pm logo

பாலூர் அமிர்தகவிராயரவர்கள்
இயற்றிய ”கோகுல சதகம்”


kOkula catakam
by pAlUr amirta kavirAyar
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பாலூர் அமிர்தகவிராயரவர்கள் இயற்றிய
”கோகுல சதகம்”

Source:
கண்ணன் துணை.
பாலூர் அமிர்தகவிராயரவர்கள்
இயற்றிய ”கோகுல சதகம்”.
திருப்பதி மலையின்பேரில் மேலரதவீதி யாதவ கோபால இராமாநுஜகூடத் ததிபர்
நா. ஜெகந்நாத இராமாநுஜ பிள்ளை அவர்கள் கேட்டுக் கொண்டபடி
மதுரை புதுமண்டபம் புத்தகஷாப்
இ. ராம. குருசாமிக்கோனார் அவர்களாற்றமது
மதுரை வடக்குமாசி வீதி ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலையிற்
பதிப்பிக்கப்பெற்றது. 1914.
அணா 2
----------------

கண்ணன் துணை.
கோகுல சதகம் - காப்பு:
கட்டளைக் கலித்துறை,
சீர்மேவு பாடியில் வாழண்டர் செல்வஞ் செழிப்புறவே
ஏர்மேவு கோகுல மேன்மைச் சதக மிசைப்பதற்கு
நீர்மேவு மண்ட சராசரம் யாவுமோர் நீள்சுடருங்
கார்மேவு முந்தியிற் காத்தான் கழலிணை காப்பதுவே.

மணங்கொண்ட வேதன் முகத்திற் புயத்தில் வளர்குறங்கிற்
கணங்கொண்ட பாதத்திற் றோன் மிய நான்கும் கவின்பெறவே
புணங்கொண்ட பாம்பணை யானமிர் தூறுமிப் பார்தழைக்க
குணங்கொண்டு முன் வரு மன்பர்தங் கோத்திரர் கோகுலரே.             (1)

அண்டங்க ளாயிரங் கோடியுண் டாக்க வலர்ந்தவிதழ்
முண்டக னாகிப் பராபரன் பாரில் முறைநிறுத்த
மண்டலத் தேவகி பால்வசு தேவன்கை வாய்க்கப்பெற்ற
கொண்டலை யேந்தி வளர்த்தோர்கள் பாடியிற் கோகுலரே.       (2)

பழையானை யெட்டக் கரத்தானைத் தன்பதம் பற்றினருக்
கிழையானை யானைமுன் னேயெதிர் வானை யெழிற்கருணை
மழையானை ரோகணிப் பாலுதித் தானை மலிந்தவொரு
குழையானை யேந்தி வளர்த்தோர்கள் பாடியிற் கோகுலரே,       (3)

சிலவிய வண்டம் பகிரண்ட கோடியை நேர் படைத்து
நலமுள தாமரை நாபியிற் காத்தவர் நாரணற்குப்
பலவித மாகிய பூச்சூடு நூற்றென் பதிபுரைக்கக்
குலவிய பாட லுரைத்தோர்கள் பாடியிற் கோகுலரே.       (4)

மழவியல் பாக மடிமீ திருத்தி வனசமுகத்
தழகுந் திருவு மருந்திக்கண் ணாலன்பு மான மறைப்
பழமிது வேயெனப் போற்றிய கண்ணனைப் பாரிற்றங்கள்
குழவியைக் காப்பிடு பாட லுரைத்தவர் கோகுலரே.       (5)

தேறப் புவியின் மறையைக் கடைந்து திரட்டமுதம்
எறக் கரையினில் வைத்தது போல வெடுத்த தமிழ்
மீறப் பதின்மர்கணாலா பிரத்தினு மெய்ப்புகழைக்
கூறச் சிறந்து வளர்வோர்கள் பாடியிற் கோகுலரே.       (6)

பண்டாடி யதழ லாடியும் பாம்பின் படத்திலன்பு
கொண்டாடி யுமொன்று மாய்நினற மாலண்ட கோளமெல்லாம்
உண்டாடி யுங்கடு கொவ்வாத வாயி லுறியின் வெண்ணெய்
கொண்டாடி யுண்டு தெவிட்டச்செய் தாரவர் கோகுலரே.       (7)

முறையாக நற்றவஞ் செய்திடு வோருடன் முற்று நின்று
மறையாமற் றேவர்க்கு மாந்தர்க்கும் வேள்வி வகுத்தருனை
நிறைவாகத் தந்து மலர்வாச முற்று நிலைத்த செல்வங்
குறையாத பின்னை யெனுந்திரு வீன்றவர் கோகுலரே.       (8)

தொடுத்தகல் யாணத் தெருதேழ் கொடுரிற்கச் சூதச்சுரர்
எடுத்தெறி யத்தெய்வ வுருவாகி யோங்கிய வேற்றை வெல்ல
அடுத்துநங் கண்ணனிவரை யழைக்கவந் தகனடுங்கிக்
கொடுத்தா னுயிரைப் பிழைத்தோர்கள் பாடியிற் கோகுலரே.       (9)

ஞாலங்கண் டோங்கிய நான்முகன் கண்ணுநற் றேவர்கண்ணும்
ஆலங்கண் டோடிய வயிராணி கேள்வற் கலர்ந்தகண்ணும்
மூலங்கண் டோபெனுங் காண்பரி தான முகுந்தன்மணக்
கோலங்கண் டேகண் குளிர்ந்தோர்கள் பாடியிற் கோ குலரே       (10)

நளிமலர் நாபனயந்தண்ட ருய்ய நடுக்கடலை
ஒளிர்மலை மத்திற் கடைந்ததிற் றோன்றிய வொண்பொருளிற்
நளிரியல் பார்ந்த திருவைம ணந்து பின் றந்தமுதைக்
குளிர்ந்தன்பு கூர்ந்து கொண்டோர்கள் பாடியிற் கோகுலரே.       (11)

வானென்ற சொர்க்கப் புரந்தான் நானு மாலயனும்
தேனென்ற சொல்லுமை கேள்வனு மற்றுள்ள தேவர்களும்
தானென் றுலகுக் கரசரும் பூணத் தகாவிஜயக் கோனென்ற
மேன்பட்டங் கொண்டோர்கள் பாடியிற் கோகுலரே.       (12)

அடுக்குக் தொழிலவர்க் காகிய தேவிரு தாகப் பெற்றார்
எடுக்குந் தொறுமதி லேற்றமுண்டே யெங்க ணாரணனே
தொடுக்குங் கருணை புரிந்தே தனது சுடர்க்கரத்தாற்
கொடுக்கக் கருடக் கொடிபடைத் தாரவர் கோகுலசே.       (13)

நற்றுஞ் சுருதியுங் காணாத நாரண னற்றுளபம்
பெற்ற திருவின் னகைபோன்ற மான் பிடித்தவம்பால்
முற்றுஞ் செயஞ்செய்த காலங்கனேயின் னமிர்துதவிக்
கொற்றந் தருமுல்லை மாலையைத் தாங்கினர் கோகுலரே.       (14)

மண்டலந் தன்னி னிலனைந்து கூறதில் வண்மைபெறுந்
தண்டலை நன்னதி சார்மயி லானிரை தார்குருந்து
விண்டலத் தோர் மகிழ் வேய்ங்குழ லோசை விளங்குபைந்தேன்
கொண்ட வளந்தரு முல்லைத் தலைவர்கள் கோகுலசே.       (15)

ஆவர்த் தனையுள்ள வெத்தனை யோகுடியாய்த் தழைத்தோர்
மாவர்த் தனையுள்ள முல்லை நிலத்தர் மலர் நிறைந்த
காவர்த் தனையுள்ள யமுனையுங் காவிரி காளிந்தியும்
கோவர்த் தனமலை யுள்ளோர்கள் பாடியிற் கோகுலரே.       (16)

வேலாயு தம்பிடித்தான் முரு கேசன் வெள் வெற்புறைவோன்
சூலாயு தம்பிடித் தான் சசி காந்தன் சுடரும்வச்சிர
மேலாயு தம்பிடித் தான்கஞ்ச னேவிய மேதிக்கன்றைக்
கோலாயு தம்பிடித் தானாயர் பாடியிற் கோகுலரே.       (17)

தலஞ்சுத்தி யாகவுந் தார்வேந்தர் சென்னி தரிக்க முடி
நலஞ்சுத்தி யாகவு நானிலத் தாலய நான்மறையோர்
பலஞ்சுத்தி யாகவும் பதினெட்டு சுத்தங்கள் பண்ணவுதற்
குலஞ்சுத்தியாம்பஞ்ச கௌவிய மீந்தவர் கோகுலரே.       (18)

சுற்றிய பாரிலுண் டாகிய தோற்றஞ் சுகம்பெறவே
மற்ற முயற்சியில் வருவதுண் டோ வளங் கூர்சதுர்த்தர்
பற்றிய தங்க டொழில்கடைத் தேறியப் பலனுறவே
கொற்ற நல்லேறு கொடுத்தோர்கள் பாடியிற் கோகுலரே,       (19)

புழுங்கிய கோபத்தி லந்தகன் சாபம் பொறுத்தவங்க
மழுங்கிய தன்னுருவோடு மறைந்திட மன்னு பிர்கள்
அழுங்கிய போதினி லந்தணர் யாக மனைத்துஞ்செய்யக்
கொழுந்த னல்காட்டு மரணிதந் தாரவர் கோகுலரே,       (20)

பிலமா மிலங்கையை வென்று கற்பாகிய பெண்ணரசை
நலமாக மீட்டு வரும்போது தண்டக நன்முனிவர்
பலமா மீராமனைத் தழுவ நினைக்கவப் பாடியினிற்
குலமாத ராகப் பிறக்க வளர்த்தவர் கோகுலரே.       (21)

உண்டா கியபதி னாறாயிரம் பெண்ணை யோங்குகண்ணன்
கண்டான் கமலத் திருவொப்ப வேகலி யாணஞ்செய்யப்
பண்டான வூர்வலம் வாழ்நாக வல்லி பரிமளநீர்
கொண்டாடி யேழ்தினஞ் சோபனம் பாடினர் கோ குலரே.       (22)

பண்டான வாய்மை பினைந்தே மலரயன் பாரதனில்
உண்டான கண்ணன் றிருவிளை யாட லுணர்த்தக்கன்றுத்
தொண்டான வாயருடன் மறைத் தேகவுத் தோன்றுருவங்
கொண்டானை யன்புடன் கொண்டாண்ட செல்வர்கள் கோகுலரே.       (23)

பாடிக் கொணாரத னெண்ணிரண் டாயிரம் பாவையரில்
நாடிக்கொண் டேயென்று தாவென்ற போதினி னானின்மையைத்
தேடிக் கொண் டேசெனக் கண்ணினிற் றோன்றுந் திருவருவாய்
கூடிக்கொள் செல்வப் பதிபெற்ற பேறவர் கோகுலரே.       (24)

நீட்டுற்ற சாய்கையின் சூர்மாவை வேல்கொடு நீக்கி வெற்றி
காட்டு முருகர்க்கு மேனது வான கனவிறைக்குந்
தேட்டுக் குரிய வினை நாடி யேற்றித் திருகுபுரிக்
கோட்டுத் தகர் பெற வீந்தவர் பாடியிற் கோகுலரே.       (25)

சமர் தனிற் சூானை வேல்கொடு தாக்கிச் சயம்புரிந்தே
அமரரைக் காத்தவன் பன்னிரு தோண்மறைத் தெளவைதன்னைத்
கமசரி முல்லை பிற் காத்திருந் தேபரி காசஞ்செய்யக்
குமானு மேதிகண் மேய்க்கப் பெற்றவர் கோகுலரே       (26)

மாரியி னேர் கொடை யிந்தோர்க ளௌவை மனங்குளிரச்
சீரிய வாடை கொடுத்தோர்கள் போசனஞ் செய்ய நல்ல
மூரிய பொன்னிலை யீந்தோர்கள் பாரி யெனமொழிந்த
கூரிய வள்ள லுதித்தோர்கள் பாடியிற் கோகுலரே.       (27)

தணவாத நீதி புரிந்தோர் மகுடந் தரித்தனந்தன்
பணமாகத் தாங்கிய சோனுஞ் சோழனும் பாண்டியனுங்
கணமாகச் சோபனப் பந்தலிலே நின்று கைய தனாம்
குணமாய் மணமிடக் கலியாணம் பெற்றவர் கோகுலரே       (28)

வடியாய்ப் பனந்துண்டு மூன்றா சாகிய மன்னவர்க்குத்
துடியாக மூன்று பழந்தர லாலவர் தோத்திரஞ்செய்
படியார்க் கெளியரு மிச்சிக்க நான் கெனும் பாடல்பெற்ற
குடியார் பெரிய கொடையாற் பெரியவர் கோகுலரே.       (29)

தண்டா மரைப்பெண்ணை தாம் பெற்ற தாலுந் தரணிச்செல்வம்
உண்டான வாய்மை யுடைமை யினாலு முணர்ந்தௌவையார்
பண்டாங் குடியிற் பெரியோ ரெனச்சொன்ன பாடறனைக்
கொண்டே பெரும்புகழ் கொண்டோர்கள் பாடியிற் கோகுலரே.       (30)

பணத்தா யிரஞ்சென்னிச் சேடனு மேத்தப் பகர்ந்தவிலக்
கணத்தான் மிகுந்தவ ரௌவையை யோர்சொற் கழறிவெல்ல
மணத்தா மரைக்கை மணிப்பொற் கடசத்தை வாங்கியவள்
குணத்தாற் கொடுக்கப் புனைந்தவர் பாடியிற் கோகுலரே.       (31)

பிலமா மிராகவன் காதையைக் கம்பன் பெருகச் செய்ய
நலமா மதிலொரு சீரிற் சமுசய நாடவிடத்
தலமாந் திசைசொற் சரஸ்வதி சாற்றத் தயிர்கடையும்
குலமாது மாகப்பெற் றாரவர் பாடியிற் கோகுலரே.       (32)

தொடுத்தநற் கற்புடைக் கன்னகை கேள்வன் றுயாதனாற்
கடுத்து வருகின்ற போதவள் கொங்கைக் கரம்பறித்து
அடுத்தவள் கூடற் பதியினி லாயர் பெண் வெண்ணெயப்பக்
கொடுத்த வரம்பெற்று வாழ்வோர்கள் பாடியிற் கோகுலரே       (33)

ஆடற் பதிக்கு நிகர்கடம் பாடவி யானதிலே
தேடற் கரிய பொருளைக்கண் டேதமிழ் செப்பியவர்
நாடத் தயவு புரிந்தே பின்பாக நடந்துவருங்
கூடற்பதிச் சொக்கை யேவல்கொண் டோ ரவர் கோகுலரே.       (34)

நம்பிட வேயிடைக் காட்டூரி வீசனை நாட்டிவைத்துச்
சொம்பிடக் கண்டனன் பாண்டியன் பாதத் துணையில்விழ
அம்பிடு சென்னிய னன்பனைப் போற்றென வன்றாசன்
கும்பிடச் சொக்கரைக் கோவில்வைத் தாரவர் கோகுலரே,       (35)

நாலா கலைக்கென்றும் வல்லவர் சோதனை நற்பலகை
மேலா பிருந்தான் கீழாகி நின்றிட மேன்மை பெற்று
நாலா நிறைகின்ற பேரெழு தாமன் முன் னற்றமிழாற்
கோலா கலச்சங்கம் வென்றோர்கள் பாடியிற் கோகுலரே.       (36)

சங்கத்தை வென்றவர் மங்காத நீதி தமிழுரைத்தோர்
துங்கக் கஜேந்திர மோட்சமு மாயிரஞ் சொன்னவல்லோர்
எங்கட் கிறைமகிழ் பாகவ தமுமே ழாயிரமாய்க்
கொங்குற் றவாணி கடாட்சத்திற் செய்தவர் கோகுலரே.       (37)

அம்போ ருகனு மறியாத மாய னவதரிக்கக்
கும்போத யன்றமி ழால்விண்ம ணேத்தக் குவலையத்துத்
தம்போல வாழ்வு தழைத்திடக் கஞ்சனைத் தாக்குபதக்
கொம்பான துற்கை யெனுஞ்சத்தி யின்றவர் கோகுலரே,       (38)

மதித்தே வருகின்ற பூதகி யாதி வருபகையை
மிதித்தேறி வென்று முனிந்தே வருகி ற வேழத்தையும்
எதிர்த்தே மருப்பைப் பிடுங்கியுங் கஞ்சன்மு னேமிக்கண்ணன்
குதித்தே யுதைத்திடு காட்சிபெற் றாரவர் கோகுலரே.       (39)

மாவா யிரம்பல முள்ள பராக்கிரம மல்குகஞ்சன்
மேவா யமார மேவிய பின்னர் விளங்கவெங்குந்
தேவாதி தேவ னெனவுக்கிர சேனனைச் சீர்பெறவே
கோவாய் மௌலி தரித்தோர்கள் பாடியிற் கோகுலரே.       (40)

கஞ்சனைப் பெற்ற வுக்கிர சேனனைக் காசினியின்
மிஞ்சிய நீதி செலுத்தர சாக்கிப்பொன் வீதிவலம்
நெஞ்சிலு வந்திவரைப்பதி னாயிர நீள் பெரியோர்
குஞ்சர மேற்ற வருவோர்கள் பாடியிற் கோ குலரே.       (41)

ஞானக மாயக் குரூர ரழைக்கநன் மாமதுசைத்
தானால் வீதியிற் கஞ்சனற் றூசுகள் தந்தியின் மேல்
ஆன பொதியைப் பறித்துப் பீதாம்பர மான வெல்லாம்
கோனகர் பார்க்கப் புனைந்தோர்கள் பாடியிற் கோகுலரே.       (42)

ஒலிபெறு மேகங்க ளேழையு மேவ வவரியெல்லா
மலிவுடன் மாந்திப் பொழிந்து வருந்தி மகபதிபான்
மெலிவினைக் கூறிட மேதினிக் கோவலர் மெய்ப்புகழைக்
குலிசனு மேத்தப்பெற்றவர் பாடியிற் கோகுலரே. -       (43)

கடையாய் மகரத்திற் செய்கின்ற பொங்கலை நாரணன்றான்
தடையாக வட்கொண்ட தென்றறி யாமற் சதமகத்தான்
படையாக மேதங்க ளேழையு மேவப் பரனெடுத்த
குடையான கோவர்த் தன நீழ னின்றவர் கோகுலரே.       (44)

மணமுற்ற முல்லை புனைவீர கோ தன்ன மாயவனைப்
பணமுற்ற சேடனு மேத்த நினைந்து பலவிதத்தால்
உணர்வுற்று நாணப் பதினாயிரம் விப்ர ருண்ண வன்னங்
குணமுற்று மாய்த்தர லாற்றிரு வீன்றவர் கோகுலரே,       (45)

மாதனங் கோடி மணிப்பணிப் பேழை மலர்மங்கைகேர்
சாதனச் சேடியர் மற்றெண்மர் பெண்ணினிற் சார்சிவிகை
சீதனத் தேனு பதினாயிரம்பல சீர்சிறக்கக்
கோதனன் பெண்ணைக் கண்ணனுக் கிந்தவர் கோகுலரே.       (46)

தவளமொப் பாமெனக் கட்டமிர் தாயர் தனையருடன்
உளமகிழ் மாயனுங் கொண்டே யமுனையி லுண்ணவக்கால்
வளமுடன் றங்க ளனமீந்து மாலுக் கவாமிர்தம்
குளவுங் கொடுத்துண் டகமகிழ் வோரவர் கோகுலரே.       (47)

துடிகோத் திரமெனச் சொல்வார்க ளொன்றைச் சதரிசனன்
அடிகோத் திரமிளை யாகும் தோவன்று நாரதனும்
படிகோத் திரமனை யைந்து நிலத்தினும் பார்த்துவந்த
குடிகோத் திரமுடன் வாழ்வோர்கள் பாடியிற் கோகுலரே.       (48)

அன்றுமை யூர்திரு வேங்கடன் சந்ததி யாரொருவர்
கன்றொடு காலியை முல்லையிற் காக்கும் கடும்பகலிற்
நின் றிட வந்திடுர் தேவாலமிர்தத்தை தினே தினமும்
குன்றெடுத் தாருடன் கூடியுண் டா ரவர் கோகுலரே.       (49)

நன்றா கவதென்ற கோடான கோடிகணல்லமிர்தம்
தின்ற ரதிற்பலங் கண்டதொன் றில்லைச்சிற் றாயர்க்கன்பி
னொன்றாய்க் கவளங் கொடுத்தத னாலுட லோடவற்குக்
குன்றாப் பதவி கொடுக்கப்பெற்றாரவர் கோகுலரே.       (50)

மாகன கத்துரு வீன்றன காளிங்கன் வாழ்தடத்தி
னாகன கிற்றுரு வாகிய வாயர் நலம்பருகித்
தாக மகற்ற மயக்கிய வல்விடந் தான்முறியக்
கோகன கைக்கட் கருணைபெற் மூரவர் கோகுலரே.       (51)


பூபால னஞ்செய்வ ராகுதிப் பாலனம் போந்து செய்வர்
நாபால னஞ்செய்வர் நல்லமிர் தீந்து நளினமலர்
மாபாலனஞ்செய்யு மார்பனு மிச்சிக்க வாழ்வு தரும்
கோபாலனஞ்செய்வர் கோபாலர் கோவலர் கோகுலரே.       (52)

தவமுள விண்டலத் துண்டான வண்டர்க்குத் தானமிர்தம்
உவகைய தாகவு முண்டிட வன்பி லுதவிசெய்தோர்
புவனமெ லாமிவர் புண்ணிய மோலம் பொங்குதலாற்
குவலயத் தண்ட சென நிகண் டோதிய கோகுலரே.       (53)

உணத்தான் பிறந்த வுயிர்களுக் காரமிர் துதவிபுகழ்
மணத்தா லவர்க்கு வழுவாமை யாலும் வழங்குநெறிக்
சணத்தாலு முன்மது வேந்த னறிந்து கனந்தந்திடுங்
குணத்தாற் பொதுவரென் நேதப் பெற்றாரவர் கோகுலரே.       (54)

பூபாரந் தீரவுந் தன்கைக் கபாலம் புனனிறைய
மாபாரத முடித் தானென்றும் வெள்ளி மலைக்கடவுள்
சாபாடல் செய்தது நான்முகன் றானு நலமுணர்ந்து
கோபால னென்று வணங்குமப் பேர் கொண்ட கோகுலரே.       (55)

தருமன் முதலியோர் தாங்கிய வேடந் தகுதியென்றே
பெருமைய தாக வறிந்த மெஞ்ஞானம் பெரிதுடையார்
இருமையுங் கண்ட சகாதேவ ராய ரின்னுருவே
குருகுலங் காக்குமென் றேற்றதனாற் சேட்டங் கோகுலரே.       (56)

பாடற் குருகி முன் னாடிருப் பாற்கடற் பள்ளிகொள்ளும்
தேடற் கரிய பொருளான நாரணன் றேவரைநீர்
நாடற் குரிய நரராக முல்லையி னாரணனாய்க்
கூடப் பிறக்க விளையாடல் பெற்றவர் கோகுலரே.       (57)

ஆடவந் தோடுயிர் மாய்ந்திடு மூலன்ற னங்கத்திலே
நாடவுயிர்புகுந் தேயவன் செய்து நயந்தபின்பு
தேடரி தான தன் னுடலிற் புகுந்திடுஞ் சித்திகற்றுக்
கூடுவிட் டேவசி சித்தன் மரபினர் கோகுலரே.       (58)

ஆயிர நாமத் தவற்குச்செய் பூசனை யானவெல்லாம்
நேய மிவர்கடம் பேரருளானிறை வேற்றலல்லாற்
ராயினு நல்ல சிதம்பரந் தன்னிற் றமனியப்பொற்
கோயி லமைத்துப் சாரஞ் செய்தாரவர் கோகுலரே.       (59)

நிலவிய வெள்ளிக் கிரியான கத்தி னினைந்துநிதம்
நலமுள வேணுவிற் கானங்கள் பாடி நயந்துருகி
அலமா விக்கிய வானாயர் தோன்று மருளுருவாங்
குலமெனும் பேறதைப் பெற்றோர்கள் பாடியிற் கோகுலரே.       (60)

பிரதோடஞ் சேவிக்கும் பெண்மக வேந்தும் பெருமைகண்டு
திரமா மனையிற்சென் றேசமைத் தாளச் சிறுவனப்போ
மறவாமற் பூசனை மண் வீட்டிற் கோலிட மாதுமதைக்
குறையாற் றுடைக்க வதலிங்க மாக்கிய கோகுலரே.       (61)

முழுத்தவர் போற்று மான் செய்த முப்புர வெஞ்சமரில்
வழுத்துாற் றேதொன்று வானோரமைக்க வதிலிருந்து
மழுக்கரன் வெற்றி பெறவே மகிழ்வுடன் வானந்தொடர்
கொழுத்த நல்லேறு கொடுத்தோர்கள் பாடியிற் கோகுலரே.       (62)

கவலை யில்லாமற் சகத்துயிர் வாழக் கடவுளருந்
தவறிலை யாகத் தருமங்க ளோங்கவுந் தானறிந்தே
உவகைய தாகவு மெங்கு நிறைந்தவ னொண்டொடியைக்
குவலய மாவென வாண்டோர்கள் பாடியிற் கோகுலரே.       (63)

மீறிய ஞானச் சுடர்விளக் கேற்றிய மெய்யுணர்விற்
றேறிய மாதர் சுவையாற் சுகித்துச் செயல்பெறவே
ஏறிய கோடி யுகம்போய்த் திரித யுகமதனில்
கூறிய மூல ரவதரித் தோங்கிய கோகுலரே.       (64)

நலமான பூசையிற் சிற்றாயர் கேட்டிட நல்லமிர்தம்
இலதேகென் றந்தணர் சீறிய போதவர்க் கீவதுவே
பலனாகும் வேள்வியி லென்னாகு மென்றிவர் பண்பையெல்லாங்
குலமாதர் கூறி வணங்கிய பாடியிற் கோகுலரே.       (65)

உரைகட வாதவ ரன்பாளர் மாதவ னோரிரண்டு
மரைமலர்ப் பாத மறவாத சிந்தையர் மாயவற்குத்
திரையுறு பாற்கட லீந்து தயிர்நெய் செறியவென்றும்
குரைகடன் மூன்று மமைத்தோர்கள் பாடியிற் கோகுலரே.       (66)

ஆடலுண் டாகு மயிலு மாவமு மன்பிலொன்றி நாடநின் றேயுற
வாடவுங் கேட்டிடு நான்மறையின்
பாடலென் றேவிண் ணவருட் களிக்கப் பசுப்புலியும்
கூடயின் மேற்கவும் வேணிசை கூறுவர் கோகுலரே. .       (67)

வளந்தையி லேபிறை போலே தருமம் வளர்ப்பவர்கள்
தளர்த்தவர்க் கோடுக் காட்டினிற் பாலனந் தான் கொடுக்க
உளந்தய வானவ ரீயா வரு முண்ணு முயர்குலத்தோர்
குளந்தையில் வந்தவர்க் கேவிருந் தேசெய்வர் கோகுலரே;       (68)

அடுத்தோர் பசுவினுக் கோர்பிடி புல்லை பளித்தவர்கள்
நடுத்தா ரணியினற பாக்கியம் பெற்று நற் சேய்கள் பெற்று
எடுத்தோங்கு சொர்க்கம் பெறுவா ரிவரெத் தனைபிடிபுல்
கொடுத்தா ரிவர்பல னளவிற் குறைவிலர் கோகுலரே.       (69)

நறுந்திரை வீசிய மூன்றரை கோடி நதிப்பலனும்
அறிந்தன வேதத்தி னங்க முரைத்த ததிசயமாய்ச்
செறிந்திவர் தேனுவும் நீருண்டு வால்சுற்றச் சிந்துபுனற்
குருந்துளிக் கொப்பில்லை யென்றும் புனிதர்கள் கோகுலரே.       (70)

மீறத் தவத்தருந் தேவரு நல்வரம் வேண்டத்தகும்
பேறெப் புவிதனிலுண்டென் பரானிப் புனிதர்க்கிதந்
தேறப் பலருந் தெளிந்தன்பு கூர்ந்து செய்தாலுடனே
கூறப் பலிக்குநல் வாக்குள்ள பேறவர் கோகுலரே.       (71)

வடிவி லுதித்த பிராமண ராதி வருணங்களும்
படியி லுதித்தபின் நூல்பூண் டிருபிறப் பாளரென்பார்
நெடியவன் றன்னுருப் போலே யகத்தி னினைக்கவன்று
குடிமிமுந் நூலுடன் நான் பிறந் தாரவர் கோகுலரே.       (72)

சம்புவி னற்கனி சிற்றாயர் கண்ணனும் தான்பருக
அம்பொ னிறைந்தன கூடையெடுத்தவ ளாயர் முன்பாய்த்
தம்பிய பால்வந்த தென்றன ணீகொண்டு தான் செல்கெனக்
கும்பிட்ட வன் செல வாசையில் லாதவர் கோகுலரே.       (73)

தலமெத் தனையுண் டதற்கேற்ற பூசனை தான தர்மம்
பலனைத் தருங்கோடி கன்னிகா தானங்கள் பண்ணிக்கற்பின்
நலமுற்ற கோசலை போலும் சோதை நகர்க்கழகாங்
குலபத்னி மாதருட் பெற்றோர்கள் பாடியிற் கோகுலரே.       (74)

மரகத மேனிநம் மாயனும் பால்வண்ண மாதவனுங்
கரசதமாகிய வாயரும் கந்துகம் கண்டடிக்க
உரமிக வெற்றி கவரு மிருவரு முவந்து வந்து
குரகத மேறி விளையாடல் செய்தவர் கோகுலரே,       (75)

மண்டலத் தெக்கு முளதாம் பலநகர் வாழ்வதிலே
திண்டிறற் கஞ்சன் வராததொன் றில்லை சொற் சேர்நகரில்
அண்டப் படாத வரம்பெற்று நாளு மணங்கினருட்
கொண்டுற்ற நற்றிரு வாய்பாடி வாழ்பவர் கோகுலரே.       (76)

சவலை விடமுனம் மாயோன் விண்ணோர்க்குக் கடைந்தமிர்தம்
உவகைய தாக வொருபாற் கடலி லுதவி செய்தான்
தவளித பாற்கடத் தேதினந் தோன்றுந் தனியமிர்தாற்
குவலயந் தன்னிற் கவலைக டீர்ந்தனர் கோகுலரே.       (77)

மேவிய தேவ ரனைவரு ரோமங்கள் வீசியவால்
தேவியு மாயன் மடிநான் முகன் முலை சேர்சுருதி
ஆவியு மீச னடித்தலந் தீர்த்த மதின்மயமாங்
கோவினப் பாலனஞ் செய்வோர்கள் பாடியிற் கோகுலரே.       (78)

மாறாப் பரிவுட னாயருங் கண்ண னு மாசுணவர்
ஆறா மெனச்செல வப்புறம் போக்கில்லை யாக நின்று
பேறாய்ப் பசுத்தங்கள் பால்பாதி யீயப்பெற் றேயிரண்டு
கூறாய்க் கிழிக்க மகிழ்வோர்கள் பாடியிற் கோகுலரே.       (79)

அடக்க முடையா சரிய தரும மறிந்து செய்வார்
கடக்கு மநு நெறி தான் கட வாதவர் நாரணர்க்குத்
தொடுக்கும் விளாவினி லாயிரந் தீவர்த்தி தோன்ற நெய்யே
கொடுங்க வசங்கர் கருணை பெற் றரவர் கோகுலரே.       (80)

சேவிந்து பூணு மானயன் றானுஞ் சிறந்தொன்றதாய்ப்
பூவிந்த மாக வளாந்தோன் றிருப்பெயர் போற்றுதற்கு
நாவிந்த மாக வனந்த மறைகள் நவிலவன் போற்
கோவிந்த பட்டந் தரித்தோர்கள் பாடியிற் கோகுலரே.       (81)

தொட்டி ரடிக்கொண்டு மண்டலம் விண்டலஞ் சூழ்ந்தளந்த
நெட்டிநற் பாதம் மலதரம் வைக்கு நெடுமனை யோர்
பட்டிசு சர்க்கபி டேகமுலைகுடப் பால் சொரியக்
கொட்டிலில் வாழ்பசு வீந்தவர் பாடியிற் கோகுலரே.       (82)

நூற்றெண் டிருப்பதிக் காலையிற் பூங்குட னூற்றுப்பத்தோ டேற்றநற்
பாற்பசுப் பூசனைக் கேற்றன வெப்பொருளும்
கேத்தி பெறவைத்து மார்க்கங்கள் தோறு நிறைந்தசத்ரங்
கோத்திரம் வாழவைத் தார்நந்த கோன்குலம் கோகுலரே.       (83)

சாத்திரக் கங்கைப் புனல்படி வோர்கட்குச் சார்யமுனை
மாத்திர மப்பல மாடா விடிற்குறை வந்த துண்டோ
நேத்தி யமுனையுங் காளிந்தி கோதா விரிநினைக்கக்
கோத்திர மோங்கிக் குருவாழ வாழ்கின்ற கோகுலரே.       (84)

வருதேச காலமி லுத்திரம் போய்வரு மாயவர்க்குத்
தருதேசி பால்சுடத் தன்கையில் வாங்கித் தயவதனால்
அருளேற வூக வனைத்தாய னாரென் றரங்கர்புகல்
குருதேசி கணைப்பணி வோர்கள் பாடியிற் கோகுலரே.       (85)

களிவா கனம்பெறக் கடல்கடர் தேயவர் நன்மைமனத்
தெளிவாகி யெங்கள் பங்கனைச் சேர்ந்தகஞ் சேருதற்கு
ஈளிர்மா மலர் முல்லை யாயர்க் கியற்கைநல் வாசமுறுங்
குளிர்வாச சாந்தங் கொடுக்கப் புனைந்தவர் கோகுலரே. .       (86)
என்றாள் புவியி லிவர்தேனு நின்றது நாகத்தினும்
அன்முள வந்த திவர்தேனு வேய கல் பூவுலகில்
என்றா லுழவ ரிவர்தேனு வாலுர மேத்திவைத்துக்
குன்றாத செல்வங் கொடுத்தோர்கள் பாடியிற் கோகுலரே.       (87)

பண்டாந் தவம்புர் யோர்விந்தியாதார் பற்பமின்னை
உண்டான சக்கரத் தேயமைத் தேயுயர் யோகமிகக்
கண்டான் விஜய னற்சேய் பிரவிடை காசினியிற்
கொண்டா னாபதி தங்கோத் திரமெனுங் கோகுலரே.       (88)

உள்ள புவியிற் பொருள்படைத் தென்ன வுதவுபுனற்
பள்ள நிறைந்த தடாகமுண் டாக்கிப் பரிந்து நிதி
அள்ளிக் கொடுத்து மிவர்தேனு வாய்வைத் தருந்து புல்லைக்
கொள்ள வெண்ணான்கு தருமம் புரிந்தவர் கோகுலரே.       (89)

இடிக்கட்டி செய்துமின் னில்லாமன் மேகங்க ளெங்குமின்றிப்
படிக்கட்டி யாண்டு பனிரண்டு வாக்கியம் பண்ணுமன்னார்
மடிக்கட்டி மேட மதினான்கு கோட்கண் மயங்கவென்று
கொடிக்கட்டிக் கொண்ட வீரர்கள் பாடியிற் கோகுலரே.       (90)

தலமேழில் மாயன் சமயம் வகுத்திடத் தான் குருவாய்
உலகூடு நான்கு வருணமு மோங்கி யொளி பெறவே
கலமாய் நடுவில் வைணவ நாரண நல்லுருவின்
குலமேவு வைணவ ராகவத் தாரவர் கோகுலரே.       (91)

கலத்தன யாகங்க ளுள்ளன செய்து களிர் புனலகும்
தலத்தைப் புரக்கின்ற கோனாதி நந்தன் சந்ததியாய்ச
சொலப்புகழோங்க மறுநெறி யோங்கிடச் சூழ்ந்தமதிக்
குலத்தினி லாதவர் தங்கோத் திரமெனுங் கோகுலரே.       (92)

நலத்தைப் பொதுப்பி யருளொன்று நாற்குல நன்குறலாற்
பலத்தி லதிக மிவர்பஞ்ச கௌமியம் பார்கொளலாம்
றலத்தை விளக்கும் புனித மிவர் பொருட் டானென்றதாற்
குலத்திற் றிலதமென் றோதப் பெற்றாரவர் கோகுலரே.       (93)

மூலத் திருமரு மார்ப னுருவின் முளைத்தவர் நற்
சீலத்தர் தேனுவைப் பாலனஞ் செய்பவர் செந்திருமுற்
காலத்திற் பின்னைப் பிராட்டி யெனப்பெற்ற கருணையெனும்
கலத்தர் ஞானத்தர் மேலுற்ற பாடியிற் கோகுலரே.       (94)

மறையோது வார்முத னாலாம் வருணங்கண் மாண்பு பெற
முறையாக வூணி னறுநெயும் பாலு மோர்பிறவும்
நிறைவாக வேண்டிய வெல்லா முதவிய நீதியினாற்
குறையாத செல்வ ரிவரென்ற பேறவர் கோகுலரே.       (95)

நாவில னங்கள் புசிப்போர்க்குச் சுத்தியும் நல்கவல்லார்
பூவில் விளங்கிய தேவா லயங்களைப் போற்றிடவே
மேவிய திங்களும் வெய்யோனும் போல விடிவிளக்குக்
கோவில் விளங்கநெய் யீந்தவர் பாடியிற் கோகுலரே. -       (96)

நெறிபெறு சேய்க்கும் புகர்க்குால் லாட்சி நிலைக்கவென்றுஞ்
செறிபல மான மனை பனி ரண்டினுஞ் சேய்முதலாய்
அறிவரி தாமக மேரு முகட்டி லரிதிசையிற்
குறிபெற மேட மிடபம்வைத் தாரவர் கோகுலரே.       (97)

காதா லுணர்ந்திடுஞ் சோதிடங் கூறுங் கனயோகமும்
வேதாக மங்கள் விளக்கிய யோகமும் வேறுளதும்
போதா தெனமுன் வியாச ரறிந்திவர் போற்றவளர்
கோதாளி யோக மதிகம தாம்பெற்ற கோகுலரே.       (98)

நெறியாற் சகத்தினிற் கீர்த்தி பெற்றோர்க ணிறைசெல்வரென்
நறிவாளர் பேசிய தல்லாம லன்பரென் றாண்மைபெற்றோர்
செறிவான வேதத்தி னங்க மறிந்து செயலையெல்லாம்
குறியா யுரைத்தமிர் துண்டோர்கள் பாடியிற் கோகுலரே.       (99)

செழும்பாரின் முன்னங் கொடாமற் பிறந்து திரியவர்க்கு
மழுங்காத செல்வம் வருவதுண்டோ வதின் வாற்றிந்து
தொழும்பாய் வறுமைத் துயர் தாங்கிச்சித்தஞ் சுழல்பவர்க்குக்
கொழும்பா லனங்கள் கொடுக்குந் தியாகிகள் கோகுலரே.       (100)

அடியிற் பெரிய துலகளந் தானடி யாதிமன்னர்
முடியிற் பெரியது சோழன் றிருமுடி முத்தமிழ்சேர்
படியிற் பெரியது பாண்டியன் சங்கமிப் பாருலகிற்
குடியிற் பெரியது கோபாலர் தங்கள் குலக்குடியே.       (101)

தரங்க மெறியுந் திருப்பாற் கடலிவர் தன் மனை போல்
அரங்கர் துயிலும் பிரானளு ளாலண்ட ராய்த்தழைத்தார்
வரங்கள் பொன்ற கோகுலப் பாவையர் மகிழ்வடைய
உரங்கொள் பெரும்புகழ்கொண்டார்குருவரு ளோங்கவு மே.       (102)

வாழ்த்து.

குரூலாழி கோவலர் கோக்குடி வாழி கொடிக்கருட
உருவாழி முல்லை நிலம்வாழி யாக்குல மோங்கிவளர்
திருவாழி பாடி நகர்வாழி வெற்றிச் சிறந்தமுல்லை
மருவாழி மாமறை வாழி தமிழ்நிதம் வாழியவே.

கோகுல சதகம் முற்றிற்று.


This file was last updated on 05 December 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)