென உன்னையுன்னி வழிபாடாற்றின் அவர் கருத்தின்படி அதனை முற்றுறச் செய்குதி; முன்பு உன்னை வழிபடாமற் செய்யின் இடையூறாக்குதி; பிரமன், திருமால் முதலிய எல்லாத் தேவர்கட் கும் ஏனை உயிர்கட்கும் பதியாகுதி" என அருள்புரிந்து பூதகணங்களைத் தோற்றுவித்து அவைகளை அவருக்குச் சேனையாக்கி அவருடன் திருக்கயிலைக்கு உமையம்மையாருடன் எழுந்தருளினர்.

பின்னர் விநாயகரைத் தம்கோபுர வாயிலில் நாயகராகயிருக்கும்படிச்செய்
தனர்."அக்காலத்திலேயே, கயமுகனைக் கொன்று அனந்தர் (திருமால்) சாபத் தினைப்போக்குக' என ஆணை செய்தரு ளினர். கயமுகனே பெருச்சாளி வாகன மாயினன். அவன் தேவர்களைக் குட்டிக் கும்பிடச்செய்தமையால் அவ்வழிபாடே பெருமானுக்கும் ஆமாயிற்று.

இவரது திருவுருவங்களும் பெயர் களும் மிகப்பல. சித்திவிநாயகர், வெள்ளை விநாயகர், வலம்புரிவிநாயகர், வல்லப கணபதி, முத்திகணபதி, கற்பகப்பிள்ளையார், பொல்லாப்பிள்ளையார், சிந்தூரவிநாயகர், சிந்தாமணி விநாயகர், வாதாபி விநாயகர்,
பாலசந்திரர், ஏரம்பன், கங்காதரர், முக் கண்ணர் முதலியன.
----------------

ஒளவையார் வரலாறு


இளமை தொடங்கி யொருபெற்றியா யிருந்தவர் என்பது, அதியமானெடுமா னஞ்சி யென்னும்
பேரரசன் கொடுத்த நெல்லிக்கனியினை யருந்தியதால் நெடுங்காலம் பூமியிலிருந்தனர்
எனக் குறளுரை கூறாநிற்கும். இவர்கள் உலகிற்குச் சிறார் முதல் பெரி யார் இறுதியாக யாவரும் பெரும் பயன் பெறுமாறு பலநூல்கள் செய்துள்ளார்கள்.

"சிவாயநம வென்று சிந்தித் திருப்போர்க்,
கபாய மொருநாளு மில்லை உபாய, மிதுவே "
நீறில்லா நெற்றி பாழ் ஆத்திசூடி யமர்ந்த தேவனை '
''கொன்றை வேந்தன் செல்வன் அடி யிணை'"
எனக் கூறும் அடிகளைப் பார்க்கும்பொழுது சைவமஙகையர் இவர்கள் என்பது புலனாகும்.

இவர்கள் சுந்தரர் பெருமான் கயிலைக் கேகியதைக் கேள்வியுற்று விநாயகர் பூசையை விரைவாக முடிக்க லாயினர். அது காரணமாக விநாயகப் பெருமான் "ஏன் விரைந் தாற்றுதி? அவர்கட்கு முன் அங்குச் சேர்ப்பிக் கின்றேன். பொறுமையாகப் புரிக” என்றனர். அவ்வாறே செய்து முடித்து "சீதக் களபச் செந்தா மரைப் பூம், பாதச் சிலம்பு பலவிசை பாட" அகவல் பாடித் துதித்துச் சுந்தரர்க்கு முன், விநாயகர் துதிக்கையால் எடுத்து விடக் கயிலையை யடைந்தனர்.
---------------

குறுங்கை விநாயகர்

யாத்திரை செய்துவரும் தீர்க்க வாகுமுனிவர் குறுக்கை வந்ததும் வழக்கம்போல் ஆகாய கங்கையினால் பெருமானுக்கு அபிஷேகிக்கத் தனது நெடுங் கைகளை வான் நோக்கி நீட்டியதும் கைகள் குறுகின; அங்கு எழுந்தருளி யுள்ள விநாயகரின் திருக்கைகளும் குறுகி இருப்பதைக் கண்டார்; செய்த அபசாரம் உணர்ந்த முனிவர் பரமனைக் குறித்து தவம் இயற்றிப் பல பேறுகளையும் பெற்றார் என்று குறுக்கைத் தலபுராணம் கூறுகின்றது. அங்கு எழுந்தருளியுள்ள
விநாயகர் இன்றும் குறுகிய திருக்கரங் களோடு குறுங்கை விநாயகர் என்னும் திருநாமத்துடன் எழுந்தருளி அன்பர் கட்கு அருள்புரிந்து வருகின்றார்.

இந்நூலில் ஔவையார் அருளிச் விநாயகரகவலும், அருணகிரி நாதர் அருளிச்செய்த முத்திவிநாயகரகவலும், நக்கீரர் அருளிச்செய்த விநாயகர் திருவகவலும், சிலதோத்திரப் பாடல்களும், விநாயகர் அஷ்டோத்ர சத நாமங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஔவையார் அருளிய விநாயக ரகவலுக்கு அடியேன் குறிப்புரை எழுதியுள்ளேன். அன்பர்கள் யாவரும்
இந்நூலைப் படித்துக் குறுங்கை விநாயகரின் திருவருளால் பெரும்பயன் அடைவார்களாக.

இங்ஙனம்,
வித்துவான், இராம. கோவிந்தசாமி பிள்ளை,
தமிழ்விரிவுரையாளர்,
அரசர்கல்லூரி, திருவையாறு.
-------------------

1. ஒளவையார் அருளிச்செய்த விநாயகர் அகவல்


கணபதி துணை

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
---------
சீதம் - குளிர்ச்சி. களபம் - நறுமணம். சிலம்பு - வேதச்சிலம்பு.
இசை -உலகு விரித்தற்கான ஒலி.நாண்-கயிறு, நாண் ஞாண் என மருவியது.
பூதுகில் -அழகிய ஆடை. வன்னம்-அழகு. மருங்கு- இடை. எறிப்ப-வீச.
அடக்கும் பெருமை. கோடு-கொம்பு. பேழை - உலகு
------

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமு மங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயு நாலிரு புயமும்
மூன்று கண்ணு மும்மதச் சுவடும்
இரண்டு செவியு மிலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புத நின்ற கற்பகக் களிறே!
-----
வேழம்-யானை. சிந்தூரம் - செம் பொட்டு. அஞ்சுகரம் -ஐந்தொழில் புரியும் ஐந்து திருக்கைகள்; ஐந்து, அஞ்சு எனப் போலியாயிற்று. பாசம்-கயிறு. நீல மேனி - அருள்மயமாகிய பசுத்த மேனி. நான்றவாய்-தொங்குகிற வாய். நாலிரு புயம்- எட்டுத் தோள்கள். மூன்று கண்- சூரியன் சந்திரன் அக்னியாகிய முக் கண்கள். சுவடு - அடையாளம். இலங்கு தல்-விளங்குதல். அற்புதம்-வியப்பு.
----------

முப்பழ நுகரு மூஷிக வாகன!
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க மறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் னுளந்தனிற் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திரமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
---------
முப்பழம்-வாழை, பலா, மாங் கனிகள். மூடிகம்-பெருச்சாளி. ஆட்கொள அடிமையாக்கிக் கொள்ள. வேண்டி- விரும்பி. மாயாப் பிறவி- ஒழியாத பிறப்பு. குரு-அறியாமையினைப்போக்கி அறிவுடைமையினை நிலைநிறுத்துபவர். திரம்-நிலை, ஸ்திரம் என்பதன் தற்பவம். வாடா-சுருங்காத.
-----------

உவட்டா வுபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் றன்னை யடக்கு முபாயம்
இன்புறு கருணை யினிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவித்
திருவினை தன்னை யறுத்திருள் கடிந்து
தலமொரு நான்குந் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே
ஒன்பது வாயி லொருமந் திரத்தால்
----------
உவட்டாத - தெவிட்டாத. அடக்குதல்- தீநெறியிற் செல்லவிடாது தடுத்தல். இன்பு உறு கருணை-இன்பமாகிய மிக்க அருள். கருவிகள்-மனம்,புத்தி,சித்தம், அகங்காரம். இருவினை - நல்வினை தீவினை. இருள் - அஞ்ஞானம். கடிந்து - நீக்கி. மலம் ஒரு மூன்று-ஆணவம், கன்மம், மாயை.மலம் - பாசம். ஒன்பது வாயில்- - கண் இரண்டு, காதிரண்டு, மூக்குத் தொளை யிரண்டு, வாய், எருவாய், கரு வாய் ஆக ஒன்பது.
------------

ஐம்புலக் கதவை யடைப்பதுங் காட்டி
ஆறா தாரத் தங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையி னெழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்றுமண் டலத்தின் மூட்டிய தூணின்
நான்றெழு பாம்பி னாவி லுணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய வசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட வுரைத்து
---
ஆறு ஆதாரம்-மூலாதாரம், சுவாதிட் டானம், மணி பூரகம், விசுத்தி, அநா கதம், ஆக்ஞை. பேறு-செல்வம். நிறுத்தி - நிலைபெறச் செய்து. பேச்சு உரை- பேச்சாகிய மொழி. இடை பிங்கலை-இடதுபக்க நாடி, வலதுபக்க நாடி. சுழுமுனை-நடு நாடிமூன்று மண் டலம்-சோம சூரிய அக்நி மண்டலம். குண்டலி - நாபியினின்றும் எழும் குண் டலினி சத்தி. அசபை - அசபா மந்திரம்.
--------

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைத்
காலா லெழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையு மாதித்த னியக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தி னீரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தி னுறுப்பையுங் காட்டிச்
சண்முக தூலமுஞ் சதுர்முக சூக்குமமும்
எண்முக மாக வினிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட வெனக்குத்
தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித் தெனக்கருள் செய்து
---
மூண்டு - அதிகரித்து, கனல் - மூலாக்னி, காலால்-பிராண வாயுவால்.
அமுதநிலை- சுழுமுனை நாடி நிலை. ஆதித்தன்- சூரியன். குமுதம் - அல்லி
சகாயன் - தலைவன்; சந்திரன். இருத்தி-சமாதியிலிருத்தி. அறிவித்து- தெளிவு பெறச் செய்து.
-----------------

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கு மனமு மில்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்
திருள்வெளி யிரண்டுக் கொன்றிட மென்ன
அருடரு மானந்தத் தழுத்தியென் செவியில்
எல்லை யில்லா வானந்த மளித்து
அல்லல் களைந்தே யருள்வழி காட்டிச்
சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி
அணுவிற் கணுவா யப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
------------
முன்னை வினை - முற்பிறப்புக்களிற் செய்த ஆகாமிய சஞ்சித வினைகள்.
மனோலயம்-மனம் ஒடுங் மிடம். இருள்வெளி-இருளும் வெளியும். அருள் தரும் ஆனந்தம் - பேரானந்தம். எல்லையில்லா ஆனந்தம் - முத்தியின்பம்.
அல்லல் - பிராரத்தம். சி த்தம்-மனம் முற்றுதல் - முதிர்தல்.
------------
வேடமு நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தி னரும்பொரு டன்னை
நெஞ்சக் கருத்தினிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே.
-----------
தத்துவநிலை-மெய்ப்பொருள்நிலை. எனை- அறிவிலியாகிய என்னை.
ஆண்ட- பிறவிக் கடலில் வீழா,தபடி எடுத்து ஆண்ட, வித்தக-ஞானவடிவுடைய.
விநாயக- மேலான தலைவனே, விரை கழல் - முத்திமணம் கமழும் வீரக்கழல்.
சரண்-புகலிடம்.
விநாயகர் அகவல் முற்றிற்று.
--------------

2. அருணகிரிநாதர் அருளிச்செய்த முத்திவிநாயகர் அகவல்

கணபதி துணை

வெண்பா
நமாமி மாமி நமஸ்து நமஸ்து
நமாமி நமாமி நமஸ்து— நமாமி யெங்கள்
அய்யா சிவன் புதல்வா யங்குசபா சந்துலங்கும்
கையா கணநாய கா.

அரகர சிவசிவ நமோ நமோ
ஆகுவா கனனே நமோ நமோ
இபமுகத் தோனே நமோ நமோ
ஈச்சுரன் மகனே நமோ நமோ
உமையாள் சுதனே நமோ நமோ
ஊனிற் பிரியாய் நமோ நமோ
எமையாள் பவனே நமோ நமோ
ஏழைபங் காளாய் நமோ நமோ
ஐயா துய்யாய் நமோ நமோ
ஒற்றை மருப்பாய் நமோ நமோ
ஓதிய மறையே நமோ நமோ
ஒளவைக் கினியாய் நமோ நமோ
அஃகாப் பொருளே நமோ நமோ

கணநா யகனே நமோ நமோ
காரணப் பொருளே நமோ நமோ
கிருபைக் கடலே நமோ நமோ
கீதகிண் கிணியாய் நமோ நமோ
குஞ்சரக் கன்றே நமோ நமோ
கூறும் பரனே நமோ நமோ
கெதியளிப் பவனே நமோ நமோ
கேள்வி விசாலா நமோ நமோ
கையைந் தவனே நமோ நமோ
கொழுந்திடு முதலே நமோ நமோ
கோவே தேவே நமோ நமோ
கௌவைத் துணையே நமோ நமோ

சதுர்மறைப் பொருளே நமோ நமோ
சாய்மறைச் செவியாய் நமோ நமோ
சிவன்கண் மணியே நமோ நமோ
சீவசஞ் சிதமே நமோ நமோ
சுருதி விளக்கே நமோ நமோ
சூரசங் காரா நமோ நமோ
ஜெயஜெய விநாயகா நமோ நமோ
சேய்நூற் கரசே நமோ நமோ
சைவக் குருவே நமோ நமோ
சொல்லும் பொருளே நமோ நமோ
சோக வினாசா நமோ நமோ
சௌரியக் களிறே நமோ நமோ

தண்டைக் கலாய் நமோ நமோ
தாமரைக் கரத்தாய் நமோ நமோ
திருமால் மருகா நமோ நமோ
தீங்குதீர்ப் பவனே நமோ நமோ
தும்பிக் கையாய் நமோ நமோ
தூலசூக் குமத்தோய் நமோ நமோ
தெய்வ சிகாமணி நமோ நமோ
தேவர்கள் தேவே நமோ நமோ
தையல்வல் லபையாய் நமோ நமோ
தொண்டர்க் கிதமே நமோ நமோ
தோத்திரப் பிரியாய் நமோ நமோ

நம்புந் துணையே நமோ நமோ
தளவைதீர்ப்பவனே நமோ நமோ
நாகபூ ஷணனே நமோ நமோ
நித்தன் மதலா ய் நமோ நமோ
நீ றணி பவனே நமோ நமோ
நுகருமா யமுதே நமோ நமோ
நூறாப் பேரே நமோ நமோ
நெற்றிக் கண்ணாய் நமோ நமோ
நேமியந் திரத்தாய் நமோ நமோ
நைவளந் துரந்தோய் நமோ நமோ
நோய்தீர்ப் பவனே நமோ நமோ
நௌவி தரித்தோய் நமோ நமோ

பதினொரு கையாய் நமோ நமோ
பாவ வினாசா நமோ நமோ
பிணிக்கு மருந்தே நமோ நமோ
பீடைதீர்ப் பவனே நமோ நமோ
புத்திதந் தவனே நமோ நமோ
பூமகள் மருகா நமோ நமோ
பெற்றோர் மகிழே நமோ நமோ
பேழை வயிற்றாய் நமோ நமோ
பையர வணிந்தாய் நமோ நமோ
பொன்றாக் குன்றே நமோ நமோ
போதப் பொருளே நமோ நமோ
பௌவ வணத்தோய் நமோ நமோ

மதியளிப் பவனே நமோ நமோ
மாதையில் வாழ்வே நமோ நமோ
மிதியா னவனே நமோ நமோ
மீதோர் வேந்தே நமோ நமோ
முக்கண் ணுடையாய் நமோ நமோ
மூவரின் முதலாய் நமோ நமோ
மெய்ப்பொருட் கிரியே நமோ நமோ
மேலாம் பதமே நமோ நமோ
மைதிற மணியே நமோ நமோ
மொழிவோர்க் கருளே நமோ நமோ
மோதகக் கையாய் நமோ நமோ
மௌலி தரித்தோய் நமோ நமோ

வல்லபை மணாளா நமோ நமோ
வாமன ரூபா நமோ நமோ
வித்தைக் கிறைவா நமோ நமோ
வீரதண் டையனே நமோ நமோ
உத்தம தேவே நமோ நமோ
ஊனந் துரப்பாய் நமோ நமோ
வெயிலவற் கினியாய் நமோ நமோ
வேண்டி விநாயகா நமோ நமோ
வையம் புரந்தோய் நமோ நமோ
ஒப்பிலா மணியே நமோ நமோ
ஓம்பொரு ளாளா நமோ நமோ
வௌதற் பரனே நமோ நமோ
மஹாகண பதியே நமோ நமோ

முத்திவிநாயகர் அகவல் முற்றிற்று.
------------------

3. நக்கீரதேவர் அருளிச்செய்த வினாயகர் திருவகவல்


கணபதி துணை

சீர்தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே
கார்நிற மேனிக் கற்பகக் களிறே
அல்லல் வினையை யறுத்திடு ஞான
வல்லபை தன்னை மருவிய மார்பா
பொங்கர வணிந்த புண்ணிய மூர்த்தி
சங்கர னருளிய சற்குரு விநாயக
ஏழை யடியே னிருவிழி காண
வேழ முகமும் வெண்பிறைக் கோடும்
பெருகிய செவியும் பேழை வயிறும்
திருவளர் நுதலில் திருநீற் றழகும்
சிறுத்த கண்ணுஞ் சீதளப் பார்வையும்
நறுந்திகழ் நாசியும் நாண்மலர்ப் பாதமும்
நவமணி மகுட நன்மலர் முடியும்
கவச குண்டல காந்தியும் விளங்கச்
சிந்துரத் திலதச் சந்தனப் பொட்டும்
ஐந்து கரத்தி னழகும்வீற் றிருக்க
பாச வினையைப் பறித்திடு மங்குச
பாசத் தொளியும் பன்மணி மார்பும்
பொன்னா பரணமும் பொருந்துமுந் நூலும்
மின்னா மெனவே விளங்குபட் டழகும்
உந்திச் சுழியும் உரோமத் தழகும்
தொந்தி வயிறுந் துதிக்கையுந் தோன்ற
வேதனு மாலும் விமலனு மறியாப்
பாதச் சலங்கைப் பலதொனி யார்ப்பத்
தண்டைச் சிலம்புந் தங்கக் கொலுசும்
எண்டிசை மண்டல மெங்கு முழங்கத்
தொகுது துந்துமி தொந்தோ மெனவே
தகுகு திந்திமி தாள முழங்க
ஆடிய பாத மண்டர்கள் போற்ற
நாடிமெய் யடியார் நாளுந் துதிக்கக்
கருணை புரிந்து காக்ஷிதந் தருள
இருளைக் கடிந்து எங்கும் நிறையப்
பொங்குபேரொளியாய்ப் பொன்மலை போலத்

திங்கள் முடியான் றிருவுள மகிழ
வந்த வாரண வடிவையுங் காட்டிச்
சிந்தை தளர்ந்த சீரடி யார்க்கு
கபர சாதன மிரண்டு முதவி
அகவினைத் துன்ப மகந்தை யறுத்து
மூலா தார முச்சுடர் காட்டி
வாலாம் பிகைதன் வடிவையுங் காட்டி
மாணிக்க மேனி மலர்ப்பதங் காட்டிப்
பேணிப் பணியப் பீஜா க்ஷரமும்
ஓமென் றுதித்த ஓங்காரத் துள்ளே
ஆமென் றெழுந்த அக்ஷர வடிவும்
இடைபிங் கலைக ளிரண்டி னடுவே
கடைமுனை சுழிமுனைக் கபாலமுங் குறித்து
மண்டல மூன்றும் வாய்வோர் பத்துங்
குண்டலி யசைவிலி கூறிய நாடியும்
பூதமும் பொறியும் புகழ்குண மூன்றும்
வாதனை செய்யு மறிவையும் காட்டி
ஆறா தார அங்குச நிலையைப்
பேறாகி நின்ற பெருமையுங் காட்டிப்
பஞ்ச மூர்த்திகள் பாகத் தமர்ந்த

பஞ்சசத் திகளின் பாதமுங் காட்டி
நவ்விட மெளவும் நடுவணை வீட்டில்
அவ்வு மாக்கினை அனாதி சதாசிவம்
மைவிழி ஞான மனோன்மணி பாதமும்
நைவினை நணுகா நாத கீதமும்
கண்டு வணங்கக் கண்ணைத் திறந்து
விண்டல மான வெளியையுங் காட்டி
ஐம்பத் தோரெழுத் தக்ஷர நிலையை
இன்பச் சக்கர விதிதனைக் காட்டி
புருவ நடுவணைப் பொற்கம பாசனன்
திருவிளை யாடலின் திருவடி காட்டி
நாதமும் விந்தும் நடுநிலை காட்டிப்
போத நிறைந்த பூரணங் காட்டி
உச்சி வெளிதனி லுள்ளொளி காட்டி
வச்சிரம் பச்சை மரகத முத்துப்
பவள் நிறைந்த பளிங்கொளி காட்டிச்
சிவகயி லாசச் சேர்வையுங் காட்டிச்
சத்தம் பிறந்த தலத்தையுங் காட்டித்
தத்துவந் தொண்ணூற் றாறையு நீக்கிக்
கருவி கரணக் களங்க மறுத்து

மருவிய பிறவி மாயையை
உம்பர்கள் ரிஷிகள் ஒருவருங் காணா
அம்பர வெளியி னருளையுங் காட்டிச்
சத்தி பராபரை சதானந்தி நிராமய
நித்திய ரூபி நிலைமையுங் காட்டி
அடியவர் ஞான மமிர்தமா யுண்ணும்
வடிவை யறியும் வழிதனைக் காட்டி
நாசி நுனியில் நடக்குங் கலைகள்
வாசிவா வென்று வாங்கிப் பிடித்து
நின்மல வடிவாய் நிறுவித் தப்புறம்
வின்மய மான விதத்தையுங் காட்டித்
தராதல முழுதுந் தானாய் நிறைந்த
பராபர வெளியைப் பணிந்திடக் காட்டி
என்னுட லாவி யிடம்பொரு ளியாவுந்
தன்னுடை வசமாந் தவனிலை காட்டி
நானெனு மாணவம் நாசம தாகத்
தானென வந்து தயக்கந் தீர
ஆன குருவா யாட்கொண் டருளி
மோன ஞான முழுது மளித்துச்
சிற்பரி பூரண சிவத்தைக் காண

நற்சிவ நிஷ்கள நாட்டமுந் தந்து
குருவுஞ் சீஷனுங் கூடிக் கலந்து
இருவரு மொருதனி இடந்தனிற் சேர்ந்து
தானந்த மாகித் தற்பர வெளியில்
ஆனந்த போத அறிவைக் கலந்து
புவனத் தொழிலைப் பொய்யென் றுணர்ந்து
மவுன முத்திரையை மனத்தினி லிருத்திப்
பெண்டு பிள்ளை பண்டு பதார்த்தங்
கண்டது மாயைக் கனவெனக் காட்டிப்
பாச பந்தப் பவக்கடல் நீக்கி
ஈச னிணையடி யிருத்தி மனத்தே
நீயே நானாய் நானே நீயாய்க்
காயா புரியைக் கனவென வுணர்ந்து
எல்லா முன்செய லென்றே யுணர
நல்லா யுன்னருள் நாட்டந் தருவாய்
காரண குருவே கற்பகக் களிறே
வாரண முகத்து வள்ளலே போற்றி
நித்திய பூஜை நைவேத் தியமும்
பத்தியாய்க் கொடுத்தேன் பரமனே போற்றி
ஏத்தி யனுதின மெளியேன் பணியக்

கூற்றினை யுதைத்த குளிர்பதந் தந்து
ஆசு மதுர வமிர்த மளித்துப்
பேசு ஞானப் பேறெனக் கருளி
மனத்தில் நினைத்த மதுர வாசகம்
நினைவினுங் கனவிலும் நேசம் பொருந்தி
அருண கிரியா ரவ்வை போலக்
கருத்து மிகுந்து கவிமழை பொழிய
வாக்குக் கெட்டா வாழ்வை யளித்து
நோக்கரு ஞான நோக்கு மளித்து
இல்லற வாழ்வை யிடையூ றகற்றிப்
புல்ல ரிடத்திற் புகுந்துழ லாமல்
ஏற்ப திகழ்ச்சி என்ப தகற்றிக்
காப்ப துனக்குக் கடன்கண் டாயே
நல்வினை தீவினை நாடி வருகினுஞ்
செல்வினை யெல்லாஞ் செயலுன தாமால்
தந்தையும் நீயே தாயும் நீயே
எந்தையும் நீயே ஈசனும் நீயே
போத ஞானப் பொருளும் நீயே
நாதமும் நீயே நான்மறை நீயே
அரியும் நீயே அயனும் நீயே

திரிபுர தகனஞ் செய்தவன் நீயே
சத்தியும் நீயே சதாசிவம் நீயே
புத்தியும் நீயே புராந்தகன் நீயே
பத்தியும் நீயே பந்தமும் நீயே
முத்தியும் நீயே மோட்சமும் நீயே
ஏகமும் நீயே என்னுயிர் நீயே
தேகமும் நீயே தேவனும் நீயே
உன்னரு ளன்றி உயிர்த்துணை காணேன்
பின்னொரு தெய்வம் பேசவு மறியேன்
வேதனை கொடுத்த மெய்யிது தன்னில்
வாத பித்தம் வருத்திடு சிலேத்துமம்
மூன்று நாடியும் முக்குண மாகித்
தோன்றும் வினையின் துன்ப மறுத்து
நாலா யிரத்துநா னூற்றுநாற்பத்தெண்
மேலாம் வினையை மெலியக் களைந்து
அஞ்சா நிலைமை யருளிய நித்தன்
பஞ்சா க்ஷரநிலை பாலித் தெனக்குச்
செல்வமுங் கல்வியும் சீரும் பெருக
நல்வர மேதரும் நான்மறை விநாயகா
சத்திய வாக்குச் சத்தா யுதவிப்.

புத்திர னேதரும் புண்ணிய முதலே
வெண்ணீ றணியும் விமலன் புதல்வா
பெண்ணா முமையாள் பெற்றிடுந் தேவே
அரிதிரு மருகா அறுமுகன் றுணைவா
கரிமுக வாரணக் கணபதி சரணம்
குருவே சரணம் குணமே சரணம்
பெருவயிற் றோனே பொற்றாள் சரணம்
கண்ணே மணியே கதியே சரணம்
விண்ணே யொளியே வேந்தே சரணம்
மானத வாவி மலர்த்தடத் தருகில்
தானத்தில் வாழும் தற்பரா சரணம்
உச்சிப் புருவத் துதித்துல களிக்குஞ்
சச்சிதா னந்த சற்குரு சரணம்
விக்கிந விநாயகா தேவே ஓம்
ஹரஹர ஷண்முக பவனே ஓம்
சிவசிவ மஹாதேவ சம்போ ஓம்.

விநாயகர் திருவகவல் முற்றிற்று.
--------------------

கணபதி யென்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி யென்றிடக் காலனும் கைதொழும்
கணபதி யென்றிடக் கரும மாதலால்
கணபதி யென்றிடக் கவலை தீருமே.

மோகமெனுங் கடல்கடந்து முத்தியெனும்
        கரைகாண்பான் முதிர்ந்தநாலாம்
பாகமெனும் மலர்கொண்டு பக்தியெனும்
        புனலாட்டிப் பரிந்துசாத்திச்
சோகமெனப் பாவித்துத் துரியமெனும்
        விளக்கேற்றிச் சோகநீங்கி
யாகமெனும் கோயிலின்கண் ணறிவென்னுங்
        கணபதிக்கே யன்பு செய்வாம்.
-----------------
:
குஞ்சரக் கன்றுநீ யொழியாம னிற்கின்ற
        கூடமென் னிதயவெளியாங்
குழந்தைவடி வாமிளைய பன்னிருகை மழகளிறு
        கூடிவிளை யாடிநிற்க
வஞ்சுதொழி லுனதுவிளை யாட்டாக மதசல
        மருள் கிரியை ஞானமிச்சை
யாகவைந் தொழினடத் தகராதி நாதவொலி
        யானையுன் பெருமுழக்கா
நெஞ்சினிறை வாந்திரோ தானகோ பத்தைநீ
        நீக்கியென் றற்போதமாம்
நிறைகவள மீருள்வாயி னாலுண்டு கர்ச்சித்து
        நீமகிழ்வ தென்றோசொலாய்
கஞ்சன்முத லோர்தொழக் கங்கைநதி சூழ்பெரிய
        காசிவாழ் துண்டிராஜ
கணபதி யெனும்பெரிய குணமேரு வேயருட்
        கருணாநி திக்கடவுளே.

இருவருக் கரிதாகி யெங்குநிறை தந்தையா
        மேகபரி பூரணற்கும்
இந்த்ராதி முப்பத்து முக்கோடி தேவர்க்கு
        மெண்ணிலா முனிவருக்குந்
தருமணிக ளொளிவிடுங் கணபணா டவியுரக
        சயனத்து மாமனார்க்குஞ்
சதுரான னற்குமெண் டிசைநாய கர்க்கும் வளர்
        சகலபுவ னங்களுக்கும்
ஒருபூர ணப்பிரம மேயென் றுனத்துதித்
        துவப்போடு தங்கள் செனன
யுபயகர மேற்கொண்டு குட்டியே நற்றொ
        ளொன்றுசெய வேண்டுமென்றாற் [ழில்க
கருதரிய நின்புகழை யெளியனே னறிவனோ
        காசிவாழ் துண்டிராஜ
கணபதி யெனும்பெரிய குணமேரு வேயருட்
        கருணாநி திக்கடவுளே.

உன்னுரு வையுமுனக் கிளையவ னுருவையு
        முன்றந்தை யருளுருவையும்
உன்னன்னை யுருவையு முன்னடிய ருருவையும்
        ஒன்றென்ப னிந்தவுருவை
யின்னமென் கண்கொண்டு கண்டிடவு மெய்யடிய
        ரேவல்செய் தேதிரியவும்
இணையடிக ளென்சென்னி வைத்திடவு மருள்பெறவு
        மின்பவா ரிதிமூழ்கவும் [
அன்னைகள்ளையையா தரிப்பதென வே யென்னை
        யாதாத் தவல்கொளவும்
ஆசைவைத் தேனிந்த வாக்கைவிழு முன் னமே’
        யாசைதீரப் பெறுவனோ
கன்னெஞ்ச னேன்முன்பு நீவருவ தெந்தநாள்
        காசிவாழ் துண்டிராஜ
கணபதி யெனும்பெரிய குணமேரு வேயருட்
        கருணாநி திக்கடவுளே.

தேவர்கணபதி,வித்தியாதரர்கள்கணபதி,
        சிவயோகமுனிகணபதி,
சித்தர்கணபதி, பூதர்கணபதி,ஞானமே
        திகழிராக்ஷதர்கணபதி,
கேவலமிலசுரர்கணபதி, கெருடர்கணபதி,
        கிளர்தயித்தியர்கணபதி,
கின்னரர்கள்கணபதி, கிம்புருடர்கணபதி,
        கெந்தருவராங்கணபதி,
பாவமறுபோகபூமியர்கள் கணபதி யும்.
        பரத்தில்வாசிகள்கணபத
பசாசர்கணபதி,யுடுக்கணபதி,யெக்ஷர்கணபதி,
        யுரகராங்கணபதி,
காவலென்றுரை செய்பதினெண்கணபதிப் பெரிய
        காசிவாழ்துண்டிராஜ
கணபதியெனும்பெரியகுணமேருவேயருட்
        கருணாநிதிக்கடவுளே.
        --- 10-வது குருமூர்த்தி சிவஞான தேசிகர்.
------------------

ஒருகோட்ட னிருசெவியன் மும்மதத்தன்
        நால்வாயைங் கரத்த னாறு
தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான்
        றருமொருவா ரணத்தின் றாள்கள்
உருகோட்டன் பொடுவணங்கி யோவாதே
        யிரவுபக லுணர்வோர் சிந்தைத்
திருகோட்டு மயன்றிருமால் செல்வமுமொன்
        றோவென்னச் செய்யுந் தேவே.
-அருணந்தி சிவாசாரியார்.
---------------------
கல்லா னிழன்மலை, வில்லா ரருளிய
பொல்லா ரிணைமலர், நல்லார் புனைவரே.
-மெய்கண்டதேவர்.
-----------------

காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம்

"விநாயகர் கவசம்"

வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க;
வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக
மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க;
விளரற நெற்றியை என்றும்விளங்கிய காசிபர்காக்க;
புருவந்தம்மைத் தளர்வில் மகோதரர்காக்க;
தடவிழிகள் பாலசந்திரனார் காக்க;

கவின்வளரும் அதரம் கசமுகர்காக்க:
தால்அங்கணக்டரீடர் காக்க;
நவில்சி புகம் கிரிசைசுதர் காக்க;
தனி வாக்கை விநாயகர்தாம் காக்க;
அவிர்நகை துன்முகர்காக்க;
  அள்எழிற்செஞ்செவி பாசபாணி காக்க;
தவிர்தலுரு திளங்கொடி போல்வளர்மணி நாசியைச் சிந்திதார்த்தர் காக்க;

காமரு பூமுகந்தன்னைக் குணேசர் நனிக்காக்க;
களம் கணேசர் காக்க;
வாமமுறும் இருதோளும் வயங்குகந்த பூர்வசர்தாம் மகிழ்ந்து காக்க;
ஏமமுறு மணிமலை விக்கின விநாசன் காக்க;
இதயந்தன்னைத்தோமகலுங் கணநாதர் காக்க;
 அகட்டினைத் துலங்(கு) ஏரம்பர் காக்க;

பக்கம்இரண்டையும் தராதரர் காக்க;
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க;
விளங்கிலிங்கம் வியாள பூடணர்தாம் காக்க;
தக்கருய்யந் தன்னை வக்கிரதுண்டர் காக்க;
கச்சனத்தை அல்லல் உக்க கணபன் காக்க;
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க;

தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க;
இரு பதம் ஏகதந்தர் காக்க;
வாழ்கரம் கப்பிரப்பிரசாதனர் காக்க;
முன்கையை வணங்குவார்நோய் ஆழ் தரச்செய் ஆசாபூரகக் காக்க;
விரல் பதுமத்தர் காக்க;
கேழ்கிளரும் நகங்கள் விநாயகர் புத்தீசர் காக்க;

அக்கினியிற் சித்தீசர் காக்க;
உமாபுத்தரிரர்தென் ஆசை காக்க;
மிக்க நிருதியிற் கணேசுரர்காக்க;
விக்கினவர்த் தனர்மேற் கென்னுந் திக்கதனிர் காக்க;
வாயுவிற் கசகன்னர் காக்க;
திகழ்உ தீசி தக்க நிதிபன்காக்க;
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க;

ஏகதந்நர் பகல்முழுதுங் காக்க;
இரவினும் சந்தி இரண்டன் மாட்டும் ஓகையின் விக்கினகிருது காக்க;
இராக்கதர் பூதம் உறுவே தாளம் மோகினிபேய் இவையாதி
உயிர்திறத்தால் வருந்துயரும் முடிவில்லாத வேகமுறு பிணிபலவும்
விலக்கு புயாசாங்குசர் தாம் விரைந்து காக்க;

மதி, ஞானம், தவம், தானம், மானம் ஒளி, புகழ், குலம், வண்சரீரம் முற்றும்;
பதிவான தனம், தானியம், கிருகம், மனைவி, மைந்தர்,
பயில்நட் பாதிக கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க;
காமர் பவித்திரர் முன்னான விதியாரும் சுற்றமெலாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க;

வென்றி சீவிதம் பகபிலர் காக்க;
கரியாதியெலாம் விகடர் காக்க;
என்றிவ்வாறிது தனை முக்காலமும் ஓதிடின்; நும்பால் இடையூறொன்றும்
ஒன்றுமுறா; முனிவர்காள்; அறிமின்கள்; யாரொருவர் ஓதினாலும்
மன்றஆங்கவர்தேகம் பிணியறவச் சிரதேக மாகி மன்னும்.

விநாயக கவசப் பலன் யாத்திரையில் தோத்திரம் செய்தால் சகல
விக்கினமும் இரியல் போக
மூத்த பயன் கைகூடும் சமரின் மொழிந்
திடில் விசயம் முற்றும் நாளும்
ஏத்தியிரு முறை இருபத் தொருநாள் வந்
தித்டின் மாரணம் ஈண்டேதம்
பனமாதி நிலை பேறெய்தும்.

நித்தலு மூவேழுமுறை செபித்திடில்கா
ராக்கிருகநீங்கு மன்னர்
பொத்துமுளநிட்டூரம் போம் அரையன்
தனைக் காணும்போது முக்கால்
பத்தியின் ஓதிடின் அவன் தான் வசப்படுவன்
இதைத் தாளிப் பனைமெல்லேட்டில்
வைத்தெழுதிப் படிப்பினும் கேட்பினும் பூசை
வயக்கினும் வல் இடரும் தீரும்.

அன்பு, உறுதி, ஆசாரம் உடையார்க்கு இக்
கவசத்தை அறைக! அல்லார்க்கு
என்பெறினும் உரையற்க! எனக்கிளந்து
மரீசி தனது இருக்கை உற்றான்.

–சுபம்–

விநாயகர் கவசத்தில் வரும் விநாயகப் பெருமானின் பெயர்கள்

1 விநாயகர் - தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாதவர்.
2 மகோற்கடர் - பெருவயிறு படைத்தவர்
3 காசிபர் - கச்யப முனிவர்க்கு மைந்தராக ஒருகால் அவதாரம் செய்தவர்
4 மகோதரர் - பெருவயிற்றோன்
5 பாலசந்திரனார் - நெற்றியின் உச்சியில் சந்திரனைத் தரித்தவர் (முன் தலை நெற்றியின் உச்சிப்பகுதி, வகிடு)
6 கஜமுகர் - யானை முகத்தோன்
7 கணக்கிரீடர் - (அகராதி - க்ஷகாராந்த) எழுத்துக்களோடு விளையாடுபவர்
8 கிரிசைசுதர் - பார்வதி புத்ரர் (கிரிசை - கிரிஜா, மலைமகள், பார்வது, சுதர் - மைந்தர்)
9 துன்முகர் - தீயோரால் காண இயலாதவர்.
10 பாசபாணி - பாசக் கயிற்றைக் கையில் கொண்டவர்
11 சிந்திதார்த்தர் - நினைத்தப் பொருளை அளிப்பவர்
12 குணேசர் - குணங்களுக்கு ஈசன்
13 கணேசர் - பக்த கணங்களுக்கு ஈசன்
14 கந்த பூர்வஜர் - கந்தனுக்கு முன் பிறந்தவர்
15 விக்கின விநாசர் - தடைகளை அகற்றுபவர்
16 கணநாதர் - ஸாரூப கணங்களுக்குத் தலைவர் (இறை வழிபாட்டினால் ஆன்மாக்கள் அடையக்கூடிய நான்கு நிலைகளான, ஸாலோக்ய பதவி (இறைவரது உலகில் இடம் பெற்று வாழ்தல்), ஸாமீப்ய பதவி (இறைவரது அருகில் இடம் பெற்று வாழ்தல்), ஸாரூப்ய நிலை (இறைவரைப் போன்றே உருவம் பெற்று வாழ்தல்), ஸாயுஜ்ய பதவி (இறைவரோடு இரண்டறக் கலந்து முக்தியடைதல்).)
17 ஏரம்பர் - ஹேரம்பர், பராக்ரமசாலி
18 தராதரர் - பூமியைத் தாங்கி நிற்பவர் (தரா- பூமி)
19 விக்கினகரர் - விக்கினஹரர், தடைகளைப் போக்குபவர்.
20 வியாளபூடணர் - பாம்பை ஆபரணமாகக் கொண்டவர் (வியாளம் - அரவம், பாம்பு)
21 வக்கிரதுண்டர் - வளைந்த துதிக்கை கொண்டவர்.
22 கணபர் - கணப, கணபதி, பக்த கணங்களுக்குத் தலைவர்
23 மங்கள மூர்த்தி - மங்கள உருவினர்
24 மகாபுத்தி - சிறந்த அறிவுடையவர்
25 ஏகதந்தர் - ஒற்றைக் கொம்பர்
26 க்ஷிப்ரப்ரசாதனர் - உடனே அருள் புரிபவர்
27 ஆசாபூரகர் - ஆசைகளைப் பூர்த்தி செய்ப்வர்
28 பதும அந்தர் - தாமரை மலர்க்கையினர்
29 புத்தீசர் - (சித்தி) புத்திக்கு ஈசனார்
30 சித்தீசர் - சித்திக்கு ஈசனார்
31 உமாபுத்திரர் - உமை மைந்தர்
32 கணேசுரர் - யுத்த கணங்களுக்கு ஈசுவரர்
33 விக்கினவர்த்தனர் - (தன்னை மறந்தோர் வாழ்வில்) தடைகளை அதிகரிப்பவர்
34 கஜகன்னர் - கஜகர்ணகர், யானைக் காதுடையவர்.
35 தக்க நிதிபர் - சிவனின் செல்வர் (தக்கன் - சிவபிரான்)
36 ஈசநந்தனர் - ஈசனின் மைந்தர்
37 விக்கினகிருது - (தன்னைப் போற்றாதாரின் செயல்கட்குத்) தடைகளை உண்டாக்குபவர்
38 பாசாங்குசர் - பாசத்தையும் அங்குசத்தையும் தரித்தவர்
39 சர்வாயுதர் - அனைத்து ஆயுதங்களையும் உடையவர்.
40 மயூரேசர் - மயிலுக்கு ஈசன், மயிலேறி அருள வரும் இறைவர்.
41 கபிலர் - சிவந்த பழுப்பு நிறம் அல்லது சாம்பல் நிறத்தில் தோன்றுபவர்
42 விகடர் - வேடிக்கையாக நின்று அருளுபவர், அச்சம் தரும் தோற்றம் கொள்ளக்கூடியவர், பரந்த (பெரிய) திருமேனி கொண்டவர், பெருமிதமானவர், அழகானவர், மாறுபட்ட தோற்றம் கொண்டவர், எதனாலும் மறைக்கப்படாதவர்.

This file was last updated on 30 Nov 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)