pm logo

கண்டனூர் முத்துராமையா எழுதிய
வேதாந்தக் கும்மி


vEtAntak kummi
by kaNTanUr mutturAmaiyA
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
The e-text has been generated using Google OCR and subsequent editing and proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கண்டனூர், நா. பெ.நா. மு. முத்துராமையா
அவர்களால் எழுதிய "வேதாந்தக் கும்மி"

Source:
வேதாந்தக் கும்மி.
சாக்கை வேதாந்தமடம் பிரமவித்தியா பிரசாரண சபைக் காரியதரிசி
கண்டனூர், நா. பெ.நா. மு. முத்துராமையா அவர்களால் இயற்றப்பெற்று
தேவகோட்டை ''எஸ்டேட் பிரஸில்
அச்சிடலானது.
1920
-----------------

வேதாந்தக் கும்மி

கடவுள் துதி

1. செந்தமி பாலுறும் வேதாந் தக்கும்மி
சிறப்புடனே மிகப் பாடுதற்குப்
பந்தம் கற்றுமம் வன்னிவி நாயகா
பாதாம்புயத்துனை காப்பாமே.

2. பூதல் மீதி லுயர்வா னமிகப்
பொற்பாவத்துவி தமாகும்
வேதாந் தக்கும் மிளைம்பிட ஷண்முக
வேலாயு தன்பதங் காப்பாமே.

3. நற்றவத்தோருணர் வேதாந்தக் கும்மிப்பா
நாதமுடனேராம் பாடு தற்கும்
பற்றுவிட டோர்க்கருள் கொற்றவா வீசர்
பாதாம் புயத்துனை காப்பாமே.

4. அருமைப் பதங்க ளமைந்துயர் கும்மியை
அன்புட னேநன்கு பாடு தற்குத்
இருபால்லை நாயகி பாதாம்பு யத்துணை
சிந்தித்து வாழ்த்தின் றேத்தினனே

5. காண்டற்கரிங்காம் வேதாந்தக் கும்பியைக்
களிப்புடனே நாம் பாடு தற்கு
ஆண்டவ கைவிளங்கிடு முத்துரா
போன் நிருவடி காப்பாமே.

6. கோதிலா வேதாந்தக் கும்மியைப் பாடிட
கோவிதார் தன்னி லேயுறையுஞ்
சாதக்கணானபெரியோர் திருவடி
தி குறித்துநின் றேத்தினனே.

7. எகமே வரத்து விதமுதல் வாக்கியம்
எடுத்தோதிக் கும்மியைப் பாடுதற்கு
நாலலிங் கக்குரு பாதாம் புயத்துணை
நாடோறும் வாழ்த்தி நின் றேத்தினனே.

நூல்.

8. வேதாந்த நூலுக்க திகாரி முத்தாப
வேதனை நீங்கவே யாசை கொண்டு
சாகன மான் கும் டைந்தே குருவினோம்
சார்ந்தவ னாமடி. வானப் பெண்யோ !

9. திருக்கு தருகிய மானவி பண்டினில்
செப்பருந் திருக்கு என்னு மது
சுருக்கஞ் சாதி சாதிசு வகதம்
தோன்றா தவத்து நித்திய மாம்

10. ஒருஞ்சுசாதி விசாதி சுவாதம்
உள்ள திருசிய மாகும் பொருள்
தேரும் பொழுது அசத்திய மாமென்று
தெளிவது வேமிகும் ஞானப்பெண்ணே!

11. அத்தியா ரோபம் அபவாத மென்பது
ஆராய்ந் தறிகின்ற புத்தியினால்
சித்தத் துறுபந்த மோக்ஷந் தெரிவது
சீரான வேதாந்தம் ஞானப் பெண்ணே

12. சத்துசித் தானந்த நித்திய பூாணந்
தானான வஸ்து வாகு மதைப்
புத்தியினாலுணர்ந் தின்பமுந் துன்பமும்
பொருந்தாதோன் வேதாந்திஞானப்பெண்கோ!

13. தேஹாதி களில்பி மானங்கள் வைப்பதே
தீர்க்கமாப் பற்றிடு பந்தம் தாம்
மோக மதம் மானம் விடுவதே
முக்தியென்றெண்டிை ஞானப்பெண்னே

14. திரிபுடி யற்றனி டக்கனி லேயங்கு
திகழ்கின்ற காவியே தானென் றெணிச்
சரியாயு ணர்ந்ததைக் காண்பதுவே யுற்ற
தரத்துவ மாவது ஞானப் பெண்ணே !

15. பஞ்ச கோசக்தின் பகுப்பையு ணர்ந்தங்கு
பார்ப்பது வெமிகு ஞான கதாம்
உஞ்சும் படிக்குடைராமற் றிரிவது
உத்தம மல்லடி ஞானப் பெண்ணே !

16. அவத்தாத் திரயத்துஞ் சாயிநானென்பதை
அறியாம விருந்தவஞ் ஞானத் தினால்
புவனத்தி லேபலவாகப் புலம்பும்
புலப்பத்தைக்கேளாதேஞானப்பெண்ணே

17. வேதாந்த நூங்கதி காரிதானில்லென
விவேக மில்லாது விளம்பிடுவார்
நாதனாருரைத் திட்ட அல்வழிச் செல்லாதார்
நவிலுவ தாமடி ஞானப் பெண்ணே !

18. மெய்யினைப் பொய்யினை மெய்யாயுரைத்திடும்
வேதாந்த நூலிவைப் போன்ற தொரு
ஐயந்த விர்த்தருள் ஆனந்த நூல்வேறு
அவனியி லேதடி ஞானப் பெண்ணே !

19. கற்பனை யான சுகத்தனைத்தும்
காரண மானதோர் வஸ்து விலே
சொற்பனம் போலவே தோன்றின் தாகவே
துணிந்து கொள்ளடி ஞானப் பெண்ணே

20. அரவதாய்க் கயிறது தோன்றுதல் போலவே
அத்து விதமாஞ் சொரூபமதே
திரமாகுஞ் சகத்தாய்த் தோற்றுவ தாமெனச்
சிந்தையிற் கொள்ளடி ஞானப்பெண்ணே

21. பொன்னும் பணியாய்த் தோன்றும் போலவே
பொருளோ சுகத்தாய்த் தோத்து தங்தி
நன்னய மாகாச் சகமது வேறே
நாடுதற் கொன்றன்று ஞானப்பெண்ணே

22 வாக்கும் வதுக்கு பொட்டியு மெட்டாத
வஸ்துவின் தன்மையை யுணரவ தற்கு
பாக்கிய மானலே காந்த நா லன்றியே
பகாவோர் நூலேது ஞானப் பெண்ணே!

23. விவர்த்த பட்சம் என்பது வோவது
வேதாந்த பட்சமே யாகு மாஇ
பலத்தை யொழிக்குமப் பட்சத்தைப் பார்ப்பரே
பட்சத்தின் மேலாகும் ஞானப்பெண்ணே

24. ஆனையைக் கண்டவக் குருடரைப் போலவே
அறியாத சமயிக ளாங்கு ருடர்
ஊனினைச் சத்திய மாகக்கண்டாரோ
றெவினை விட்டிடு ஞானப் பெண்ணே !

25. ஏகான்ம பட்சம் யாதென் றறியாது
இயங்கிடும் பல்வகைச் சீவ ரொடு
மோகாதியற்சிக்கி முயங்கா திருப்பது
முத்திக்குமார்க்கமாம் ஞானப்பெண்ணே!

26. மாமறை கூறிடும் மாவாக்கியங்களின்
மகிமை யுணராத மாக்கள் பலர்
நேமம் தில்லாத நூல்பல பார்த்துமே
நிரயத்துக் காளாவார் ஞானப்பெண்ணே

27. ஞானத்துக் குப்பத்தி சாதன மாயல்லால்
நவிலும் பாமுத்திக் கேது விலை
ஆனாலும் ஓர்பட்சம் பதமுத்தி பத்தியால் !
ஆதலு முண்டடி ஞானப் பெண்ணே !

28. அத்துவி தம் விசிட்டாத்துவி தமோ
டவனியிற் றுவித மாவ தன்றி
மற்ற நற்குநற் சூத்திர பாடியம்
வழங்கவே யில்லேடி ஞானப் பெண்ணே!

29. சுத்தாத் விதசித் தாந்த சைவ மாய்ச்
சொல்லுதற் குயர்ந்த நூல்களிலை
வித்தைபதி னான்கிற் சொல்லாத தைப்பற்றி
மேவுறார் பெரியோர்கள் ஞானப் பெண்ணே!

30. சீவர்கட் கருளாலே வேதாந்த பட்சமே
சித்தாந்த மாமெனத் தேறு தற்கு
நாவினா லேதிருக் தேவார வாசகம்
நவின்றன னென்றெண்ணேஞானப்பெண்ணே

31. வருணத்தினில்லுயர் சங்கரா சாரியர்
வைதிக சைவரே யான தோடு
நிருணய மானவத்துவி தத்தினை
நிலையாட்டினாரடி ஞானப் பெண்ணே !

32. சித்தாந்த ரானவோர் மாயா வாதிகள்
செப்புவ தாவதென் றெண்ணி டிலோ
முத்தியில் மும்முதலுண்டென் றுரைத்திடும்
மூர்க்க வெறியாகும் ஞானப் பெண்னே !

33. தரமுள நால்வகைச் சாதிகள் தம்முடைச்
சாதிக்குத் தக்கவாங் கரும் முடன்
பிரமமு ணர்ந்தவன் பிராமண னாமெனப்
பேசிடு நன்னூல்கள் ஞானப் பெண்ணே!

34. வீரசை வோரும் விரும்பு வதுமுயர்
வேதாந்த சாஸ்திர மாவதைத் தான்
பாரினில் வேறொன்றைப் பார்த்திடாசேயவர்
பண்பது காணடி ஞானப் பெண்ணே !

35. அத்து விதமே அரிபிர மாதியாம்
அண்ணலு டையதோர் நிச்சய மென்
றுத்தம் மான நூல்களு ரைப்பதும்
உண்மையென் றெண்ணடி ஞானப்பெண்ணே

36. சுருதி யோடுக்தியநுபவ வாயிலாய்ச்
சொல்வதைக் கேட்டெவர் சொன்னாலும்
கருதியே நாமந்த வழியில் நடப்பது
காரிய மாமடி ஞானப் பெண்ணே !

37. ஞானசம் பந்தன் நாவினுக் கரசன்
மல்வாத வூர்ப்பெரு மானு டன்றா
னானதோர் சுந்தான் வைதிக சைவரே
யாவரென் றெண்ண்டி ஞானப்பெண்ணே

38. வைதிக சைவ ராமவர் நால்வரை
மதியிலாச் சமயிகள் தம்முடனே
ஐதிக மாகவு ரைப்பது வோமிக
அவல மதியடி ஞானப் பெண்ணே !

39. அரிபிர பாதி யானுரு வொன்றென்று
அறியாமலேயல வாறாகப்
பொருளறி யாச்சில பூரியருரைப்பது
பொல்லாங்கே யாமடி ஞானப்பெண்ணே!

49. அந்தணர்க் கேமறை சொந்த மென் நகமம்
அறைந்திடு வாக்கியந் தெள்ளி தாக
சுந்தர மூர்த்தியை வைதிக ரலரெனச்
சொல்லுவ தெம்மதி ஞானப் பெண்ணே!

41. நால்வருள் மூவர்நற் ப்ராமண ராகவும்
நால்வர் குருபூஜை நயத்திடு தல்
மேல்வருப்பமண ரைக்கொடு செய்வது
வேதவி தியாகும் ஞானப் பெண்ணே !

42. ஆதிசை வரென்பதோ ரற்புத சாதியார்
அண்ணலுக்குப் பூஜை செய்ய வர்கள்
நீதிமறையுடன் ஆகம நாறனை
நேராகக் கொள்ளுவர் ஞானப்பெண்ணே!

43. சைவரெனுமோர் சாதியில் லைபல
சாதி யாளருஞ் சைவ ரென்றே
உய்வ தற்காக உரைப்பாதனத
உண்மை தெரிந்திடு ஞானப் பெண்ணே!

44 பதிபசு பாசப் பகுப்பையு ணர்ந்தவன்
பாரினிற் சைவனா மென்றிடு வார்
விதியுண ராச்சைவ னவன்சைவ னாவது
வேடத்தைப் பூண்டன்றோ ஞானப்பெண்ணே!

45. வைதிக சைவ னாவது தானுயர்
மங்கள் சாஸ்திரத் தேர்ச்சியினால்
ஐதிக மெய்யை யுணர்ந்தவனாமென்று
அகத்தினிற்கொள்ளடி ஞானப்பெண்ணே

46. மாயனுக்கு மிகு நேயனடி யுயர்
மங்கை யுமைக்கது கூலனடி
சாயர்கட்கு மிகு தூயனடி மிகத்
தொண்டர்கட் கேயருள் தருவ னடி

47. சிவனை யரியயன் காணார டியவன்
தேவாதி தேவனே யாவ னடி
பவத்தை யடியாருக் கொழிப்பவ னாமவன்
பங்கயத் தாளிணைச் சூட்டிடு வோம்.

48. மேலோ ருகக்குநல் மேலோனடி யவன்
மெய்யினி லுமைபாதி யாள னடி
சாலோக சாமீபம் தருவான டியவன்
சங்கா நாமந்தரித்தானடி.

வேறு.

49. எல்லோர்க்கு மேலாம் இறைவ னடியவன்
இங்கித மான சொ ரூபனடி
நல்லோர் மனத்திலு திப்பா னடியவன்
நாடற் குரித்தான நாதனடி - அவன்
பாடற் குரித்தான பண்ப னடி.

50. மதியைச் சிரகில் தரித்தா னடியவன்
மங்கை மீனாட்சிக் குரிய னடி
நதியைச் சிரசில் வைத்தா னடியவன்
நரியைப் பரியாக்கும் நாதனடி - அவன்
கரிக்குருவியைக் காத்தானடி

51. வேதத்தி னுட்பொரு ளானானடியவன்
மேவினார்க் கின்பம் விளைப்பானடி
சீதளத் திங்கள் முகத்துகல் வீர்சித்தம்
தேர்ந்து கும்மியடியுங்கடி - அவனை
ஓர்ந்து கும்மி யடியுங்கடி.

52. வேத மோதுவ தேதுக் கடி - மிகு
வேள்வியுங் கேள்வியு மேதுக்கடி
போதந் தருநங் கடவுளை யோர்ந்து
புகழ்ந்து கும்மி யடியுங்கடி - அகம்
மகிழ்ந்து கும்மி யடியுங்கடி

53. ஐந்து தொழிலுக்கு மோர் இறைவனடியவன்
அருளினால் வேதம் அறைந்தானடி
பந்தமகற்றும் பரமனடி யவன்
பாம் பிரம்ம மான சொரூபனடி - அவ்
வாம்பெறு வோர்க்கோ ருருவனடி.

54. தன்னை யொழித்தவர்க்கென்ன குறையவன்
சத்சித்தானந்தமா யாவா னாடி
முன்னை வினைகளை யொழிப்பனடி மலம்
மூடாமற் கும்மியடியுங்கடி--புலன்
கூடாமற் கும்மி யடியுங்கடி.

55. ஆங்கார மியாவு மகலுமா, நம
தண்ணல்மே லன்பு வைத்திருந்தால்
ஓங்காரத் துள்ளொளிக்குள்ளிருந் தேயங்கு
உகந்து கும்மி யடியுங்கள் - அகம்
நெகிழ்ந்து கும்மி யாயங்கம்.

56. சிலமே பரமென் றாகுமடி யிதைச்
சாத்திர மறியாதார் தெரியாரடி
பவத்தை யொழித்தவர் பார்ப்பதடி யலர்
பார்ப்பதே யுயர்ந்த ஞானமடி - விலை
தீர்ப்பதே யுயர்ந்த தீரமடி.

வேதாந்தக் கும்மி முற்றிற்று.
----------------

This file was last updated on 1 Dec. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)